-
9th September 2015, 05:06 PM
#3411
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
நன்றி திரு.ராமமூர்த்தி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th September 2015 05:06 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2015, 05:09 PM
#3412
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
mgrbaskaran
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே
தலைவனின் புகழ் பாடும் உங்கள் பதிவுகளை தொகுத்து
என் பாணியில்
இங்கே உங்களுக்காக
தவறிருப்பின் மன்னிக்கவும்
பிடித்திருப்பின்
எல்லாப் புகழும் எம் தலைவனுக்கே
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். தங்கள் முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் பாராட்டுக்கள் திரு.பாஸ்கரன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 06:26 PM
#3413
Junior Member
Veteran Hubber

Originally Posted by
mgrbaskaran
அருமை திரு எம்ஜிஆர் பாஸ்கர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 06:31 PM
#3414
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
நன்றி திரு குமார் சார்
-
9th September 2015, 06:39 PM
#3415
Junior Member
Veteran Hubber
Dear Kalaivendhan Sir
Even I am mentioning whatever has been mentioned in that book if at all if there is one, it is far from truth. 100% it is written or expressed with vested motive and implied interest.
It is 100% mis represented fake statements. I have put my proof and have explained the hidden facts.
I think people who read my explanation will understand where the truth is..!!!
Regards
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2015, 06:54 PM
#3416
Junior Member
Seasoned Hubber
திரு.ஆர்.கே.எஸ்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான திரு. ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்ததை (புத்தகத்தில் உள்ளதை) நான் கூறியிருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்தை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறியிருப்பது போல, எது உண்மை என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நானும் நம்புகிறேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th September 2015, 07:06 PM
#3417
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
உண்மை தான் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களே !
இப்படிப்பட்ட ஒருவர் ( நம் மக்கள் திலகத்த்தின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அற்புதமான மனிதர்) நமக்கு வாய்க்கவில்லையே என்று கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை ஏங்க வைத்த அருமை பெரியவர் திரு. ஆர். எம். வி. அவர்கள் மேலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, பொன்மனசெம்மலின் நூற்ற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்டு அவரின் பெருமைகளை இப்பூவுலகிற்கு பறை சாற்றிட வேண்டும் என்று, புரட்சிததலைவரின் இலட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் விரும்பி வாழ்த்துகிறேன்.
காலத்தின் கட்டாயத்தால், செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான கழகத்துக்கு சென்று, உரிய அங்கீகாரம் கிடைக்காமையால், (முதலில் இணை பொது செயலாளர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டு) பின்னர் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தஞ்சமடைந்தார். அருமை பெரியவர் ஆர். எம். வி. உட்பட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட களப்பணியாளர்கள் திருவாளர்கள் முத்துசாமி, கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், எச். வி. ஹண்டே, க. லியாகத் அலி கான் போன்ற பலருக்கும் இவ்வாறு அங்கீகாரம் மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டமே !
என் போன்ற அக்காலத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்குத்தான் தெரியும், அருமைப் பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் ஆற்றல். உலகிலேயே, அந்த காலத்திலேயே அதிக அளவுக்கு, ரசிகர் மன்றங்கள் (சுமார் 20,000க்கும் மேல்) கொண்டவர் நம் கலைச்சுடர், பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. அவ்வளவு மன்றங்களையும் ஒருங்கிணைத்து, நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களையே மலைக்க வைத்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் திரு. ஆர். எம். வி. அவர்கள். திராவிட இயக்கத்தில் பெரும் பங்காற்றி பின் நம் தமிழகத்து தங்கம், ஆண்டிப்பட்டி சிங்கம் எம். ஜி. ஆர். அவர்களிடம் இணைந்தார். அவரது ஆற்றல் அளப்பரியது. சாதனைகளின் சிகரம் நம் மன்னவன் அடைந்த வெற்றிகளுக்கு பின்னணியாய் திகழ்ந்தவர் அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்கள்.

1984ல். புரட்சித்தலைவர் அமெரிக்காவில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வேளையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழகம் பெற்ற வெற்றிக்கு அடிகோலியது அவரது ராஜ தந்திரமே என்று சொன்னால், அது மிகையாகாது. ஆர். எம். வி. அவர்கள், "என் கண் போன்றவர், எனது நிழல்" என நம் ஒப்பற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களால் பாராட்டப்பட்டவர்.
புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளில், அருமை பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பங்கு மகத்தானது. இதை மறுப்பவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், என்று இந்த உலகம் பழிக்கும்.
மொத்தத்தில், திரு. ஆர். எம். வி. அவர்கள் நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.
அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, செய்திகளை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

27-05-2010 அன்று பெரியவர் ஆர். எம். வி. அவர்கள் இல்லத்திருமண விழா, (ஆர். எம். வி. அவர்கள் புதல்வன் - மணமகன் வி. தங்கராஜ் மணமகள் எம். தாரிணி) அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றாலும், விழா மேடை பின்னணியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் பிரம்மாண்டமான பதாகை தோற்றமளிக்கும் காட்சி இதற்கு பெயர் தான், உண்மையான எஜமான விசுவாசம்.
நன்றி திரு.செல்வகுமார் சார்,
தலைவருக்கு இக்கட்டான நேரங்களில் தோள்கொடுத்தவர் திரு.ஆர்.எம்.வீ. அவர்கள். 1971ம் ஆண்டு தேர்தலில் தலைவரின் பிரசாரக் கூட்டங்களை வகுத்துக் கொடுத்ததோடு, ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பையும் பிரசாரத்துக்கு வசதியாக தள்ளி வைத்தார்.
மக்கள் திலகத்தின் படங்களை அவர் பிரமோட் செய்யும் திறமையே தனி. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சித் தலைவரின் உண்மையான கணக்குப்பிள்ளையாக பணியாற்றிய விசுவாசி திரு.ஆர்.எம்.வீ. அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2015, 07:30 PM
#3418
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.ஆர்.கே.எஸ்., வணக்கம்.
நான் கொடுத்த இணைப்பில் உள்ளவை கல்கியில் திரு.ஸ்ரீதர் எழுதி நூலாக வந்தது பற்றியது. உங்கள் திரியில் உள்ள நமது நண்பரும் கல்கியில் வந்த தொடரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் மட்டுமல்ல, இதேபோன்ற தொடரை திரு.வி.கே.ராமசாமி அவர்களும் (எனது கலைப்பயணம் என்று நினைவு) கல்கியில் எழுதினார். அதற்கும் அதே சந்திரமெளலி என்பவர்தான் எழுத்தாக்கம் செய்திருந்தார்.
ஒரு தொடரை ஒரு பிரபலம் எழுதுகிறார் என்றால் அவரே பேனா பிடித்து எழுதினார் என்று அர்த்தமல்ல. அவர் சொல்ல, சொல்ல அதை கேட்டு எழுதி அல்லது டேப் செய்து அதை பத்திரிகையில் எழுதுவார்கள். எப்படி நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை சொல்லச் சொல்ல திரு.நாராயணசாமி அவர்கள் எழுதினாரோ அப்படி. அந்த வகையில் அந்த தொடர் எழுதப்பட்டிருக்கிறது. பின்னர், அது புத்தகமாகவும் வந்துள்ளது.
ஆனால், நண்பர் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.
// அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்!//
என்று கூறியிருக்கிறார். இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. நான் திரு.சந்திரமெளலிக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் முகம் கூட எனக்கு தெரியாது. நமது நண்பரையும் நான் தவறாக சொல்லவில்லை. அவர் கருத்தை அவர் சொல்கிறார். ஆனால், நண்பர் கூறியபடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? அதுவும் திரு. ஸ்ரீதர் உயிருடன் இருந்தபோது அவர் பொய்யாக எழுதியிருக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
திரு.ஆர்.கே.எஸ்.,
அன்று சிந்திய ரத்தம் படம் வகையில் சில லட்சங்கள் நஷ்டம் என்று கூறியிருக்கிறீர்கள். சில லட்சங்கள் எல்லாம் நஷ்டம் இல்லை. அந்த அளவுக்கு எல்லாம் அந்த கருப்பு வெள்ளையில் எடுப்பதாக இருந்த படம் வளரவில்லை. ஒரே நாள்தான் ஷூட்டிங். மலைமீது நின்றபடி மக்கள் திலகம் பேசுவதுபோல ஸ்டில் கூட வந்தது. அதோடு சரி. மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.25,000 திரு.ஸ்ரீதர் கொடுத்திருக்கிறார். பின்னர், உரிமைக்குரல் படத்தின்போது ரூ.25,000த்தை, மக்கள் திலகம் பேசிய தொகையில் இருந்து கழித்துக் கொண்டு விட்டதாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
மேலும், 1980களில் சில படங்கள் எடுத்து நஷ்டம் அடைந்திருந்த நிலையில், வண்ணத்திரை இதழுக்கு ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘‘முன்பு நான் நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்தபோது எனக்கு கைகொடுத்து மக்கள் திலகம் தூக்கி விட்டார். இப்போது அதுபோன்று யாரும் உதவவில்லை’’ என்றும் திரு.ஸ்ரீதர் பேட்டியில் மனம் வருந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டிக்கு ‘ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி’ என்றே தலைப்பு போட்டிருந்தனர். உரிமைக்குரலால்தான் எனது பண நெருக்கடி தீர்ந்தது என்று திரு.ஸ்ரீதர் கல்கியில் குறிப்பிட்டிருந்தது உண்மை.
அது மட்டுமல்ல, தேவியில் எஸ்.விஜயன் அவர்கள் எழுதிய எம்ஜிஆர் கதையிலும் ஸ்ரீதர் இதைக் குறிப்பிட்டிருந்தார் . அதுவும் இப்போது புத்தகமாக கடந்த மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. நமது திரியிலும் லோகநாதன் விழாப் படங்களை பதிவிட்டிருந்தார். எஸ்.விஜயனும் புளுகுகிறார் என்று சொல்ல முடியுமா?
முக்கியமாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிவந்தமண் - நம்நாடு ஒப்பீட்டை ஆரம்பித்தது நாங்கள் அல்ல. மேலும், ‘ஸ்ரீதர் கூறியதை வெளியிடட்டும் உண்மைகளை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று நண்பர் கூறியிருந்ததால்தான் நான் ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தில் உள்ள தகவல்களை வெளியிட நேர்ந்தது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
"அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.
இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.
எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.
Last edited by makkal thilagam mgr; 9th September 2015 at 07:35 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 08:29 PM
#3419
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வலது கரமாக பல காலம் செயல்பட்டவரும்,
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும், சத்யா மூவிஸ் நிர்வாகியுமான
அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு
நேற்று சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 08:32 PM
#3420
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவரின் திரைகாவின்யங்கள் மக்களுக்கு தன்னம்பிக்கயுட்டுமே [ கடமை, கண்ணியம், கட்டுப்பட்டு, கனிவு, தெளிவு, துணிவு இப்படி பல] தவிர நம்பிகையை தகர்கின்ற படங்கள் அல்ல. ஆகையால் தான் அவை காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவம் அடைந்து நிலைத்து நிற்கிறது.
Last edited by saileshbasu; 10th September 2015 at 08:11 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks