-
26th August 2015, 09:33 PM
#3011
Senior Member
Senior Hubber
மீள் பதிவு
தொழில் பாட்டுக்கள் - 1
மாதா பிதா குரு தெய்வம்.. என்பதில் முதலில் மாதா..
தன்னுள்ளே தானடக்கி தன்னுயிர்போல் பேணிவந்த
அன்னையவள் போலுண்டா ஆம்..
பிதா…
நீண்டிருக்கும் வாழ்க்கை நிலைத்தே இருப்பதற்கு
ஈன்றவர் செய்தாரே ஆம்..
எனில் அடுத்து வருவது குரு.. அதற்குப் பின் தான் தெய்வமெல்லாம்.. குரு.. வழி நடத்துபவர்..கற்பிப்பவர்.. மொழியாகட்டும் தொழிலாகட்டும்.. கற்காமல் ஒரு மனிதன் மேல் வந்த்தில்லை..
ஆரம்ப காலப் பள்ளியாசிரியர்கள் மேல் நிலைக் கல்வி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என நீள் வரிசை உண்டு எல்லாருக்கும்.. என்னைப் பொருத்தவரை இன்று வரை எல்லாரிடமும் கற்றுக்கொண்டு தான் வருகிறேன்.. தொலைபேசியிலோ நேரிலோ பேசும் போதுகூட குரு என்று தான் பேசுவேன்..பேசிக் கொண்டிருக்கிறேன்..
வாழ்க்கை நெடும்பயணம்.. தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ் நாட்களில் தினமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்..
பதினைந்து வருடங்களுக்கு முன் இதே மன்ற மையத்தில் வந்த போது.. தமிழ் கற்கக் கசக்கவா செய்கிறது கண்ணா வா எனப் பிடித்து எனக்குத் தமிழ்ப்பால் புகட்டிய மேலான ஆசிரியர்கள் பேரா. பசுபதி, சொல்லின் செல்வர் ஹரியண்ணா, பேரா. அனந்த், கலைமாமணி இலந்தை, நண்பர் அபுல் கலாம் ஆசாத். இன்னும் எண்ணிலா ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன்..
தங்கள் பதவி என்னவாகிலும் இருந்தாலும் அதை விட்டு எனக்குச் சொல்லிக் கொடுத்து திருத்திய அவர்களின் மனப்பாங்கு தான் என்னே.. (இன்னும் திருந்தவில்லை என்பது வேறு விஷயம்..) அவர்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நமஸ்காரங்கள்..
இந்தப் பாடல் நூற்றுக்கு நூறு படத்தில் வருவது.. ஆசிரியர் என்பவரும் மாணவராக இருந்து வந்தவர் தான்.. மாணவர்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கு பெருக்கெடுக்கும் உற்சாகம் ஊற்றாய் ப் பெருகி வரும் பாடல் இது..
கன்னை எடுத்தோமா
கண்ணால் குறிபார்த்தோமா
கன்னெனச் சுட்டோமா
கண்ணழகு நாயகியருடன் பாடினோமா என்றிருந்த ஜெய்சங்கர்
கண்கலங்க வைத்துவிடுவார்
பார்ப்போரைத் தன் நடிப்பால்.. வித்தியாசமான படம்.. அழகிய பாடல்..
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்ture=player_detailpage
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th August 2015 09:33 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2015, 09:37 PM
#3012
Senior Member
Seasoned Hubber
ji
Oru malayala padal ungalukkaga
music babukka
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th August 2015, 09:40 PM
#3013
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
'ராதா' என்ற படம் தங்களுக்கு நினைவிருக்கும். முத்துராமன், பிரமீளா நடித்தது. மேஜரும் உண்டு. இதில் சுசீலா அம்மா பாடிய அருமையான பாடல் ஒன்றை நினைவு படுத்திக் கொள்வோமா?
கண்ணா! கண்ணா! கண்ணா!
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
இங்கே ஏங்குகிறேன் தனியாக
http://www.inbaminge.com/t/r/Radha/
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2015, 09:41 PM
#3014
Senior Member
Diamond Hubber
//ji
Oru malayala padal ungalukkaga
music babukka//
கண்டிப்பாக பார்க்கிறேன் ஜி. நன்றி! நன்றி!
-
26th August 2015, 10:08 PM
#3015
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ஆஹா.. பேஷாக.. இதன் பின்னால் ஒரு சுவையான விஷயம் உள்ளது.
நான் முதன் முதலில் பதிவு செய்த ஆடியோ கேஸட்டில் இடம் பெற்ற பாடலாயிற்றே... இதன் கூட பதிவு செய்த பாடல்களில் குறிப்பிடத்தக்க இன்னோர் பாடல், தலைப்பிரசவம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் பாலா பாடிய அருமையான பாடல், கண்ணோடு மீனைக் கண்டு கண்ணாடி மேனி கண்டு...
கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாலாவின் இனிமையான குரல்...
சரணத்தில் மெல்லிசை மன்னர் தாளத்தை மாற்றி விடுவார்.
கேட்டுப்பாருங்கள்..
http://www.inbaminge.com/t/t/Thalai%20Prasavam/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th August 2015, 10:11 PM
#3016
Senior Member
Seasoned Hubber
அந்த கேஸட்டில் இடம் பெற்ற இன்னோர் அபூர்வமான பாடல்... இந்த பாடல் எனக்கு போனஸாக கடைக்காரரின் தேர்வாக பதிந்து விட்டார். அவசரக்காரி படத்தில் சங்கர் கணேஷின் இசையில் இடம் பெற்ற பாடல்...கடைக்காரர் தயவில் அப்போது தான் முதன் முதலில் கேட்டேன்.
இதுவும் பாலாவின் சூப்பர் வாய்ஸ்..
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்...
(சி.க. சார் ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது.. சமர்த்தாக இருக்கோணும்)
கேட்டுத்தான் பாருங்களேன்..
http://www.inbaminge.com/t/a/Avasarakari/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th August 2015, 10:13 PM
#3017
Junior Member
Veteran Hubber
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் உள்ளத்தின் கண்களே !
பகுதி 2 : ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகத்தின் உருவகம்!
பகுத்து தொகுத்து ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகம் உருவகப் படுத்திய ஈசனின் குணாதிசயங்களை முறைப்படுத்தி அவ்வையாராக முத்திரை பதித்த கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் அம்மையார் எப்படிக் கணீரென்று நமது மனங்களில் மணி மண்டபம் எழுப்புகிறார் !!!!
Last edited by sivajisenthil; 26th August 2015 at 10:27 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th August 2015, 10:35 PM
#3018
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th August 2015, 03:56 AM
#3019
Senior Member
Diamond Hubber
வாசுஜி...
மரத்தைத் தவிர வேறு பாடல் எதுவும் தோணலியே !!! யோசித்துப் பார்க்கிறேன்.
ராகவ்ஜி...
ஓடி வாங்கடா.. பாட்டை அடிக்கடி பாட்டுக்குப் பாட்டு திரியில் பதிவதுண்டு. ஒரு நண்பர் அது ஸ்கூல் மாஸ்டரில் இல்லை என்றும் என் சொந்தச் சரக்கு என்றும் கூட சொல்லியிருக்காரு... ( அது மாஸ்டருக்காக வீடு கட்டுவதற்கு பசங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பணி புரியும்போது பாடும் பாட்டு இல்லையா ? )
கண்ணோடு மீனைக் கண்டு கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை. யூடியூபில் காணொளி இல்லை என்றால் அந்தப் பாட்டு பல பேருக்குத் தெரியாமல் போய் விடுகிறது... ராதா, தலைப்பிரசவம் எல்லாம் அப்படித்தான் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஆடிப்பெருக்கு அன்று "ஆடியிலே பெருக்கெடுத்து" பாட்டைப் பதிந்து சிலர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.
அவசரக்காரி... யார் நடித்த படம் ? சத்யராஜ் வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் படமா ?
ரவிஜி..
குரு என்றுமே தனித்துவம் நிறைந்தவர். மாதா, பிதா, உறவுகள் ஆகியோர் சொந்தத்தால் இணைந்தவர்கள். நட்போ மனதால் இணைந்தது. தெய்வம் பக்தியால் இணைந்தது. இவை எதுவும் இல்லாமல் நமக்கு அறிவு, பண்பு, வாழும் வகை ஆகியவற்றை கொடுக்கவே வருபவ அல்லவோ குரு !
எங்கள் வாத்தியார் என்று ஒரு படம் ( என நினைக்கிறேன் ).. கஷ்டப் படும் குருவுக்காக மாணவர்கள் உதவ முயலும் கதை.
அருமையாக இருக்கும். ( படம் வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை )
ராஜேஷ்..
அடுத்த தோட்டத்தின் வாசனைப் பூக்களை அள்ளிக் கொடுக்க உங்களால்தான் முடியும் !!! சுப்பர்ப் !
Last edited by madhu; 27th August 2015 at 04:03 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th August 2015, 06:21 AM
#3020
Senior Member
Diamond Hubber
//கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும//
சின்னா!
நான் தத்தி தள்ளாடும் தகரக் குடம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks