Page 302 of 400 FirstFirst ... 202252292300301302303304312352 ... LastLast
Results 3,011 to 3,020 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3011
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மீள் பதிவு



    தொழில் பாட்டுக்கள் - 1

    மாதா பிதா குரு தெய்வம்.. என்பதில் முதலில் மாதா..

    தன்னுள்ளே தானடக்கி தன்னுயிர்போல் பேணிவந்த
    அன்னையவள் போலுண்டா ஆம்..

    பிதா…
    நீண்டிருக்கும் வாழ்க்கை நிலைத்தே இருப்பதற்கு
    ஈன்றவர் செய்தாரே ஆம்..

    எனில் அடுத்து வருவது குரு.. அதற்குப் பின் தான் தெய்வமெல்லாம்.. குரு.. வழி நடத்துபவர்..கற்பிப்பவர்.. மொழியாகட்டும் தொழிலாகட்டும்.. கற்காமல் ஒரு மனிதன் மேல் வந்த்தில்லை..

    ஆரம்ப காலப் பள்ளியாசிரியர்கள் மேல் நிலைக் கல்வி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் என நீள் வரிசை உண்டு எல்லாருக்கும்.. என்னைப் பொருத்தவரை இன்று வரை எல்லாரிடமும் கற்றுக்கொண்டு தான் வருகிறேன்.. தொலைபேசியிலோ நேரிலோ பேசும் போதுகூட குரு என்று தான் பேசுவேன்..பேசிக் கொண்டிருக்கிறேன்..

    வாழ்க்கை நெடும்பயணம்.. தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ் நாட்களில் தினமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்..

    பதினைந்து வருடங்களுக்கு முன் இதே மன்ற மையத்தில் வந்த போது.. தமிழ் கற்கக் கசக்கவா செய்கிறது கண்ணா வா எனப் பிடித்து எனக்குத் தமிழ்ப்பால் புகட்டிய மேலான ஆசிரியர்கள் பேரா. பசுபதி, சொல்லின் செல்வர் ஹரியண்ணா, பேரா. அனந்த், கலைமாமணி இலந்தை, நண்பர் அபுல் கலாம் ஆசாத். இன்னும் எண்ணிலா ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன்..

    தங்கள் பதவி என்னவாகிலும் இருந்தாலும் அதை விட்டு எனக்குச் சொல்லிக் கொடுத்து திருத்திய அவர்களின் மனப்பாங்கு தான் என்னே.. (இன்னும் திருந்தவில்லை என்பது வேறு விஷயம்..) அவர்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நமஸ்காரங்கள்..

    இந்தப் பாடல் நூற்றுக்கு நூறு படத்தில் வருவது.. ஆசிரியர் என்பவரும் மாணவராக இருந்து வந்தவர் தான்.. மாணவர்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கு பெருக்கெடுக்கும் உற்சாகம் ஊற்றாய் ப் பெருகி வரும் பாடல் இது..

    கன்னை எடுத்தோமா
    கண்ணால் குறிபார்த்தோமா
    கன்னெனச் சுட்டோமா
    கண்ணழகு நாயகியருடன் பாடினோமா என்றிருந்த ஜெய்சங்கர்
    கண்கலங்க வைத்துவிடுவார்
    பார்ப்போரைத் தன் நடிப்பால்.. வித்தியாசமான படம்.. அழகிய பாடல்..


    உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்ture=player_detailpage

  2. Likes uvausan, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3012
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ji
    Oru malayala padal ungalukkaga
    music babukka


  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #3013
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    'ராதா' என்ற படம் தங்களுக்கு நினைவிருக்கும். முத்துராமன், பிரமீளா நடித்தது. மேஜரும் உண்டு. இதில் சுசீலா அம்மா பாடிய அருமையான பாடல் ஒன்றை நினைவு படுத்திக் கொள்வோமா?

    கண்ணா! கண்ணா! கண்ணா!

    உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
    கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
    உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
    உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
    இங்கே ஏங்குகிறேன் தனியாக

    http://www.inbaminge.com/t/r/Radha/
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes rajeshkrv liked this post
  8. #3014
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ji
    Oru malayala padal ungalukkaga
    music babukka//

    கண்டிப்பாக பார்க்கிறேன் ஜி. நன்றி! நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3015
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஆஹா.. பேஷாக.. இதன் பின்னால் ஒரு சுவையான விஷயம் உள்ளது.

    நான் முதன் முதலில் பதிவு செய்த ஆடியோ கேஸட்டில் இடம் பெற்ற பாடலாயிற்றே... இதன் கூட பதிவு செய்த பாடல்களில் குறிப்பிடத்தக்க இன்னோர் பாடல், தலைப்பிரசவம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் பாலா பாடிய அருமையான பாடல், கண்ணோடு மீனைக் கண்டு கண்ணாடி மேனி கண்டு...

    கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாலாவின் இனிமையான குரல்...

    சரணத்தில் மெல்லிசை மன்னர் தாளத்தை மாற்றி விடுவார்.

    கேட்டுப்பாருங்கள்..

    http://www.inbaminge.com/t/t/Thalai%20Prasavam/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai, rajeshkrv liked this post
  11. #3016
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அந்த கேஸட்டில் இடம் பெற்ற இன்னோர் அபூர்வமான பாடல்... இந்த பாடல் எனக்கு போனஸாக கடைக்காரரின் தேர்வாக பதிந்து விட்டார். அவசரக்காரி படத்தில் சங்கர் கணேஷின் இசையில் இடம் பெற்ற பாடல்...கடைக்காரர் தயவில் அப்போது தான் முதன் முதலில் கேட்டேன்.

    இதுவும் பாலாவின் சூப்பர் வாய்ஸ்..

    பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்...

    (சி.க. சார் ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது.. சமர்த்தாக இருக்கோணும்)

    கேட்டுத்தான் பாருங்களேன்..

    http://www.inbaminge.com/t/a/Avasarakari/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  13. #3017
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் உள்ளத்தின் கண்களே !
    பகுதி 2 : ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகத்தின் உருவகம்!

    பகுத்து தொகுத்து ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகம் உருவகப் படுத்திய ஈசனின் குணாதிசயங்களை முறைப்படுத்தி அவ்வையாராக முத்திரை பதித்த கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் அம்மையார் எப்படிக் கணீரென்று நமது மனங்களில் மணி மண்டபம் எழுப்புகிறார் !!!!

    Last edited by sivajisenthil; 26th August 2015 at 10:27 PM.

  14. Likes Russellmai, vasudevan31355, rajeshkrv liked this post
  15. #3018
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    (சி.க. சார் ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது.. சமர்த்தாக இருக்கோணும்)

    செக்கச் செவந்த செந்தாமரை
    தின்னு பார்த்த செம்மாதுளை
    உன்னைப் போல பொம்பளைய
    உலகில் எங்கும் பாக்கலையே..

    மையைப் போடாம மயக்கிப்புட்டே
    மனசைப்பறிக்காம பறிச்சுப்புட்டே
    ஆவலை மீறியே சேவலைத் தேடியே
    ஆவலாய்க் கோழி போல் ஓடி வந்தேன்..

    அட அட அடடா ராகவேந்தர் சார்..எழுதினது சங்ககாலப் புலவர் போலத் தெரிகிறதே..


    கோழியது தன்னலகைக் கூராக்க அங்கே
    ...குனிந்துகொண்டே பாறையிலே மூக்கை வைத்து
    ஊழியெனக் காற்றடிக்க அசையா நிற்கும்
    ..ஒயிலான ஆலமரம் போலத் திண்மை
    நாழியது பாராமல் இரண்டு பக்கம்
    .. நன்றாகத் தீட்டுதற்போல் நங்கை நீயும்
    ஆழியென புதைந்திருக்கும் உள்ளம் இங்கே
    ..அலைகடலாய்ப் பொங்கியதால் செய்கின் றாயோ...

    என அந்தக்கால ப் புலவர் சின்னக் கண்ணனார் எழுதியிருக்கார்..!

    (தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..கொஞ்சம் கோப மன நிலையில் இருந்தேன்.. பாட்டெழுத விட்டுப்புட்டீக)

    ஹப்புறம்..வாசு சார்..வந்துட்டேன்..



    கிட்ட வந்தாலே கோபம் வரும்
    விட்டு போனலோ தாபம் வரும

    என்னமோ போங்க..
    Last edited by chinnakkannan; 26th August 2015 at 10:38 PM.

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  17. #3019
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி...

    மரத்தைத் தவிர வேறு பாடல் எதுவும் தோணலியே !!! யோசித்துப் பார்க்கிறேன்.

    ராகவ்ஜி...
    ஓடி வாங்கடா.. பாட்டை அடிக்கடி பாட்டுக்குப் பாட்டு திரியில் பதிவதுண்டு. ஒரு நண்பர் அது ஸ்கூல் மாஸ்டரில் இல்லை என்றும் என் சொந்தச் சரக்கு என்றும் கூட சொல்லியிருக்காரு... ( அது மாஸ்டருக்காக வீடு கட்டுவதற்கு பசங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பணி புரியும்போது பாடும் பாட்டு இல்லையா ? )

    கண்ணோடு மீனைக் கண்டு கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை. யூடியூபில் காணொளி இல்லை என்றால் அந்தப் பாட்டு பல பேருக்குத் தெரியாமல் போய் விடுகிறது... ராதா, தலைப்பிரசவம் எல்லாம் அப்படித்தான் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஆடிப்பெருக்கு அன்று "ஆடியிலே பெருக்கெடுத்து" பாட்டைப் பதிந்து சிலர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

    அவசரக்காரி... யார் நடித்த படம் ? சத்யராஜ் வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் படமா ?

    ரவிஜி..

    குரு என்றுமே தனித்துவம் நிறைந்தவர். மாதா, பிதா, உறவுகள் ஆகியோர் சொந்தத்தால் இணைந்தவர்கள். நட்போ மனதால் இணைந்தது. தெய்வம் பக்தியால் இணைந்தது. இவை எதுவும் இல்லாமல் நமக்கு அறிவு, பண்பு, வாழும் வகை ஆகியவற்றை கொடுக்கவே வருபவ அல்லவோ குரு !

    எங்கள் வாத்தியார் என்று ஒரு படம் ( என நினைக்கிறேன் ).. கஷ்டப் படும் குருவுக்காக மாணவர்கள் உதவ முயலும் கதை.
    அருமையாக இருக்கும். ( படம் வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை )

    ராஜேஷ்..

    அடுத்த தோட்டத்தின் வாசனைப் பூக்களை அள்ளிக் கொடுக்க உங்களால்தான் முடியும் !!! சுப்பர்ப் !

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  19. #3020
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //கிட்ட வந்தாலே கோபம் வரும்
    விட்டு போனலோ தாபம் வரும//

    சின்னா!

    நான் தத்தி தள்ளாடும் தகரக் குடம்
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •