-
18th September 2015, 10:26 PM
#11
Senior Member
Seasoned Hubber

ஒப்பீடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது பெரும்பாலும் சார்பு நிலைக் கோட்பாட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் இந்தக் கணிப்பினைப் பார்த்த பின் என்னுடைய நிலைப்பாடு இன்னும் நியாயமாகிறது. இவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பிற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் என்ன, அல்லது கேட்கப்பட்ட கேள்விகள் என்ன போன்ற விவரங்கள் முழுதும் தெரிய வேண்டும். நடிகர் திலகத்தின் சதவீதத்திற்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் கிடைத்துள்ள சதவீதம் இவ்வளவு அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பே இல்லை. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகளுக்கு மேல் இருக்கக்கூடிய வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இல்லை. 50-50 தான் உண்மையான அந்தக் கால நிலவரம். இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகள் மட்டுமே FLUCTUATION எனப்படும் ஊசலாட்டத்தில் இருந்திருக்க முடியும். ஒரேயடியாக 14 விழுக்காடு வித்தியாசம் என்றால் மனம் ஏற்க மறுக்கிறது. அப்படியே அதிகம் என்றால் கூட அது 48-52 அல்லது 47-53 என்ற அளவிற்கு மேல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இது 1980வரை என்பதையும் ஏற்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் 1980ல் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படிப்பார்த்தால் 1980ல் சிவாஜி-எம்.ஜி.ஆர். அபிமானத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டுமானால் 1980ல் சுமார் 20 வயதாவது நிரம்பியவர்களால் தான் தெளிவாக சொல்ல முடியும்.
அப்படி இருக்கும் போது 1980 கால ஹீரோக்களைப் பற்றிச் சொல்லியிருக்கக் கூடியவர்கள் 1960ல் அல்லது அதற்கு முன்போ பின்போ தான் பிறந்திருக்க முடியும். அந்த பிராயத்தில் இருவருக்குமே ரசிகர்களின் அளவு மிகத் துல்லியமாக யூகிக்க வேண்டுமென்றால் 50-50 அளவில் தான் இருக்க வேண்டும்.
மணிமண்டபம் அரசு செலவில் கட்டக் கூடாது என்ற விவாதத்திற்கும் இந்த கருத்துக்கணிப்பிற்கும் ஏனோ மனம் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது. அப்படி இருக்கக் கூடாது என மனம் விரும்புகிறது.
இதில் இன்னோர் விஷயமும் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு சமமாக மூவேந்தராக ஜெமினியும் சேர்த்து தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர் என பல பத்திரிகைகள் எழூதின. அப்படியென்றால் அந்தக் காலத்தில் ஜெமினிக்கு அபிமானம் மிகவும் குறைவு 9 சதம் என கருத்துக் கணிப்புக் கூறுகிறதே.
இதில் எது உண்மை. ஜெமினி மூவேந்தரில் ஒருவராக விளங்கினார் என்பதா அல்லது அப்படியில்லை, சிவாஜி-எம்.ஜி.ஆர். இருவர் மட்டுமே கோலோச்சினர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை.
நண்பர்களே இது ஒரு தனிப்பட்ட எண்ணமாகத்தான் கூறுகிறேன். எந்த ஒரு கருத்து மோதலுக்காகவும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
Last edited by RAGHAVENDRA; 18th September 2015 at 11:15 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
18th September 2015 10:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks