-
3rd September 2015, 09:29 AM
#3331
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
ஒரு டவுட். 'நியாயம் கேட்கிறேன்' என்று ஆனந்தபாபு நடித்து ஒரு படம் வெளிவந்தது. நன்றாகத் தெரியும். அப்படியே விஜயலலிதா போன்ற முக அமைப்பு கொண்ட தேவிபாலா என்பவர்தான் நாயகி.
ஏ..வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம் 'நியாயம் கேட்கிறோம்' என்று ஞாபகம். 1973-ல் வந்த படம் என்று நினைவு.
நீங்கள் சொன்னது போல்
கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
அங்கு சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்
புரட்சியைத் தந்ததும் சிறைச்சசாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சசாலை
என்று வரிகள் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. சரியா தவறா என்று தெரியவில்லை. தேடிப் பிடித்து விடுவோம்.
Last edited by vasudevan31355; 3rd September 2015 at 09:34 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015 09:29 AM
# ADS
Circuit advertisement
-
3rd September 2015, 09:36 AM
#3332
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
மது சொல்வது போல் ஏவிஎம் ராஜன் நடித்த படம் நியாயம் கேட்கிறேன்.
ஆனந்த் பாபு நடித்த படம் தான் நியாயம் கேட்கிறோம்.
நியாயம் கேட்கிறேன் படத்தில் மாமா இசையில் ஒரு சூப்பர் டூயட் பாடல் உள்ளது. பல்லவி வரிகள் நினைவுக்கு வரவில்லை.
நினைவு படுத்திப்பார்க்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 09:44 AM
#3333
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்
மது சொல்வது போல் ஏவிஎம் ராஜன் நடித்த படம் நியாயம் கேட்கிறேன்.
ஆனந்த் பாபு நடித்த படம் தான் நியாயம் கேட்கிறோம்.
நியாயம் கேட்கிறேன் படத்தில் மாமா இசையில் ஒரு சூப்பர் டூயட் பாடல் உள்ளது. பல்லவி வரிகள் நினைவுக்கு வரவில்லை.
நினைவு படுத்திப்பார்க்கிறேன்.
nyayam ketkirom thaane old movie .. nyayam ketkiren is Anand babu
i remember madhu anna or some one talking about Kannan pirandadum siraichalai & Vervai thuligale
-
3rd September 2015, 10:05 AM
#3334
Senior Member
Diamond Hubber
-
3rd September 2015, 10:06 AM
#3335
Senior Member
Diamond Hubber
ஜி!
வாங்கோ! வாங்கோ! வணக்கம். நலமா?
-
3rd September 2015, 10:24 AM
#3336
Senior Member
Diamond Hubber
ஆனந்த் பாபு நடித்த 'நியாயம் கேட்கிறேன்' படத்தின் டைட்டில்.
Last edited by vasudevan31355; 3rd September 2015 at 10:27 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
3rd September 2015, 10:27 AM
#3337
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
திரையில் பக்தி வெகு அழகாக முடித்த ரவிக்கு ஒரு ஓ..
*
ம்ம் பாட்ஸ் லாம் கேக்கணும்..கேக்காம இருக்கயே இது நியாயமான்னு கேக்கப் படாத் 
*
நேற்று ஓமான்பற்றி எழுதிய பாக்கள்..
*
Oman - 4
முயலாமை என்றகதை மொட்டவிழ்ந்து இங்கே
சுயமாக ஆமைகள் சூரில் தயங்காமல்
பற்பல காதங்கள் பாங்காகத் தான்கடந்து
முட்டைகள் இட்டிடு மே..
சிறுகப்பல் போலவே சீர்மை மிகவாய்
பொறுமையாய் ஆமை பொறுப்பாய் நறுவிசு
நன்றாகக் கொண்டே நகர்ந்தே கடலிலே
மெள்ளமாய்ச் சேர்ந்திடு மே..
(இந்த வருட ஆரம்பத்தில் பெளர்ணமியன்று Sur சென்றது வித்தியாசமான அனுபவம்.. இரவு பதினொன்றரைக்கு மேலே நிலா சிரிக்க கீழே கடல் மணல் சற்றே வித்தியாசமாய்ப் பரந்து விரிந்திருக்க விரைவாக நடக்கலாம் என்று பார்த்தால்ம்ஹூஹூம் முடியவில்ல..
ஏனாம்.. ஏனென்றால் ஒரு அடி வைத்தால் அடுத்த அடி கால் தொபுக்கடீரென்று உள்ளே போனது..ஏனெனில் அந்தக் கடற்கரையில் அந்த சீஸனின் போது எங்கிருந்தோ வரும் கடலாமைகள் நல்ல இடமாய்ப் பார்த்து முட்டை போடுவதற்கு கிடுகிடு என்று பள்ளம் தோண்டி த் தோண்டிப் பார்க்குமாம்..சரியில்லை இது முட்டையிட வசதிப்படாது என நினைத்தால் மறுபடி மணல் போட்டு மூடிவிடுமாம்..அந்த மணல் தொளதொள என இருப்பதால் கால்கள் தொபுக்..என உள்ளே போகும்..
முன்னால் நிலாவெளிச்சத்தில் கைட் ஒல்லியாய் ப் போக பதினைந்து பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் மெல்ல மெல்ல மெல்ல பார்த்து நடக்க கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் கடந்ததும்..கைட் எதிர்பாராமல் உறவினரைப் பார்த்த காதலி மிரண்டு காதலனிடம் சொல்வது போல உதட்டில் கைவைத்து ஷ் என்று சொல்லி ஓரிடத்தில் காட்ட.. ஒரு பெரிய ஆமை அந்த நிலவொளியில் மூன்பாத் எடுத்துக் கொண்டிருந்தது..
இல்லை இல்லை..மெல்ல நகர்ந்தது..
நாங்கள் மூச்சு மெல்ல மெல்ல விட்டு ஆர்வமாய்ப் பார்க்க அது மெள்ள நகர..கடற்கரை மணலில் அது இருந்த இடம் ஒரு செவ்வகப் பள்ளமாய் ஆக..கொஞ்சம் கொஞ்சமாய் கடல் நோக்கி நகர.. பீரங்கி வண்டிகளில் இரண்டு ட்ராக் வரும் இது ஒற்றை ட்ராக்காட்டமாக கோடுகிழித்து மெல்ல மெல்ல மெல்ல கடலை நோக்கி நகர்ந்து.. கடலை அடைந்தே விட்ட கணத்தில்
என்னாச்சுன்னா அம்புட்டு தான்..சாக்லேட் தர்றேன் வா என்றவுடன் தாவுமே குழந்தை, தமன்னாவைப் பார்த்தவுடன் குதிக்குமே மனசு.. அதைப்போலே ஒரே தாவல் தான்..பின் கடலலைகள் அதைத்தாலாட்டியதோ அல்லது அது தான் கொஞ்சியதோ தெரியவில்லை..அப்படியே நீந்தி நீந்தி மறைந்தும் விட்டது..
கைட் அந்த ஆமைக்கு 45 வயதிருக்கும் எனச் சொன்னான்
முட்டைகள் பார்க்க முடியவில்லை.. வேறு இருஆமைகள் தொலைவிலிருந்து பார்த்தோம் (அதுகளுக்கு இருபத்தைந்து வயதாம்..ம்ம் கிட்டப் போகவேண்டாம் எனச் சொல்லியதால் போகவில்லை)
பின் திரும்பினோம் வேகமாய் ஆமை நினைவுகளைச் சுமந்து..(தூக்கம் வந்ததும் இன்னொருகாரணம்..)
**
வெகு அழகான பாட்டு..வெகு அழகான நடை..
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd September 2015, 10:31 AM
#3338
Senior Member
Diamond Hubber
//வெகு அழகான நடை//
சின்னா! உங்கள் நடையைப் போலவே.
-
3rd September 2015, 12:10 PM
#3339
Senior Member
Senior Hubber
//சின்னா! உங்கள் நடையைப் போலவே.// Thank you.. naan chinnak kutti yaanai.. avar Imayam.. irunthaalum thanks
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 02:21 PM
#3340
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ம்...ம்... உங்களை நெருங்க முடியுமா... சபையோர்களே நியாயம் கேட்கிறேன்... இது சரியா.. இப்படியா வாசு சார் போட்டுத் தாக்குவது...
எனிவே அந்த ஏவிஎம் ராஜன் படம் டைட்டில் றேனோ றோமோ .... சிவிஆர் சார் இயக்கியது.. கேவிஎம் இசை அது மட்டும் கண்டிப்பாகத் தெரியும்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks