-
10th October 2015, 05:17 PM
#11
Senior Member
Senior Hubber
நாடகங்கள் கதைகள் நாவல்கள் எல்லாம் நிஜவாழ்வின் நடப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கீற்றுக்கள் எனலாம்..
திரையில் ஒரு கதைக்குப்பொருத்தமான நாடகம் என வருவது என யோசித்ததில்…காதலியின் இழப்பில் பைத்தியமாக இருந்த ஒருவர் சுய நினைவு வந்தவுடன் எப்படி எல்லாவற்றையும் மறந்து விடுகிறார் என்பதனை வெகு பொருத்தமாய்ச் செய்திருக்கும் ந.தி.. இன் எங்கிருந்தோ வந்தாள்..
அதேசமயத்தில்..அவருக்கு நினைவு திரும்பப் போகிறது..அவர் குணமடைவதற்காக தன்னையே இழக்கும் பெண்ணுக்கு என்ன ஆகப் போகிறது என்பதை பார்ப்பவர்கள் பதைபதைக்கும் வண்ணம் முன்னோட்டமாக வரும் பாடல்..காவியப் பாடல் காளிதாச சகுந்தலை பாடல்..பொருத்தமான கவிஞர் கண்ணதாசனின் வரிகளுடன் அரங்கேறும் நாடகம்…
கன்னியவள் சகுந்தலையைக் கண்டுணர்ந்த மன்னவனும்
…காதலியை ஏற்பதற்குக் காடுவிட்டுச் சென்றுவிட
எண்ணமதில் தானுறங்கி உளத்தினிலே காதலனை
…ஏந்திழையும் ஏந்திநின்று உருகிநின்ற காலத்திலே
திண்ணமெனப் பசிகொண்டு துர்வாச முனிவனவன்
…தீர்க்கமாய் முனிகுடிலில் தாரகையை நோக்கிவிட
வண்ணமயில் ஆடாமல் சிலையாக நின்றதினால்
…வாழ்வினையே இழந்தகதை காவியமாய் ஆனதன்றோ..
ம்ம்
இனி பாடல்..
தோழிகள் என்னும் மான்கள் நடுவிலே தூய மானெனப் பள்ளி கொண்டவள்
அந்த மானை மறந்து போனவன் இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்….
துடிக்கின்ற சினமே துணையாகக் கொண்ட
துர்வாச முனிவன் தவமுடித்து
கொடிக்கன்று (வாவ்) நின்றிருக்கும் குடில் வந்தான்
குரல் தந்தான் யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே
எந்த எண்ணம் உனைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்துவிடுகின்றேன்
அந்த மன்னவனின் உள்ளம் என்பதனை இன்று மாற்றி விடுகின்றேன்
( எப்போ கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத கானம்)
Last edited by chinnakkannan; 10th October 2015 at 05:25 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th October 2015 05:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks