-
9th October 2015, 08:08 PM
#531
Senior Member
Diamond Hubber
சின்னா!
உமக்கு பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. நான் சொன்ன அருமை அருவிப் பாடல்.
மலைப்பாறைகளுக்கு இடையில் பாலூற்றாய்க் கொட்டிக் கொண்டிருக்கும் தேனூற்று அருவிகள். அங்கு இடை ஒடித்து நடந்து குளிக்கச் செல்லும் குள்ளி குயிலி. கொட்டங்கச்சி வயலின் இசை போல ஆரம்ப இசை அதே அருவி போல நம்மை 'அலேக்'காக அள்ள, 'சின்னக்குயில்' சித்ரா சிதறாமல் ஹம்மிங் எடுக்க, வழுக்குப் பாறையில் சறுக்கிச் செல்லும் குயிலையை அவருக்குத் தெரியாமல் குளிப்பதை ரசிக்கும் 'மலை நாட்டு மச்சான்' 'சத்தத்' தியாகு. அங்கே மாதுரி டீசன்ட் என்றால் இங்கே குயிலி அபாய கட்டம். கிணற்றுக்கடியில் 'ஆத்தாடி பாவாடை கூத்தாட' கட்டிக் குளித்து, முரளி மச்சானுக்கு 'பூவிலங்கு' போட்டவர் இங்கு கொட்டும் அருவியில் தனியே கொண்டாட்டம். தியாகுவின் கனவில் குயில் அவர் அருகில் வந்து ஆட புதுப் பையன் 'முழி முழி' என்று கை வைத்த பனியன் அணிந்து, கை கட்டிக் கொண்டு முழிக்கிறார்.! (உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?'
முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல. ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம்.
அதெல்லாம் கிடக்கட்டும்.
சித்ராவின் குரலும், M.S. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். ஒவ்வொரு வரி முடிவிலும் அவர் கொடுக்கும் அதிர்வுகள் நெஞ்சாங்கூட்டில் ஆழமாய் இறங்குகின்றன. இந்தப் பாட்டின் டியூனையும், அதன் இனிமையையும் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. இசைக் கருவிகள் ஒவ்வொன்றும் செய்யும் சாகச வித்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. முராரி பார்த்து பார்த்து பாடலை செதுக்கியிருப்பார். மலைக்காட்டு கிராமப் பின்னணி இசை, குறிப்பாக மூங்கில் குழல்களின் சப்தம் நம்மை அப்படியே ஈர்க்கும். என்ன! கொஞ்சம் ராஜாவின் சாயல் இருக்கும். ஆனால் தனித்தன்மை முத்திரை பதிக்க தவறாது.
கேட்கும் போது மெய் மறந்து போவோம் என்பது உண்மை. உண்மை.
'மலை நாட்டு மச்சானே!'
Last edited by vasudevan31355; 10th October 2015 at 07:44 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2015 08:08 PM
# ADS
Circuit advertisement
-
9th October 2015, 08:20 PM
#532
Senior Member
Diamond Hubber
'மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை'
அருமை அருமை ராகவேந்திரன் சார்! அத்தனை திரிகளிலும் போட வேண்டிய பாட்டு.
-
9th October 2015, 08:29 PM
#533
Senior Member
Senior Hubber
ஜி
சுஜாதாவின் ஜோடி சுதீர் .
நல்லாவே இருப்பார்.
-
9th October 2015, 09:09 PM
#534
Senior Member
Diamond Hubber
நல்லாவே தெரியும் ஜி. சின்னாவை சீண்டிப் பார்த்தேன்.
'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நடிகர் திலகத்தின் கிராம சிறுவயது தோழனாக, அவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தரும் சிறுவனாக வரும் பிரபாகர்தான் பின்னால் வளர்ந்து சுதீர் ஆகி, கே.ஆர்.விஜயாவின் மகளான, அதாவது நடிகர் திலகத்தின் வளர்ப்பு மகளான எம்.பானுமதியைக் காதலிப்பார். அழகான தோற்றம் கொண்டவர். ஏனோ பின்னால் பல பெண்களின் துகில் உரியும் துச்சாதனன் ஆனார்.
இங்கே பாருங்கள். நடிகர் திலகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்கும் சுதீரை.
Last edited by vasudevan31355; 9th October 2015 at 09:11 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2015, 09:26 PM
#535
Senior Member
Diamond Hubber
ஜி! உங்களுக்கு நான் தரும் ஒரு அற்புதமான சாங். சுதீர் நடித்ததுதான். கூட இருக்கும் ஹீரோயின் யாரென்று சின்னா சொல்லுவாராக. அருமையான பாடல். அழகான சுதீர். தாஸேட்டன் கலக்கி எடுத்திருப்பார்.
'மாரிவில்லு பந்தலிட்ட' 'தீர்த்தயாத்ரா' படத்தில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
9th October 2015, 09:35 PM
#536
Senior Member
Senior Hubber
ஜி
உமக்கு தெரியாதது உண்டோ ..
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
9th October 2015, 09:57 PM
#537
Senior Member
Diamond Hubber
அப்படியெல்லாம் இல்லைஜி! நிறையவே தெரியாது. 'திருவிளையாடல்' நாரதர் யாருன்னு இன்னும் கண்டு பிடிக்க முடியல்லையே ஈஸா.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2015, 10:20 PM
#538
Senior Member
Senior Hubber
வாஸ்ஸூ.. தாங்க்ஸ்..
//உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?// '
//முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல. ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம். // முதல்ல கண் செக் அப் செய்யும்.. குட்டியானைக்கும் அன்னத்துக்கும் வித்யாசம் தெரியலை
//அதெல்லாம் கிடக்கட்டும்.
சித்ராவின் குரலும், m.s. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். // ட்ரூ.. நடுல்ல கொஞ்சம் ஜானகிமாதிரி ஹம்மிங்க் டபக்குன்னுகொடுத்து விட்டிருக்கிறார்.. கேக்க இனிமையான பாடல்..அகெய்ன் தாங்க்ஸ்.
-
9th October 2015, 10:28 PM
#539
Junior Member
Regular Hubber
வாசு சார்,
தீர்த்தயாத்ரா திரைப்படத்தில் சுதீருடன் உள்ள ஹீரோயின் படாபட் ஜெயலெட்சுமி
போல உள்ளதே.
கோபு.
-
9th October 2015, 10:28 PM
#540
Senior Member
Senior Hubber
//ஜி! உங்களுக்கு நான் தரும் ஒரு அற்புதமான சாங். சுதீர் நடித்ததுதான். கூட இருக்கும் ஹீரோயின் யாரென்று சின்னா சொல்லுவாராக. அருமையான பாடல். அழகான சுதீர். தாஸேட்டன் கலக்கி எடுத்திருப்பார்.// ஓய்.. ஆண்களைத் தான் தெரியாதுன்னு சொன்னேன்..அதுவும் எங்க கால யூத் லேடீஸ்னா ஃபடாபட்னு சொல்ல மாட்டேனா என்ன பாட்டு அழகான பாடல் தாங்க்ஸ்..அதுவும் எங்கே அவர் முகத்தைக் காண்பித்தார்.. டபக் டபக்னு லாங்க் ஷாட்..அப்புறம் தரையில் விழுந்துடறார்.. கொஞ்சம் நிறுத்திப் பார்க்க வேண்டியதாப் போய்டுத்து.. கரெக்ட் தானே..
கமல் ஃபடாபட் சக்கபோடு போடு ராஜா நினைவிருக்கா..
Bookmarks