theerthayathra had another stunning song by PS
AT ummer's beautiful composition// ரொம்ப அழகான பாடல் ராஜேஷ். தாங்க்ஸ்.மொதல்லயே போட்டிருக்கலாமில்லை..கொஞ்சம் ஈஸியா கண்டுபிடிச்சுருப்பேன்.. பட் வெகு இளமையா ஃபடாபட் என்ன அழகா இருக்காங்க..பாவம்.. சீக்கிரமா போயிருக்க வேணாம்.. முதல் தமிழ்ப்படம் பட்டிக்காட்டு ராஜான்னு நினைக்கறேன் இல்லியோ..
மொழியறியா மக்களையும் இசை வயப்படுத்தி விடும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம்.
ஜேசுதாஸை தென்னிந்தியாவைத் தாண்டிச் செல்ல வைத்த பாடல். வட இந்தியர்களை கவனிக்க வைத்த பாடல்.
ராஜ் ராஜ் சார் சொன்னது போல ஸ்க்ரீன் பத்திரிகையில் ஒரு முறை ரவீந்திர ஜெயின் பேட்டியளித்திருந்தார். தன் கண்பார்வை வந்தால் முதலில் தான் பார்க்க விரும்பும் முகம் ஜேசுதாஸாகத் தான் இருக்க வேண்டும் என்று. அதற்கு வித்திட்டது இப்பாடல்.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏனோ நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனோ தெரியவில்லை. அதையும் தான் கேட்போமே.
Last edited by RAGHAVENDRA; 9th October 2015 at 11:22 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
வேறு எதையோ தேடப் போய்... வெகு நாட்களாய்.. அதாவது செந்தில்வேல் இந்தப் பாடலைப் போட்டபின் வாசுவும் இதைப் பற்றி எழுதியிருந்தது அப்போது சுத்தமாக நினைவிலில்லை..பின் தான் அவருடன் பேசிய போது நினைவுக்கு வந்தது..இப்போது அந்தலிங்க்..
The Hindu article reminded me of Tiruvarur Thyagaraja, KeevaLur(keezh vELur) Akshayalingam, Siikkil Singaravelan and Nagapattinam Neelayadhakshi, all temple deities. High school memories. Next time I visit India I should visit all these places !
I attended two of his concerts in the US. Very unassuming person.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
அந்தக் கால சினிமாக்களில் ஊடால கூத்து, டிராமா, ஓரங்க நாடகம் போன்ற அயிட்டங்கள் பாடல்களுடன் அம்சமாக வந்து போகும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் அது மாதிரி அதிகமாகவே இருக்கும். உடனே நம் நினைவுக்கு வருபவை நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை. இதெல்லாம் அடிக்கடி பார்த்தாயிற்று. இருந்தாலும் சலிக்காது. இது போன்ற வேறு படங்களில் வரும் கூத்து, நாடகம் இவற்றை நண்பர்கள் கொஞ்சம் போட்டா நல்லா இருக்குமே.
முதலில் நடிகர் திலகத்தின் படத்திலிருந்தே தொடங்கி வைக்கிறேன்.
'சபாஷ் மீனா' வில் ஒரு நாடகம்.
கனவான்களின் கூத்து. கும்மாளம். கன்னி மயில்களுடன் ஆட்டம். அங்கு வருகிறார் கோமாளி வேடத்தில் நடிகர் திலகம். நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறார். மிக வித்தியாசமான கெட்-அப்பில் புளோரசென்ட் லிப்ஸ்டிக் அடித்து அவர் ஒரிஜினல் கோமாளி போல் மேடையில் சுற்றி வருவது நம்மை வாய் பிளக்கச் செய்யும். நடன அசைவுகளை ரொம்ப அலட்சியமாக பண்ணுவார். கால்களை கவனித்தீர்களானால் ஒரு இடத்தில் கூட நில்லாது. கடினமான வரிகள். வார்த்தைகள். விறுவிறு என்று வேறு பாடுவார் பாடகர் திலகம்.
புத்தி சொல்லும் கோமாளியின் முகத்தில் கனவான் ஒருவன் கிரீம் எடுத்து அடித்து அவமானப்படுத்தி 'நிறுத்து' என்று கத்த,
அந்த ஏழைக் கோமாளியோ,
'நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே'
என்று எலும்பும், தோலும் காட்டும் வறுமைக் குழந்தைகளோடு பாடுகிறான்.
படத்தில் தந்தைக்கு நடிகர் திலகம் கூத்தாடுவது பிடிக்காது. அப்படிப்பட்டவர் இந்த ட்ராமாவுக்கு வந்துவிட, மேடையில் ஏழைகளுக்கு ஆதரவாக பாடி ஏய்ப்பவர் கூட்டத்திடம் சவால் விடும் நடிகர் திலகம்,
'கொற்றவனே வந்தாலும்
என்னைப் பெற்றவனே வந்தாலும்'
என்று பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து தந்தையைப் பார்த்துவிட்டு, பயத்தில் பாடத்தை மறந்துவிட்டு, திரை மறைவில் ஒருவர் வசனத்தை எடுத்துக் கொடுக்க, ('முடியாது' என்று எடுத்துக் கொடுப்பார்) அதையே நடிகர் திலகமும் இனி தந்தை முன்னால் தன்னால் நடிக்க முடியாது என்பதை அதே
'முடியாது'
வார்த்தையை வைத்தே நடுங்கிப் பாடி பயந்து ஓட. இழுத்து மூடு ஸ்க்ரீனை.
செம ரகளை. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும். நடிகர் திலகத்தில் அசாத்திய கோமாளித் திறமை சேட்டைகளை அனுபவித்து பார்த்து ரசிக்கலாம். வழக்கம் போல வியக்கலாம்.
சோ, மனோரமா, நாகேஷ் இது போன்ற சினிமாக்களில் வரும் கூத்து நாடகங்களில் நிறைய நடித்திருப்பார்கள்.
இனி தேடிக் கண்டு பிடித்து குஷிப்படுத்துவது உங்கள் பொறுப்பு. பார்ப்போம். யார் யார் தூள் கிளப்புகிரீகள் என்று.
Last edited by vasudevan31355; 10th October 2015 at 08:53 AM.
Bookmarks