Results 1 to 10 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு வணக்கம்,

    மக்கள் திலகம் திரியில் புதிதாக பங்கேற்ற திரு.மயில்ராஜ் அவர்கள் பிரச்சினைக்குரிய விதத்தில் பேசினார் என்று கூறி அவருக்கு நிரந்தரமாக தடை விதித்திருக்கிறார்கள். அவர் என்ன தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாரா? ஒருவேளை அவர் ஆட்சேபகரமான சிலவற்றை சொல்லியிருக்கலாம். அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அல்லது அடையாளமாக ஒரு சில நாட்கள் மட்டும் தடை விதித்திருக்கலாம். ஆனால், நிரந்தரமாக நீக்கும் அளவுக்கு இங்கு சிலர் சொல்லாததை அவர் என்ன பெரிதாக சொல்லி விட்டார்?

    மக்கள் திலகத்தைப் பற்றி திரு.கோபால் கூறாதவற்றையா திரு.மயில்ராஜ் கூறிவிட்டார்? அல்லது தனிப்பட்ட நபர்களை, நண்பர்களை திரு.கோபால் மோசமாக விமர்சித்ததைப் போல விமர்சித்தாரா? சமீபத்தில் கூட திரு.எஸ்.வி. அவர்களை ‘பசுத்தோல் போர்த்திய நரி’ என்றார். என்னைப் பார்த்து ‘பொய் சொல்கிறேன்’ என்று குற்றம் சாட்டினார். வயதில் தன்னைவிட மூத்தவர்களை நாய், சொறிநாய் என்றெல்லாம் பேசினார். திரு.சிவாஜி கணேசன் அவர்களையே, ‘கிழட்டு மூஞ்சி’ என்று விமர்சித்தார். ‘அவரது பிற்காலப் படங்களை எப்படி பார்க்கிறாய்?’ என்று என் மனைவி கேட்கிறாள் என்றார். நேருவை பெண் பித்தன் என்றார். அவர் நிரந்தரமாக நீக்கப்படவில்லை.

    திருச்சி பாஸ்கர் என்பவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்றார். நேற்று கூட சுமூக சூழ்நிலையை கெடுக்கும் வகையில் மீண்டும் பதில் சொல்வேன் என்று எச்சரிக்கிறார். ‘குள்ளநரிகள்’ என்கிறார். ‘கொக்கரிக்காதே வேதகிரி’ என்கிறார். அவர்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

    செல்வி. ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்த சிவாஜி குடும்பத்தினரை ‘துரோகம் செய்யாதீர்களடா, இனத்துரோகிகளா’ என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ‘பாம்பு’ என்றும் பல்வேறு அர்ச்சனைகள். அதற்காக நான் அவரது ஆதரவாளர் அல்ல. எப்படி எல்லாம் மோசமான தாக்குதல்கள் என்பதற்கு சொல்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் நீக்கப்படவும் இல்லை.

    ஆனால், இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.

    இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.

    இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.

    தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் உண்மைக்கு மாறானதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் திரு.கோபால், உங்கள் பொய்களுக்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

    உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.

    பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களை கடுமையாக தாக்கினீர்கள். அதற்காக, உங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். உடனே, அவர்தான் என்னை முதலில் தாக்கினார் என்று கூசாமல் பொய் சொன்னீர்கள். நான் அதை மறுத்து ஆதாரத்தோடு என்ன நேரத்தில் இருவரும் பதிவுகளை வெளியிட்டீர்கள் என்று பதிலளித்தேன். உடனே, நீங்கள் பல்டியடித்து ‘நான் திமுக பேராசிரியரை (அதாவது திரு.அன்பழகன் அவர்களை, அடைப்புக்குறிக்குள் இருப்பது என் விளக்கம்) சொன்னேன் என்று வழிந்தீர்கள்.

    மக்கள் திலகம் திரி பாகம் 15 பக்கம் 328 பதிவு 3271.

    http://www.mayyam.com/talk/showthrea...ART-15/page328

    -----------------------------
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு.கோபால்,

    ‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.

    //பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.

    அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.

    இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....

    //கலைவேந்தன்,

    அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)

    ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    -----------------------

    இனிமேலாவது உண்மையை மட்டுமே பேசுங்கள். மற்றவர்களை கண்ணியப்படுத்துங்கள். முக்கியமாக, எல்லாருக்கும் புரியும்படி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். நான் வெளியேறுகிறேன். எனவே என்னை தடை செய்தாலும் கவலையில்லை என்ற நிலையில் நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் உங்களை பேசிவிட்டு வெளியேற முடியும். குறிப்பாக, திரு.ராகவேந்திரா சாரையும் திரு.சிவாஜி செந்தில் அவர்களையும் நீங்கள் என்ன வார்த்தை கொண்டு தாக்கினீர்களோ, அதை விடவும் மோசமாக பேசமுடியும். ஆனால், உங்கள் அளவுக்கு தரக்குறைவாக கீழிறங்க நான் தயாரில்லை.

    விடை பெறுகிறேன் நண்பர்களே. இந்தப் பதிவும் கூட நீக்கப்படலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பார்க்கும் நண்பர்கள் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்.

    வாழ்க ஜனநாயகம்.

    எந்தக் கொம்பன் நினைத்தாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக!

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks mgrbaskaran thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •