-
16th August 2015, 07:03 PM
#2091
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
என் பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு உயர்ந்த மனிதன் படத்துக்காக ரூ.2 லட்சம் கொடுக்க முடியாது ரூ.1.5 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று ஏவிஎம் செட்டியார் சொன்னதாக நானே என் கற்பனையில் இருந்து சொல்லவில்லை.
உயர்ந்த மனிதனுக்காக திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுக்க முடியும். அதற்கு மேல் கொடுப்பதற்கில்லை என்று திரு.செட்டியார் சொன்னதையும் அதே நேரம் அதற்கு 3 ஆண்டுகள் முன்பாகவே அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு திரு.செட்டியார் ரூ.3.25 லட்சம் கொடுத்தார் என்றும் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர் அன்பே வா படத்தின் வசனகர்த்தா.
அவர் இதை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார் என்றும் நான் சொல்லவில்லை. எப்படி உங்களால் இப்படி ஒரு பொய்யை ஜோடிக்க முடிகிறது என்று கேட்கிறீர்களே? இதையே நானும் எம்ஜிஆர் அவர்களை விட குறைவாக சம்பளம் வாங்கிய சிவாஜி கணேசன் அவர்களின் சம்பளத்தைப் பற்றி ஏன் பொய் சொல்கிறீர்கள்? என்று திருப்பி கேட்க முடியும்.
ஆனால், நான் கண்ணியமாக உங்கள் நேர்மை மீது நம்பிக்கை உள்ளது, உங்களுக்கு கிடைத்த தகவல் சரியாக இருந்திருக்காது என்றுதான் கூறியிருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன். இந்த தகவலை சொன்னவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள். அதிலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூறவில்லை. பகிரங்கமாக கூறியுள்ளார். விகடன் பிரசுரத்தின் சார்பில் வெளியான ‘சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்’ என்ற புத்தகத்தில் 167, 168-ம் பக்கங்களில் இந்த தகவல் இருக்கிறது. இந்த புத்தகம் சிவாஜி ரசிகர்கள் பலரிடம் இருக்கும். அந்த புத்தகத்தில் இந்த தகவல் இல்லாவிட்டால் என்னை ஏன் என்று கேளுங்கள்.
இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட ,அதாவது ஆரூர்தாஸ் பணப்பரிவர்த்தனை தொடர்பாக குறிப்பிட்ட நபர்களான ஏவிஎம். சரவணனும் திரு.ஆர்.எம்.வீ. அவர்களும் அந்தப் புத்தகம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் இருக்கின்றனர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.
விக்கிபீடியாவில் உள்ள தகவலின்படி எனக்குத் தெரிந்து அதில், ஏ.பி.நாகராஜன் படங்கள் பிரம்மாண்டமான கலர் படம். அதனால், சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.2 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். ஆனால், உயர்ந்த மனிதன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை படம். எனவே, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்க சரவணன் முடிவு செய்தார் என்று உள்ளது. எனவே, இந்த இரண்டு கருத்துக்களையும் வைத்து பார்த்தால் உயர்ந்த மனிதன் படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் ரூ.1.5 லட்சம் சம்பளம் பெற்றார் என்பது உறுதியாகிறது.
இன்னொன்றும் சொல்கிறேன். பறக்கும் பாவை படத்துக்காக மக்கள் திலகம் அவர்கள், திரு.வீரப்பன் மூலம் தன்னிடம் ரூ.7 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் 25 ஆண்டுகளுக்கு முன் தேவி வார இதழில் எம்.ஜி.ஆர். கதை என்ற பெயரில் வெளியான தொடரில் திரு.ராமண்ணா அவர்கள் கூறியுள்ளார். பறக்கும் பாவை படத்தின் தயாரிப்பாளர் அவர்தான்.
அந்த பேட்டி எம்.ஜி.ஆர்.கதை என்ற புத்தகமாகவும் வந்துள்ளது. சமீபத்தில் அந்தப் புத்தகம் மறுவெளியீடாகவும் வந்துள்ளது. மறுவெளியீட்டு விழாவை 15 நாட்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு.லோகநாதன் பதிவிட்டுள்ளார்.
திரு.டி.ஆர்.ராமண்ணாவிடம் பேட்டி வாங்கிப் போட்டது யார் தெரியுமா? ராஜபாளையத்தில் எங்கள் சிவாஜி என்ற இதழை நடத்தி, பின்னர் நடத்த முடியாமல் மூடி இப்போது, மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இதயக்கனி என்ற இதழை நடத்தி வரும் சிவாஜி ரசிகரான திரு.எஸ்.விஜயன்.
நீங்கள் ஏற்காவிட்டால் பரவாயில்லை. நமது இருவரின் கருத்துக்களைப் படிப்பவர்களுக்கு எது சரியான தகவல் என்ற உண்மை புரியும். அதுபோதும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th August 2015 07:03 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2015, 07:14 PM
#2092
Junior Member
Veteran Hubber
Kalaivendhan sir
Even am saying that only. Let people decide after reading our views.
சிவாஜியை விட திரு MGR அவர்கள் கம்மியாக சம்பளம் வாங்கினார் என்று நான் கூறினேனா அல்லது நீங்கள் மற்றும் திரு எஸ்வி எழுதியதற்கு விளக்கமாக நடிகர் திலகத்தின் 1954 இல் அவர் வாங்கிய சம்பளம் என்னவாக இருந்திருக்கும் என்பதை உதாரணத்துடன் எழுதினேனா என்பதை நீங்கள் மீண்டும் பாருங்கள்
Mr. Ramanna has never said Nadigar Thilagam had asked or did not ask. You Can't take a judgement out of it.
You may quote Mr. Vijayan or anybody, opening or closing or opening another establishment is his or her wish. You may find happiness that his establishment closed first. It doesn't mean that it may not happen again. And also, it doesn't mean that all running establishments are seeing profits...!!!
Rks
Last edited by RavikiranSurya; 16th August 2015 at 09:58 PM.
-
16th August 2015, 07:24 PM
#2093
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.
1965 ஆண்டில் ஒப்பந்தமான அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு ரூ.3.25 லட்சம் கொடுத்த ஏவி.எம் செட்டியார் அவர்கள், அன்பே வா படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுத்தார். இதை ஆரூர்தாஸ் அவர்கள் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் புத்தகத்தில் விகடன் பிரசுரம் 167, 168-ம் பக்கங்களில் கூறியுள்ளார். அவர் திரைத் துறையில் இருவரின் சமகாலத்தில் இருந்தவர். படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்னதைத்தான் நான் மேற்கோள் காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே சொன்னதுபோல, கருத்தை பதிவு செய்து விட்டேன். நீங்கள் மறுக்கிறீர்கள். யாருடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இனிமேலும் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th August 2015, 08:53 PM
#2094
Junior Member
Diamond Hubber
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே அதற்குக் காரணம்.
- புரட்சித்தலைவர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 09:03 PM
#2095
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.
1965 ஆண்டில் ஒப்பந்தமான அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு ரூ.3.25 லட்சம் கொடுத்த ஏவி.எம் செட்டியார் அவர்கள், அன்பே வா படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுத்தார். இதை ஆரூர்தாஸ் அவர்கள் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் புத்தகத்தில் விகடன் பிரசுரம் 167, 168-ம் பக்கங்களில் கூறியுள்ளார். அவர் திரைத் துறையில் இருவரின் சமகாலத்தில் இருந்தவர். படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்னதைத்தான் நான் மேற்கோள் காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே சொன்னதுபோல, கருத்தை பதிவு செய்து விட்டேன். நீங்கள் மறுக்கிறீர்கள். யாருடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இனிமேலும் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் அவர்களே
நான் கூறுவதும் அதுதான்...!
அரூர்தாஸ் அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தில் அளந்துவிட்டிருப்பதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்....அந்த புத்தகத்தில் அவர் அளந்து விட்டிருப்பதை அந்த புத்தகத்தில் பிரிண்ட் ஆகி உள்ளது என்பதுவரை மறுக்கவில்லை.
ஆனால் அந்த அளந்துவிட்ட தகவல் உலக மகா பொய் என்று தான் நான் கூறுகிறேன்.
என்னுடைய சம்பளம் எனது மனைவிக்கு எனது பெற்றோருக்கு தெரியும்....ஆனால் பக்கத்து வீட்டுகாரருக்கு நிச்சயமாக தெரியாது.!
பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தொகையை குறிப்பிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு கடிதத்தில் RKS இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ ....அவ்வளவு அபத்தம் அரூர்தாஸ் நடிகர் திலகம் சம்பளம் பற்றி கூறியுள்ளது...!
2) எனது குருநாதர் ஒருவர் ஒரு வேலையே என்னிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்...அந்த வேலையே நான் பொதுவாக வெளியாட்களுக்கு 10 ருபாய் வாங்கி செய்வது வழக்கம்.
ஆனால் வேலை செய்து தர சொல்வது எனது குருநாதர் அல்லது நான் நல்ல நிலைக்கு வர காரணமாக இருக்கும் ஒருவர் எனும்பொழுது, அதே 10 ரூபாய் நான் நிச்சயம் வாங்கமாட்டேன் !
2 ரூபாய்க்கு செய்து கொடுக்கலாம்..அல்லது ஒரு ருபாய் கூட வாங்காமல் செய்து கொடுக்கலாம் ..! அதற்காக என் சம்பளம் 2 ருபாய் என்று அர்த்தமாகுமா என்பது எனது கேள்வி !
AVM அவர்கள் நடிகர் திலகத்தை பொறுத்தவரையில் அப்படி !
முதற்க்கண் AVM அவர்களிடம் இவ்வளவு கொடுங்கள்...அவ்வளவு கொடுங்கள்...இதுதான் என் இப்போதைய சம்பளம் என்று நடிகர் திலகமும் சரி...திரு VC சண்முகமும் சரி ஒருபோதும் கூற வாய்ப்பே இல்லை !
இரெண்டாவது - நடிகர் திலகத்தின் அடுத்த மைல்கல் 125வது படம் AVM படமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோள் 100வது படம் நவராத்திரி வெளியாகி இமாலய வெற்றிபெற்றுடனே வைக்கப்பட்டு, அதற்க்கு நடிகர் திலகம் மகிழ்ச்சியுடன் அந்த பெருமை கிடைத்ததே பாக்கியம் என்று அப்போதே PRINCIPAL OK கொடுத்ததாக ஒரு செய்தியும் அப்போதே இருந்தது.
அதாவது 100வது படம் வெளிவரும்போதே 125ஆவது படம் தமது நிறுவன படமாக இருக்க விருப்பம் தெரிவித்தவர் ஏவிஎம். அப்படிப்பட்ட ஒருவர்....நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகருக்கு JUST 50,000 ருபாய் BARGAIN செய்ததை போல அரூர்தாஸ் கூறியுள்ளார் என்றால்....அது எவ்வளவு பெரிய டுபாகூர் செய்தி என்று எளிதில் புரிந்துகொள்ளலாம் !
சரித்திர படம் போல வேலை COSTUME இல்லை அதனால் வாங்குகின்ற சம்பளத்தில் இருந்து 50,000 ருபாய் கம்மிதான் கொடுப்பேன் என்று AVM கூறுபவராக இருந்தால்....அன்பேவா படம் சரித்திர இதிகாச படமும் அல்ல...அதுவும் ஒரு சோசியல் தீம் தான் ! அதற்க்கு 1,50,000 எக்ஸ்ட்ரா ருபாய் தவிர கூடுதல் கால்ஷீட்டுக்கு 25,000 ருபாய்....that too in 1965.
50,000 ரூபாயை BARGAIN செய்த திரு AVM அவர்கள், நடிகர் திலகத்திற்கு after 3 years, 1968 இல் அவர் வாங்கியதாக அரூர்தாஸ் குறிப்பிட்ட 2,00,000 ருபாய் கூட குடுக்காமல் 50,000 கழித்து 1,50,000 கொடுத்தாராம் ஆனால் மக்கள் திலகத்திற்கு 1965 இல் 3,25,000 ஒரு சோசியல் தீம் கொண்ட படத்திற்கு கொடுத்தாராம் என்றால்......அரூர்தாசின் கற்பனை கதையை என்னவென்று சொல்வது ! அதை வைத்து நடிகர் திலகம் சம்பளம் 1968இல் 1,50,000 என்று விளக்கமளிக்கும் உங்கள் விளக்க உரைக்கு என்ன சொல்வது ! இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை சார் ?
மக்கள் திலகம் 3 லட்சம் வாங்கவில்லை என்று நான் கூறவில்லை ! காரணம் நான் பார்காத விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் ?
நடிகர் திலகம் அவர்களின் சம்பளம் என்னவாக இருந்திருக்க கூடும் என்று - அவர் நடிக்க வந்த இரண்டு வருடம் இரண்டு மாதத்தில் அதாவது 1954 இல் எதிர்பாராதது திரைப்படதிற்காக நடிகர் திலகத்தின் சம்பளமாக சென்னை விநியோகம் கொடுக்கப்பட்டதையும் மற்றும் அதன் வசூல் விவரங்களை தோராயமாக வைத்து வரிநீங்கலாக LOGICAL ஆக தொகையை எழுதினேன்.
அரூர்தாஸ் கூறிய நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு LOGIC உம இல்லாததால், என்ன LOGIC இருக்கிறது என்று பொருள்படும் வண்ணம் நான் குறிப்பிட்டேன் அவ்வளவு தான் சார் !
நானும் இதை பற்றி இதற்க்கு மேல் எழுதபோவதில்லை...காரணம்..சம்பளம் வாங்கியவர்கள்...அதை சொத்தாக சேர்த்து பலன் அவர்கள்தான் அடைகிறார்கள்....அவர்களுடைய சொத்து சம்பள விபரம் அவர்களை தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ள ஓர் இருவர் தவிர யாருக்கும் சொல்ல இயலாது...! அரூர்தாஸ் மாதிரி ஆட்கள் அவிழ்த்து விடும் செய்திகள் சம்பள விஷயத்தை பொறுத்தவரையில் நிச்சயம் இருக்க வாய்ப்பே இல்லை !
-
16th August 2015, 09:28 PM
#2096
Junior Member
Diamond Hubber
-
16th August 2015, 09:28 PM
#2097
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th August 2015, 09:29 PM
#2098
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th August 2015, 09:29 PM
#2099
Junior Member
Diamond Hubber
Last edited by saileshbasu; 16th August 2015 at 09:32 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 09:33 PM
#2100
Junior Member
Seasoned Hubber
தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
நான் ஏற்கனவேசொன்னதுபோல படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். ஆரோக்கியமான விவாதம் இருக்கலாம். அதை விரும்புபவன் நான். ஆனால், நமது நட்புக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது. எப்போதும்போல, நீங்கள் எங்களின் நண்பர்தான். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks