-
20th October 2015, 07:34 PM
#3521
Junior Member
Diamond Hubber
வாசு சார் ,ஆதிராம் சார்
"தவறிய ஆவணங்கள்"
-----------------+-+---------------------
அதனால்தான் பெரும்பாலான ரசிகர்கள் ஆவணங்களை கண்ணில் காட்டக்கூட மறுக்கிறார்கள்.அவர்கள் மீதும் தவறில்லை. அவருடைய ஆவணங்களை ரசிகர்கள்பொக்கிஷத்துக்கும் மேலாக நினைப்பதும் ஒரு காரணம்.ஆனால் இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன் சரியான காரணமாக இருந்திருக்கலாம்.
எல்லோரும் கெஞ்சிக் கூத்தாடியாவது ஆவணங்களை இருப்பவர்களிடம் வாங்கி பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.
நன்றி.
நடிகர்திலகத்தின் புகழ் பரவ விருப்பம் உள்ளவர்கள் ஆவணங்களை இனியும் பெட்டியில் போட்டு மூடி வைத்திருப்பது எதற்காவது உதவுமா?
நீங்கள் ஆதங்கப்பட்டது போல் நாங்களும் கொடுத்து வராமல் போன ஆவணங்கள் ஏராளம்.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
20th October 2015 07:34 PM
# ADS
Circuit advertisement
-
20th October 2015, 07:39 PM
#3522
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.
... திண்ணை இணைய வாரப்பத்திரிகையிலிருந்து..
இறைவனே... ஓயாமல் நாங்கள் பட்ட பாட்டுக்கு முதல் முறையாக ஒரு நல்ல பலன் கண்ணில் தெரிகிறது..
நேர்மையின் சின்னம் மக்கள் தலைவனின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையைப் பற்றிய நேர்மையான அணுகுமுறையில் கட்டுரை வெளிவந்துள்ளது மகிழ்வூட்டுகிறது.
இனி வரும் காலங்கள் மக்கள் தலைவரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுபவை என்பதற்கு இது ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.
கட்டுரையாளருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
திண்ணை இணைய பத்திரிகைக்கு நம் உளமார்ந்த நன்றி.
மேற்காணும் மேற்கோள் கட்டுரையின் சுட்டி -
http://puthu.thinnai.com/?p=30659
ராகவேந்திரா சார் ,
அருமை.
பதிவுக்கு நன்றி
-
20th October 2015, 08:46 PM
#3523
Junior Member
Senior Hubber

ஏற்றமிகு தமிழ்த் திரையுலகின்
எழுச்சிக் காலத்தில், எழுபதில்
வந்த இந்த "எங்கிருந்தோ
வந்தாள்" படப் பாடல், என்னைப் போன்ற கோடிக்கணக்கானோரின்
இதய சிம்மாசனங்களில்
நிரந்தர வீற்றிருப்பு செய்கிறது.
இன்றும் கூட இந்தப் படம்
பார்த்து விட்டு வருகிற முகங்களில் "பார்த்தோம்,வந்தோம்" என்கிற அலட்சியத்தைப் பார்க்க முடியாது. ஒரு முழுமையான
கலைப்படைப்பு தந்த பெருமிதத்தையும்,முதிர்ந்த ரசனையையும் அந்த முகங்களில் நாம் காண முடியும்.
நாளைக்குப் பரீட்சையென்றால்.. இன்றிரவு
(நல்ல)மாணவன் படிப்பில்
காட்டுகிற அக்கறையை, நாம்
நடிகர் திலகத்திடம் காணலாம்..
எப்போதும் போல் இந்தப் பாடலிலும்.
சிரிப்போடு தொடங்கும் இந்தப் பாடல், நம் சிரிப்பை வாழ வைக்கிற வேலையை முப்பத்தைந்து வருடங்களாகத்
தொடர்கிறது.
தமிழ் சினிமாவில் காதல் எனில்
இதுதானென நிச்சயிக்கப்பட்ட
விஷயங்களையெல்லாம்,
நம் நடிகர் திலகமும்,நடிகர்
திலகத்தின் படங்களுந்தான்-
அர்த்தமுள்ளதாய்.. அழகாய்
மாற்றி எழுதியிருக்கிறார்.
மாற்றி எழுதின.
சிரிப்புக்கு ஸ்வரம் பிரித்த அமரர் எம்.எஸ்.வி, இசையாகவே சிரித்துப் பாடிய
சுசீலாம்மா, என் உயரம் எனக்குத்தான் என்று ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரிய தெய்வீகப் பாடகர், அமரர் அய்யா டி.எம்.எஸ்., கதாநாயகியாய் சும்மா அழகு வலம் வராமல் தன் இருப்பைத்
தெளிவாய்த் தெரிவிக்கும்
கலைச் செல்வியின் அற்புத
நடிப்புப் பங்காற்றல்..
சிறப்புக்கெல்லாம் சிகரம் வைக்கும் நம் சிங்கத் தமிழன்..
வேறென்ன வேண்டும்?
பாடலுக்கு வயசு, வருஷக்
கணக்கில் இல்லை...யுகக்
கணக்கில் நீளும்.
காதலும்,கவிதையுமாய் பழைய
வருஷங்களிலிருந்தவன்
காதலியைப் பிரிந்த சோகத்தில் பைத்தியமாய் மாறிப் போகிறான்.
அன்புடனும்,அக்கறையுடனும்
அவனைப் பராமரிப்பதற்காக
அமர்த்தப்பட்ட இளம் பெண்ணுடன் ஆடிப் பாட வேண்டிய கதைச் சூழல்.
கத்தி மேல் நடப்பது போல்
ஜாக்கிரதை காட்டிய வேண்டிய
சூழல் இது.
கத்தி மேல் நடனமே ஆடுகிறார்..நம்மாள்.
நல்ல தமிழில் எழுதப்பட்ட
பாடல் வரிகளுக்கு வாயசைப்பதற்குக் கூட,ஏற்கனவே கவிஞனென்பதால்
தமிழ்ப் புலமை மிக்கவன்
என்கிற காரணத்தைச் சொல்லி
விடலாம்.
ஆனால், சுவாதீனத்துடன் இருந்த பழைய கால
மேதமையை, நடிப்பில்
எந்த இடத்திலும் காட்டி விடக் கூடாது.
அதற்காக, என்னென்னவெல்லாம்
செய்கிறார்..? தலைமுடி கலைவது குறித்த அக்கறையே
இல்லாது,குதித்துக் குதித்து
முடி கலைக்கிறார்.
பளீரென்று சிரிக்கிற நாயகியின்
இதழ்களின் கீழ் கையேந்தி
புன்னகையைப் பிடிக்கிறார்.
பிடித்த புன்னகையை பட்டாம்பூச்சி போல் பறக்க
விடுகிறார். கை நழுவிப் பறந்த
புன்னகைப் பூச்சியை குதித்துப்
பிடிக்கப் பார்க்கிறார். முயற்சி
தோற்க "பொத்" என்று புல்தரையில் விழுந்து புரள்கிறார்.
கச்சிதமாயில்லாத காவி ஜிப்பா,
வெள்ளை பைஜாமா அணிந்த
இருபது வயதுக் குழந்தையாய்
ஓடுகிறார். ஆடுகிறார்.
சிரிக்கிறார். குஷியாட்டம்
போடுகிறார்.
முகத்தை முன் நீட்டி, கைகள்
இரண்டையும் பின் இழுத்து,
சின்ன வார்த்தைக்கும் பெரிதாய் வாய் திறந்து,
மிக அகலமாய் கண்கள்
அகட்டி, குழந்தை போல் கைகள்
கொட்டி, சரிந்திறங்கும் திண்டிலிருந்து, கால்கள் மட்டும்
"கிடு கிடு"வென இறங்க.. உடலின் மற்ற பாகங்களில்
ஒரு அசைவும் காட்டாமல்
வியப்பூட்டி..
என்னென்னவெல்லாம் செய்கிறார்?
"நிலவென வளரட்டும் கவிதை
உள்ளம்" என நாயகி பாடுகையில், ஒரு கட்டத்தில்
நமக்கு முதுகு காட்டித்தான்
நிற்கிறார். அப்போதும் அவர்
ஏதோ பாவங்கள் காட்டிக் கொண்டுதானிருக்கிறார் என்பதை அவரின் முதுகின்
அசைவுகள் உணர்த்துகின்றன.
அட..
முதுகையும் நடிக்க வைத்தார்..
நடிகர் திலகம்.
( இந்தப் பாடலைப் பற்றி
எழுதுங்கள் என்று என்னை
அன்புடன் பணித்த அன்புமிகு
திரு.V.C.S அவர்கள்,
இந்தப் பாடலில் நடிகர் திலகம்
செய்யும் சில அற்புத பாவனைகளை "சிப்பிக்குள் முத்து" படத்தின்'துள்ளி துள்ளி' பாடலில், கமல் அவர்கள்
அப்படியே செய்திருக்கிறார்
என்றும் தெரிவிக்கிறார்.)
-
Post Thanks / Like - 2 Thanks, 7 Likes
-
20th October 2015, 10:19 PM
#3524
Senior Member
Diamond Hubber
ஆதவன் ரவி சார்,
தங்களில் ஒவ்வொரு ரசிப்புப் பதிவும் என்னால் அணு அணுவாக ரசிக்கப்படுகின்றன. அருமை. தொடருங்கள். எங்கிருந்தோ வந்தாளின் பாடலில் தலைவரின் அசைவுகளை அற்புதமாக வடித்தெடுத்துத் தந்தமைக்கு நன்றி! நானும் ஏற்கனவே 'சிப்பிக்குள் முத்து' கமல் தலைவர் போல் செய்வது பற்றி எழுதியுள்ளேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th October 2015, 10:22 PM
#3525
Senior Member
Diamond Hubber
திண்ணை இணைய வாரப்பத்திரிகையிலிருந்து..
ராகவேந்திரன் சார்!
தங்கப் பிரேம் போட்டு மாட்டி வைக்க வேண்டிய கட்டுரை. பதித்தமைக்கு நன்றி!
இந்த ஒரு கட்டுரை போதும் இனி இங்கு கருத்து பேதங்கள் வாராதிருப்பதற்கு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th October 2015, 10:37 PM
#3526
Junior Member
Senior Hubber
"திரு. ஆதவன் ரவி அவர்களுக்கு,
நான் தற்போது நடிகர் திலகம்
பற்றிய ஆய்வை
மேற்கொண்டுள்ளேன். அதில்
நடிகர் திலகத்தின்
நடிப்பாற்றலை ஒரு இயலில்
எழுதியுள்ளேன். இந்த ஒரு
பாடலின் மூலம் அவருடைய
நடிப்பாற்றலை நீங்கள்
அற்புதமாக ஆய்வு செய்து
இருப்பது மிக அருமை.
வாழ்த்துகிறேன்."
-நடிகர் திலகத்தைப் பற்றி
ஆய்வு செய்து வரும், அய்யா
திரு.மருதுமோகன் சேதுராமச்சந்திரன் அவர்கள்,
'சிரிப்பில் உண்டாகும்'
பாடல் குறித்து நான் எழுதியதை முகநூலில் படித்து
விட்டு, என்னை இவ்வாறு
மனந்திறந்து பாராட்டியுள்ளார்கள். மிகவும்
பெருமையாகவும்,மகிழ்வாகவும் உணர்கிறேன்.
அய்யாவுக்கெனது பணிவான
நன்றி.
எல்லாப் பெருமையும் நடிகர்
திலகத்திற்கே.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th October 2015, 10:43 PM
#3527
Junior Member
Senior Hubber
வாசு சார்,
தங்களது உளப்பூர்வமான
வாழ்த்துகள், என்னை
உற்சாகப்படுத்தி வளர்க்கின்றன.
நன்றிகள் கோடி.
-
20th October 2015, 10:44 PM
#3528
Senior Member
Diamond Hubber
ஆதவன் சார்,

'நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இடையில் ஆடும் பொம்மை'
வரிகளில் ஜெயா ஓடி வந்து முன்னால் நிற்க, பின்னால் இவர் சற்றே குனிந்து இரு கை விரல்களையும் விரைப்பான விரித்து வைத்த நிலையில் கால்களை உதறி உதறி முன் வைத்தபடி ஒவ்வொரு ஸ்டெப்பாக நடந்து, அதே சமயத்தில் கைகள் இரண்டையும் ஒரே பக்கமாக வலதும் இடதுமாக ஆட்டியபடி நான்குமுறை வருவாரே! அந்த ஒரு அம்மாஞ்சித்தனம் போதும் சார். வேற எதுவுமே வேண்டாம். எல்லாம் அவர் வண்ணமே! அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அந்த தெய்வத்தின் பாதத்திலேயே வீழ்ந்து கிடக்கலாம். அப்படியே வாழ்ந்து முடிக்கலாம்.
Last edited by vasudevan31355; 20th October 2015 at 10:48 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th October 2015, 10:53 PM
#3529
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th October 2015, 11:14 PM
#3530
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
senthilvel
மனோஜ் குமார் தயாரித்து நடித்த பூரப் அவுர் பச்சிம் ..திரைப்படத்தினைத் தமிழில் தயாரிக்க உரிமை பெற்று பூஜை போட்டு அமர்க்களமாக துவங்கிய படம் கிழக்கும் மேற்கும். அதில் நடிகர் திலகம் இரு வேடங்கள் ஏற்று நடிக்க இருந்தார். அதற்கான பூஜையில் எடுக்கப் பட்ட படங்களில் ஒன்று தான் மேலே இருப்பது. சவாலே சமாளி 150வது திரைப்பட விழாவையொட்டி மதி ஒளி வெளியிட்ட சிறப்பு மலரில் பின் அட்டையை இந்தப் படம் அலங்கரித்தது. அது மட்டுமின்றி நாளிதழ்களிலும் வெளிவந்தது. அந்த சூட்டோடு சூட்டாக இப்படம் வெளிவந்திருந்தால் பார் மகளே பார், உயர்ந்த மனிதன் ரேஞ்சுக்கு நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக மின்னியிருக்கும்.
சில சமயங்களில் நின்று போன பல படங்கள் நம்மைப் போன்ற பல ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டுள்ளன. அதில் ஜீவபூமி, ஞாயிறும் திங்களும் வரிசையில் இதுவும் அடங்கும்.
மிக்க நன்றி செந்தில்வேல்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks