-
24th October 2015, 11:02 AM
#1021
Senior Member
Seasoned Hubber
சாமி போட்ட முடிச்சு
நீலவேணி அம்மா நீலவேணி
முரளி சிந்து மற்றும் ஆர் சுந்தர்ராஜன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015 11:02 AM
# ADS
Circuit advertisement
-
24th October 2015, 11:05 AM
#1022
Junior Member
Diamond Hubber
-
24th October 2015, 11:05 AM
#1023
Senior Member
Senior Hubber
//தமிழ்ப் பாட்டுக்கு ஈஸியா அலசி பதிவு போட்டுடலாம் சின்னா! ஆனா இந்த தெலுகு டப்பிங் பாட்டிற்கு பா(ட்)டு பட வேண்டியதா இருக்கு. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து தப்பில்லாம தரணுமே!
எனக்குப் புடிச்ச பாடல் அப்படிங்கறதால பாலா பாடல் ஆய்வு போல பெரிசாப் போச்சு. பாலா பாடல் ஆய்வு போலவும் ஆச்சு.// நைஸ் வாசு.. ரொம்பக் கஷ்டம் தான் அலசறது..
இந்திரன் சந்திரன் துபாயில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி வீடியோவில் பார்த்த படம்..விமர்சனமெல்லாம் படிக்காமல் பார்த்த நினைவு.. சடனாக வந்த நல்ல மசாலாப் படம்..
ஏடாகூடமாகக் கமல் குறும்பு செய்வார்.. அது போல க்ளைமாக்ஸ் ... என்ன தான் மேயர் கமலின் குளிர்சாதன அறையில் வைத்த உடலை மாற்றி வைத்தாலும் யாருக்குமே தெரியாதா என்ன என மிகப் பெரிய லாஜிக் ஓட்டை இருக்கும்.. பட் சுவாரஸ்யமாகப் போகும்..
தாங்க்ஸ் வாசு..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th October 2015, 11:17 AM
#1024
Senior Member
Senior Hubber
//தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல. //
வெரி ட்ரூ வாசு.. இசைக்கும் ரசனைக்கும் மொழி ஒரு தடையே அல்ல.. என்னா வாக்கியம்.. அட்சர லட்சம் பெறும்..
ஆனாக்க
ரொம்ப நாளைக்கு முன்னால் சலங்கை ஒலி பாடல்கள் அத்தனையும் எழுதியது வைரமுத்து என்றாலும்..சாகர சங்கமம் பாடல்கள் மொத்தமா ஒரு சிலவா என நினைவில்லை..மொழிபெயர்ப்பு படிக்க நேர்ந்தது..
அப்படியே ஸ்ட்ரெய்ட் ட்ரான்ஸ்லேஷன்.. வைரமுத்து அப்படியே ட்ரான்ஸ்லேட் செய்தாரா அல்லது தமிழிலிருந்து தெலுங்கு போச்சா தெரியாது..
தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு..
ஆனா புதுசா பாட் எழுதி வார்த்தைகளை மடக்கி ஓரளவிற்குப் பொருத்தமா எழுதறதுல தமிழ்ப் பாடலாசிரியர்கள் கெட்டிக்காரர்கள் தமிழ்ப்படங்களுக்கு இல்லியோ..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th October 2015, 11:18 AM
#1025
Senior Member
Senior Hubber

Originally Posted by
senthilvel
ஆசை நூறு வகை
செந்தில் வேல்..இது நல்லபாட் தான்..ஆனா என்னோட விருப்பம் என்னன்னா..
இதை இரண்டு பாராக்களுக்கு மிகாமல் - கூட எழுதினாலும் தப்பில்லை- அலசிப் போட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு பரிசு தருவேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 11:29 AM
#1026
Senior Member
Diamond Hubber
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
-
24th October 2015, 11:31 AM
#1027
Senior Member
Senior Hubber
சர்ப்ரைஸா நீலவேணி அம்மா நீலவேணி பாட்டு
கூட ரெண்டு வரி எழுதியிருக்கலாம் ராஜேஷ்.. படம் பார்க்கும்போது ரசித்துக் கேட்ட பாட்டு..இப்பத்தான் மறுபடி பார்க்கறேன் கேக்கறேன்.. தாங்க்ஸ்
லிரிக்ஸ் கீழே
தோணி மீது பாடும்குயிலு
தோழியோடு போகும் மயிலு
ஜாடை காண ஆளை காண ராகம் கூட்டிப் போனதோ
ஆத்து மேல போகும் தோணி
அதுக்கு மேல ராஜா ராணி
பாட்டுக் கேட்டு நோட்டம் போட
பார்வை தேடிப் பாயுதோ (சிந்து அழகா இருக்காங்க இல்லியோ)
தேடித் தேடிப் பாரய்யா
சின்ன மயிலு நானய்யா
தேவலோக ராணி போல வாழுகின்ற ஆளய்யா
கூந்தலென்ன ஆலம் விழுதோ
குங்குமம் தான் காலைப் பொழுதோ (வாவ் சிம்ப்பிள் அண்ட் பியூட்டிஃபுல் வர்ணனை)
சேர்ந்த ரெண்டு சேரன் வில்லு
புருவமாகிப் போனதோ..
கண்கள் ரெண்டும் மீனோ மானோ
கன்னம் ரெண்டும் பூவோ பொன்னோ
சின்ன வாயில் என்ன சாயல்
பவளமாக ஆனதோ..(அனதர் வாவ்..)
பார்த்தது தான் இல்லையே
பறித்திடாத முல்லையே
பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் கேட்டிடாத கேள்வியே..
நீலவேணி அம்மா நீலவேணி
(ஆஹா காலங்கார்த்தால லிரிக்ஸ டைப்பண்ண வச்சுட்டீரே ராஜேஷ்..உம்மை..சிந்து மாக்கடல்ல தான் நீந்த வைக்கணும்!)
சிந்து அழகான நடிகை..பட் சின்னவயதில் மரணித்தது சோகம் தான்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 11:34 AM
#1028
Senior Member
Senior Hubber
வாசு.. அவர் தெ.எ.தொ ந்னு சொல்லி போட்ட படம் தந்துவிட்டேன் என்னை.. அது தான் மொக்கை என்றார் ( நான் பார்த்ததில்லை) ஆனால் படத்தில் இன்னொரு பாட் போட்டிருக்கிறேன் பாகம் 3ல்..
தெ எ தொ போர் தான்..ஆனால் பாடல்களினால் போர் தெரியாமல் போயிருக்கும்.. திடீர்னு திரு நீர் மலை காமெடி கடைசியா வரும் என நினைவு.. அதில் படம் போர் என்பதையே மறந்து விடுவோம்..

Originally Posted by
vasudevan31355
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
-
24th October 2015, 11:38 AM
#1029
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
I meant thanthu vitten ennai
-
24th October 2015, 11:43 AM
#1030
Senior Member
Diamond Hubber
சின்னா! உங்ககிட்ட பிடிச்ச குணம் எல்லா வரிகளையும் ஒண்ணு விடாம படிச்சு கருத்து சொல்றது. அது பதிவு போடறவங்களுக்கு உற்சாக மன நிலையைக் கொடுக்கும்தானே! அதுக்காக உமக்கு என்னுடைய தேங்க்ஸ்.
//தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு.?//
'சிப்பிக்குள் முத்து' படத்திலேயே சுத்தமா பாலா குரல் கமலுக்கு பொருந்தலை. கமல் கொஞ்சம் கிரீச். பாலா பேஸ். பாடல்களுக்கு சரி! வாய்ஸ் டப்பிங்ற்கு ம்ஹூம்.
பசி எடுக்கிற நேரம் வந்துடுச்சு. உம்மா லிரிக்ஸ் பார்த்ததும் பறந்து போயிடுச்சு.
மஞ்சு செல்லத்தை மறக்காம ஞாபகம் வச்சு என் வாயை அடைச்சி சூப்பரா எங்க ஆளைப் பத்தி ஒரு கவிதையும் எழுதிட்டீரே! உமக்கு விரைவிலேயே தெலுங்கிலே மஞ்சுவோட பாட்டு ஒன்னு போடறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks