-
31st August 2015, 12:03 AM
#11
Senior Member
Seasoned Hubber
இன்று மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நடத்தப் பட்ட மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. அரங்கு நிறைவு கண்டது மட்டுமின்றி இருக்கை இல்லாமல் நின்று கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். அன்புச்சகோதரர் ராம்குமார் அவர்களும் எம்.எஸ்.வி.கோபி அவர்களும் வருகை புரிந்தது மகிழ்வளிக்கக் கூடியதாக மட்டுமின்றி அந்த இரு பெரும் ஜாம்பவான்களையும் அவர்கள் சார்பாக நமக்கு அனுப்பி வைத்தாற் போன்ற உணர்வையும் ஊட்டியதென்றால் மிகையில்லை.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல்களுக்கான தொகுப்புரையினை மிக அருமையாக செய்தார் முரளி அவர்கள்.
இந்நிகழச்ச்சி சிறப்புற நடத்திய முரளி சாருக்கு உளமார்ந்த நன்றி.
நிகழ்ச்சியினைப் பற்றி விரிவான பகிர்வினை முரளி சார் தர வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st August 2015 12:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks