Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு.ஆர்.கே.எஸ்., வணக்கம்.

    நான் கொடுத்த இணைப்பில் உள்ளவை கல்கியில் திரு.ஸ்ரீதர் எழுதி நூலாக வந்தது பற்றியது. உங்கள் திரியில் உள்ள நமது நண்பரும் கல்கியில் வந்த தொடரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் மட்டுமல்ல, இதேபோன்ற தொடரை திரு.வி.கே.ராமசாமி அவர்களும் (எனது கலைப்பயணம் என்று நினைவு) கல்கியில் எழுதினார். அதற்கும் அதே சந்திரமெளலி என்பவர்தான் எழுத்தாக்கம் செய்திருந்தார்.

    ஒரு தொடரை ஒரு பிரபலம் எழுதுகிறார் என்றால் அவரே பேனா பிடித்து எழுதினார் என்று அர்த்தமல்ல. அவர் சொல்ல, சொல்ல அதை கேட்டு எழுதி அல்லது டேப் செய்து அதை பத்திரிகையில் எழுதுவார்கள். எப்படி நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை சொல்லச் சொல்ல திரு.நாராயணசாமி அவர்கள் எழுதினாரோ அப்படி. அந்த வகையில் அந்த தொடர் எழுதப்பட்டிருக்கிறது. பின்னர், அது புத்தகமாகவும் வந்துள்ளது.

    ஆனால், நண்பர் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.

    // அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்!//

    என்று கூறியிருக்கிறார். இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. நான் திரு.சந்திரமெளலிக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் முகம் கூட எனக்கு தெரியாது. நமது நண்பரையும் நான் தவறாக சொல்லவில்லை. அவர் கருத்தை அவர் சொல்கிறார். ஆனால், நண்பர் கூறியபடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? அதுவும் திரு. ஸ்ரீதர் உயிருடன் இருந்தபோது அவர் பொய்யாக எழுதியிருக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    திரு.ஆர்.கே.எஸ்.,

    அன்று சிந்திய ரத்தம் படம் வகையில் சில லட்சங்கள் நஷ்டம் என்று கூறியிருக்கிறீர்கள். சில லட்சங்கள் எல்லாம் நஷ்டம் இல்லை. அந்த அளவுக்கு எல்லாம் அந்த கருப்பு வெள்ளையில் எடுப்பதாக இருந்த படம் வளரவில்லை. ஒரே நாள்தான் ஷூட்டிங். மலைமீது நின்றபடி மக்கள் திலகம் பேசுவதுபோல ஸ்டில் கூட வந்தது. அதோடு சரி. மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.25,000 திரு.ஸ்ரீதர் கொடுத்திருக்கிறார். பின்னர், உரிமைக்குரல் படத்தின்போது ரூ.25,000த்தை, மக்கள் திலகம் பேசிய தொகையில் இருந்து கழித்துக் கொண்டு விட்டதாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

    மேலும், 1980களில் சில படங்கள் எடுத்து நஷ்டம் அடைந்திருந்த நிலையில், வண்ணத்திரை இதழுக்கு ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘‘முன்பு நான் நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்தபோது எனக்கு கைகொடுத்து மக்கள் திலகம் தூக்கி விட்டார். இப்போது அதுபோன்று யாரும் உதவவில்லை’’ என்றும் திரு.ஸ்ரீதர் பேட்டியில் மனம் வருந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டிக்கு ‘ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி’ என்றே தலைப்பு போட்டிருந்தனர். உரிமைக்குரலால்தான் எனது பண நெருக்கடி தீர்ந்தது என்று திரு.ஸ்ரீதர் கல்கியில் குறிப்பிட்டிருந்தது உண்மை.

    அது மட்டுமல்ல, தேவியில் எஸ்.விஜயன் அவர்கள் எழுதிய எம்ஜிஆர் கதையிலும் ஸ்ரீதர் இதைக் குறிப்பிட்டிருந்தார் . அதுவும் இப்போது புத்தகமாக கடந்த மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. நமது திரியிலும் லோகநாதன் விழாப் படங்களை பதிவிட்டிருந்தார். எஸ்.விஜயனும் புளுகுகிறார் என்று சொல்ல முடியுமா?

    முக்கியமாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிவந்தமண் - நம்நாடு ஒப்பீட்டை ஆரம்பித்தது நாங்கள் அல்ல. மேலும், ‘ஸ்ரீதர் கூறியதை வெளியிடட்டும் உண்மைகளை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று நண்பர் கூறியிருந்ததால்தான் நான் ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தில் உள்ள தகவல்களை வெளியிட நேர்ந்தது. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

    "அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.

    இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.

    இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.

    எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.
    Last edited by makkal thilagam mgr; 9th September 2015 at 07:35 PM.

  2. Thanks Russellzlc thanked for this post
    Likes Russellzlc liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •