-
16th August 2015, 07:24 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.
1965 ஆண்டில் ஒப்பந்தமான அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு ரூ.3.25 லட்சம் கொடுத்த ஏவி.எம் செட்டியார் அவர்கள், அன்பே வா படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுத்தார். இதை ஆரூர்தாஸ் அவர்கள் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் புத்தகத்தில் விகடன் பிரசுரம் 167, 168-ம் பக்கங்களில் கூறியுள்ளார். அவர் திரைத் துறையில் இருவரின் சமகாலத்தில் இருந்தவர். படங்களில் பணியாற்றியவர். அவர் சொன்னதைத்தான் நான் மேற்கோள் காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே சொன்னதுபோல, கருத்தை பதிவு செய்து விட்டேன். நீங்கள் மறுக்கிறீர்கள். யாருடைய வாதத்தில் வலு இருக்கிறது என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இனிமேலும் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th August 2015 07:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks