-
22nd November 2015, 09:30 PM
#1671
Senior Member
Senior Hubber
//ஆனா ஒன்னு. இன்னா மாதிரி பாட்டைப் போட்டுட்டு ஒத்த வரியில முடிச்சுட்டீரே! இதெல்லாம் நியாயமா ராசா? உமக்கு எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தே தீரணும்.// வாஸ்ஸூ தப்பு தான் ஒத்துக்கறேன்.. ஆனா ஏதாவ்து பாட் போட்டுட்டு எழுதலாம்னு பார்த்தா நீர் எழுதியிருப்பீரோன்னு நினைக்கற்ச்சயே மனசுக்குள் ஒதறலா இருக்கு.. அதான்.. அப்படியே விட்டுட்டேன்..அதான் நீர் இப்போ அலசிட்ட்டீரே
ஆனா எப்படி ஓய் உனக்கும் எனக்கும் நினைத்தீர்.. நானும் அந்தப் பாட் - நீர் போட்ட தாகம் இல்லை - பாரதி ஜெய்யைக் கேலி செய்து பாடும் பாடல் கேட்டு சரி சுமார் ரகம் தான் என விட்டு விட்டு அப்புறம் கிக்கு கொடுக்குது ரம் பாட்டையும் கேட்டுபுட்டு சே டூயட்டே இல்லையே என நொந்து ( ஒரே வீடியோல்ல நாலு பாட் டிஎம் எஸ் புகழ் வாழ்க உனக்கும் எனக்கும்னு கொடுத்திருந்தாக) பின் தான் தங்க நிலவே பாட் கிடைச்சு அதைப் போட்டேனாக்கும்..
இங்கிட்டுவந்தா தாகம் பாட்.. சூப்பர் வெரி நைஸ் தாங்க்ஸ்லு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015 09:30 PM
# ADS
Circuit advertisement
-
22nd November 2015, 10:02 PM
#1672
Senior Member
Senior Hubber
ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகன் போகையிலே
மாமன் வந்தான் பின்னாடி அம்மாடி அவன்மனசு வந்தது முன்னாடி
எப்போதும் சிலோனில் கேட்ட பாடல்தான்..ஒரு தடவை வாஸ்ஸூ போட்டதாக நினைவு..ஆனால் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..
இப்ப பார்த்தா நம்ம டாபிகல் பாரதி..
இப்படி ட்ரஸ் போட்டுக்கினு ஸ்ப்ரிங்காட்டம் குதிக்கணும்னு யார் சொல்லியிருப்பாங்க
எனி டைம் கேட்கபிள் பாட்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 10:27 PM
#1673
Senior Member
Senior Hubber
மேலும் மேலும் இது வளரட்டும் வளர்ந்தா தெய்வச் செயல் தானே..
படத்துல யானை புலி சிங்கம்லாம் இருக்கு படம் எப்படி இருக்கும்..இங்க மாடாட்டம் பாரதி முத்தை முத்தறார் டைப்போ முட்டறார்..
மடியிலே வந்தகொடியிலே இன்ப மலர்கள் நூறு வரவேண்டும்..ம்ம்
விழியிலே மணி விழியிலே எந்தன் முகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் (வீட்ல கண்ணாடி வாங்க மாட்டாங்க போலிருக்கு)
பாரதிக்குப்புடவை பாந்தமா இருக்கு சர்ருவ விட ( நாராயண நாராயண )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 10:35 PM
#1674
Senior Member
Senior Hubber
எங்கு பார்த்தாலும் புதுமை புதுமை
என்ன தான் இந்த இளமை இளமை..
பாரதியோட காதில இருக்கற மாட்டல் தோடு இருக்கே அது இப்பவும் ஃபேஷன் தானாக்கும்..
கொஞ்சம் ப்ரோஸ் ஆட்டம் பாடினாலும் பாடல் நன்னாத் தான் இருக்கு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2015, 09:59 AM
#1675
Senior Member
Diamond Hubber
சின்னா!
பாரதி பாடல்களா போட்டு கலக்குறீர். சபாஷ்! நீடூழி வாழ்க!
பாரதியைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இதற்கே நடிப்பில் அவ்வளவு எல்லாம் கெட்டி அல்ல. அப்போது அழகான முகத்தோற்றமும், அளவான உடல் தோற்றமும் கொண்ட மிக சொற்பமான நடிகைகளில் பாரதிதான் முதன்மையானவர்.
சரி! பாரதி புகழ் பாடுவதை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு 'தெய்வச் செயல்' படத்தின் இன்னொரு பாடலைப் பார்க்கலாம். அப்புறம் பாரதியை கண்டிப்பாகத் தொடரலாம்.
'தெய்வச் செயல்' படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாகவே இருக்கும். முத்துவும் நன்றாக 'ரிச்'சாக இருப்பார். இந்தப் படத்திலிருந்தே தேவர் பலகாட்சிகளை எடுத்து 'நல்ல நேரம்' படத்தில் உபயோகப்படுத்தி இருப்பார்.
ஒரிஜினல் விலங்குகளை நடிக்க வைத்திருப்பார் தேவர். இதில் இன்னும் வியப்பான விஷயம் காண்டாமிருகத்தைக் கூட சில காட்சிகளில் வெறுமனே காட்டாமல் அதற்கு முக்கியத்துவம் தந்திருப்பார்.
இந்த விலங்குகள் எல்லாம் அப்போது பிரபலமாய் இருந்த 'ஜெமினி சர்க்கஸ்' என்ற சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த விலங்குகள்.
'மேஜர்'தான் படத்தில் விலங்குகளின் காவலர். அவருக்கு விலங்குகள் மத்தியில் ஒரு மைண்ட் வாய்ஸ் சோகப் பாடல் உண்டு. 'பாடகர் திலகம்' பாடுவார். யானைகள், சிங்கம், காண்டா மிருகம், புலி எல்லாம் கண்ணீர் வடிக்கும். ஆனால் மேஜர் பின்னணி தனிப்பாடலுக்கு நடிக்க கொஞ்சம் திணறுவார்.
'பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே'
இதைக் கூட 'யூ டியூபி'ல்
'பழகும் வகையில்' என்பதற்கு பதிலாக 'அழகு மடியில்' என்று தவறாக கொடுத்திருப்பார்கள். (அந்த லட்சணத்தில் பாடலைக் காதில் வாங்குகிறார்கள்)
அதே போல் மேஜருக்கு நேரிடையாக இன்னொரு பாடல் உண்டு. அனைத்து விலங்குகளையும் தடவித் தடவிக் கொடுத்து உருகி உருகி பாடுவார். ஆரம்பத்தில் விலங்குகளுடன் நெருங்கி நடிக்க மேஜர் ரொம்பவும் பயந்தாராம்.
'என் உயிருக்கு யாரும் காவல் இல்லை என்றே உறவு கொண்டீரோ
என் மேலே உயிரை வைத்தீரோ'
இந்தப் படத்திற்கு இசை பி.எஸ்.திவாகர் என்று நினைவு. காட்டுப் பின்னணி இசை அமைப்பதில் கில்லாடி இவர். கன்னடப் படங்கள் பலவற்றிக்கு இசை அமைத்திருக்கிறார். ராகவேந்திரன் சார் உதவ வேண்டும். இவர் தான் சில தேவர் படங்களுக்கு அப்போதெல்லாம் இசை அமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். டைட்டில் இசை பிரமாதமாக இருக்கும். பாலு என்பவர் இப்படத்தின் இயக்குனர்.
தேவர் தயாரித்த 'காட்டு ராணி' படத்திற்கும் திவாகர்தான் மியூசிக்.
திவாகர் இசையமைத்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'காட்டு ராணி' படத்தில் வரும்
காட்டோசையை அப்படியே பிரதிபலிக்கும்
'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே' பாடல்தான்.
Last edited by vasudevan31355; 23rd November 2015 at 10:01 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd November 2015, 10:09 AM
#1676
Senior Member
Diamond Hubber
வாசு ஜி... பதில் போட்டாச்.. சுவர்ணா குமாரின் பாடல்களில் பல உள்ளத்தை அள்ளிச்செல்லுமே... பாலாற்றங்கரை அருகே ஒரு சொர்ண ஓடையும் ஓடட்டும்..
சிக்கா.. தெய்வச்செயல் பார்த்ததில்லையா ? இது இங்கே நல்ல நேரமாகி வடக்கே ஹாத்தி மேரா சாத்தியாகி மீண்டும் இங்கே அன்னை ஓர் ஆலயமாகி அங்கே "மா"வாகி. அரைச்சு அரைச்சு அரைச்சு.... யானை தேய்ஞ்சே போச்சாம்..
தெய்வச்செயலில் இன்னும் டி.எம்.எஸ்ஸின் இரு பாடல்கள் உண்டு. "பழகும் வகையில் பழகிப் பார்த்தால்" மற்றும் "என் உயிருக்கு யாரும் காவல் இல்லையென்றே".... கேட்க சுகமாகவே இருக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2015, 10:10 AM
#1677
Senior Member
Diamond Hubber
ஆஹா... வாசு ஜி... இது திருப்பதியேதா.... சாரி.. டெலிபதியேதான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2015, 10:21 AM
#1678
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வாஸ்ஸூ மதுண்ணா மத்த ரெண்டு பாட்டும் பார்த்தேன் கேட்டேன்..பட் அதை உங்களுக்காக விட்டு விட்டேன்.. கொஞ்சம் அப்புறமா வர்றேன்.. நடிகை பாரதி பற்றி இன்னும் பேச வேண்டியிருக்கு
-
23rd November 2015, 10:33 AM
#1679
Senior Member
Diamond Hubber
சிக்கா....
உங்களைப் பொறுத்தவரை பாரதி என்றால் பார்.. ரதி என்பீர்கள்... வெயிட்டிங்... வந்து பேசுங்க..
மலையாள மழைத்துளிகிலுக்கத்தில் திலீப், நவ்யாவுடன்.....சாரதாவும் பாரதியும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd November 2015, 10:45 AM
#1680
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
தெய்வச்செயல் படத்துக்கு இசை திவாகரே தான். திவாகருக்கு மிகவும் புகழ் தேடித்தந்த படம் நேர்வழி. வாய்மையே வெல்லுமடா பாடல் தான் தமிழ் சினிமாவில் திவாகருக்கு அடையாளம் தந்தது. அதற்குப் பிறகு அவருடைய இசையில் மற்ற பாடல்களும் பிரபலமாகின.
குறிப்பாக நேர்வழியில் இந்த டூயட் சூப்பர்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks