-
3rd November 2015, 09:38 PM
#1331
Senior Member
Diamond Hubber
ஜி!
மிக அருமையாக 'குட் மார்னிங் சிஸ்டர்' ஞாபகப்படுத்தி ரமாபிரபா நினைவலைகளை தட்டி எழுப்பி விட்டீர்கள்.
ரமாபிரபா


'லில்லி லல்லி ஜிம்மி ஜிப்பி ரோஸி ரோஸி ராணி' என்று நாய்க்குட்டிகளோடு கொஞ்சி அவைகளை மேய்த்து மகிழும் இளம் அரைப்பைத்திய, சகஸ்வரநாமத்தின் செல்லப் பெண்ணாக, வாரிசுக்காக செல்வத்தின் இரண்டாந்தரமாக கட்டி வைக்க பெரிசுகளால் ஜோதிட முடிவு செய்யப்பட்ட நேரத்தில் 'வாரிசுக்காகத்தான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்...வாரிசு பெற்றுக் கொடுத்ததும் நான் எங்காவது போய் விடுவேன். அப்புறம் நீங்களும், வள்ளி அக்காவும் சுகமாக வாழலாம் ' என்று நம் 'செல்வ'த்தின் மேல் அக்கறை காட்டும் வெகுளி முறைப்பெண் ரத்னாவாக.

அக்காள் முறை ஏழை வாணிஸ்ரீ அம்மா சுந்தரிபாயால் கொடுமைப் படுத்தப்படும் போது அவருக்காகப் பரிந்து பேசி, பார்ப்பவர்களையெல்லாம் 'குட் மார்னிங் சிஸ்டர்...குட்மார்னிங் பெரியப்பா...குட்மார்னிங் மம்மி' என்று சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து கிராக்குத்தனமாய் 'இருளும் ஒளியும்' புரியாத ரமாவாக.

'சூரக்கோட்டை இளையராஜா' என ஜோராக புருடா விடும் திகிடுதத்த ஏமாற்றுப் பேர்வழி நாகேஷிடம் ஏமாந்து மனதையும் பறி கொடுத்து, வெண்மை உடையில் அவருடன் 'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்' பாடி, இறுதியில் நாகேஷின் களவாணித்தன உண்மை தெரிந்து கலங்கும், இதயங்களைத் தேடி அலையும் பணக்கார பரிதாப மனைவி கமலாவாக.

அறிந்தும் அறியாத, இரண்டுங்கெட்ட வயசு ஸ்கூல் பெண்ணாக டீச்சர் காஞ்சனாவுடன் ஊர் சுற்றி, நாகேஷை விவரம் புரியாமல் 'சாந்தி நிலைய'த்தில் காதலித்து 'கண்கள் தேடுவது...உள்ளம் நாடுவது...மெல்லப் பேசுவது...ஒன்று சேருவது' எனப் பாட்டுப் பாடி மகிழும் பாவாடை சட்டை அணிந்த இளம் பெண் கீதாவாக.

'நாதா... நாதா' என்று சர்வசதா காலமும் நாகேஷின் உயிர் எடுக்கும் பூர்வ ஜென்மப் பைத்தியமாக 'உத்தரவின்றி உள்ளே வந்த' மோகினியாக.

'காசேதான் கடவுளடா' கும்பலில் கேட்ட பொருள் கேட்ட மாத்திரத்தில் கிடைக்காத பட்சத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசி துவம்சம் செய்து, தாண்டவம் ஆடி, மயங்கி விழுந்து, பின் தெளிந்து எழுந்து, 'இங்கே என்ன நடந்தது?' என்று அப்பாவியாய் கேள்வி கேட்கும் பைத்திய கேஸ், நாயகி லஷ்மியின் பெயரை தன் பெயராகக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தும் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் ரமாவாக.

வி.கே.ஆர். நாகேஷ் இரு 'குக்' களிடம் மாற்றி யாரைக் காதலிப்பது என்று குழம்பி, பெரிய அடுக்கு சாப்பாட்டுக் கேரியரில் நாகேஷ் சதி வேலையால் வி.கே.ஆர் மாற்றிக் கொடுக்கும் பச்சை மீன், முட்டை, கோழி என்று ஏமாந்து, அதையே,சமைத்த வாக்கில் நாகேஷ் தரும் போது ஆனந்தமாய் சாப்பிட்டு மகிழ்ந்து,
(நாகேஷ் ஒவ்வொரு கிண்ணமாக சாப்பாட்டுக் கேரியரை ரமாபிராபாவிடம் திறந்து காட்டும்போது
'இது என்ன சொல்லு?'
எனக் கேட்க அதிலுள்ள அவித்த முட்டையைப் பார்த்து ரமாபிரபா,
'முட்டை' என்று ஆனந்தமாகக் கூற,
அதற்கு நாகேஷ் தரும் பதில்
'ஆமாம்! கோழியே வச்சது'
எப்படி சிரிக்காமல் இருப்பது?)
நாகேஷின் 'ஜகஜகா'வுக்கு அர்த்தம் புரியாமல் 'என்ன?' என்று கேட்க, நாகேஷ் அதற்கான பதிலை காதில் கிசுகிசுக்க 'ச்சீ ! இவ்வளவுதானா?' என்று அலட்சியம் காட்டி நம்மை அலற வைக்கும் 'வசந்த மாளிகை' ஜமீனின் சராசரி வேலைக்காரி முத்தம்மாவாக.
கணவன் நாகேஷ் (பட்டாக்கத்தி பைரவனின் கைத்தடி) கொஞ்சம் ஜொள்ளுப் பேர்வழி என்று தெரிந்து இரவில் அவனை ஊர் சுற்ற விடாமல் கால்களை கயிற்றால் பிணைத்து கண்காணிக்கும் குழந்தை பெற்ற 'பச்சை உடம்புக்கா(ரி)ர பொசஸிவ் மனைவியாக.

பாரிஸில் கணவனிடம் மாட்டிக் கொண்டு தப்ப முடியாமல் '47 நாட்கள்' சித்ரவதை அனுபவிக்கும் சிவசங்கரியின் ஜெயபிரதாவை அவனுடன் ஒரு ஹோட்டலில் கண்டு, அவள் நிலைமை புரிந்து, அவனறியாமல் நைஸாக சுண்டு விரல் நீட்டி, அவளிடம் சைகை காட்டி, ஜெயப்பிரதாவை பாத்ரூம் வரச் சொல்லி, அந்தப் பெண்ணின் கதை கேட்டு, பரிதாபப்பட்டு, அவள் தாய்நாடு திரும்ப டாகடர் சரத்பாபு (நிஜ வாழ்க்கையில் ஒரிஜினல் கணவர்) மூலம் உதவி செய்யும் மனிதாபிமானமுள்ள, வாயில் சிகரெட் புகைய, ஜீன்ஸும், ஷர்ட்டும், தொப்பியுமாக கலக்கும் தமிழ் பேசும் நடுத்தர வயதுப் பெண்மணியாக.
இப்படி பலதரப்பட்ட வேடங்களில் சிறப்பாக நடித்து, ஆரம்பத்தில் லூஸுத்தனமான ரோல்களில் நடித்தாலும் அதிலும் வித்யாசம் காட்டி, தெலுங்கிலும் கொடி கட்டிப் பறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை ரமாபிரபாவை மறக்க முடியுமா?
Last edited by vasudevan31355; 3rd November 2015 at 09:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
3rd November 2015 09:38 PM
# ADS
Circuit advertisement
-
3rd November 2015, 10:10 PM
#1332
Senior Member
Seasoned Hubber
ஜி வணக்கம்
யெஸ் யெஸ் ரமாபிரபா .. மனோரமா, சச்சு இவர்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல. தமிழ் தெலுங்கு இரண்டிலும் நன்றாக பேசக்கூடியவர் மிகவும் அற்புத கலைஞர்
ஏனோ தமிழில் இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து ..
வெண்ணிலா நேரத்திலே வேணுகானத்தை மறக்கமுடியுமா ரமாவையும் மறக்க முடியுமா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd November 2015, 11:58 PM
#1333
Senior Member
Senior Hubber
இப்படி ரமாப் ப்ரபா அனலிஸிஸ் நன்னாயிட்டுப்பண்ணிட்டீங்களே வாசு(என்னோட ஃபேவரிட்- காசே தான் கடவுளடா..மாட்டேன்னு சொல்லாதீங்க அம்புட்டு தான்..
)
*
வழக்கம் போல மறதி என்னை ஆக்கிரமிச்சுடுத்து.. யோசிச்சாலும் யார் அந்த ஹீரோயின்னு நினைவுக்கு வரலை..அதனாலென்ன பாட் போட்டுடலாம்..
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th November 2015, 12:02 AM
#1334
Senior Member
Senior Hubber
இன்னொரு பாட் அதுலயே
மலரைப் போன்ற பருவமே..விழிகள் காட்டி நடப்பதேன்..
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி பார்த்ததில்லை..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th November 2015, 02:04 AM
#1335
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
இப்படி ரமாப் ப்ரபா அனலிஸிஸ் நன்னாயிட்டுப்பண்ணிட்டீங்களே வாசு(என்னோட ஃபேவரிட்- காசே தான் கடவுளடா..மாட்டேன்னு சொல்லாதீங்க அம்புட்டு தான்..

)
*
வழக்கம் போல மறதி என்னை ஆக்கிரமிச்சுடுத்து.. யோசிச்சாலும் யார் அந்த ஹீரோயின்னு நினைவுக்கு வரலை..அதனாலென்ன பாட் போட்டுடலாம்..
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
கன்னட கல்பனா
கர்ணனில் கடைசியில் பூமாதேவியாக/தர்மதேவியாக வருவாரே அவர் தான்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
4th November 2015, 04:33 AM
#1336
Senior Member
Diamond Hubber
கல்பனா தெரியாதா ? ஐயகோ சிக்கா...
ராஜேஷ்... தர்மதேவின்னு சொல்லிட்டீங்க... ஓகே... "நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்" என்று சுசீலாம்மா பாடும் கட்டிலா தொட்டிலா பாட்டுக்கு நடித்தவர் என்றும் சொல்லலாம்.
ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
4th November 2015, 05:57 AM
#1337
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
madhu
கல்பனா தெரியாதா ? ஐயகோ சிக்கா...
ராஜேஷ்... தர்மதேவின்னு சொல்லிட்டீங்க... ஓகே... "நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்" என்று சுசீலாம்மா பாடும் கட்டிலா தொட்டிலா பாட்டுக்கு நடித்தவர் என்றும் சொல்லலாம்.
ஆனால் அந்த மலரைப் போன்ற பாட்டு அந்தக் காலத்து தேசிய கீதமாக இருந்தது.... நினைவுக்கு வருதே!....
இன்னும் கூட அந்த ஃபீலிங்ஸ்...யெஸ்.... அந்த ஃபீலிங்ஸை மிஞ்ச வேற பாட்டு கிடையாது. ! ரவி அண்ட் டி.எம்.எஸ் ராக்ஸ் ! இன்னமும் !
கரெக்ட் மதுண்ணா.
கட்டிலா தொட்டிலா, சாது மிரண்டால், தென்னங்கீற்று என்று சொல்ல நினைத்தேன்.. ஏனோ கர்ணன் நிறையவாட்டி பார்த்திருப்பார் என்று நினைத்து அப்படி சொன்னேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th November 2015, 06:35 AM
#1338
Senior Member
Veteran Hubber
First super star MKT
A video clip on MKT:
I will post the songs featured in this clip and also the MKT songs I sing, one at a time !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
4th November 2015, 08:31 AM
#1339
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!

இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படம் அனைவருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது. இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என்று வெவ்வ்வேறு கால கட்டத்தில் வந்ததாலும், மொழி மற்றும் டப்பிங், ரீமேக், நடிகர்கள் சம்பந்தமாய் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கையே.
அதனால் எனக்குத் தெரிந்தவரை இந்த 'ஸ்கூல் மாஸ்டர்' சந்தேகம் பற்றிய விளக்கங்களை இங்கே தருகிறேன். இதோ விவரங்கள்.

'ஸ்கூல் மாஸ்டர்' கன்னடத்தில்தான் முதலில் தயாரிக்கப்பட்டது. வெளியானது 1958-ல். (பிறகு தான் இந்தியில்... 1959-ல்) தமிழில் 'டப்' செய்யப்படாமல் நேரிடையாக 'எங்க குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழில் அதே ஆண்டில் வெளியானது. கன்னடத்தில் நடித்த அதே நடிகர்களே தமிழிலும் நடித்திருந்தனர். கன்னட வாடையாகவே இருக்கக் கூடாதே என்று தமிழில் 'குல தெய்வம்' ராஜகோபாலை காமெடிக்கு போட்டிருப்பார்கள். (கன்னடத்தில் அந்த மொழி நகைச்சுவை நடிகர்) சரோஜாதேவியும் தமிழுக்கு அப்போது பரிச்சயம்.

இதே 'ஸ்கூல் மாஸ்டர்' 1959-ல் இந்தியில் (கரண்திவான், ஷகீலா, சரோஜாதேவி, பந்துலு ) பந்துலு தயாரிப்பில் வெளிவந்த போது இதே ரோலை நடிகர் திலகமே இந்தியிலும் செய்திருந்தார். அப்போது ஒல்லியாக இருப்பார். ('மாஸ்டர்' ரோல் பந்துலுவிற்கே).
1964-ல் மலையாளத்திலும் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் கௌரவ நடிகராக நடித்திருந்தார் சௌகார் ஜோடியுடன். மலையாளத்தில் 5 வருடங்கள் சென்று இப்படம் வந்ததால் இதில் திலகம் சற்று குண்டாகத் தெரிவார். 'ஸ்கூல் மாஸ்டர்' ரோல் 'திக்குரிச்சி சுகுமாரன் நாயருக்கு. இந்தப் படம் வெளிவந்த அதே தேதியில்தான் நடிகர் திலகத்தின் 'பச்சை விளக்கு' படமும் வெளிவந்ததாக நினைவு.
'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளத்தில் நடிகர் திலகம் நடிப்பு பற்றி.

இறுதியில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஸ்கூல் மாஸ்டர் 'திக்குரிச்சி'யை ரயில்வே ஸ்டேஷனில் கண்டு, வேண்டுமென்றே சிறை பிடித்து, மாஸ்டரின் இழந்த வீட்டிற்கு திரும்ப வரவழைத்து, தான்தான் மாஸ்டரின் சீடன் என்று காட்டிக் கொள்ளாமல் கழுத்தில் அங்கவஸ்திரத்துடன் வேட்டி சட்டை அணிந்து, 'இது நம் வீடுதான்' என்று திகைத்து நிற்கும் மாஸ்டர் தம்பதிகளை மிரட்டுவது போல பாவனை செய்து, சொந்தக் குரலில் மலையாள மொழியை அவ்வளவு அழகாகப் பேசி கலக்கி விடுவார் நடிப்பின் ஆசான்.
'திக்குரிச்சி'யிடம் 'போலாம்' என்று சொன்னவுடன் அவரும் வெளிக் கிளம்ப 'அவிடல்லா' என்று மிரட்டி 'Sit down' என்று சேரில் அமர வைத்து அவர் கையில் ஒரு பேப்பர் தந்து
'இனி ஈ வீடு விட்டுப் போவில்லன்னு எழுதணும்'
என்பார் படுகம்பீரமாக பின்னே கைகள் கட்டியபடி. 'திக்குரிச்சி' சுகுமாரன் நாயர் எழுத பேனா தேடியவுடன்,
'எந்தா...பேனா இல்லே ஹேய்! வல்லிய ஸ்கூல் மாஸ்டர்! (என்ன ஒரு நக்கல்!) ஒரு பேனா இல்லா. ம்...என்ட பேனா'
என்று மாஸ்டர் சிறு வயதில் தனக்கு ஞாபகார்த்தமாகக் கொடுத்த பழைய பேனாவை அவரிடம் நீட்டுவார்.
பின்,
'எழுதணும்... ஈ பேனா வச்சோடு .(என்ன அழகான எக்ஸ்ப்ரெஷன்) எண்ட ஓர்மைக்காயிது கலையாது சூச்சிக்கணும்'
(தப்பாய் இருந்தால் எல்லோரும் ஷமிக்கணும். ஞான் மலையாளம் அறியில்லா.)
என்று அந்தப் பேனாவை தன்னிடம் தரும் போது மாஸ்டர் சொன்ன அதே வார்த்தைகளை அவரிடம் சொல்வார்.
அதை வைத்து மாஸ்டர் அது தன்னுடைய மாணவன் ஜோனி என்று தெரிந்து எல்லையற்ற பாசத்தில் நடிகர் திலகத்தைக் கட்டிப் பிடித்து ஆனந்தப்பட, நடிகர் திலகமும் அது 'தான்'தான் என்பதை அமைதியாக தலையாட்டுதல் மூலம் கண்கள் கலங்கிய நிலையில் உணர்த்தி கொஞ்சமாக அழுதபடி மாஸ்டரை தழுவிக் கொள்வாரே!
என்ன உணர்ச்சிமயமான ஒரு காட்சி!
நடிகர் திலகம் ஏற்ற இறக்கங்களுடன் தந்து சொந்தக் குரலிலேயே மலையாளம் பறையும் போது மெய் சிலிர்த்துப் போகிறது. ரொம்ப ஆச்சர்யமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.
இப்போது நான் மேலே தந்துள்ள 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களின் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பாருங்கள். உருவ வித்தியாசத்தை முதலில் உணரலாம். பின் ஒரே காட்சியில் நடிகர் திலகம் இரு மொழிகளிலும் தரும் முக பாவனைகளிலும் வித்யாசம் உணரலாம்.
இதுவல்லாமல் ஜெமினி 'ஸ்கூல் மாஸ்டரா'க நடிக்க, அவருடன் சௌகார் இணைய, தமிழில் மீண்டும் 'ஸ்கூல் மாஸ்டர்' தயாராகி 1973 ல் வெளிவந்தது.

'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ'
'தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே'
போன்ற காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்கள்.
இந்தி, மலையாளம், கன்னட 'ஸ்கூல் மாஸ்டர்' களில் நடிகர் திலகம் ஏற்றிருந்த கௌரவ ரோலை தமிழில் நடித்திருந்தவர் முத்துராமன்.
இதே 'ஸ்கூல் மாஸ்டர்' பெயரில் விஷ்ணுவர்த்தன், சுஹாசினி, அவினாஷ் நடித்து கன்னடத்தில் 2010 ல் இன்னொரு படம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
அப்பாடி!
Last edited by vasudevan31355; 4th November 2015 at 09:08 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
madhu thanked for this post
-
4th November 2015, 09:14 AM
#1340
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks