-
25th August 2015, 02:29 PM
#2951
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015 02:29 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2015, 02:40 PM
#2952
Senior Member
Senior Hubber
ராஜேஷ் ஜி,
பக்திப் பாடல்கள் வரிசையில் 'ஜகம் புகழும் புண்ணிய கதை' ஒலி-ஒளி காட்சிக்கு நன்றி. இந்த பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் திரைப் படப் பாடல் என்று நினைத்ததில்லை. அருமை. முடிந்தால் லவ-குசா திரைப் படம் பார்க்க வேண்டும். முயற்சிக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்லுவது - 'இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை' - என்பது உண்மைதான். நன்றி. நன்றி. நன்றி.
Last edited by kalnayak; 25th August 2015 at 02:58 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
25th August 2015, 03:41 PM
#2953
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
காரியம் முழுவதும் வெற்றி .. ஆஹா காதல் கொண்டாள் குட்டி என்ற டி.எம்.எஸ் பாட்டும் சிரித்த முகம்தானே ?
வா காதல் செய்து பார்ப்போம் பாட்டைப் பாடிக்கொண்டேதான் மச்சி பாட்டைக் கண்டுபிடித்தேன்.. ஆஹா... இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. என் மனசுல தோன்றுவதை எல்லாம் நீங்க சொல்லிடுறீங்க...
அடுத்ததாக.. தேடித் தேடிக் காத்திருந்தேன் பல்லவியை எப்போது கேட்டாலும் அல்லது நினைத்தாலும் கூட ஏதோ ஒரு சோகம் கலந்த சுகம் தொண்டைக்குள் வந்து நிற்கும். நீங்களும் அதையே எழுதி இருப்பதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
ம்ம்ம்... இப்போ அடுத்த டவுட்டையும் வச்சிடறேன்.
நம்ம ராட்சசி பாடிய மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா.. இதில் மறைஞ்சிருக்குற ரகசியத்தை நீ புரிஞ்சுக்க மாமா என்ற பாடல் பற்றிய விவரங்கள் ப்ளீஸ்..
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th August 2015, 05:53 PM
#2954
Junior Member
Veteran Hubber
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் சூப்பராகக் கலக்கி பட்டையைக் கிளப்பிக் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கொண்டாட்ட வேளையில் !
குயில் 1 :
நடிகர்திலகம் ஜெயில் பறவையாக.....கூண்டுக்கிளியாக!!
சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
அதிக அளவில் சிறை வாழ்க்கையை திரையில் அனுபவித்ததிலும் நடிகர்த்திலகத்திற்கே முதலிடம் !!
புதிய பறவை தவிர ஏகப்பட்ட படங்களில் நடிகர்திலகம் செய்யாத குற்றத்திற்குத்தான் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !!
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......
ஆரம்பம் கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே ...
ஜெயில் 1 / குயில்1 பலே பாண்டியா!
ஆள் மாறாட்டத்தில் யாரை எங்கே வைப்பது என்பதில் சட்டத்தின் ஓட்டையால் நீதிதேவன் கோட்டை விட்டதால் நடிகர் திலகமும் கொஞ்ச காலம் சிறையில் குறட்டை விட நேரிடுகிறது !!
விரக்தியில் சக சிறைத்தோழர்களும் கைகோர்த்துக் கலக்கும் கருத்தாழமிக்க ஜெயில் குயிலிசை!!
ஜெயில் 2 / குயில் 1 சரசுவதி சபதம்
ஈகோ தலையெடுத்ததால் அல்லிராணி தன்னைப் புகழ்ந்து பாட மறுத்த புலவர் பெருமகனை ஜெயிலில் தள்ள இதற்க்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத நடிகர்திலகம் காவலர் தலைவர் நாகேஷும் கால் தடுமாறி ஆடும் வண்ணம் ஒரு குயிலிசைப் பாடலை புயலிசையாக வீசுகிறார் !
ஆனாலும் கதாநாயகர்களாயிற்றே தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனாலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று உணர்த்தி விடுதலை ஆகி விடுவார்கள்
Last edited by sivajisenthil; 25th August 2015 at 09:16 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th August 2015, 06:16 PM
#2955
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 25th August 2015 at 06:34 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th August 2015, 06:34 PM
#2956
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...
-
25th August 2015, 06:41 PM
#2957
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
இப்போ கேட்டுட்டு அப்புறம் நினைவுக்கு வருதான்னு சொல்லுங்க.
http://www.mediafire.com/download/qt...atti+Vacha.mp3
-
25th August 2015, 06:45 PM
#2958
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
வாசு ஜி...
எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...
கற்பூரமே இப்படி சொன்னா வாழை மட்டை நான் என்ன சொல்றதாம்?
-
25th August 2015, 06:48 PM
#2959
Senior Member
Diamond Hubber
நீங்க காய்ஞ்ச கட்டை நான் ஈரமான கற்பூரம்னு வச்சுப்போம் வாசுஜி.. ( கவனிக்க.. நான் வாழைன்னு சொல்லலைந்.. சந்தனக் கட்டைனு சொல்றே )
ஜில் ஜில் மேனி பாட்டை முழுசா பாடிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதே ஸ்டைலில் வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்திலிருந்து
நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை..
கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா
நீ காட்டுக் குட்டி நான் ஒரு காடு வெட்டி
நீ பாட்டி வேஷம் போட்ட போதும் காதல் உண்டம்மா
அப்படின்னு டி.எம்.எஸ் பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது.
அதையும் ரசிப்போமே
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th August 2015, 07:02 PM
#2960
Senior Member
Diamond Hubber
நிச்சயமாக. அதை மறக்க முடியுமா? போட்ட புள்ளியை நெஞ்சிலிருந்து அகற்ற முடியாதே. ஆனந்தமாக ரசித்துவிட்டு இதையும் ரசிப்போம். அதே போல இன்னொரு பாட்டு. அதே ஜெய். உஷாவுக்கு பதிலாக உப்பிய விஜயா. ஆனால் பிளாக் அண்ட் ஒயிட்.
பொன்னா? இல்லை பூவா?
கண்ணா? இல்லை மீனா?
பொட்டு வச்சக் கட்டழகு
கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்துப் பல்லழகு
மூடி வச்ச முன்னழகு
தந்த பசி தீராது சும்மா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks