-
25th January 2016, 07:32 AM
#2851
Senior Member
Seasoned Hubber
உள்ளங்கையால் வானை மறைக்க முடியாது. தர்ம தேவதையின் தவப்புதல்வன் நடிகர் திலகத்தின் சாதனைகளும் அவ்வாறே. தர்மம் வெல்லும் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் திலகம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே.
நிழற்படம் நன்றி 24.01.2016 தேதியிட்ட தினமலர் வாரமலர்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
25th January 2016 07:32 AM
# ADS
Circuit advertisement
-
25th January 2016, 09:59 AM
#2852
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர்,
சிவாஜியின் ரசிகரான பாலு மகேந்திராவின் சீடரான சிவாஜியின் ரசிகரான பாலாவின் ரசிகனான எனக்கு, சிவாஜி,பாலா இருவரின் ரசிகனான உங்களின் தாரை தப்பட்டை விமரிசனம் மிக சுவையாக இருந்தது.
பாலாவின் படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்களால் அதிக வரவேற்பை பெற வேண்டும் என்ற அவா உள்ளவன் நான். ரஜினி முருகன் என்ற கேவலமான படம் ப்ளாக் பஸ்ட்டர் .
இளைய தலைமுறையும் ,ரசனையில் திருந்தாதது எனக்கு வேதனையே.
நன்றி ராகவேந்தர்,நான் நினைத்ததை எழுத்தில் வடித்ததற்கு.
இந்த பத்து வருடத்தின் சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க சொன்னால் என் தேர்வுகள்.
நான் கடவுள்.- பாலா.
அஞ்சாதே.- மிஸ்கின்.
புது பேட்டை.-செல்வராகவன்.
குற்றம் கடிதல்- பிரம்மா.
ஆடுகளம்- வெற்றி மாறன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th January 2016, 06:00 PM
#2853
Senior Member
Seasoned Hubber
கோபால்
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
தாரை தப்பட்டை... பாலாவின் புகழ்க்கிரீடத்தில் இன்னுமொரு வைரக்கல்.
அதே போல் இளையராஜாவின் 1000வது படம் என்கிற பெருமைக்கும் முழுத்தகுதி வாய்ந்தது.
பல காட்சிகளில் அவருடைய பின்னணி இசை, மெல்லிசை மன்னருக்குப் பிறகு பின்னணி இசையில் அசைக்க முடியாத சக்கரவரத்தியாக விளங்குகிறார் என்பதை நிரூபிக்கிறது.
ஒளிப்பதிவும் படம் முழுதும் கதைப்போக்கை விட்டு விலகாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.
சரத்குமாரின் புதல்வி வரலட்சுமியின் நடிப்பில் இவ்வளவு ஆழமும் ஜீவனும் இருப்பது பாராட்டத்தக்கது. அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
She needs more exposure in Tamil cinema. A talent to be utilised more and more. போடா போடி படத்திலேயே தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நடிகை என்பதை நிரூபித்து விட்டார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th January 2016, 07:03 PM
#2854
Senior Member
Seasoned Hubber
என் தேர்வில் நான் விரும்பும் சில படங்கள் கடந்த சில ஆண்டுகளில்...
நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்...
எங்கேயும் எப்போதும்...
மைனா...
நான் ஈ... தொழில் நுட்பத்திற்காக...
விஸ்வரூபம்...தேவர் மகனிற்குப் பிறகு ஹேராமிற்குப் பிறகு... என் விருப்பத்தில் கமல் படம்...
மேலும் சில உள்ளன... நினைவூட்டிக்கொண்டு சொல்கிறேன்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th January 2016, 07:15 PM
#2855
Junior Member
Platinum Hubber
மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளை செய்துவிட்டேன்..எனது இலக்கு இது..மக்கள் திலகத்தின் பக்தனான என்னை நீங்கள் ஏற்றுகொண்டது..எனக்கு மிகுந்த சந்தோசம்..அந்த பத்தாயிரம் பதிவுகளில் நடிகர்திலகத்தின் பதிவுகளும் அடக்கம்..நன்றி..நண்பர்களே..திரிசூலம் பதிவுகளை என்னால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை..அந்த வருத்தம்தான்..என்னை வாழ்த்திய அனைத்து சிவாஜி பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..நான் சண்டை போட்ட என் அன்பு நண்பன் ரவி சூர்யா..உங்களை என்றும் மறக்க மாட்டேன்..ரவி உனக்கு நடிகர் திலகத்தின் ஆசி என்றும் உண்டு..உன் பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன்..உடல் நிலை சரியில்லாததால் தற்சமயம்..எனது பதிவுகள் இருக்காது..என்பதை தெரிவித்து கொள்கிறேன்..தற்காலிகமாக எனது பதிவுகள் நிருத்திவைக்கபடுகிறது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..
-
Post Thanks / Like - 3 Thanks, 6 Likes
-
25th January 2016, 07:21 PM
#2856
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
25th January 2016, 07:22 PM
#2857
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
-
25th January 2016, 08:31 PM
#2858
Junior Member
Senior Hubber

Originally Posted by
senthilvel
இப்படி அவமானங்களை தாங்கி போலிப்புகழுக்கு ஆசைப்படாமல் தன்னுடைய அசைக்கமுடியாத திறமையின் மீது நம்பிக்கை வைத்து கடைசி வரை உழைத்ததினால் தான் அவருடைய ரசிகர்களாகிய நாம் கடைசி மூச்சு வரை அவருடைய ரசிகர்களாகவே இருந்து அவர் புகழ் பரப்புவதில் பேரானந்தம் அடைகிறோம்
இந்த அசைக்கமுடியாத ரசிகர் படையை அவர் பெற்றிருப்பதே பல நூறு ஆஸ்கர் அவார்டுக்கு சமம்
இன்றும் அவருடைய ரசிகர்கள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக இவருடைய பழைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவும் அலங்காரங்களும் எந்த பலனுமின்றி செலவு செய்வதும் நடிகர்திலகத்தின் புகழுக்கும் உழைப்புக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th January 2016, 09:24 PM
#2859
Junior Member
Devoted Hubber
From Dinamani Kanavu kannigal,
தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’
போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.
டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!
‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’
சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!
நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’
‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’
‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’
‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’
நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.
சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.
‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.
கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.
அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.
‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.
என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.
ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
25th January 2016, 11:08 PM
#2860
Junior Member
Senior Hubber
muhaiyan ammu sir
takecare of your health and comebacksoon your contributions to NADIGARTHILAGAM THREAD IS SOMETHING GREAT AND IMMORTAL.
BLESSINGS
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks