-
22nd November 2015, 04:24 PM
#1661
Senior Member
Diamond Hubber
'ஹச்சோ! ஸாரி! மறந்து போட்டுட்டேன் போல இருக்கு... இப்போ மாத்திடறேன்' ன்னு சொல்லுவீங்க.
உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் நானே .....ஹி...ஹி
சின்னா! 'you tube' ல் பாடலுக்கான url காப்பி பண்ணும்போது இரண்டு மூன்று தடவைக்கு மேல் மறுபடி மறுபடி காப்பி பண்ணி பின் நமது திரியில் பேஸ்ட் செய்யுங்கள். அபோது இது போன்ற பிரச்னை வராது.
Last edited by vasudevan31355; 22nd November 2015 at 04:28 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd November 2015 04:24 PM
# ADS
Circuit advertisement
-
22nd November 2015, 04:27 PM
#1662
Senior Member
Diamond Hubber
//பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.//
முதல்ல அப்படிதான் தெரியும் சின்னா! ரெண்டு மூணு தரம் 3 குதிரைகளையும்
பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். தானாகப் பிடித்துப் போகும். ரொம்ப முக்கியம் குதிரைகளைப் பார்க்கக் கூடாது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd November 2015, 04:29 PM
#1663
Senior Member
Diamond Hubber
பதை பதைக்க மாத்தியாச்சா.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 04:30 PM
#1664
Senior Member
Senior Hubber
Sorry maathiyaach..\\
தங்க நிறம் இதழ் செம்பவளம்
காணாத போது நெஞ்சம்கனாக்கண்டு வாடும்
கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும்
கண்மணீயே என் விண்ணமுதே இது பெண்மையின் தன்மையன்றோ..
போடாத பாட் தானே.. அருமை மகள் அபிராமி பிபிஎஸ் பிஎஸ்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 04:37 PM
#1665
Senior Member
Senior Hubber
முதல்ல அப்படிதான் தெரியும் சின்னா! ரெண்டு மூணு தரம் 3 குதிரைகளையும் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். தானாகப் பிடித்துப் போகும். ரொம்ப முக்கியம் குதிரைகளைப் பார்க்கக் கூடாது.// குதிரை தானேங்க நல்லா இருக்கு..
சொன்னாப்பல ஹச்சோ பாக்கலை தான்
-
22nd November 2015, 04:44 PM
#1666
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
'ஹச்சோ! ஸாரி! மறந்து போட்டுட்டேன் போல இருக்கு... இப்போ மாத்திடறேன்' ன்னு சொல்லுவீங்க.

உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் நானே .....ஹி...ஹி
சின்னா! 'you tube' ல் பாடலுக்கான url காப்பி பண்ணும்போது இரண்டு மூன்று தடவைக்கு மேல் மறுபடி மறுபடி காப்பி பண்ணி பின் நமது திரியில் பேஸ்ட் செய்யுங்கள். அபோது இது போன்ற பிரச்னை வராது.
ஷ்யூர் வாசு வில் டூ தட்.
அடுத்து என்ன பாலாபாட்.. நானூறு பூக்கள்லா.. கர்ணன் ஜெயல்டசுமி பாட் போட்டீர்.. ஃபடாபட் பாட் போடுமேன்..
-
22nd November 2015, 04:47 PM
#1667
Senior Member
Seasoned Hubber
com.jpg)
குழந்தைக்குப் பாலூட்டுவார்கள், சோறூட்டுவார்கள்.. பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். நுங்கு உண்ண ஒரு குழந்தையைக் கெஞ்சும் பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அதற்கு ஒரு பாட்டு.. அதிலும் பாடுபவர் ... நமது ராட்சசி ஈஸ்வரி ...
என்ன ஒரு இனிமையான பாடல்.. மிகச் சிலரே அறிந்திருக்கக் கூடிய அபூர்வமான பாடல்..
கார்த்திகை தீபம்.. எல்.ஆர். ஈஸ்வரியின் புகழ்க் கிரீடத்தில் மகுடம்.. பார்க்காத உலகம் பழகாத இதயம் என அருமையான டூயட்டும் இப்படத்தின் சிறப்பிற்கு சான்று. அது மட்டுமின்றி பாடகர் திலகம் மட்டும் இசையரசி இருவருமே தனித்தனியாக பாடிய எண்ணப்பறவை சிறகடிக்கும் பாடல் இடம் பெற்ற படம்...
படம் வெண்ணிற ஆடையோடு வெளிவந்தது.. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்கிற அனுமதியோடு...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd November 2015, 08:07 PM
#1668
Senior Member
Diamond Hubber
சின்னா!
பாரதியின் குரலில் அமெச்சூர்த்தனம் தெரிந்தாலும் இன்றுவரை நம்மை அப்படியே வசியம் செய்த பாடல். ஒரு மாதிரியான, மாதுரி, வசந்தா, கௌசல்யா இவர்கள் குரல்களையெல்லாம் கலந்து கட்டியமாதிரி ஒரு குரல்.
'மூடிவைத்த மனதினுள்ளே
மோதும் இன்ப நினைவிலே'
என்று இரண்டாவது சரணத்தில் அவர் பாடும்போது கிறங்காத மனமும் உண்டா?
'வேண்டுமென்ற அர்த்தமின்றி
வேறு காண முடியுமா'
என்று அடுத்த அடிகளை அவர் பாடுவதும், அதற்கான அழகான அர்த்தமும் அமர்க்களம்தானே?
இன்னொன்று
'முடியுமா' என்று முடிக்கும் போது பாரதி டோட்டலாக நம்மை 'ஸ்வாஹா' செய்து விடுவார். கொஞ்சலும், கெஞ்சலும், நிதர்சனமான உண்மையுமாக அந்த வரி எப்போதுமே காதில் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவும் முடிவெழுத்து 'மா' உச்சரிப்பு மறக்கவே இயலாது.
பாடகர் திலகத்தைப் பற்றி இந்தப் பாட்டில் கூற வேண்டுமானால் விவேக் சொல்வது போல 'அது வேற டிபார்ட்மெண்ட்'. கை ஊறுது. வேண்டாம். பதிவு நீண்டிடும். இத்தோட முடிச்சுக்கிறேன் சிநேகிதரே.
ஆனா ஒன்னு. இன்னா மாதிரி பாட்டைப் போட்டுட்டு ஒத்த வரியில முடிச்சுட்டீரே! இதெல்லாம் நியாயமா ராசா? உமக்கு எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தே தீரணும்.
Last edited by vasudevan31355; 22nd November 2015 at 08:10 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd November 2015, 08:44 PM
#1669
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
பி.எம்.பார்க்கவும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 09:01 PM
#1670
Senior Member
Diamond Hubber
சின்னா!
ஜெய், பாரதி ஜோடியாய் நடித்த கீதா சித்ராவின் 'உனக்கும், எனக்கும்' படத்தில்
'சுகம்
என்ன சுகம்
என்ன சுகம்
தாகம்... அது பருவத்தின் ஒருவகை ராகம்
மோகம்... அது பிரிந்தது ஒருவித வேகம்'
என்ற அதியற்புதமான பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
ஆஹா! செமையான மைண்ட் வாய்ஸ் பாட்டு. பாரதி வாயசக்காவிட்டாலும் அப்படியே பாரதிக்கு தோதாக அவருடைய குரல் போலவே ஒலிக்கும்.
'மெய்யும் மெய்யும் கலந்தது
மையும் சாந்தும் கரைந்தது
என்ன சுகம்'
பாடல் சுகம்....பாடகி குரல் சுகமோ சுகம்...'மெல்லிசை மாமணி' வி.குமாரின் அழகான மெல்லிசை சுகமோ சுகமோ சுகம். பாரதி அப்ஸரசாய் சுகம். ஆலங்குடி சோமுவின் பாடல் வரிகள் தனி சுகம்.
உங்களுக்கும், எனக்கும் மட்டும் அல்ல ஊரிலுள்ள எல்லோருக்கும் சுகம் தரும் ஆனந்தப் பாடல். 1972லேயே இப்படி ஒரு அசத்தலான பாடலை கொடுத்த குமாரின் திறமை அசாத்தியமானது. பாலாவின் தொடர் முடிந்ததும் குமார் இசையைத்தான் எடுக்கப் போகிறேன்.
சொர்ணா என்ற சொர்ணக் கருவூலமாய் என் எண்ணங்களில் என்றும் வலம் வரும் வளமையான பாடகியின் கல்கண்டு குரலுக்காகவே லட்சம் முறை இந்தப் பாடலை சுகமாய்க் கேட்டு மகிழலாம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks