-
8th December 2015, 11:07 PM
#11
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வணக்கம்.
சமீபத்தில் பெய்த அடை/தொடர் /பேய் மழையால் , ஏற்பட்ட மின் தடை/
நிறுத்தம் /துண்டிப்பு , மற்றும், கணிணி பழுது , பராமரிப்பு ஆகிய காரணங்களால்
நமது திரியில் பங்கு கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டது .
இப்பொழுது அனைத்தும் சரியாகிவிட்டது. கடந்த 10 நாட்களாக நண்பர்களுடன்
செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தடை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன்.
கடந்த வாரத்தில் உள்ளூர் நண்பர்களின் அலைபேசி /தொலைபேசி தொடர்புகள்
துண்டிப்பால் நண்பர்களின் நலம் , பாதுகாப்பு குறித்து விசாரிக்க கூட முடியவில்லை.நல்லவேளையாக அனைத்து நண்பர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மதுரை, கோவை, திருப்பூர், பெங்களுரு, திண்டுக்கல் ,நகர நண்பர்கள் சென்னைவாழ் நண்பர்களின் நலம், வீடு, உடைமைகள் , பொருள்கள் பாதுகாப்பு,மழை நிலவரம், வெள்ள சேதம் ஆகியன குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்து விவரங்கள் அறிந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும், சென்னை வாழ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.! ! !
ஆர். லோகநாதன் .
-
8th December 2015 11:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks