-
29th September 2015, 03:53 AM
#331
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்... மாமா சந்தமாமா மிக இனிமை... தமிழில் இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டு இல்லை என்று நினைக்கிறேன். ஹிந்தியில் "சந்தா ஓ சந்தா" பிரபலாமானதல்லாவோ !
வாசுஜி... சிக்கா, ராஜேஷ் வரிசையில் சி.செ.ஜியும் சேர்ந்து கொண்டு சிரிக்கும் ஜெமினியுடன் அழும் வி.குவை காட்டி மிரட்டி விட்டார் பாருங்க ...
வாத்தியாரையா... உங்க பாட்டைக் கேட்டு ஜெ.அரசு அதை அம்மா உணவக தீம் சாங் என்று அறிவிக்கப் போவதாக வதந்தி.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th September 2015 03:53 AM
# ADS
Circuit advertisement
-
29th September 2015, 04:15 AM
#332
Senior Member
Senior Hubber
மதுண்ணா வாங்க
உடல் நலம் எப்படி
முகனூல் படம் கூட குட்டி கண்ணனாக மாறிவிட்டதே ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th September 2015, 04:21 AM
#333
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
வாத்தியாரையா... உங்க பாட்டைக் கேட்டு ஜெ.அரசு அதை அம்மா உணவக தீம் சாங் என்று அறிவிக்கப் போவதாக வதந்தி.
Good idea ! Then 'summaa' should mean 'free' !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th September 2015, 05:53 AM
#334
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
மதுண்ணா வாங்க
உடல் நலம் எப்படி
முகனூல் படம் கூட குட்டி கண்ணனாக மாறிவிட்டதே ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஹா... ராஜேஷ்... அது நீண்ட காலமாகவே இதே படம்தான். ஆனால் வீட்டுக்கு வந்த குட்டிப் பையன் ஒருவன் அதை ஏதோ இந்திய கொடி கலருக்கு மாற்றி விட்டான். அது கண்ணனின் நீல நிறத்தை மறைத்ததால் நான் மறுபடி பழைய படமாக மாற்றினேன்.
அட... இருப்பதைக் கூட மறுபடி காட்டினால் சட்டுனு எல்லோருக்கும் தெரிகிறதே...
அதுக்காகத்தான் பழைய நல்ல நல்ல அரிய பாடல்களை எல்லாம் மறுபடி மெருகேற்றி இங்கே போடணும் என்கிறது..
-
29th September 2015, 10:15 AM
#335
Senior Member
Diamond Hubber
//வாசுஜி... சிக்கா, ராஜேஷ் வரிசையில் சி.செ.ஜியும் சேர்ந்து கொண்டு சிரிக்கும் ஜெமினியுடன் அழும் வி.குவை காட்டி மிரட்டி விட்டார் பாருங்க ...//
ஆமாம் மதுண்ணா! எல்லோரும் சேர்ந்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.
-
29th September 2015, 10:15 AM
#336
Senior Member
Diamond Hubber
சின்னா!
தனி மடல் பாருங்கள்.
-
29th September 2015, 10:26 AM
#337
Senior Member
Diamond Hubber
ரவி சார், கிருஷ்ணா சார், வினோத் சார், குமார் சார், கல்நாயக், ஆதிராம் சார், கலைவேந்தன் சார் மற்றும் அனைவரும் திரியில் பங்கு கொண்டு பதிவுகள் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-
29th September 2015, 11:13 AM
#338
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
29.9.1972
43 ஆண்டுகள் முன்பு 29.9.1972 அன்று வசந்த மாளிகை முதல் நாள் முதல் காட்சி வேலூர் அப்சரா அரங்கில் ரசிக மன்ற சார்பாக நடந்த சிறப்பு காட்சியில் படம் பார்த்த அந்த இனிய நாளை மறக்க முடியாது .படம் துவங்கியது முதல் இறுதி வரை ரசிகர்களின் ஆராவாரம் , கைதட்டல்கள் , விசில்என்று அட்டகாசமாக ரசிகர்கள் மத்தியில பார்த்த அனுபவம் இனிமையான நாளாகும்
இடை வேளையில் ''வருகிறது '' என்ற ஸ்லைடு விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் ''இதய வீணை ''போட்டதும் எழுந்த ஆராவாரங்கள் [ எதிர்ப்பும் ஆதரவும் ] கரகோஷம் அடங்க சிறிது நேரம் பிடித்தது .
Last edited by esvee; 29th September 2015 at 11:25 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
29th September 2015, 12:58 PM
#339
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
40
'மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ'
'நீரும் நெருப்பும்'
அடுத்து பாலாவின் தொடரில் 1971-ம் ஆண்டு வெளிவந்த 'நீரும் நெருப்பும்' படப் பாடல்.
என்ன பாடல்?
கொஞ்சம் அதிகம் பிரபலமாகாத பாடல்தான்.
'மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ'
ஜெமினியின் 'அபூர்வ சகோதர்களே' மீண்டும் தமிழில் 'நீரும் நெருப்பும்' ஆனது. எம்.கே ராதா இருவேடங்களில் நடித்த பழைய 'அபூர்வ சகோதர்கள்' திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இரு வேடங்களில் நடித்து 'நியோ மணிஜே' சினி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'நீரும் நெருப்புமா'ய் வெளிவந்தது. (நடிகர் திலகம் நடித்து 100 நாட்கள் ஓடி வெற்றி வாகை சூடிய காவியப் படமான 'இருமலர்கள்' படத்தைத் தயாரித்ததும் 'மணிஜே' தான். சரியா ராகவேந்திரன் சார்?)
ஜெயலலிதா, அசோகன், மனோகர், ஆனந்தன், டி.கே.பகவதி, சோ, 'தேங்காய்' சீனிவாசன், ஜோதிலஷ்மி என்று நட்சத்திரக் கூட்டம்.
உரையாடல் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆஸ்தான சொர்ணம். பாடல்கள் 'வாலிபக் கவிஞர்'. (மூடில் இல்லை போல)
பல மொழிகளில் ஒலிக்கும் ஈஸ்வரியின் 'விருந்தோ நல்ல விருந்து' சமையல் பாட்டை வயலார் (மலையாளம்) கொசராஜ் (தெலுங்கு) விஜய நரசிம்ஹா (கன்னடம்) ஆகியோர் எழுதியிருப்பார்கள். இந்தியில் வரும் வரிகளை டி.ஏ.மோத்தி பாடியிருப்பார் என்பது தனி சிறப்பு.
இந்தப் படத்தின் கதை அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தேவை இல்லை என்று விட்டு விட்டேன்.
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அஞ்சலி செலுத்தி படம் ஆரம்பிக்கும்.
'இதயக்கனி' இயக்குனர் ஏ.ஜெகந்நாதன் இப்படத்தின் உதவி இயக்குனர்.
ராமூர்த்தியின் அருமையான ஒளிப்பதிவு காடு, வனாந்திரம் என்று 'பளிச்' பளிங்கு. தேக்கடி யானைக் கூட்டங்கள், குதிரைகள் என்று அருமையாக படம் பிடித்திருப்பார்.
இயக்கம் நீலகண்டன். நீளமாகப் படமெடுத்து நீள் பெருமூச்சு விடச் செய்திருப்பார். எல்லோரையும் ஏமாற்றிய படம்.
'கடவுள் வாழ்த்துப் பாடும் இளம் காலை நேரக் காற்று' பாடல் ஒன்று பட்டுமே பிரமாதம்.
மற்ற பாடல்கள்.
'கொண்டு வா... இன்னும் கொஞ்சம்' (சுசீலா போதை)
'கன்னி ஒருத்தி மடியில்' (சுமார் டூயட் )
'கட்டு... மெல்லக் கட்டு' (ஈஸ்வரி ஜோதிலஷ்மிக்கு)
அப்புறம் தொடர் பாடல்.
இதில் மணிவண்ணன் என்ற பாத்திரத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும், அவரது நாயகி ஜெயலலிதாவிற்கும் ஒரு டூயட். இந்தப் படம் முடிந்து இறுதிக் கட்ட நேரத்தில் அவசர அவசரமாக இப்பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டதாம். (கிளாமர் நோக்கமா எனத் தெரியவில்லை அல்லது படத்திற்கு ஒரு டூயட் போதாது என்று இரண்டாவதாக 'திடு'மென நினைத்து எடுத்தார்களோ என்னவோ!) 'அவசரக் கோலம்' கதை போல்தான் இப்பாடலும் ஆகி விட்டது.
'ஓஹோ...ஆஹா' என்று சொல்ல முடியாமல் இது ஒரு ஆவரேஜான பாடலே.
அரண்மனை செட்களில் செயற்கைத்தனம் அதிகமாகவே தெரிகிறது. ஒரே ஒரு நீரூற்று 'பொய்'கையை வடிவமைத்துவிட்டு மற்றதையெல்லாம் வெறும் பொய்யாக்கி விட்டார்கள். நாடகக் காட்சிகள் போல பின்னால் ஓவியங்கள் வரையப்பட்ட அட்டைகள் நின்று பரிதாபமாய் பல்லிளிக்கின்றன. சுரத்தே இல்லாமல் பாடலுக்கு ஏனோதானோவென்று செட்டிங்க்ஸ்.
ராஜா ராணிக் கதை போலும் இல்லாமல், ஜமீன் கதை போலும் இல்லாமல், சமஸ்தானக் கதை போலும் இல்லாமல் இது ஒரு மாதிரிக் குழப்பும் கதை என்பதால் என்ன செட் போடுவது என்று ஆர்ட் டைரக்டருக்கு குழப்பம் போல. அது போல ஆடை வடிவமைப்பாளர் ஆடிப் போய்விட்டார் போல.
ஜெயா மேடத்திற்கு கிளாமரான நவநாகரீக உடையமைப்பு கொஞ்சமும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் இல்லாமல். எம்.ஜி.ஆர் அவர்களுக்காகவாவது ஆடை பரவாயில்லை. ஏதோ ஒப்பேற்றி விடுகிறார்கள். எம்.ஜி.ஆர் உடலமைப்பு கச்சிதம். ஆனால் முகம் வயதைக் காட்டிக் கொடுக்கிறது. படத்தில் (பாடலில் அல்ல) சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. (குறிப்பாக லாவகமான கத்தி சண்டைகள். சபாஷ் ஷியாம் சுந்தர்.)
ஜெயா மேடத்திற்கு காதருகே கிரேன் தூக்கி கொக்கி போல அவ்வளவு பெரிய வளைந்த கிருதா எதற்கு எனப் புரியவில்லை. ஆனால் மேடம் 'ஜிகு ஜிகு'வென ஜொலிக்கும் அணிகலன்களை அணிந்து ஜொலிப்பது கொஞ்சம் ஆறுதல்.
எம்.ஜி.ஆர் அவர்களும், மேடம் அவர்களும் ஒரு கட்டத்தில் தங்களுடைய தோள் பட்டைகளை மா(ற்)றி மா(ற்)றி ஆட்டுவதும் என்னவோ போல உள்ளது. நடனத்திலும் ஒரு விறுவிறுப்பு இல்லை. (ஒரு கால் முன் உயர்த்தி கும்மி அடிப்பது போன்ற அசைவுகள்) சுறுசுறுப்பு இல்லை. ஏதோ ஒப்புக்கு எடுத்தது போல இருக்கிறது இந்த டூயட்.
நடனம் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சலீம், ஏ.கே.சோப்ரா என்று மூன்று பழுத்துக் கொட்டை போட்ட ஜாம்பவான்கள். இருந்தும் பிரயோஜனமில்லை.
ஆரம்பத்தில் பிரம்மண்டமாய், ஆர்ப்பாட்டமாய் 'மெல்லிசை மன்ன'ரின் இசை ஒலித்து இந்தப் பாடல் ஆரம்பிக்க, மிக எதிர்பார்த்து ஒரு அருமையான பாடல் கிடைக்கப் போகிறது என்று உட்கார்ந்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
'மெல்லிசை மன்ன'ரும் 'தண்ணீர் தண்ணீர்' நீர்ப் பஞ்சம் போல் 'நீரும் நெருப்பும்' படத்திற்கு பாடல் டியூன் போட்ட அன்று டியூன் பஞ்சத்தில் சிக்கிக் கொண்டார் போல. அவர் பங்குக்கு அவரும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் 'சப்'பென்று எதையோ டியூன் போட்டு பாடலாக்கித் தந்து போய் விட்டார். (எம்.ஜி.ஆர் அவர்கள் பக்கத்தில் இல்லையோ!)
பாடலை பாலாவும், சுசீலாவும் காப்பாற்ற முயன்று அவர்களும் களைத்துத் தோற்றுப் போய் இருப்பார்கள். (ஆயிரம் நிலவே வா' வுக்கு அப்படியே நேரெதிர்). பல்லவி முடிந்து இடையிசைக்குப் பின் வரும் கோரஸ் குரல்களும் கவரவில்லை.
பாடலின் முதல் சரணம் ஒரு டியூனிலும், இரண்டாவது சரணம் வேறொரு டியூனிலும் பயணிக்கும். முதாலவதைவிட இரண்டாவது பரவாயில்லை. கொஞ்சம் கேட்கிற மாதிரி வார்த்தைகளை விட்டு விட்டு அடுக்கி பாலா கொஞ்சம் தேற்றுவார். (கண்மணி... என்மனம்... உன்வசம்... வந்தது... உன் மந்திரப் புன்னகையோ!)
"மெல்ல நான் அள்ளவோ!....செல்லமாய்க் கிள்ளவோ!" வரிகள் முடிந்தவுடன் வார்த்தைகளுக்குப் பஞ்சம் போல. கேப் ஃபில்லராய் 'ஆஹஹா... ஆஹஹா' போட்டு நிரப்புவார்கள்.
மொத்தத்தில் சராசரிக்கும் கீழான பாடல். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகர்கள் கூட நிராகரித்த பாடல் இது. கேட்க மறந்த, பார்க்க மறந்த பாடல் கூட. இதுதான் இதில் அபூர்வம்.
இந்தப் பாடலை அடிக்கடி கே.டி.வியில் போட்டு 'சன்' க்ரூப் சந்தோஷப்பட்டுக் கொள்ளும்.
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெயில் எங்கு போனதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
மஞ்சள் வண்ண வெயில் எங்கு போனதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூவிருந்த சோலை என்ன எண்ணுதோ
இந்தப் பூவைப் போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
தங்க நிறக் கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து பதமாய் இதமாய் உறவாடு
தங்க நிறக் கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து பதமாய் இதமாய் உறவாடு
அணைத்தாலும்
அடங்காதோ
அது போகப் போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ
அணைத்தாலும்
அடங்காதோ
அது போகப் போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ
விளங்காதோ ஓஓ ஓஓ
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
கண்மணி என்மனம் உன்வசம் வந்தது
உன் மந்திரப் புன்னகையோ
உன் மந்திரப் புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கைவண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில் பூப்பந்தாய்த் துள்ளவோ
கைவண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில் பூப்பந்தாய்த் துள்ளவோ
மெல்ல நான் அள்ளவோ
செல்லமாய்க் கிள்ளவோ
ஆஹஹா
ஆஹஹா
ஆஹஹா
ஆஹஹா
ஆஹஹா...ஆஹஹா
அஆ அஆ...
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெயில் எங்கு போனதோ
என் மங்கை மேனி தங்கம் என்று ஆனதோ
பூவிருந்த சோலை என்ன எண்ணுதோ
இந்தப் பூவைப் போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
அஹஹா அஹஹாஹா அஹஹா அஹஹாஹா
அஹஹா அஹஹாஹா அஹஹா அஹஹாஹா
Last edited by vasudevan31355; 29th September 2015 at 01:07 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th September 2015, 01:26 PM
#340
Senior Member
Seasoned Hubber
வினோத் சார்
வசந்த மாளிகை வெளியீட்டு நாளை நினைவூட்டி அதனுடன் ஒரு அருமையான அபூர்வமான அதிகம் வெளிவராத ஸ்டில்லையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks