-
3rd September 2015, 09:01 PM
#3121
Junior Member
Platinum Hubber
அறுபதுகளில் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் எம்.ஜி.ஆர்., X சிவாஜி என்ற முரணில் வேறுபட்டனர் ; மோதிக் கொண்டனர். மதுரை நகரில் முக்கியமான தெருக்களில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. மாலைவேளையில் தேநீர்க்கடையின் முன்னர் நின்று அரட்டையடிக்கும் ஒத்த கருத்துடையவர்கள், தங்கள் அபிமான நடிகரின் பெயரால் மன்றம் அமைத்துக் குழுவாகச் செயற்பட்டனர். எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் நிறைய ரசிகர் மன்றங்கள், ரசிகர் மன்றத் தலைவர், செயலர், பொருளாளர், உறுப்பினர் போன்ற பதவிகள், வேலைவெட்டி எதுவுமற்ற இளைஞர்களுக்குக் கௌரவத்தைத் தந்தன; அடையாளத்தைத் தந்தன. தங்களுடைய அபிமான நடிகரின் திரைப்படம் வெளியிடப்படும்போது, திரையரங்க வாயிலில் அந்த நடிகரின் வண்ணப்படத்துடன் தங்கள் பெயர் களையும் எழுதி வைக்கும் தட்டிகள் மூலம் உற்சாகமடைந்தனர். திரையரங்க முன் வராண்டாவில் தொங்கவிடப்பட்ட கண்ணாடி பிரேமுக்குள் நடிகரின் படமும், கீழே மன்ற நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. சில போட்டோக்களில் நடிகர் புன்னகைத்துக் கொண்டிருக்க, அருகில் மன்ற நிர்வாகிகள் அடக்க ஒடுக்கத்துடன் நிற்பார்கள். மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றம், மாவட்ட தலைமை ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆர்., பாதுகாப்புப்படை ரசிகர் மன்றம், நீரும் நெருப்பும் ரசிகர் மன்றம்..... இவை போன்ற பெயர்களின் மூலம், ஒவ்வொரு ரசிகர் மன்றமும் தனித்தியங்க முயன்றன.
திரைப்படம் வெளியாகும் திரையரங்கின் முன்னர் வண்ணக் காகிதக் கொடிகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் அரங்கின் முன்னர் கூடிநின்று கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் ஏற்கெனவே படத்தின் பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் பிரபலமாகி இருந்தால் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு கூடிவிடும். எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் வெளியீடானது, ஓரிரு தடவைகள் தள்ளிப்போகும். இதனால் எப்போது தங்கள் அபிமான நடிகரின் படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் வேறு பிரபலமாகி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தால், ரசிகர்களின் மனப் பதற்றம் அளவற்றுப் பெருகிவிடும். திரைப்படக் காட்சியைப் பெரிய அளவில் வரைந்து திரையரங்க வாயிலில் வைக்கப்படும் காட்சியானது, ரசிகர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும். நடிகரின் பத்தடி உயரமான கட் - அவுட்டிற்கு பெரிய மலர் மாலை, எலுமிச்சைகளைச் சேர்த்து மாலை அணி வித்தலைப் பெரும் சாதனையாகச் சில ரசிகர்கள் செய்தனர். இன்னும் சிலர் கட் - அவுட்டின்மீது குடம் குடமாகப் பாலை ஊற்றிப் பாலாபிஷேகம் செய்து தங்களுடைய வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
காலையில் 10-30 மணிக்கு முதல் காட்சியாகப் பிரபல நடிகரின் புதுத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது என்பதை அறியும் ரசிகர்கள் முதல்நாள் மாலையிலிருந்தே திரையரங்க வாயிலில் இருக்கும் கவுண்டர் முன்னர் காத்துக் கிடப்பார்கள். இரவு முழுக்கத் தூங்காமல், அல்லது அரைகுறையாகத் தூங்கி நுழைவுச் சீட்டுக்காகக் காத்திருப்போரில் திருமணமானவர்களும் கலந்து இருப்பார்கள். சென்ட்ரல் திரையரங்கில் 0.90 காசு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் கல்பாவிய சின்னச் சந்தில் மூத்திர வீச்சமடிக்கும் அந்த வாடையைச் சகித்துக்கொண்டு பன்னிரண்டு மணிநேரம்கூடக் காத்திருக்கும் ரசிகர்கள் இருந்தனர். இரவில் பனி கொட்டினாலும் அல்லது மழை தூறினாலும் வரிசையில் காத்துக் கிடப்பது தவமிருப்பது போலிருக்கும். காலையில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்னர் திரையரங்கு வாயில் போர்க்களம் போலக் காட்சியளிக்கும். சீருடை அணிந்த காவலர்கள் கையில் கம்புடன் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார்கள்.
எம்.ஜி.ஆர். படத்திற்குத்தான் நீளமான வரிசை இருக்கும்; தள்ளுமுள்ளு இருக்கும். கையில் கம்புடன் குட்டையான ஆள் ஒருவர், வரிசையில் ஒழுங்கு மீறும்போது, சகட்டுமேனிக்கு வன்முறையைப் பிரயோகித்து ஒழுங்கை நிலைநாட்டுவார். எப்படியோ இடித்துத் தள்ளிக் கவுண்டருக்குள் நுழைந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள், ஏதோ சாகசம் புரிந்தவர்கள் போலத் திரையரங்கினுள் நுழைவார்கள். திரைப்படம் திரையில் தோன்றியது முதலாக ‘விசில்’ ஒலி காதைப் பிளக்கும். ஒரே கைதட்டல் வேறு கேட்கும். முதல் காட்சியில் அபிமான நடிகர் தோன்றும்போது, காகிதம் அல்லது பூக்களை ஒளிக்கற்றை மீது எறிந்துவிட்டு, பெஞ்சின் மீது ஏறி நின்று கூச்சலிடுவார்கள். முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தேன் என்ற பெருமையுடன் திரையரங்கினை விட்டு வெளியேறுகிறவர்களின் முகத்தில் பெருமை பொங்கும். திரையரங்க வாயிலில் காத்திருக்கும் கும்பலில் சிலர், ‘படம் எப்படி?’ என்று ஆவலுடன் விசாரிப்பார்கள். ‘படம் வெள்ளிவிழாதான், ‘பாட்டு, சண்டை தூள்’ என்று சொல்வதைக் கேட்டவுடன், அடுத்த காட்சிக்காகக் காத்திருப்போர் மிகவும் சந்தோஷமடைவார்கள்.
courtesy - keetru
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd September 2015 09:01 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2015, 09:16 PM
#3122
Junior Member
Diamond Hubber
1988 இல் தனிக்கட்சி கண்டபோதும் அவர் மேலும் சில தவறுகள் செய்தது
அவரை படு குழியில் தள்ளிவிட்டது! மகாபாரத கர்ணன் , அர்ச்சுனனைவிட பலசாலியாக இருந்த போதும் தன் வலிமையை ஒவ்வொரு காலகட்டதிலும்
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நட்புக்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து கடைசியில் எப்படி வீழ்ந்தானோ , அப்படிதான் நம் அன்புக்குரிய தலைவர் சிவாஜியும் அரசியலில் .....
வணக்கம் நண்பா,
இது மீண்டும் வரம்பை மீறுகின்ற வரிகளாக உள்ளதே. கர்ணன் சேரத்தந்து யாருடன் "சுயோதனன்" யாரும் தோற்கடிக்க முடியாதவன் என்றும் ஆர்த்தம். சுயோதனன் போல் ஒரு உத்தமன் உலகில் இல்லை என்று நான் சொல்லி தான் தங்களுக்கு தெரியவேண்டுமா. இங்கு "மகாபாரதம்" பாடம் நடத்த இல்லை எனக்கு எண்ணம். ஆனால் என் என்னத்தை மாற்றிவிடுமோ உங்களது இவ்விரு "நட்புக்காக சேரகூடாதவர்களோடு " வண்ணம் என்று எனக்குள் ஒரு பதற்றம்.
நன்றி.
Last edited by saileshbasu; 3rd September 2015 at 09:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 10:03 PM
#3123
Junior Member
Diamond Hubber
சமிபத்திய சில பதிவுகள் இப்படிதான் உள்ளது [இங்கு அல்ல] :
நம் நிலைமையும் வடிவேல் நிலைமையும் ஒன்றுதான்
-
3rd September 2015, 10:06 PM
#3124
Junior Member
Diamond Hubber
இன்று அன்பே வா பொன்விழா தொடக்க நாள்..... தெய்வாதீனமாக நேற்று தான் இந்த பதிவுக்கு உரிய பழைய நிகழ்வுகளை என் ஞாபக அடுக்குகளில் இருந்து எடுத்தேன்.....
முது பெறும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களை சென்னையில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் ஒரு முறை சந்தித்த போது ..,அவர் சொன்ன
அரிய தகவல் அனைவரும் அறிய வேண்டிய தகவல்....
"புதிய வானம்... புதிய பூமி..." என்ற அந்த இளமை துள்ளும் அருமை பாடல் படம் பிடித்த போது ஒரு அற்புத நிகழ்வு.....
உதய சூரியனின் பார்வையிலே....( பின்னர் சென்சாரால் புதிய சூரியன் என்று மாறியது எல்லோரும் அறிந்த கதை.....! அதை சொல்ல.....மயில்ராஜ் எதற்கு......???!!! ) - எனும் வரியின் போது சூரியனை காண்பிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். ஆசைப்பட - அந்த சில்லிட்ட பூமியில் எங்கே சூரியனை தேடுவது.....? விசாரிப்போம் என்று நானும் (எஸ்.பி.எம்.) ஏவிஎம் சரவணன் அவர்களும் ஊரெல்லாம் போய் விசாரித்து நாங்கள் போய் படக்குழுவிடம் சொன்னோம்....
அதாவது இங்கிருந்து 24 கி.மீ. தொலைவில் ஒரு மலை முகட்டு உள்ளது அங்கே சூரியன் சரியாக 4 முதல் ஏழு நிமிடங்கள் வரை தான் தெரியுமாம் ...?! இதை சொன்னவுடன் எம்.ஜி.ஆர். சார் குஷி ஆகி என்னையும் சரவணன் சாரையும் கட்டி பிடிச்சு
"நாளை நாம போறோம்.....! நாளை நாம போறோம்....!" னு சொல்லீட்டு அவர் ரூமுக்கு போயிட்டார்.
அந்த குளுருல விடிய காலைல மொத்த யூனிட்டும் கிளம்பி 24 கி.மீ. பிரயாணம் பண்ணி போய்... அப்படின்னு நினைக்கும் போதே எங்களுக்கு ரொம்பவே மலைப்பா இருந்தது.....
“ஒரு வேளை சூரியன் நமக்கு தெரியவே இல்லைனா ….?” - என்று ஒரு கும்பல் குழப்பமாய் பேச .., குழம்பிய மனதோடு தூங்க போனோம்.....
முந்தைய நாளின் களைப்பில் அனைவரும் தூங்கி போக...., லேட்டாக நாங்கள் எழுந்து எம்.ஜி.ஆரை தேட அவரை ரூமில் காணோம்......
அடிச்சு புடிச்சு மொத்த யூனிட்டும் பயத்தோட ஸ்பாட்டுக்கு போக கூலிங் கிளாஸ் சகிதம் ஸ்டைல் ஆக மலையை பார்த்துக்கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர். சார்.
சரவணன் சார் தயக்கத்துடன் அவரை நெருங்க...., அவரை பேசவே விடாமல் எம்.ஜி.ஆர். சொன்ன வார்த்தை.....
"சரி ... சரி.... நேரமில்லை மொதல்ல காமெராவை ரெடி பண்ணுங்க......!"
என்றார்..... அடுத்து எங்களுக்கு வந்த சந்தேகம்..... சூரியன் வெளிவரும் அந்த மலை முகட்டுக்கு அருகில் எப்படி குறித்த நேரத்துக்குள் போக முடியும்....? முடியுமா.....? என யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் அசுர வேகத்தில் மின்னலாய் எம்.ஜி.ஆர். மலை ஏற ஆரம்பிக்க வயதில் இளையோரான நான் மற்றும் கேமரா உதவியாளர் ஒருவரும் கேமராவுடன் ஓட்டமும் நடையுமாக மலை ஏறினோம்.....
மற்ற யூனிட்டார் கீழே சற்று சந்தேக மனதுடன் எங்களை அண்ணாந்து பார்த்து இருக்க கரெக்டான பொசிசனில் எம்.ஜி.ஆர். சார் போய் நிற்க - சூரியன் வெளிவர - "கேமரா ரெடியா.....?" என எம்.ஜி.ஆர் எங்களை உத்வேகபடுத்த நாங்கள் கேமரா ஆன் செய்ய சரியாக சூரியனின் பின்னணியோடு பாடல் வரி ஒலிக்காமலே … ( ஆடியோ டெக்னிசியன் மலைக்கு கீழே இருந்தார்.....?! ) எம்.ஜி.ஆர் வாயசைத்து விரல் சொடுக்கினார்.....
"உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்து கொண்ட வேளையிலே...." டேக் ஓகே ஆனது .... ஒரே டேக்கில் .....
இதே இடத்தில் வேறு கதாநாயகன் இருந்து இருந்தால்.......???!!! அது தாங்க .... அவர் மக்கள் திலகம்....... என்று முடித்தார்.....
Thanks to Sri.Mayil Raj.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
3rd September 2015, 10:06 PM
#3125
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
நண்பர்களுக்கு வணக்கம்,
நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன்.
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....
...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[/COLOR]
நமது இதயக்கனி பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்த மாதத்தில், நற் முத்துக்களாய், 1000 அற்புதமான பதிவுகள் வழங்கிய அன்பு சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு, பாராட்டுக்கள் !

தங்களின் அருமையான பதிவுகள் மேலும் தொடர அன்புடன் வாழ்த்துகிறேன் !
Last edited by makkal thilagam mgr; 3rd September 2015 at 10:34 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 10:16 PM
#3126
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
1988 இல் தனிக்கட்சி கண்டபோதும் அவர் மேலும் சில தவறுகள் செய்தது
அவரை படு குழியில் தள்ளிவிட்டது! மகாபாரத கர்ணன் , அர்ச்சுனனைவிட பலசாலியாக இருந்த போதும் தன் வலிமையை ஒவ்வொரு காலகட்டதிலும்
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நட்புக்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து கடைசியில் எப்படி வீழ்ந்தானோ , அப்படிதான் நம் அன்புக்குரிய தலைவர் சிவாஜியும் அரசியலில் .....
வணக்கம் நண்பா,
இது மீண்டும் வரம்பை மீறுகின்ற வரிகளாக உள்ளதே. கர்ணன் சேரத்தந்து யாருடன் "சுயோதனன்" யாரும் தோற்கடிக்க முடியாதவன் என்றும் ஆர்த்தம். சுயோதனன் போல் ஒரு உத்தமன் உலகில் இல்லை என்று நான் சொல்லி தான் தங்களுக்கு தெரியவேண்டுமா. இங்கு "மகாபாரதம்" பாடம் நடத்த இல்லை எனக்கு எண்ணம். ஆனால் என் என்னத்தை மாற்றிவிடுமோ உங்களது இவ்விரு "நட்புக்காக சேரகூடாதவர்களோடு " வண்ணம் என்று எனக்குள் ஒரு பதற்றம்.
நன்றி.
சதோதரர் திரு. சைலேஷ் அவர்கள் அறிவது :
எத்தனை முறைதான் அவர்களுக்கு உரைப்பதென்றே தெரியவில்லை. ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது -- மலையை பார்த்து ...............குரைக்கிறது
தலைவரின் படப்பாடல் ஒன்றும் இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறது ................... ஆழம் தெரியாமல் காலை விட்டு, அவதிப்படலமா மூளை கெட்டு !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd September 2015, 10:21 PM
#3127
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
சமிபத்திய சில பதிவுகள் இப்படிதான் உள்ளது [இங்கு அல்ல] :
நம் நிலைமையும் வடிவேல் நிலைமையும் ஒன்றுதான்
நாமும் தலையை எங்காவது சென்று முட்டிக் கொள்ளத்தான் வேண்டும், ஒரு சில கோமாளிகள் நடத்தும் கூத்துக்கு !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 10:43 PM
#3128
Junior Member
Diamond Hubber
வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் [ ஆயிரத்தில் ஒருவர்]
-
3rd September 2015, 11:00 PM
#3129
Junior Member
Diamond Hubber
1000 பதிவுகள் வழங்கிய அருமை சகோதரர்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
-
3rd September 2015, 11:10 PM
#3130
Junior Member
Platinum Hubber
தினகரன் -03/09/2015
Bookmarks