-
5th October 2015, 06:25 AM
#11
Junior Member
Seasoned Hubber
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து தோன்றிய பல பழமொழிகள் இன்னும் நம் புழக்கத்தில் உள்ளன . ஆனால் அவைகளில் பல உண்மை வடிவத்தை இழந்து வேறு வகையில் திரிக்கப்பட்டு இன்று நம் உபயோகத்தில் உள்ளன . சில பழமொழிகள் திரிக்கப்பட்டதால் , பலரின் வாழ்க்கையிலும் மீலாத துன்பங்களையும் விதைத்திருக்கின்றன . இங்கு சில பழமொழிகளை ஒரு சிறிய அலசலக்காக எடுத்துக்கொண்டுள்ளேன் .
பதிவு 1
"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்."
இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பார்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் பொருளாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
5th October 2015 06:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks