-
6th September 2015, 06:14 AM
#3441
Junior Member
Seasoned Hubber

இந்த குழந்தை கேட்கிறது - நான் ஒரு இந்துவா ? முஸ்லிம் ஆ ? இல்லை கிறிஸ்துவனா ?? - எவ்வளவு பேர்களால் தைரியமாக , மனத்தெளிவுடன் சொல்லமுடியும் , நீ இவர்களில் எதுவுமே இல்லை , ஒரு மனிதன் என்று ----- மத வேறுபாடுகள் மட்டுமே நம்மிடையே இல்லை என்றால் எவ்வளவு இன்பம் நம்மை எல்லாம் இன்னும் கட்டிப்போட்டிருக்கும் ????
-
6th September 2015 06:14 AM
# ADS
Circuit advertisement
-
6th September 2015, 09:40 AM
#3442
Junior Member
Seasoned Hubber
Excellent interpration of Janamashtami!!!
The deeper meaning of Janamashtami|
The beauty in our ancient stories is that they were never made location-specific or time-specific. Ramayana or Mahabharata are not just events that happened a long time ago, they are happening everyday in our lives. The essence of these stories is eternal.
There is a deeper meaning to the story of Krishnas birth too. Devaki symbolizes the body and Vasudev symbolizes the life force (prana). When prana rises in the body, joy (Krishna) is born. But the ego (Kamsa) tries to eliminate joy. Kamsa is Devakis brother which indicates that ego is born along with the body. A person who is happy and joyful does not create trouble for anyone. It is the one who is unhappy and emotionally wounded who ends up causing disruption. Those who feel injustice has been done to them end up being unjust to others out of their hurt ego.
The biggest adversary of ego is joy. Ego cannot survive and has to bow down where there is joy and love. A person can hold a very high position in society, but he melts in front of his own little child. When the child falls ill, however strong the person is, they feel a little helpless. Ego simply melts when confronted with love, simplicity and joy. Krishna is the epitome of joy, the quintessence of simplicity and the very source of love.
Devakis and Vasudevs imprisonment by Kamsa signifies that when the ego takes over, the body feels like a prison. When Krishna was born, the prison guards fell asleep. The guards here are the senses which protect the ego because they are turned outward when awake. Inner joy sprouts in us when the senses turn inwards.
Krishna is also known as the butter thief. Milk is the essence of nourishment and curd is a cultured form of milk. When curd is churned, butter comes up and floats on top. It is nourishing and yet light, not heavy. When our intelligence is churned, it becomes like butter. When knowledge dawns in the mind, one gets established in ones Self. Such a person remains unattached to this world and his mind does not sink in it. Krishna stealing butter is a symbolism depicting the glory of love. So attractive is Krishnas charm and skill that he steals the minds of even the most dispassionate.
Why does Krishna have the peacock feather on his head? A king is responsible for the whole society and that responsibility can become a burden, which sits on the head as the crown. But Krishna fulfills all his responsibility effortlessly, like a game. A mother never feels taking care of her children is a burden. Similarly, Krishna wears his responsibility lightly and plays his roles colorfully, just like the peacock feather on his crown.
Krishna is the most attractive, joyful space within all of us. When there is no restlessness, worry or desire in the mind, you are able to get deep rest. And it is in deep rest that Krishna is born.
The message of Janamashtami is that it is time to bring a wave of joy in society. Become seriously joyful
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 09:51 AM
#3443
Junior Member
Seasoned Hubber
CK - இது உங்களுக்காக
செந்தில் சார் உங்களுக்கு பிடித்த பாடலும் , நடிகரும்
மது சார் இது உங்களுக்காக
ராகவேந்திரா சார் / RD சார் இது உங்களுக்கு
ராஜ் ராஜ் சார் இது உங்களுக்கு
வாசு - இது உங்களுக்காக
ராஜேஷ் இது உங்களுக்கு
வினோத் சார் / குமார் சார் / கலைவேந்தன் சார் - நம் எல்லோருக்கும் படித்த பாடல்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
6th September 2015, 11:27 AM
#3444
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)
33
'ஒரு மல்லிகை மொட்டு'
'ரங்க ராட்டினம்'
அடுத்த பாலாவின் தொடரில் 'ரங்க ராட்டினம்' படப் பாடல். பாடல் என்றால் அப்படி ஒரு பாடல். பாடல் முழுக்க பாலாவின் ராஜாங்கம்தான். காதலியிடம் பாடும் மோகப் பாடலை பாலா கம்பீரத்துடன் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார். குழைவு பாதி, கம்பீரம் பாதி என்று பாடல் இவரது குரலில் களை கட்டும். பாடலின் துவக்க இசை மறக்கவே முடியாதது.
'ஒரு மல்லிகை மொட்டு' என்று பாலா குரல் எடுக்கும் போதே நம் மனம் சில்லெனப் பூத்து விடும். ஒவ்வொருமுறை 'மல்லிகை மொட்டு' என்று அவர் உச்சரிக்கும் சுகமே தனி. 'மழைத்துளி பட்டு' என்பதில் 'பட்டு' என்பதை அவர் பட்டும் படாதது போல இழுத்து வைத்து உச்சரிப்பது அருமை. அதன் பின்னாலேயே ஒலிக்கும் கிடாரும் பரம சுகம்.
தளிர் போன்ற இள மேனி
தொடும் ஆசை கொண்டு
குளிராமல் கொதிக்கின்ற
மனம் ஒன்று உண்டு
என்று விரகதாபத்தை கவிஞர் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்.
'உடலோடு உருவான பசி ஒன்று உண்டு'
எனும்போது காம உணர்வுகளை அமர்க்களமாக தன் குரலில் கொண்டு வருவார் பாலா.
'காவியத்தலைவி' வெற்றிக்குப் பின் சௌகார் ஜானகி சொந்தமாக எடுத்து சொதப்பி தோல்வி கண்ட படம். ஆனால் பாடல்களை அடித்துக் கொள்ளவே முடியாது.
இந்தப் படத்தை இதுவரை இதுவரை நான் பார்த்ததில்லை. பார்க்கும் வாய்ப்பு இன்னமும் கூடக் கிட்டவில்லை. ராகவேந்திரன் சாரிடம் போன் செய்யும் போதெல்லாம் அடிக்கடி 'இந்தப் படம் வந்து விட்டதா? கிடைக்குமா?' என்று கேட்பேன். இதுவரை இணையத்திலும் இப்படத்தைப் பற்றி தகவல்கள் இல்லையென்றுதான் நினைக்கிறேன்.
படத்தில் இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர் ரவிச்சந்திரன் ஆக இருக்க வேண்டும். அவர் திருடன் என்பது பாடலிலிருந்து நன்றாகத் தெரிகிறது. ('ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு') பின் மனம் திருந்தி தன் பிள்ளைக்கே காரோட்டியாய் வருவார் என்றும் இன்னொரு பாடல் மூலமாகத் தெரிகிறது.
ஆனால் பாடல்கள் அருமையோ அருமை. இசை 'மெல்லிசை மாமணி' வி .குமார் அவர்களா என்று யாராவது உறுதி செய்ய வேண்டும்.
ஏ.எம்.ராஜா, ஈஸ்வரி பாடிய,
'முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும்
உன் உள்ளம் என்னவோ'
பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
சுசீலா பாடும் இன்னொரு பாடல் அதிகம் தெரியாதது.
'ஆத்தாடி பறக்குது காத்தாடி
ஆறேழு சிரிக்குது கூத்தாடி
அந்தப் பட்டம் பட்டமா
இந்தப் பட்டம் பட்டமா
ஆறேழு பட்டம் அந்தப்
பெண்ணுக்கல்லவா!'
மற்ற மேலதிக விவரங்களை ராகவேந்திரன் சாரும், மது அண்ணாவும் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு
தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர் கற்று
கொஞ்சிட வந்தது குளிர் கற்று
மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
தளிர் போன்ற இளமேனி
தொடும் ஆசை கொண்டு
குளிராமல் கொதிக்கின்ற
மனம் ஒன்று உண்டு
மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு
உடலோடு உருவான பசி ஒன்று உண்டு
விருந்தாக நீ உன்னைப் பரிமாறு இன்று
மல்லிகை மொட்டு
மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
Last edited by vasudevan31355; 6th September 2015 at 11:42 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th September 2015, 11:27 AM
#3445
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)
34
'தங்கத் தொட்டில் பட்டு மெத்தை'
'ரங்க ராட்டினம்'
இதே 'ரங்கராட்டினம்' படத்தில் பாலாவின் இன்னொரு கலக்கலும் உண்டு. முன்பு பார்த்தது காதல் உணர்வுகளை பிரதிபலித்தது என்றால் இது பாசத்தை அப்பட்டமாகக் காட்டுவது.
பிள்ளை என்று தெரிந்தும் சொல்லிக் கொள்ள முடியாமல் அவனுக்கே கார் டிரைவராய் இருக்கும் திருந்திய திருடன் தந்தையின் புலம்பல் இது. அருமையிலும் அருமை.
பாலா கொஞ்சமும் மாற்றாமல், மாறாமல் ஹஸ்கி வாய்ஸில் பாடலின் பொருள் அறிந்து சோகம் கவ்வ அழகாகப் பாடியிருப்பார். பரிதாபத்தையும் வரவழைப்பார்.
'வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான்' வரிகளில் 'சிரிப்பான்' என்பதை நொந்து சிரித்தபடியே பாடுவது ஏ கிளாஸ்.
மிக அருமையான பாடல். செமையாக ஹிட் அடித்ததும் கூட. பாடல் முழுதும் நம்ம்முடன் பயணிக்கும் பாலாவின் சோகம் மறக்க இயலாதது.
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
தன்னைத்ததானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை
இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே
எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே
எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று
கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று
தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று
வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு 'சிரி'ப்பான்
வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான் (பின்னால் மெல்லிய கிடாரின் பின்னணி)
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தாலாட்டிலே
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்
http://www.inbaminge.com/t/r/Rangarattinam/
Last edited by vasudevan31355; 6th September 2015 at 11:39 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 11:32 AM
#3446
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங் வாசு..
ரங்க ராட்டினம் சிந்தாமணியில் பார்த்தது என நினைவு..படம் சுத்தமாக நினைவில்லை.ப்ளாக் அண்ட் வொய்ட் என நினைக்கிறேன்,, ரவிச்சந்திரன் தான்.. நானும் அதற்கப்புறம் பார்த்ததில்லை.
பாட்டு நல்ல பாடல்..கேட்டிருக்கிறேன் அடிக்கடி.. நன்றி
-
6th September 2015, 11:33 AM
#3447
Senior Member
Senior Hubber
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை நினைவிலில்லை வாசு..கேட்டு பின் எழுதுகிறேன்..
-
6th September 2015, 11:33 AM
#3448
Senior Member
Diamond Hubber
சின்னா!
பி.எம். பார்க்கவும்.
-
6th September 2015, 11:38 AM
#3449
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை நினைவிலில்லை வாசு..கேட்டு பின் எழுதுகிறேன்..
ஆச்சர்யமாக இருக்கு சின்னா! நிச்சயம் கேட்டிருப்பீர்கள். கேட்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015, 11:46 AM
#3450
Senior Member
Senior Hubber
நான் பதில் அனுப்பிவிட்டேன் வாசு..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks