-
25th September 2015, 06:59 PM
#11
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
MGR Roop
அபூர்வமான பொக்கிஷப்பதிவுக்கு நன்றி திரு.ரூப் குமார் சார். திண்டுக்கல் தேர்தல் கால நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி.
ஏற்கனவே, நான் ஒரு பதிவில் இந்திரா காங்கிரஸ் சார்பில் தலைவருடன் சமரசம் பேசி தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் தடுக்க முயற்சித்தபோதும் தலைவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தேன். அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது திரு.பக்தவச்சலம் அவர்களின் பேட்டி. உலகம் சுற்றும் வாலிபன் அந்நிய செலாவணி பிரச்சினையால் மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்துதான் திமுகவை தலைவர் உடைத்தார் என்றும் அதிமுகவை குட்டிக் காங்கிரஸ் என்றும் அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அந்நிய செலாவணி பிரச்சினை ஏதும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சராக இருந்த சதீஷ் அகர்வால் மாநிலங்களவையிலேயே அறிவித்தார்.
இது தொடர்பாக அப்போது வந்த பத்திரிகை செய்தியை பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் நமது திரியில் ஏற்கனவே வெளியிட்டார். (பாகம் 15, பக்கம் 386, பதிவு.3855) இந்திரா காங்கிரசின் வேண்டுகோளை மறுத்து தேர்தலில் அதிமுகவை போட்டியிடச் செய்ததன் மூலம் தலைவர் தனது தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். அதற்கு பக்தவச்சலம் அவர்களின் பேட்டியே சான்று.
அற்புதமான ஆவணப் பதிவுக்கு மீண்டும் நன்றி திரு.ரூப் குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 25th September 2015 at 07:58 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
25th September 2015 06:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks