-
10th August 2015, 06:30 PM
#2501
Senior Member
Diamond Hubber
ரொம்ப நாளாச்சு.....
'தங்கத் தம்பி' படத்தில் சற்றே தொட்டிக்கால் நளின நடையுடன் ரவிச்சந்திரன் அழகு பாரதியுடன்,
'வெட்கமென்ன?
தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன?
குற்றமென்ன?
கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன?'
என்று கொஞ்சிப் பாடுவதைப் பார்ப்போமா?
'ஓடை நீரில் ஆடும் போது ஓரக்கண்ணால் பார்க்கலாமா?'
பாடும் போது பாரதி பார்பி டால் மாதிரியே தண்ணீரில் ஜொலிக்கிறார்.
http://www.dailymotion.com/video/x2fvrwm
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th August 2015 06:30 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2015, 06:41 PM
#2502
Senior Member
Diamond Hubber
சின்னா! மது அண்ணா! ராகவேந்திரன் சார், சிவாஜி செந்தில் சார்,
உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி!
நிலைமை இன்னும் அப்படியேதான் நீடிக்கிறது. நிர்வாகம் அராஜகம் பண்ணுகிறது. இப்போது கட்சிகள் தலையிட்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது. இன்று தி.மு.க தலைவரிடம் யூனியன் பிரதிநிதிகள் மனு கொடுக்கிறார்களாம். பின் முதல்வரை சந்திக்கப் போகிறார்களாம். நேற்று பா.ம.க நிறுவனரை சந்தித்து மனு ஆதரவு தரும்படி மனு தந்தார்களாம். இதுவெல்லாம் எந்த அளவிற்கு பயன் தரும் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். யூனியன் தன் கட்டுப்பாட்டை நான்கு வருடங்களுக்கு முன்னால் இழந்ததால் இவ்வளவு நிலைமையும். இப்போது தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள். இறுதியில் கட்சிகள் என்ற பாழும் கிணற்றை நாடி இருக்கிறார்கள்.
இன்றோடு 22 நாட்கள் ஆகி விட்டது. இன்னும் நம்பிக்கையுடன் தொழிலாளிகள் காத்திருக்கிறார்கள். விடியல் வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th August 2015, 06:55 PM
#2503
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
கடவுளைத்தான் நம்புகிறோம்...
பொழுதும் விடியும் பூவும் மலரும்.. பொறுத்திருங்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
10th August 2015, 07:03 PM
#2504
Junior Member
Veteran Hubber
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!
KANCHANA VIBGYOR VIEW 4 பசுமை !
காதலிக்க நேரமில்லை (1964)
வானவில்லின் நான்காவது வண்ணக் கற்றை The Fourth band of Rainbow!GREEN!
ஸ்ரீதரின் நகைச்சுவை முத்திரைப் படமான காதலிக்க நேரமில்லையில் பசுமையான பூங்கொடியாக (in Churidhaar) அறிமுகமானார் காஞ்சனா !!
நடிப்புக்கு பெரிய வாய்ப்பு இல்லாவிடினும் ஆடல் பாடல் காட்சிகளில் பசுமரத்தாணியாகப் பதிந்தார் !
Last edited by sivajisenthil; 10th August 2015 at 07:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
10th August 2015, 09:52 PM
#2505
Senior Member
Senior Hubber
மெல்லிய செந்நிற ஒளி அந்த அறையெங்கும் பரவியிருக்க, போடப்பட்டிருந்த செவ்வக மேஜையில் சுற்றி கோட் ஸ்யூட் அணிந்த நரர்கள்.. அந்த நரர்களில் அடியேனும் ஒருவன்..
மெல்ல மெல்ல ஹோட்டல் பணியாட்கள் வந்து என்ன என்ன எனக் கேட்க என்னருகே என்னுடன் வந்திருந்த என் அலுவலக சகா சப்புக் கொட்டிக்கொண்டு நான்வெஜ் ஆர்டர் செய்ய நான் மட்டும்மையமாக ஃப்ரூட்ஸ், பானத்திற்கு கோக், ஃப்ரெஞ்ச் என்று ஆர்டர் செய்ததில் அந்த விருந்தை அமைத்திருந்த விமான நிறுவன நிதி மேலாளர் கொஞ்சம் சங்கடமாய் என்னைப்பார்த்தார்.. பின்ன சீஃப் கெஸ்ட் நானும் என் நண்பரும் தானே..
ஏஏஏன் என ஒரு தி.மோ மனோரமா கேள்வி கேட்க நான் வெஜிட்டேரியன் ஐயா..
ஒய்.. யூ கேன் ஆர்டர் Crabs, Crabs are vegetarian..”
மனதுக்குள் நற நறத்து யோவ் Crabs வெஜ் என்பதற்காக அதை என்னால் சாப்பிட முடியாது என நைச்சியமாய் மறுத்தேன்..என் சகாவோ ஹீ ஈஸ் லைக் தட் டோண்ட் வொர்ரி ஐவில் ஈட் ஆன் பிஹால்ஃப் ஆப் ஹிம் என சமாதானப்படுத்த ஒரு வகையாய் விருந்து முடிந்து பில் கொடுக்கும் படலம்..
டபக்கென ஃப்ரீஃப் கேஸைத் திறந்து கற்றை நோட்டுக்கட்டுகள் டாங்க்ஸ் எனச் சொல்லப்படும் அவர்கள் நாட்டு கரென்ஸி அவர் வைக்க புறப்பட்டோம்..
ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே..மேற்சொன்ன சம்பவம் நடந்த இடம் ஹனாய் (வியட்னாம்) யில் உள்ள ஒருஹோட்டல்..காலம் ஒரு இரண்டு டிகேட்களுக்கும் முன்னால்..
துபாயிலிருந்து அவர்களின் ஏர்லைன்ஸில் ஒரு அலுவலக வந்திருந்தோம் நாங்கள்..
நல்லவேளை பூர்வ ஜென்ம புண்ணியமோ என்னமோ நாங்கள் தங்கியஹோட்டல் ஏஷியானிக்கோ என்னவோ நினைவில்லை..ஆனால் அந்த ரெஸ்டாரெண்ட் மேனேஜர் மட்டும் நினைவில்.. ஏனெனில் அவர் ஒரு தமிழன்.. எனில் சப்பாத்தி தால் மிக்ஸட் ரைஸ் என காரண்டியாய்ச் செய்யச் சொல்லி என் வயிற்றில் சாதம் வார்த்தவர்.
இருந்த நாட்களில் சப்பாத்தி, ஆலு,ரைஸ்,இன்னும் சில காய்கறிகள் போட்டு வெகு அன்புடன் கவனிக்கவும் செய்தார்..
அந்த டின்னர் முடித்து பின் ஹோட்டல் சென்று அவரிடம் ஃப்ளெய்ன் ரைஸ், கர்ட் வாங்கி. வீ.கா கொடுத்தனுப்பியிருந்த பருப்புப் பொடி போட்டு பிசைந்து சாதம் சாப்பிட்டது மறக்க இயலாது!
*
ஹனாய் ஒரு அழகிய நகரம்..ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டல் போகும் போது இரண்டு விஷயங்கள் பளீர்.. ஒன்று பச்சைப்
பசேல் புல்வெளிகளா வயல்களா நினைவில்லை.. இரண்டாவது கொஞ்சம் வறிய நாடு என்பது தெரிந்தது.. சொந்த நாட்டுக் கரன்சியான டாங்க் கை விட டாலரைஆர்வமாக வாங்கிக் கொண்டார்கள் (இப்போது எப்படி எனத் தெரியாது)
ஹோட்டல் பால்கனியிலிருந்து பார்த்தால் வெளியில் கார்கள் பஸ்கள் ஸ்கூட்டர்கள் சைக்கிள்கள் போவது எனத் தெரியும்.. எதிரே சாலையைக் கடந்து பிளாட்ஃபாரத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பாடுக் கடை ஒன்று இருந்தது.. ஒன்றும் ஜாஸ்தியொன்றுமில்லை..இரண்டு மூன்று அலுமினியப் பாத்திரங்கள்..கொஞ்சம் சின்ன ஸ்டவ்..(இருந்ததாக நினைவு) பின் அலுமினியப் ப்ளேட்கள்.. வியாபாரியான வியட் நாம் காரர் உண்ணவந்தவர்களிடம் நூடுல்ஸோ ஏதோ தட்டில் போட்டு இரு குச்சிகளையும் கொடுக்க சுவாரஸ்யமாக உண்டுவிட்டுச் செல்வார்கள்..
சொந்தமாகத் தயாரிக்கப்படும் பியா ஹோய் எனச் சொல்லப்படும் பியர் குடிசைகள் அல்லது வீடுகள் அந்த சாலையில் கொஞ்சம் நிறையவே இருந்த நினைவு..
சுற்றிப் பார்த்ததெல்லாம் நினைவில் மங்கலாகத் தான் இருக்கின்றன..ஒரு புத்தர் கோவிலோ என்னவோ பல ஆண்டுகாலப்பழமை என நினைவு..
வியட் நாமியப் பெண்கள் எல்லாம் கண்கள் உள்ளாழ்ந்து மூக்கு கொஞ்சம் யாரிடமோ கோபித்துக்கொண்டார்போல் உள்வாங்கி குட்டிக் கண்களுடன் சிற்சிற்சிற் இடைகளுடன் ஒல்லி ஒல்லியாய் இருந்தார்கள் …முகத்தில் கொஞ்சமே கொஞ்சம்பொலிவு..
அந்தக்காலத்தில் துபாயில் கலீஜ் டைம்ஸ் , கல்ஃப் நியூஸ் எல்லாம் தினசரி கல்கி தீபாவளி மலர் சைஸில் பூசினாற்போன்ற கே.ஆர்.விஜயாவைப் போல கொழுக் மொழுக்கென தினசரியே வருவது வழக்கம்.. அத்துடன் க்ளாஸிஃபைட்ஸ்/அப்பாயிண்ட்மெண்ட்ஸ் என்று ஒரு பேப்பரை மடித்து அதைப்போல 24 பக்கம் சேர்த்து சப்ளிமெண்ட் போலத் தருவார்கள்.. ஹனாயில் பார்த்த பேப்பர் இரண்டு பேப்பரை மடித்து மொத்தமே எட்டுப்பக்கமோ பத்துப்பக்கமோ தான் இருந்தது.. நியூஸூம் நிறையலோக்கல் தான்..ஒன்றும் சுவாரஸ்யமில்லை..டிவியில் அதிசயமாய் ஸீ டிவி வந்த நினைவு..
இருந்த இரண்டு மூன்று நாட்களில் ஒரு நாளில் மழை.. ஷாப்பிங்க் போகலாமென்று போய் ச்ச்சோ வென அடித்த மழையில் ஒரு கடையில் ஒதுங்கி ஏதோ ஒரு சொவனீர் வாங்கித் திரும்பிய நினைவு..
ஹனாயில் வேலை முடித்து துபாய் புறப்பட விமானத்தில் ஏறி அமர்ந்தால் – ஹனாய் டு ஹோசிமின் சிட்டி.. பகற்பொழுது..மதுரையில் அடிப்பது போன்ற பொளீர் வெய்யில்ல் விமானத்தில் ஏறி அமர்ந்தால் “உணவு ஏதாவது வேண்டுமா” என வியட் நாமிய மெல்லிடையாள் கேட்க டூயூ ஹேவ் வெஜிடேரியன் என்று நான் கேட்டதை ஏதோ கெட்டவார்த்தை காதில் விழுந்தாற்போல் கேட்டாள்..பின் நெற்றிச் சுருக்கி.. நோஸார் வீ டோண்ட் ஹேவ்.. எனச் சொல்ல அருகிருந்த அலுவலக நண்பர் “ கண்ணா எனக்குக் கவலையில்லையே வாட்டூயூ ஹேவ் இன் நான் வெஜ்..சிக்கன்.. ஒ.கே கிவ் இட் ஃபார் மீ” என ஆர்டர் செய்து வெற்றிப் புன்முறுவல் பூக்க, நான் மனம் தளராத மணி ரத்னம் போல் “அம்மணி கனி வகைகள் ரொட்டித்துண்டம் கிடைக்குமா” என வினவ அவள் அகமகிழ்ந்து உள் சென்று ஒரு ஆப்பிள், சில திராட்சைகள் ஒரு வறட்டு ரொட்டி அதில் தடவ கொஞ்சம் ஒரு உறையிட்ட வெண்ணெய் குட்டிப் பாக்கெட் என க் கொடுத்து, நண்பனுக்கும் நான்வெஜ் டிட்டோ.. சந்தோஷமாய் நான் உண்டு முடிக்க, நண்பனும் சாப்பிட்டு முடிக்கக் கொஞ்சம் கண்ணசந்ததில் ஹோசிமின் சிட்டியில் விமானமிறங்க..அங்கு இரண்டு மணி நேரம் காத்திருப்பு என்பதால் பொடி நடையாகச் சுற்றி வந்தால் திடீரென அலுவலக நண்பர் கூப்பிட்டார்..
கண்ணா கண்ணா ஊருக்கு வேண்டுமானால் வாங்கிக்கோ..
என்னகாட்டுகிறான் என்று பார்த்தால் அழகான ஒரு ஸ்கேலடி உயர ப்ளாஸ்டிக் சிலிண்டருக்குள் பாடம் செய்து வைக்கப்பட்டு பக்குவமாய் முறைத்தவண்ணம் பாம்புகள்..பின் சில பல குட்டிப் பிளாஸ்டிக் பைகளிலும் பாம்புகள் இன்ன பிற.. அவை எதற்கென்று கேட்டால் டு ஃப்ரை அண்ட் ஈட் எனப் பதில் வர பயந்த என் நண்பர் வா வா போய் லவுஞ்சில் உட்கார்ந்துக்கலாம்.. என்ன கொடுத்தாளோ தெரியலை..வயிறு கலங்குது “ என்றார்..
மறுபடி விமானமேறி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம் செய்து (ஏழுமணி நேரமோ நினைவில்லை) துபாய் அடையும் வரையில் நண்பரின் வயிறு கலங்கிக்கொண்டுதான் இருந்து, இறங்குகையில் தள்ளாடித்தள்ளாடி விடைபெற்றார் அவர்.. ஊர் போய் ரெண்டு நாள் கழித்து தான் அலுவலகம் வந்தார் அவர்….
*
ம்ம் ஏன் விலாவாரியாக வியட் நாம்..
டுமாரோ நெவர் டைஸில், சி.செ, வியட் நாம் எனக் காட்டி ஒரு பைக் சேஸ் எடுத்திருப்பார்கள்..எனக்கும் கொஞ்சம் பார்த்த இடம் என ஆவல் மிகக்கொண்டுபார்த்தேன். படம் பார்த்த சமயம்..
பின் தான் பத்திரிகைகளில் படித்தபோது தெரிந்தது.. வியட் நாம் எனப் போட்டுவிட்டு அந்த ச் சேஸெல்லாம் எடுக்கப்பட்ட இடம் பாங்காக் என்று..
படம் ரொம்ப மோசம் எனச் சொல்ல இயலாது.. கொஞ்சம்மம்மூட்டியின் நியூ டெல்லியை நினைவு படுத்தினாலும் கூட..அந்த வில்லன் முக பானரிலிருந்து தாவுதல், ரிமோட் கண்ட்ரோல் கார் என சில சுவாரஸ்யங்களும் இருக்கத்தான் செய்தன..
பியர்ஸ் ப்ராஸ்னன் ஓ.கே என்று தான் சொல்லவேண்டும்..அந்த ஆழ்கடல் வில்லன் ரொம்ப சுமார்..
ம்ம் காணொளிகளுக்கு ரொம்ப நன்றி சி.செ
ஓஹ்..மறந்துட்டேனே.. நமக்குத் தெரிந்தவர் ஒருத்தர் இருக்காரில்லை வியட் நாமில்.. இன்றைய நிலை சொல் மாட்டாரா என்ன..
*
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
10th August 2015, 09:57 PM
#2506
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
ராகவ் ஜி... பொன்னூஞ்சலின் வருவான் மோகன ரூபன் பாட்டின் வீடியோ எங்கேயாவது கிடைக்க வாய்ப்பு உண்டா ? ( உஷா நந்தினி வெள்ளைப் புடவை காற்றில் பறக்க நடிகர் திலகத்தை மயக்க சிரித்துக் கொண்டே வருவார் )
மதுண்ணா!
எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து தருகிறோம். இப்போதைக்கு கேட்டு மட்டும் மகிழுங்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
madhu thanked for this post
-
10th August 2015, 10:05 PM
#2507
Senior Member
Senior Hubber
வாசு, உங்க ரைட் அப் நானே பாராட்டிப் போரடிச்சுடுத்து.. எனில் மற்றவங்க எப்படிப் பாராட்டுவாங்கன்னு ட்ரைபண்றேன்….முதலாவதாக..
Vasu. Your song Thirumagal Thedi vandhal is very beautiful. But it reminded me of another song Laxmi vandhaal.. I think the ragam is mohanap priya or yaelisai vallabhi. I couldn’t remember that. Here I am posting the song .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th August 2015, 10:36 PM
#2508
Senior Member
Senior Hubber
முன்பு எழுதிய பதிவு தான்..ஆனால் இன்னொரு பாட்டும் கேட்டேனே..அதனால் அந்தப் பதிவு பின் புதிதாய் நான்கேட்ட பழைய பாட்டு..
*
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே
அடித்து நொறுக்க
அப்பனும் நோக்கினான்..!
இந்தக் கவிதை எழுதியது மு. மேத்தா.. இந்தக் கருவை – அதாவது காதல்னு இருந்துச்சுன்னா அது தோல்வில தான் முடியும் என்ற படி எண்பதுகளில் பல படங்கள். வந்தன..சில வெற்றி, பல தோல்வியைத் தழுவின..
ஆனால் காதல் என்ற ஆதர்ச சக்தி என்ன செய்யும்.. பிற்காலத்தில் வந்த ஒரு பாட்டு என்னவாக்கும் அது பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை..எஸ்.. ஆனால் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது.. அதே போலத் தான் இந்தக் காதல் என்பதும்..என்று இருக்குமோ..
கல்லூரியில் தமிழ் இருந்தது இருவருடங்கள்..அப்போதா அல்லது ப்ளஸ்டூவிலா நினைவில்லை..இந்த சங்கப்பாடல் உண்டு..பாடலுக்குமுன் சிச்சுவேஷன் என்னன்னாக்க..
அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..
“ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..
”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..
வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
…வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..
இல்லையா டியர்”
“ஹேய் வாட் ஹேப்பண்ட் ( மே.சு.: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )
”ஒண்ணுமில்லை பயந்துடாதே காதலி..கொஞ்சம் நினைச்சுப் பார்..ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீயார் நான் யார்னு தெரியாது உன் ஊர் இருக்கற எடம் எனக்குத் தெரியாது (மெஷின் ஆஸ்பத்திரி ஸ்டாப் தெரியும்.ஆனா நான் செய்ன்ட் மேரீஸ்ல தான்படிச்சேன்.. நீ செய்ண்ட் ஜோசப் கான்வெண்ட்னு தெரியாது ) என் ஊர் இருக்கற இடம் தெரியாது.. எங்க அப்பா பேங்க்கர்..ஒங்க அப்பா எஸ்.பின்னு நீ சொல்லித் தான் தெரியும்( முன்னாடியே தெரிஞ்சா நான் ஏன் உன்னை டாவடிக்கறேன்!) இருந்தாலும் பாரு இவளே. மழையில விழற துளி மண்ணுல கலந்துடும்..அதுவே செம்மண்ணா இருந்தா வேகமா மிக்ஸாய்டும்..(அந்தச் செம்மண் சகதி தான் நன்னா வழுக்கும்!) அந்த மாதிரி நம்ம மனசு கலந்துடுச்சு டார்லிங்க்..!”
“என்ன சாங்க்ப்பா அது (மே.சு: அன்பரே.. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.. சங்கப் பாட்டுப் பாடப் போகிறீர்கள் தானே)
“இது தான் செல்லம்..
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யாயும் நீயும் எவ்வுள மறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான்கலந்தனவே”
**
இந்தப் பாட்டையே முழுக்க நிமிண்டி அந்தக்காலப் படத்தில் வரவேண்டும் என்பதற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்..இருவர் படத்தில் விஷீவலில் மோகன்லால், மதுபாலா, ஐஸ்வர்யா ராய்…(மோகன்லால் கொடுத்துவச்சவர்)
.பாடியவர்கள்..உன்னிக் கிருஷ்ணன்.பெண்குரல் மறந்து போச்.
**.
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
**
பாடல் படமாக்கப் பட்டது கறுப்பு வெள்ளையில்..இடையில் தான் கொஞ்சம் கலர் வரும்..
*
என்னமோ போங்க.. முடிக்கறச்சே கவிஞர் மீரா எழுதின கவிதை தான் நினைவுக்கு வருது!
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ (!) நல்லூர்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவின் முறை
மாமன் மச்சான்
நானும் நீயும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்..
எனில்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே!
*
இது முன்னெழுதியதென்றாலும் இதுவே இன்னொரு பாடலில் இருப்பது கொஞ்சம்மகிழ்ச்சி தான்..
செம்மண் பூமியின் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்… என இந்தப் பாடலில் வருகிறது..
*
எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். பாடியவர்கள் எஸ்.பி.ஷைலஜா, ஜேசுதாஸ். படம் காதல் கிளிகள்
*
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழைக் கேளுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
ந.ஓ. நா
என் நாயகி அழகைப் பாருங்களேன் (என்ன பரந்த மனசு)
*
தரையைத் தொடாத தென்றலைப் போல்
உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன
கல்யாணத் தேதியைக் கேட்டவுடன் என் கால்கள் தரையைத் தொடவில்லையே
கரையைத் தொடாத அலைகளைப் போல்
உன் கருங்கூந்தல் கைகளில் விழுவதென்ன (கல்யாணத்துக்கு முன்னாடி இவ்ளோடவுட் வோணாம் சொல்லிப்புட்டேன்)
காதலன்கையில் சுகம் பெறவே என் கூந்தல் சரிந்து விழுந்ததய்யா (அப்ப சரி)
*
கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
இந்தக் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
செம்மண் பூமியின் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்…
*
உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா (இந்த லைன் ஏதோ பாவம் பண்ணிடுத்து போல எடிட் பண்ணிட்டாங்க)
மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை
அடக்க முடியாதா
(எப்பவும் இதே தான் எக்ஸ்யூஸ்..என்னபெண்ணோ)
*
சிவகுமார் ரத்தி.. நல்லாத் தான் இருக்காங்க இல்லை? (ஆரஞ்ச் கோட் எங்க கெடச்சுருக்கும்) நாணல், பூக்கள், கூந்தல் லாம் விஷூவலா காட்டி நல்ல லைன்ஸூக்கு தைய்யா தக்கான்னு ரத்தி குதிப்பது கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருக்கிறது..
ஆனால் பாடல் கேட்க நல்ல மெலடி..
*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th August 2015, 01:08 AM
#2509
Junior Member
Veteran Hubber
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு
BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!
இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!
வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !
கவர்ச்சித் தாரகை 3: சிஐடி சகுந்தலா
வெகுகாலம் குரூப் டான்சர்களில் ஒருவராக ஒரு மூலையில் நின்று ஆடிக்கொண்டிருந்தவர் பாசமலரில் வாராயோ தோழி வாராயோ ...
முதல் பிரேக் பக்கத்திலே கன்னிப் பொண்ணிருக்கு என்று டி ஆர் ராமச்சந்திரனுடன் நடிகர்திலகத்தின் நெஞ்சம் நிறைத்த படிக்காத மேதையில் கிடைத்தது!
இருந்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் சர்வர் சுந்தரம் வரை மீண்டும் குரூப் டான்சராகவே காலம் தள்ளினார்
ஜாக்பாட் அடித்தது தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெயசங்கரின் சி ஐ டி சங்கர் மூலமாக ...பிறகு சிஐடி பெயரோடு ஒட்டிக்கொண்டது!
ரவிச்சந்திரனுடன் ஜஸ்டிஸ் விஸ்வநாத் கதாநாயகியாக ....மாடர்ன் தியேட்டர்ஸ் ஆதரவில்!
இருந்தாலும் கதாநாயகி வாய்ப்புக்கள் வரவில்லை கவர்ச்சிக் குத்தாட்டங்களில் அதிரடியாக இறங்கி விஜயலலிதாவையும் ஜோதிலட்சுமியையும் எளிதாக
ஓரம் கட்டி முக்கியமான ஐட்டம் டான்சராக மறுவாழ்வு கண்டார் !
வசந்த மாளிகை பாரத விலாஸ் சகுந்தலா கொஞ்சம் தூக்கலான வரம்பு மீறலே !
Last edited by sivajisenthil; 11th August 2015 at 02:39 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th August 2015, 05:24 AM
#2510
Senior Member
Diamond Hubber
Sivajisenthil ji..
போங்ணா... கிளப் டான்ஸையே போட்டா தெகட்டி போயிருமில்ல ? ஒரு தையா தக்க பரதமும் போடணுங்ணா..
அகத்த்தியருக்கு முன்னாலேயே லுக் விட்ட தேவ லோக நாரீமணியாக...
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks