-
18th February 2016, 06:25 PM
#1911
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
இந்தப் பாட்டு கேட்டிருக்கேனான்னு தெரியலை..லிரிக்ஸ் பாத்தேன் பிடிச்சூ..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th February 2016 06:25 PM
# ADS
Circuit advertisement
-
18th February 2016, 06:41 PM
#1912
Junior Member
Diamond Hubber
நீள வண்ண ஆகாயமும்
பசுமையாய் பரந்து விரிந்த மலைப்பிரதேசங்களும் கொண்ட பிரதேசம்.
கரு நீல வண்ணகோட்டும் வெள்ளை பேன்ட்டும் அணிந்து
மன்மதனாய் நம் நடிகர்திலகம்.
சரிந்த அந்த மலைச்சரிவில் மெல்ல இறங்கி ஆகா ஓஓ ஓஓ என்று ஹம்மிங் செய்தபடி வருவது அழகு.அந்த இயற்கையும் நடிகர்திலகம் வாணிஸ்ரீயின் உடையலங்காரமும் கண்களுக்கு விருந்து.வாணிஸ்ரீயும ஹ்ம்மிங
செயதபடி ஸைடைலாக திரும்புவதை காமிராபின்னோக்கி நகர்ந்துஇயற்கையை அள்ளிக்கொண்டு வரும்.
இனியவளே என்று பாடியபடி வருவார் பாருங்கள்.அடேங்கப்பா என்ன ஒரு ஸ்டைலிஷ்மேன்.தோள்களை மெல்ல அசைத்து தலையை ஆட்டியபடி வரும் அழகுக்கு நிகரேது.நடிகர்திலகம் பாடி முடித்ததும் வாணி ஸ்ரீ இனியவனே என்றுதொடங்கும் போது ஒலிக்கும் ட்ரம்ஸ் அடி கலக்கலோ கலக்கல்.
இதழால் உடல் அளந்தாள் என்ற வரிக ளின் போது வரும் இசையும் நடிகர்திலகத்தின் ஆட்டமும் வெகு ஜோர்.ரம்மியமான இயற்கை காட்சிகளின் ஊடே அருமையான ஒரு காதல் பாடலை படம்பிடித்த விதம் அருமை.இயற்கையும் இசையும் நம்மை மெய் மறக்கச் செய்யும்.
ஓ.*ஓ... ஏ... ஆ...
ஆஹா ஆ... ஹா...*
எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
ஓஹோ... ஓஹொஹோ ஹோ
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே*
இனியவளே என்று பாடி வந்தேன்
ம்... ம்... ஆஹா ஹா ஹா ஹா...
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
ஆஹா ஹா ஹா ஹா...
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்*
ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
ஒன்றானவர் வாழ்வில் இன்ப வெள்ளம் என்றாக
துணை தேடி வரும் போது*
கண்ணில் என்ன நாணமோ
குணம் நாட்டில் உருவான*
பெண்மை என்ன தோணுமோ
திரு நாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
திரு நாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
பொன் மாலையில்
பூ மாலையாய்
நெஞ்சில் சூடவோ
சூடவோ
சூடவோ
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாளோ
பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ
நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்
இதழால் உடல் அளந்தால்
இவளோ தன்னை மறந்தாள்
இதழால் உடல் அளந்தால்
இவளோ தன்னை மறந்தாள்
ஏன் என்பதை
நான் சொல்வது
இன்னும் மௌனமேன்
மௌனமேன்
மௌனமேன்
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
ஆ... லாலலலா ஓஹொஹொஹோ
ஒஹொஹோ ஓஹொஹோ...
ஒஹொஹோ ஓஹொஹோ...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th February 2016, 07:48 PM
#1913
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
பிரேமா பாசம் இனிமே தான் போய் பார்க்கணும் மதுண்ணாவ்.. ஆமா ப்ரேமா யாரு
வேற யாரு ? நம்ம ஆஷா கேளுண்ணிதான்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2016, 07:50 PM
#1914
Senior Member
Diamond Hubber
செந்தில்வேல் ஜி...
இனியவளே பாடல் அன்றும் இன்றும் என்றுமே .... கேட்கும்போது எங்கோ மலைச்சாரலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2016, 08:59 PM
#1915
Senior Member
Senior Hubber
நான் மதுண்ணாவை வழி மொழிகிறேன் செந்தில்வேல்..அதுல பாருங்கோ உற்சாகத் துள்ளல் இருக்கே அப்படியே பார்ப்பவரிடம் ஒட்டிக் கொண்டு விடும்..ம்ம்
பாட் போடவேணாம்னு விட்டீங்களா.. ஹிந்தியோட சேர்த்துப் பார்ப்போமா..
Originally Posted by
madhu
செந்தில்வேல் ஜி...
இனியவளே பாடல் அன்றும் இன்றும் என்றுமே .... கேட்கும்போது எங்கோ மலைச்சாரலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th February 2016, 05:53 AM
#1916
Senior Member
Veteran Hubber
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanjakarai ethirthidave vaaLum yendha veNumadi
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th February 2016, 08:00 AM
#1917
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajraj
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanjakarai ethirthidave vaaLum yendha veNumadi
நீலமலைத்திருடன் !!!
வ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th February 2016, 09:49 PM
#1918
Senior Member
Senior Hubber
கொஞ்சம் பழைய மதுரகானம் முதல் பார்ட் பார்த்துக்கினு இருந்தேனா..விட் போன கேக்காத பாட் இருக்கான்னு பார்த்தேனா..இது சிக்கிச்சு..
நெய்வேலி அன்பர் நம் நண்பர் வாசுவின் உரையும்...அந்த்த்தப் பாடலும்.....(இதுல வேற எந்தெந்த வெர்ஷன் எந்தெந்த லாங்க்வேஜ்ல இருக்கு..தமிழ் தெலுகு தவிர)
**
//ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.
என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).
தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி //
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th February 2016, 09:43 AM
#1919
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th February 2016, 11:34 AM
#1920
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
திரையில் மிளிரும் வரிகள் 2: அமுதமும் மோகமுள்ளும்
தி. ஜானகிராமனின் ‘மோகமுள்' நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது இளையராஜா இசையமைத்த ‘சொல்லாயோ வாய் திறந்து' என்ற பாடல் பிரிவின் ஏக்கத்தைப் பாடுகிறது. சண்முகப்பிரியாவின் ரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்துவிட்டார் இசைஞானி. பொதுவாக பக்தியை வெளிப்படுத்தும் பாடலுக்குத்தான் சண்முகப்பிரியாவை எடுத்துக்கொள்வார்கள். அந்த ராகம் பக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்னொரு ராகத்தால் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்களில் காதல் பாடல்கள் சண்முகப்பிரியாவில் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியின் ஒரு வெளிப்பாடுதானே காதலும் காமுமும்.
சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை...
மனத்தை ஊஞ்சலோடு ஒப்பிடும் பாடல் வரிகள் ஏற்கெனவே ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் இடம் பெற்றது. ‘ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்' என்று தன்னைக் கைவிட்ட கதாநாயகியைச் சாடுகிறான் கதாநாயகன். ஆனால் மோகமுள் கதாநாயகியின் மனமும் கதாநாயகனின் மனமும் ஒருவரை ஒருவர் தாலாட்டவே ஊஞ்சலாய் அலைந்து மன்றாடுகின்றன.
வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ். ஜானகியும் மலையாளப் பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாரும் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரான அருண்மொழியும் இப்பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அது இடம் பெறவில்லை.
ஆகாய சூரியன் மேற்கினில் சாய
ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
தாமதம் இனி ஏனோ இருமேனி கூட
அந்தி வரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்
என்று வரும் இன்ப சுகம் ஊன் உருகும் உருகும் தினம்
நாள் முழுதும் ஓர் பொழுதும் உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்.
சொல்லாயோ வாய் திறந்து
அழகு கொட்டிக் கிடக்கும் இளம் பெண் தங்கம்மாவின் கதறலே இவ்வரிகள். வறுமையின் காரணமாகக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவனோ வாயில் சளுவாய் ஒழுக உறங்கிக்கொண்டிருக்கிறான். கதாநாயகன் பாபு ஏற்கெனவே அவளோடு உறவு கொண்டிருந்தாலும், தற்போது அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விலகி நிற்கிறான். அவன் மனமோ யமுனாவை நினைத்து “சொல்லாயோ வாய் திறந்து” எனப் பாடுகிறது.
‘மாலையும் வந்தது மாயன் வாரான்' என்கிறார் பராங்குசநாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார். பிரிந்திருக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையின் எல்லா சிறந்த விஷயங்களுமே துயரத்தையே தருகின்றன. மாயன் வராததால் மாலை வந்ததற்கான அறிகுறிகளாக பசுக்களும் காளையும் அணைந்து நடக்கையில் தோன்றும் மணி ஓசையும் குழலோசையும், மல்லிகை முல்லை மலர்களில் தேனுண்ட வண்டுகளில் ரீங்காரமும் கடல் ஓதத்தின் ஒலியும் பாரங்குசநாயகிக்குப் பிறிவாற்றாமையை மேலிடச் செய்கின்றன.
தங்கம்மாவோ மோகமுள் தைத்துக் கிடக்கிறாள். தூண்டிற் புழுவைப் போல் துடிக்கிறாள். காதலனின் உருவமும் ஞாபகமும் எந்நேரமும் அவள் நினைவில் அப்பிக் கிடக்கின்றன.
நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.
கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.
நானொரு ஆண்டாளோ திருப்பாவை
பாட
ஏழையை விடலாமோ இதுபோல வாட
வெள்ளிநிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்
நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்
ஓர் இதயம் உன்னால் எழுதும் இந்நேரத்தில் கண்ணா உன் மவுனத்தை தவிர்த்து
சொல்லாயோ வாய் திறந்து
பார்வையால் தூது விட்டு விட்டு ஓய்ந்துபோய், “நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட” என்று கேட்கிறாள். கிணற்றில் இருந்து தண்ணீரை இரைத்துத் தன் மேல் ஊற்றிக்கொண்டு காமத்தைத் தணிக்கப்பார்க்கிறாள். கடைசியில் ஊர்க்குளத்தில் அவள் உடல் மிதக்கிறது. அம்பின் வாய் பட்டுத் துடிப்பவர்களைப் போல் காதல் அதன் வயப்பட்டவர்களை வதைக்கிறது. இந்த வேதனை ஆண்டாளுக்கும் உண்டு. அவள் வாயாலே இப்படிக் கூறுகிறாள்:
ஆரே உலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும்
கிடப்பேனை
ஆராவமுத மனையான் தன் அமுத வாயிலூறிய
நீர்தான்
கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை
நீக்கிரே
ஆயர்பாடி முழுவதும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற கறுத்த எருது போன்ற கண்ணன் மீது காதல் கொண்டு துன்பப்பட்டுக் கிடப்பதாகப் புலம்புகிறாள் ஆண்டாள். ஏங்கி ஏங்கித் தளர்ந்து முறிந்து கிடக்கும் அவள் இடும்பையைத் தீர்க்க யார் இருக்கிறார்கள்? அதனால் அவளே அதற்கான மருந்தையும் சொல்கிறாள். உண்ண உண்ணத் திகட்டாத அமுதமாகிய ஆராவமுதனின் வாயில் ஊறிய அமுதத்தை எடுத்து வந்து, அது உலர்வதற்கு முன்னதாகவே கொண்டு வந்து பருகக் கொடுத்தால் அவளுடைய வலி அகலுமாம்.
ஒருவேளை கண்ணன் வாயமுது கிடைக்கவில்லையென்றால் அவன் ஊதும் வேய்ங்குழலின் துளையில் ஒழுகும் நீரைக் கொண்டுவந்தாவது முகத்தில் தெளியுங்கள் என்கிறாள் இன்னொரு பாசுரத்தில்.
ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் திருவாய்மொழியோ நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks