-
6th November 2015, 11:23 PM
#1421
Junior Member
Diamond Hubber
தகவலுக்கு நன்றி
சின்னக்கண்ணன் சார்
rajeshkrvsir
-
6th November 2015 11:23 PM
# ADS
Circuit advertisement
-
6th November 2015, 11:26 PM
#1422
Junior Member
Diamond Hubber
இளையராஜாவுக்காகவும்
பாலுவுக்காகவும்...
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்
பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
***
ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப்போல கண்டானங்கே மொட்டுப்போல ரோசா
பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு
சொன்னான் அவன் லேசா
ஆண் : ஹஹ்ஹஹ்ஹா
பெண் : காணாதத கண்டா அப்போ ஆனானய்யா பாஸா
ஆண் : என்னாச்சு...இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு
பெண் : அட வாய்யா மச்சானே...
யோகம் இப்போ உண்டாச்சு...
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
பெண் : மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
***
பெண் குழு : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டிப் பார்க்கும் ஆவாரம்பூ வெட்கத்தோடு ஓட...
ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட
பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்
ஆண் : அட வாய்யா ராசாவே
அய்யா இப்போ உன் நேரம்
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
ஆண் : அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்
பெண் : அத அடகு வைக்காம
காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா
ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில்
விழுந்ததிந்த வேளை
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2015, 08:04 AM
#1423
Senior Member
Senior Hubber
ஜெயசந்திரன் குரலில் பதிவு செய்து பின் ஏனோ மெட்டு பிடித்து போய் தானே ஜானகியுடன் பாடிவிட்டார் ராஜா
இதோ ஜெயசந்திரன் குரலில் வள்ளி வள்ளி என வந்தான். ஜெயசந்திரன் குரலிலேயே இருந்திருக்கலாம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2015, 08:28 AM
#1424
Senior Member
Seasoned Hubber
ராஜேஷ்
ஜெயச்சந்திரன் சிறந்த பாடகர். அதுவும் என்னைப் பொறுத்த மட்டில் ஜேசுதாஸை விட எனக்கு ஜெயச்சந்திரன் குரல், அதிலுள்ள உச்சரிப்பு சுத்தம், இவையெல்லாம் மிகவும் பிடித்தமானவை.
ஆனால் மேலே தெய்வவாக்கு பாடலை ஜெயச்சந்திரன் பாடியதைக் கேட்ட பொழுது இளையராஜா செய்தது சரியென்றே படுகிறது. ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாடலைப் பொறுத்த மட்டில் சங்கீத அம்சம் தான் தூக்கலாகத் தெரிகிறதே தவிர, அந்தப் பாடலுக்குரிய ஜீவன் சற்று குறைவு தான். இளையராஜா பாடிய பாடலைக் கேட்காமல் இருந்திருந்தால் தாங்கள் கூறியது போல் ஜெயச்சந்திரன் பாடியது சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் எப்படிப் பாடினாலும், இந்தப் பாட்டில் இளையராஜாவின் குரலில் இருக்கும் அந்த ஜீவன், தராசை அவர் பக்கம் சாய்ந்து நிறுத்துகிறது.
இது என் தனிப்பட்ட அபிப்ராயம்
Last edited by RAGHAVENDRA; 7th November 2015 at 08:31 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2015, 08:45 AM
#1425
Senior Member
Seasoned Hubber
மிகவும் அரிதான பாடல்கள் அடங்கிய நெடுந்தகடு உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது. அதனுடைய நிழற்படம் இதோ நம் பார்வைக்கு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th November 2015, 09:41 AM
#1426
Senior Member
Diamond Hubber
சின்னா! செந்தில்வேல்,
கன்னட மஞ்சுளா 'பப்ளிமாஸ்' என்று ரசிகர்களால் போற்றிக் கொண்டாடப்பட்டவர். நல்ல ரவுண்டான அழகான குழந்தை போன்ற முக அமைப்பு உடையவர். ஹோனெனஹள்ளி என்ற ஊரில் 1951-ல் பிறந்தவர். இவருடைய தந்தை ஷிவண்ணா ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இயக்குனர் அமிர்தத்தை மணந்த இவருக்கு அபிஷேக் என்ற மகன் உண்டு. அபிநயா என்று தத்தெடுத்து வளர்த்த பெண்ணும் உண்டு.
தன்னுடைய 14-அவது வயதில் நாடகத்தின் மூலம் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் மஞ்சுளா. பின் 'மனே கட்டி நோடு' என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகம். ஒரு சிறு ரோலில். பின் 'யாரா சாக்ஷி' என்ற படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.
ராஜ்குமார், விஷ்ணுவர்தன், சங்கர்நாக், ஸ்ரீநாத் போன்ற பிரபலங்களுடன் கதாநாயகியாக பல படங்கள். இதில் ஸ்ரீநாத், மஞ்சுளா ஜோடி மட்டும் 35 படங்கள். சம்பதிகே சவால், எரடு கனசு, சீதாராமு, ஸோசே தண்டா சௌபாக்கியா, கிட்டு பிட்டு (விஷ்ணு, துவாரகீஷ்) முகன சேடு, மரியாதா ஹாடு, மங்கு திம்மா, பலே ஹுடுகா, பட்டனக்கே பந்த பத்னியரு போன்ற ஹிட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளையும் பெற்று இறுதியில் டிப்ரெஷன் தாளாமல் கோழையாய் தற்கொலை செய்து கொண்ட பாவப்பட்ட நடிகை. ஸ்டவ் விபத்தில் இவர் இறந்ததாகவும் செய்தி உண்டு. உடல் எடை கூடியதின் உபாதை காரணமாக தற்கொலை முடிவெடுத்தார் என்று சொல்வோரும் உண்டு.
ராஜ்குமாருடன் 'சம்பதிகே சவால்' படத்தில் மஞ்சுளா. இந்தப்படம்தான் செந்தில்வேல் தம்பி கேட்ட புது வெள்ளம் படத்தின் கன்னட ஆக்கம். தமிழில் சிவக்குமாரின் பாத்திரம் ராஜ்குமாருக்கு. கன்னடத்திலும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி மஞ்சுளாதான். கன்னடம் முதலில் (1974). தமிழ் பின்னால் (1975) என்.வி.ஆர் பிக்சர்ஸ் கன்னட உரிமையை வாங்கி கே.விஜயன் இயக்கத்தில் 'புது வெள்ள'த்தை விட்டது. படம் அமோக வெற்றி.
படமும் ஜோர். பாடல்கள் சுசீலாம்மா, எம்.பி.ஸ்ரீநிவாசன் கூட்டணியால் எம்பிக் குதித்து 'துளித்துளி'யாய்க் கீழே விழாமல் எட்ட முடியா உயரத்திற்குச் சென்றது. சிவக்குமார் 'எருமை அண்ணாச்சி... நம்ம பொறுமை என்னாச்சி?' என்று பாடகர் திலகத்தின் குரலில் பாடல் ஒன்றை எருமை மீது அமர்ந்து பாடி வருவார். கன்னடத்திலும் இது போல ராஜ்குமாருக்குப் பாடல் உண்டு. ஆனால் கன்னடத்தில் இசை நமக்கெல்லாம் தொடுவதென்ன தென்றலோ தந்த ஜி.கே.வெங்கடேஷ். இந்தப் படத்திலும் அவருக்குத் துணையாக நம் இளையராஜாவின் பங்குண்டு.
கன்னடத்தில் 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி'
'மயூரா' என்ற ராஜ்குமாரின் பிரம்மாண்டமான கன்னட படத்தில் மஞ்சுளா ஹீரோயின்
'இரடு கனசு' படத்தில் ராஜ்குமாருக்கு இரு ஜோடிகள். ஒன்று மஞ்சுளா, இன்னொன்று நேற்றைய விவாத கல்பனா.
'சீதா ராமு' படத்தில். சங்கர் நாக் இந்தப் படத்தில் ஹீரோ
'பெஸுகே' என்ற கன்னடப்படத்தில் ஸ்ரீநாத்துடன் மஞ்சுளா
'குருசிஷ்யா' படத்தில் விஷ்ணுவர்த்தனுடன்
சங்கர் நாக்குடன் மஞ்சுளா
'தோட்ட ராமுடு' படத்தில் சலம் என்ற நடிகருடன் மஞ்சுளா. 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடலின் சாயலில் இருவருக்கும் ஒரு டூயட் உண்டு.
Last edited by vasudevan31355; 7th November 2015 at 10:34 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
7th November 2015, 10:21 AM
#1427
Junior Member
Seasoned Hubber
Namma Neyveliarukku Manjula endra perai kettale alathi Inbam than. Ennama details vanthu vizhuthu. Mr CK and
Mr Senthilvel ithu pothuma allathu ennum konjam venuma.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th November 2015, 10:32 AM
#1428
Senior Member
Diamond Hubber
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
குறுந்தொடர் 4
கர்ணனின் 'கங்கா'
திருடனாய் இருந்து பின் திருந்தி வாழும் தந்தை மேஜர் வளர்க்கும் வீர மகன் ஜெய் குடி, பெண் போதையில் மூழ்கிக் கிடக்க, மேஜரை அவருடைய பழைய விரோதிகள் வில்லன் அசோகன், கண்ணன், ஓ.ஏ.கே தேவர், ராமதாஸ் குரூப் திரும்ப திருடனாக்க முயற்சிக்க, மேஜர் மறுக்க, நாலு பக்கமும் குதிரைகளில் மேஜரின் கை கால்களைக் கட்டி திசைக்கு ஒரு பக்கமாக இழுத்து அவரைத் துடிக்க துடிக்க கொலை செய்கின்றனர் வில்லன் கூட்டம்.
அப்புறம் என்ன? பழி வாங்கல்தான். மகன் ஜெய் தந்தையைக் கொன்றவர்களை ஒவ்வொருவராக பழி தீர்த்துக் கொன்று தந்தை மேஜரின் சமாதியில் கொண்டு வந்து போட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் கதாநாயகி ராஜ்கோகிலாவோடு.
படம் முழுக்க குதிரை, ரேக்ளா துரத்தல்கள், 'டுமீல்... டுமீல்' என்று முழங்கும் துப்பாக்கிகள் என்று படம் முழுதும் புழுதி பறக்கும்.கர்ணனின் அசாத்திய உயிரைவிடும் பிரயோஜனமில்லாத உழைப்பு. ஆனால். கல்லா நிறையும். ராஜ்கோகிலாவின் ஆற்றுக் குளியல் இன்றைக்கும் ஆச்சர்ய அதிசயம்தான். சென்ஸார் தாண்டி சாதனை.
ஆனால் அந்த கிராமத்தை, அக்கிரமம் பண்ணும் அசோகனின் கொடூரத்தை, யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் நாய் சுற்றும் தெருக்களை கர்ணனின் காமெரா அமர்க்களமாக படம் பிடித்திருக்கும். பின்னால் இரட்டையர்களின் புழுதி பறக்கும் மியூஸிக்... நிஜமாகவே தெருவில் புழுதி பறக்கும் மியூஸிக் (விஷ்ஷ்.....என்று) அருமை.
மேஜர் குதிரைகளில் கட்டி சாகடிக்கப்படுவது 'கர்ண'கொடூரம். நம் கைகால்கள் பிய்த்துக் கொண்டு போவது போன்ற பயங்கர உணர்வு. ஜெய் மேல் அக்கறை கொண்ட தாய் எஸ்.என்.லட்சுமி. நாகேஷ் படு அறுவை.
ராமகிருஷ்ணன் என்ற ஆஜானுபாகுவான நடிகர் இந்தப் படத்தில் அறிமுகமாகி 'கங்கா' ராமகிருஷ்ணன் ஆனார். கர்ணன் படங்களில் மட்டும் கட்டாயம் இருப்பார்.
படத்தில் ஒரு அட்டகாசமான கிளப் சாங். சங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஹென்றி டேனியல், தாஸ் துணையுடன் புகுந்து விளையாட, ராட்சஸி ரகளை கச்சேரி நடத்துவார். அப்போது மிகவும் ஹிட். கச்சேரி மேடைகளில் கூட ஈஸ்வரி இப்பாடலைப் பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏனோ தானோ பாடல் போலத் தோன்றும். ஆனால் கில்லியடிக்கும்.
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
சி.ஐ.டி சகுந்தலாவின் கையில் இரண்டு பெரிய கர்சிப் துணிகளுடன் பாங்க்ரா டான்ஸ் டைப் கவர்ச்சி ஆட்டம். ஓ.ஏ.கே தேவரின் முறைத்த, வெறித்த பார்வை, 'கௌபாய்' ஜெயசங்கரின் உஷார் பார்வை, அங்கங்கே நிற்கும் கொள்ளைக் காரர்களின் கழுகுப் பார்வை, (எல்லோர் வாயிலும் கட்டை சுருட்டு) சுழன்றடிக்கும் கர்ணனின் காமெரா, அதை விட கண்ணதாசனின் சிறப்பான போதை வரிகள்.
'மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு'
அட்டகாசமான வரிகள். சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற் மாதிரி.
'வேகம் வர மோதிப் பார்க்கலாம்'
'பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்'
இதற்கு அர்த்தம் எப்படிக் கூற முடியும்?
'சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது'
அடேயப்பா! உச்சம் தொட்ட வரிகள்.
'கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்'
அருமை! ஆட்டம் முடிந்தவுடன் அம்மாவைக் கேட்கணுமாம். 'கோட்டையும், கோபுரமும் என்னய்யா பெரிய அழகு! என்னை விடவா?'
'நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்'
'செத்துப் போகும் வீரனுக்கல்லா நான். நாளை வரை வாழக் கூடிய வீரனாக இருக்கணும் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள'
'ரகளை' ராட்சஸி.
பொறக்கணும்பா! இன்னொருத்தி பொறக்கணும். நெத்தியில் அடித்த மாதிரி வார்த்தைகள் வந்து விழும்.
அதுவும்
பதம் பதம் இது பரம பதம்'
இருக்கிறதே. அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப அதையே கேட்கத் துடிக்கும் மனசு. 'பதம்' முடிந்தவுடன் பாம்பு சீறுவது போல் ஒரு 'ஸ்' 'ஸ்' சத்தம் வரும் பாருங்கள்!
'தேடுங்கள் சிவந்த கண்ணோடு' முடித்துவிட்டு ஒரு 'யா' அப்படியே வெட்டுமய்யா நம்மளை. கூச்ச நாச்சம், சபை நடுக்கம் எதுவும் இருக்காது. அழுத்தம் திருத்தமாக கருத்துக்கள் நம் நெஞ்சில் ஊன்றப்பட்டு விடும்.
'ஹோய்னா... ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்' திடீர்க் கலக்கல்.
என்ன பாடகி! என்ன பாடகி! ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அரக்கியைத் தவிர வேறு யார்? கண்ணியத்துக்கு 'அவர்' என்றால் கலாட்டாவுக்கு 'இவர'ல்லவோ!
உலகம் உள்ளமட்டும் வாழட்டும் இந்த 'கலாட்டா கழுகு'.
இனி பாடலின் முழு வரிகள்.
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா
கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்
கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்
பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்
ஸ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா
சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது
செண்டு நடுவில் வண்டு அமர்ந்து
ஆடைகளை மூடி வைத்தது
மாது என்னை பூவை என்று
சொன்ன சொல்லை
மதுவுடன் பாருங்கள் (மது அண்ணாவுடனா!)
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு யா
கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்
ஸ் ஹா ஸ் ஹா ஹா ஹா ஹா
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
Last edited by vasudevan31355; 7th November 2015 at 10:51 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
7th November 2015, 11:02 AM
#1429
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015, 11:12 AM
#1430
Senior Member
Senior Hubber
அதுவும்
பதம் பதம் இது பரம பதம்'
இருக்கிறதே. அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப அதையே கேட்கத் துடிக்கும் மனசு. 'பதம்' முடிந்தவுடன் பாம்பு சீறுவது போல் ஒரு 'ஸ்' 'ஸ்' சத்தம் வரும் பாருங்கள்// நைஸ் வாசு..இந்தப் பாட் ரொம்ப நாள் முன்னால் கி.த முப்பது வருடம் முன் கேட்டது போல் நினைவு.. பட்..எதிரியைக் கட்டிப்பிடிக்கறேன்னுசொல்லிவிட்டு கடைசியில் ஜெய்யையே கட்டி ப்பிடிக்கிறார் பாருங்கள் சி.ஐ.டி.சகுந்தலா அது நல்ல ட்விஸ்ட் (படம் பார்க்காத என்னைப் போன்றோருக்கு)
ஆமா இதை எழுதறதுக்காக மறுபடி படத்தைப் பார்த்தீஙக்ளா என்ன.. பட் வாஸ்ஸூ..இந்தப் பாட்டுக்கு நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருக்கலாம்.. சிஐடியும் சரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் சரி சகிக்கலை..
Bookmarks