-
13th January 2016, 12:45 PM
#241
Senior Member
Seasoned Hubber
Sila chinnathirai secretgal.........
kanavarai pirindhuvitta ramyamaana thogupaalini.......
http://cinema.dinamalar.com/tamil-tv...on-secrets.htm
Nandri; Dinamalar.
-
13th January 2016 12:45 PM
# ADS
Circuit advertisement
-
19th January 2016, 11:19 PM
#242
Moderator
Diamond Hubber
சைக்கோவாக நடிக்க வேண்டும்! -சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி
மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
எந்தமாதிரியான கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியபோது எனக்கு நெகடீவ் ரோல்களாகத்தான் கிடைத்தன. ஆனால் இப்போது இரண்டுவிதமான வேடங்களும் கிடைத்து வருகிறது. என்னைக்கேட்டால் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த வேடம் கதைக்கு முக்கியத்துவமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
சீரியல் டைரக்டர்கள் சொன்னது போலவே நடந்து கொள்கிறார்களா?
முதலில் இந்த மாதிரி கேரக்டர் என்று சொல்லி புக் பண்ணுவார்கள். ஆனால் அதில் சிலசமயங்களில் மாற்றம் ஏற்படும். காரணம், சீரியலின் ரேட்டிங்கைப் பொறுத்து கதையில் அவ்வப்போது திருத்தம் செய்து கொண்டேயிருப்பார்கள். அப்போது அவர்கள் சொன்னது போலவே இல்லாமல் சில சமயங்களில் நம்முடைய கேரக்டரின் தன்மை குறையலாம். அதேசமயம், முதலில் சொன்னதை விட பின்னர் வெயிட்டான ரோலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த விசயத்தில் யாரையும் நிறை-குறை சொல்ல முடியாது.
வில்லியாக நடித்து நேயர்களிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?
அது பலமுறை நடந்திருக்கிறது. எங்காவது ஷாப்பிங் செல்லும்போது சந்திக்கும் பெண்கள், நான் யாரை கொடுமைப்படுத்துவது போன்று நடிக்கிறேனோ அந்த கேரக்டரின் பெயரை குறிப்பிட்டு, எதற்காக அப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள். சிலர் கெட்ட வார்த்தையில் திட்டகூட செய்கிறார்கள்.
மேலும், வம்சம் தொடரில் நான் வில்லனுக்கு ஜோடியாகப்போவது போல் கதை சென்றபோது யாருக்கும் என்னை பிடிக்கவில்லை. ஆனால் பின்னர் அந்த வில்லனை நான் வேண்டாம் என்று சொன்னபோது எனது கேரக்டர் ரீச்சாகி விட்டது. அதேபோல், கேளடி கண்மணியில் தம்பிக்காக தட்டிக்கேட்கும் ஒரு அக்கா வேடத்தில் நடிக்கிறேன். பிரச்சினை செய்பவர்களை அடித்து விடும் அளவுக்கு கொஞ்சம் ஆவேசம் கலந்த வேடமும்கூட. இந்த வேடமும் தற்போது என்னை பேச வைத்துள்ளது.
எந்த மாதிரியான வேடங்களில் உங்களை உங்களுக்கு பிடிக்கும்?
வில்லியாகத்தான் என்னை எனக்கு பிடிக்கும். சீரியல்களில் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்ல பெண். கோபத்தில்கூட நான சூடான வார்த்தை களை பேச மாட்டேன். நேரில் பார்ப்பவர்கள், என்னம்மா நீ சீரியல்ல அப்படி நடிக்கிறே, ஆனா ரொம்ப சாப்ட்டா இருக்கியே என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நிஜத்தில் நான் ரொம்ப சாப்ட்டான பெண். கேமரா முன்பு நடிக்கச் சொல்லும்போது மட்டுமே என்னை முழு வில்லியாக மாற்றிக்கொள்கிறேன்.
மேலும் முந்தானை முடிச்சு சீரியலில் நான் நடித்த பிரேமா என்ற வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு குடும்பத்தை பழிவாங்கும் ரோல். வயதானவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் அந்த குடும்பத்தை எந்த லெவலுக்கு சென்று பழிவாங்குவாள் என்பதுதான் கதையே. அந்த ரோலை நான் ரொம்ப என்சாய் பண்ணி நடித்தேன்.
உங்களை கவர்ந்த வில்லி நடிகை யார்?
தற்போது சந்திரலேகா நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரஸ்ஸிங் சென்ஸ், பாடியை மெயின்டெய்ன் பண்ணுவது என பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பார். அதன்பிறகு தேவிப்ரியா. அவங்களும் டிரஸ், மேக்கப் என முழுசாக தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பார். செல்லமே தொடரில் கலக்கியிருப்பார்.
மேலும், திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த வில்லி வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி லட்டு மாதிரி ஒரு வில்லி வேடம் கிடைத்தால் பின்னி எடுத்து விடுவேன்.
என்னென் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள்?
சைக்கோ மாதிரி, இது வேணும்னா அதுக்காக நான் எந்த லெவலுக்கும் போவேன் என்கிற மாதிரி வேடத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. லூசு மாதிரி நடிக்க ஆசை. இந்த மாதிரி வெரைட்டியாக பண்ணும்போது மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுக்க முடியும்.
எந்தமாதிரி வேடங்களுக்காக ரிகர்சல் எடுத்து கொண்டது உண்டு?
இந்த மாதிரி கேரக்டர் என்பதை டைரக்டர்கள் முன்பே சொல்லி விடுவார்கள். அதனால் அதற்கு ரெடியாக நாங்களும் ஸ்பாட்டுக்கு வருவோம். ஆனால் சினிமாவைப்போன்று முன்பே ரிகர்சல் கொடுப்பதெல்லாம் சீரியலில் கிடையாது. அதற்கு நேரமும் இருக்காது. ஒரு மணி நேரத்தில் இரண்டு சீன் எடுக்க வேண்டுமென்றால் அதை எடுத்த பிறகே விடுவார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டுதான் சீரியல்கள் படமாக்கப்படுகின்றன என்கிறார் கிருத்திகா.
நன்றி: தினமலர்
-
19th January 2016, 11:21 PM
#243
Moderator
Diamond Hubber
வில்லியாக நடிக்கத்தான் பிடிக்கிறது; வந்தனா சொல்கிறார்
பொன்னூஞ்சல் மற்றும் காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் வில்லியாக நடிக்கிறார் வந்தனா. சில தொடர்களில் பாசிட்டிவான கேரக்டர்கள் வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வந்தனா கூறியதாவது:
சின்னத்திரைக்கு வந்தது முதலே நான் வில்லியாகத்தான் நடித்து வருகிறேன். இது நான் விரும்பி செய்ததில்லை. ஆனால் இப்போது வில்லி கேரக்டர்கள்தான் பிடிக்கிறது. அழ வேண்டியதில்லை. ரொம்ப சிரிக்க வேண்டியதில்லை. வில்லித்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தினால் போதும். அதனால்தான் வில்லி வேடங்களை விரும்புகிறேன்.
நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிக்க விருப்பம் இருந்தாலும் நேரம் இல்லை. ஒரே நேரதில் இரண்டு சீரியல்கள், அதன்பிறகு நடன பயிற்சி, நடன நிகழ்ச்சி என்று பிசியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்க வில்லை. என்கிறார் வந்தனா.
நன்றி: தினமலர்
-
19th January 2016, 11:34 PM
#244
Moderator
Diamond Hubber
சீரியலையே நகர்த்தி செல்லும் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும்! - நடிகர் துரைமணி பேட்டி
கல்யாண பரிசு, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, சிவரகசியம், ஆதிரா உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் துரை மணி. ஒரு முழு சீரியலையே நகர்த்தி செல்லக் கூடிய மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய ஆசை என்கிறார் அவர்
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
1993-ல் வெளியான மோகமுள் படத்தில் ஜூனியர் ஹீரோவாக நான் அறிமுகமானேன். அப்போது 3வது படித்தேன். அதன்பிறகு கல்லூரி படிப்பெல்லாம் முடித்த பிறகு இளவரசி, கல்யாண பரிசு சீரியல்களில் வில்லன் வேடம் கிடைத்தது. 2014ல் ஒளிபரப்பான இந்த சீரியல்தான் எனக்கு பெரிய அளவில் ரீச் ஆனது.
இந்த தொடர்களில் பெண்களை கொடுமைப்படுத்தும் வேடங்கள். புளு பிலிம் எடுப்பது. மயக்க மருந்து கொடுத்தாவது அடைய வேண்டும் என்று முயற்சிப்பது போன்று நடித்தேன். குறிப்பாக என்னை அசிங்கப்படுத்தும் பெண்களை பழிவாங்குவது போல் நடித்தேன். அப்படி நடித்த வேடங்கள்தான் எனக்கு பெரிய பெயரை வாங்கித்தந்தன.
அதைப்பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதில் ஒரு அனாதை வேடத்தில் நடித்தேன். கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணமாக அமைந்தது. பின்னர் சிவனின் ரகசியங்களை சொல்லும் சிவரகசியம் சீரியலில் ஒரு நெகடீவ் ரோலில் நடித்தேன். சூனியம், மாந்திரீகம் பண்ணுவது போல் நடித்தேன். அடுத்து கெளசல்யா நடித்த அக்கா சீரியலில் பாசிட்டிவான ஒரு ரோலில் நடித்தேன். பைரவியில் நெகடீவ் ரோல். இப்போது ஆதிரா ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இப்படி பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்ததால் எனக்கு நல்லதொரு எக்ஸ்பீயன்சாக அமைந்து வருகிறது.
ஆதிராவில் உங்கள் ரோல் பற்றி?
ஆதிரா சீரியலில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் 6 பேரின் பிளாஷ்பேக் இப்போது நடக்கிறது. அதில் 2வது பையனான தேவராஜ் என்ற கேரக்டரின் இளமை கால வேடத்தில் நான் நடிக்கிறேன். நான் நடிக்கிற இந்த தேவராஜ்தான் ஆதிராவின் மாமனார். மேலும், ராஜா காலத்தில் இருந்தே பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பொக்கிஷப்பெட்டியை அடைய நாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் படப்பிடிப்பு அனைத்தும் கேரளா, பொள்ளாச்சி காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆக, இந்த சீரியலிலும் எனக்கு நேகடீவ் ரோல்தான் கிடைத்திருக்கிறது.
டைரக்டர்கள் உங்களை வில்லனாகவே பார்ப்பதேன்?
வில்லனாக நடித்த ஒரு சீரியல் ரீச் ஆனால் டைரக்டர்கள் அதே தாட்டில் போகிறார்கள். எனக்கு அதுதான் செட்டாகிறது. அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்கிறேன். மேலும், இப்போது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இல்லாமல் சீரியல்கள் முழுக்க மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. அடிதடி காட்சிகளிலும் நடிக்க வேண்டும். எல்லாமே நானாக இருக்க வேண்டும். இதுவரை நடித்த சீரியல்கள் எனக்கு நல்ல பயிற்சியையும், அனுபவத்தையும் கொடுத்திருப்பதால், இன்னும் என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
உங்கள் நடிப்புக்கு எந்த மாதிரி விமர்சனம் வருகிறது?
ஒருநாள் கோயிலுக்கு சென்றபோது ஒரு பூக்கார பாட்டி, ஏன் அந்த பொண்ணை அப்படி கொடுமைப்படுத்துறே என்று என்னை திட்டினார். அதேசமயம், பலருக்கு இது சீரியல். நாட்டில் நடக்கும் விசயங்களைத்தான் சீரியலாக காட்டுகிறார்கள். கெட்டவன் வேடத்தில் இவர் நடிக்கிறார் என்கிற புரிதலும் உள்ளது. அந்த வகையில் நல்லவனாக நடிப்பதை ரசிப்பது போன்று கெட்டவனாக நடிப்பதையும் ரசிக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்.

மேலும், நான் கலைத்துறைக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பது என் அம்மா சிவகாமிதான். அவர் இல்லையென்றால் நான் நடிகனாகவே ஆகியிருக்க முடியாது. அதேசமயம் என் அம்மா எனது நடிப்பைப்பற்றி இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. ஆனால், மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார். அதை நான் கேட்டிருக்கிறேன். அதுவே எனக்கு பெரிய சந்தோசம். ஆக, என் அம்மாவுக்கு என் நடிப்பு பிடித்திருப்பது தெரிகிறது என்கிறார் துரைமணி.
நன்றி: தினமலர்
-
19th January 2016, 11:43 PM
#245
Moderator
Diamond Hubber
நானே நானா பேசும் மைனா
தியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, ,;நானே நானா பேசும் மைனா,; என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். ,;தினமலர்,; பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு கலகல கலாய் பேட்டி இதோ...
உங்களை பற்றி...
நான் ஒரு பக்கா மதுரை பொண்ணு. வக்போர்டு, அம்பிகா காலேஜ்ல தான் டிகிரி படிச்சேன்.
எப்படி நடிக்க வந்தீங்க ?
நடிக்குற அம்சம் இருக்குன்னு வம்சம் படத்துல இயக்குனர் பாண்டிராஜ் வாய்ப்பு கொடுத்தாரு. அப்புறம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், வெள்ளைக்கார துரை, படங்களில் நடிச்சேன்.
சினிமா டூ டிவி..
முதல்ல ,டிவி; தொடர்ல நடிக்குற ஐடியாவே இல்லை. நடிச்சா ஹீரோயினா தான் நடிக்கணும்னு லட்சியமெல்லாம் இருந்துச்சு. டிவி தொடர்ல நண்பர் ரமணன் தான் நடிக்க வைச்சாரு. அது தான் இன்னிக்கு என்னை ஒரு நல்ல நடிகையா நடிப்பு உலகத்திற்கு கொண்டுவந்திருக்கு.
இனி சினிமால நடிப்பீங்களா ?
என்ன இப்படி கேட்டுபுட்டீங்க, என் ரசிகர்கள் காமெடி கேரக்டர்ல நடிக்க சொல்றாங்க. அடுத்த கோவை சரளா, மனோரமான்னு சொல்லி ஓவரா உசுப்பேத்தி வேற விடுறாங்க. கெத்து கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா நடிப்போம்ல
மதுரை பாஷைல சும்மா பின்றீங்களே..
இதுல என்ன ஆச்சர்யம்? நம்மூர் பேச்சு நமக்கு வராதா என்ன? டிவி தொடர்ல வர என்னோட ,;மைனா,; கேரக்டர் என் அம்மா தான். ஆமா, அவுங்க எப்படி மதுரை பேச்சு பேசுவாங்களோ அதை தான் நான் பேசுறேன். இது மட்டுமில்லை நெல்லை, கோவை, கன்னியாகுமரி என பல ஊர் பாஷைகளும் எனக்கு அத்துப்படி.
நடிக்க கிரீன் சிக்னல் எப்படி ?
என் அப்பா, அம்மா கிரீன் சிக்னல் தான் கொடுத்தாங்க. சொந்தக்காரங்க தான் ரெட் சிக்னல் போட்டாங்க. விண்ணை தாண்டி வந்த மாதிரி, சிக்னலை தாண்டி தான் நடிக்க வந்தேன். இன்னிக்கு சொந்த, பந்தமெல்லாம் என்னை பார்த்து பெருமைப்படுறாங்க
உங்களுக்கு பிடிச்ச காமெடி நடிகை?
கோவை சரளா, ஆரம்பத்துல இவங்க என்ன காமெடி பண்றாங்கனு எல்லாரும் சிரிக்குறாங்கன்னு நினைச்சேன். இப்போ என்னை பார்த்து ரசிகர்கள் ,;கோவை சரளா,;ன்னு சொல்லும் போது தான் புரியுது.
காமெடி மட்டும் தானா..
காமெடி நடிகையா ரசிகர்களை சிரிக்க வைக்குறதுல ஒரு திருப்தி இருக்கு. ஆனால், எந்த கேரக்டர் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும்.
மதுரையும், பொங்கல் விழாவும்
மதுரை, பாரம்பரியத்தை போற்றும் பாசக்காரர்கள் நிறைந்த ஊர்ன்னு பெருமையா சொல்வேன். பொங்கலுக்கு முதல் நாள் விடிய, விடிய கலர் கோலம் போடுவோம். காலங்காத்தால மண் பானையில பொங்கல் வைச்சு சாமி கும்பிடுவோம்
பொங்கல் சபதம்?
புத்தாண்டுக்கு தான் சபதம் எடுப்பாங்க, பொங்கலுக்குமா? பொங்கி வரும் கோபத்தை குறைக்கணும்னு சபதம் எடுத்திருக்கேன்.
அடுத்த ஆண்டு தலைப் பொங்கல் போல...
அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுருச்சா, நிச்சயதார்த்தம் முடிஞ்சது. கல்யாண வேலை நடந்துகிட்டு இருக்கு.
எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை
தனுஷ், சிவகார்த்திகேயன் கூட கலகலன்னு காமெடி கேரக்டர்ல நடிக்கனும்.

உங்கள் கனவு
என் வருங்கால கணவருடன் இணைந்து ஆரம்பித்த, ,;வே பவுண்டேஷன்,; மூலம் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி கொடுத்தோம். எங்களுக்கு தனுஷ் நிதி கொடுத்து உதவினார். இது போல இன்னும் நிறைய சமூக சேவைகள் செய்யணும்.
நன்றி: தினமலர்
-
20th January 2016, 03:23 AM
#246
Junior Member
Newbie Hubber
Not sure where else to post. Maybe someone shared this already.
Balakumaran's out of body experience. Interview and recorded footage.
"Ithellam naan paaka mudiyadhu na, nee paaka mudiyadhadhu neraiye iruku thambi. Naathigam pesum muttal nee. Unnai sulubamaga matramudiyum. Nalai naan irandu kadhal kadhaigalai eluthinaal yennai deivamaai paarpai." 
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th January 2016, 12:45 PM
#247
Senior Member
Seasoned Hubber
IAS veadam kidaithaal sambalam vaangaamalea nadipean.
PRIYANKA
imayam, keaptan TV-yil 3 aandugalaaga nigalchi thogupaalaraaga irundhaar priyanga.
Nandri; Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...s-Priyanka.htm
Last edited by R.Latha; 20th January 2016 at 02:00 PM.
-
20th January 2016, 12:52 PM
#248
Senior Member
Seasoned Hubber
coffee with DD-yil Ilaiyaraja.
isaijaani ilaiyaraja epodhume thani beatigalukku udanpaduvathillai. Adhuvum kuripaaga thanithu peati tharuvadhu aboorvamanathu.Aanaal Ilaiyaraja-vin nadavadikaigalil tharpothu maatrangal earpattullathu.
Nandri. Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...ee-with-DD.htm
Last edited by R.Latha; 20th January 2016 at 01:59 PM.
-
20th January 2016, 01:05 PM
#249
Senior Member
Seasoned Hubber
Aadiyancin comments-ai arindhu nadikirean Nadigar Arnav.
kealadi kanmani seariyalil naayaganaaga nadithu varubavar Nadigar Arnav..Antha thodaril YUGI endra kearaktar makkal mathiyil nandraaga reach aagiyirukkiradhu.
Nandri. Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...says-Arnav.htm
Last edited by R.Latha; 20th January 2016 at 01:58 PM.
-
20th January 2016, 01:13 PM
#250
Senior Member
Seasoned Hubber
chinnathirai nadigar sangathil puthiya kattupaadu amalukku varugiradhu.
chinnathirai nadigar sangathin thalaivaraaga tharpodhu shivan shrinivaas poruppeatrulaar. Kadantha madham nadaipetra thearthalil vetri petradhum, chinnathirai
nadigar sangathirkku PUTHIYA KATTADAM katapadum endra VAAKURUTHIyai ALITHULA AVAR,,,,,,,,,,,,,,,,,,,,,
NANDRI.Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...gar-sangam.htm
Last edited by R.Latha; 20th January 2016 at 01:55 PM.
Bookmarks