-
20th February 2016, 01:30 PM
#3311
நடிகர் திலகம் Observation அதிசய தக்கது .. பிரமிக்க வைக்கும்
180 டிகிரி... (3D) Observation
(உ ம்) படம்: அந்தமான் காதலி செட்டில்:
ரசிகர் மன்ற /காங்/ உறுப்பினர்களிடம் சூடான விவாதம் ஒருபக்கம்
.
திரிகோணமிடம் பெரியப்பா வுக்கு(தண்ணி கேட்டு 10 நிமிடம் ஆனதால் ) தண்ணி கொடுக்க சொல்லி Production Boys இடம்" எண்டா ராஜா குடிக்க தண்ணி கேட்டா இப்படி தான் லேட் கொடுப்பீங்களா ? (சிறு கண்டிப்பு டன்)
Shot il. ல அப்பாவிடம்.. சுஜாதாவின் ( Last Shot) Q Dialogue. சொல்லி.. "நான் இப்ப்டி நடந்து வந்து என் Dialogue. சொல்றேன்.. உனக்கு ஓகே வா?...
3 நிகழ்வுகள் ஒரே சமயம் At a Time response..
Avar Mind.. நாலு பக்கமும் சுற்றி நடக்கும் விஷயங்களை Observe .. செய்யும் ( powerful)
thanks: Muktha Ravi Facebook..
அண்ணன் சிவாஜி அவர்கள் தசாவதானி ! பத்து விஷயங்களை இராவணன் போல ஒரே நேரத்தில் நினைவு கூறும் ஆற்றல் மிக்கவர் !
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th February 2016 01:30 PM
# ADS
Circuit advertisement
-
20th February 2016, 01:36 PM
#3312
Senior Member
Devoted Hubber
Welcome back saradha madam,i pray in god for your good health,please continue enthralling us
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
20th February 2016, 01:40 PM
#3313
Senior Member
Seasoned Hubber
அன்புச் சகோதரி சாரதா,
தாங்கள் நலமுடன் திரும்பியது மகிழ்ச்சி. தொடர்ந்து உடல் நலனில் கவனம் கொள்ளவும்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th February 2016, 01:43 PM
#3314
அந்த நாள் திரைபடம் : நேற்று போட்டு காண்பித்தார்கள் : அப்பா உதவி இயக்குனர். அறுபது வருட ம் ஆகிறது ஆடிடர் ஸ்ரீதர் கூப்பிட்டார் ..
சாயந்திரம் என்னிடம்:
அப்பா: " அந்த நாள்" போனேன் அருமையாக நிகழ்ச்சி நடத்தினார்கள். இருந்தாலும் அந்த பையன் ஒருத்தன் தான் இப்ப உயிரோடு இருக்கான் அவன( அந்த பையன்) கூப்பிடலையே
நான்: எந்த பையன் பா ?
அப்பா : அதாண்டா அந்த ஐயம்பேட்டை பையன்
நான் : எந்த ஐயம்பேட்டை பையன் ?
அப்பா : போ உனக்கு சொன்னா புரியாது .. அதாண்டா
பாட்டு பாடுவானே
நான் : யாரு பா சீர்காழி கோவிந்தராஜன ?
அப்பா : போடா .. உனக்கு எதுவும் புரிஞ்சு தொலையாது
நான் : சரி ஓகே ... நான் பாடி(Padi) போகனும் .. கிளம்பறேன்
அப்பா : M.N Rajam புருஷன்
நான் : A.L Raghavan (கடுப்பாக) என்ன இப்போ?
அப்பா : அவன் சின்ன பையனா அந்த படத்துல நடிச்சான்
அதனால அவன கூப்பிட்டு இருக்கலாம்
நான் : அப்பா A L Ragavan நடிச்சது .M.N. ராஜதுக்கே ... தெரியுமான்னு தெரியல இதுல மத்தவாளுக்கு எப்படிபா தெரியும் ?
அப்பா ; சரி நீ ஆத்துக்கு கிளம்பு
thanks: Muktha Ravi Facebook..
திரு வீயார் சார்.. ... இது நம்ம NTFANs நிகழ்ச்சி பற்றி தானே...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th February 2016, 08:38 PM
#3315
Junior Member
Diamond Hubber
என் மகன்
ஒரே மாதிரி முக தோற்றங்களில் தோன்றும் இரண்டு வேட நடிப்புகளையே பொளந்து கட்டுவார். இதிலோ இரண்டு மாறுபட்ட ஒப்பனைகள்.அவர் விடுவாரா? தியேட்டருக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே மறந்துவிடும் படம் முடிந்த பின்னால்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தியேட்டர் பெயரே நினைவுக்கு வரும்.அந்தளவுக்கு மெய் மறக்க வைத்து விடுவார்.நடிப்பில் வித்தியாசத்தை மிக அருமையாக கொடுத்திருப்பார்.
இந்தப்படத்தில்போலீஸ் ஏட்டு.,திருடன் என இரு வேடம்.ஆனால் அந்த ஏட்டு வேடத்தையே இரண்டு வித நடிப்புகளில் உருக்கியெடுத்திருப்பார்.போலீஸ் ஏட்டு ராமையா கேரக்டரில் நாணயமும் கண்டிப்பும் அந்த போலீஸ் உடுப்புடன் கலந்து கண்ணியமாய் வெளிப்படும்.வீட்டில்
குடும்பஸ்தரான தோற்றத்தில் அமைதியான தோற்றத்தில் அது வேற ட்ராக் என்பது போல் பயணிக்கும் அந்த நடிப்பு.
அவர் வரும் காட்சிகளில் சில:
ஆரம்பமாகும் முதல் காட்சியிலேயே அந்தக் கேரக்டரின் தனித்துவத்தை புரிய வைத்து விடுவார்.
தன் மகளிடம் தவறாக நடக்க முயன்ற பாலாஜியை அவர் வீட்டிலேயே அவருடைய தந்தையாராக வரும் விஎஸ்.ராகவனின் முன்பு பாலாஜியை எச்சரிக்கும் காட்சி யில் தான் எத்துணை துடிப்பு.
நான் தேவன்சார் என்று மீசையை முறுக்கி பேசும்போதும்
உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை மத்தவங்களுக்கு தர வேண்டிய அவசியமில்லை என்று பாலாஜிக்கு எச்சரிக்கை செய்வதும் கம்பால் சோபாவை அடித்து தன் கோபத்தை காட்டும்போதும் ராமையா கேரக்டரில் நடிகர்திலகம் அட்டகாசப்படுத்தியிருப்பார்.போலீஸ் உடுப்பை மாட்டிக்கொண்டாலே பரம்பரை
கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது போல் விரைப்பாய் நடிக்கும் நடிகர்களுக்கு போலீஸ் காரெக்டரில் எப்படி நடிக்க நடிக்கவேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் ,வரைமுறைகள், பார்முலா, ரூட் எல்லாம் போட்டுக்கொடுத்தவர் நடிகர்திலகம் என்பதை எதிர்த்துப் பேச எவரும் கிடையாது.
மகளின் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் லஞ்சம் என்ற வார்த்தையை சம்பந்தி சொல்லியதும் துடித்துப்போவாரே.களங்கமில்லாத நடிப்பு. நல்ல தந்தையின் எதார்த்தமான வாழ்க்கைப்பதிவுகளாக அவை அமைந்திருக்கும்.போலீஸ் தோரணையில் தப்பித்தவறி ஒருமுக பாவனையோ., சின்ன ஷாட்டோ கூட இடம் பெறாமல் இந்தக்காட்சி அமைந்திருக்கும்.
திருட்டு சம்பந்தமாக மேஜரின் வீட்டில் விசாரணை நடக்கும் காட்சி.
முதலில் மகனைப் பார்ப்பார்.டயலாக் கிடையாது. முக பாவனை மட்டும்..அது பத்து பக்க டயலாக் பேசினால் எனன புரிந்து கொள்ள முடியுமோ? அதைச் செய்து காட்டியது போல் இருக்கும். திருட்டு நிருபணம் ஆனபின் தன் நம்பிக்கை வீண் போய்விட்டதே என்று ஆவேசம் கொண்டு மகனை பிரம்பால் விளாசித்தள்ளும் காட்சியில் அவர் அடிக்கும் ஒவ்வோர் அடியும் நம் உடம்பில் விழுவது போல் இருக்கும்.என்னஒரு ஆக்ரோசமான நடிப்பு.
தந்தையும் மகனும் சந்திக்கும்ஜெயில் காட்சி:
நான் ஏண்டா அழணும் என்று சொல்லும் போது வாயால் அந்த வார்த்தைகள் வந்து விழுந்தாலும் கண்களின் மூலமும் முக பாவங்கள் மூலமாகவும் அது உண்மை என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
போலீஸ் உடையில் தந்தைராமையா வாழ்ந்திருப்பார்.
மகனை பெயிலில் கூட்டி வரும் காட்சி:
இன்ஷ்பெக்டரிடம்...
இப்ப நான் அதிகாரியா வரல.இந்த பயலோடஅப்பனா வந்திருக்கேன் என்று சொல்லும்போதும்,
உத்தியோம்தான் அதிகாரி உள்ளம் அப்பனாச்சே
என்று உருகும்போதும் நம்மையும் உருக்கி விடும.தன் கண்ணிர்த்துளி ஏட்டில் விழுந்துவிடுவதும்போது அந்த ஏட்டில் உள்ள எழுத்துக்கள் அழியக்கூடாது என்பதற்காக அந்த ஈரத்தை டஸ்டர் வைத்து உறிஞ்சி எடுப்பதை காட்சிப்படுத்தலில் கூட அவரின்
காரெக்டர் குணம் தெரியும் படி காட்சி அமைந்திருக்கும்.டைரக்ஷன் டச் அது.அந்த சூழ் நிலையிலும்இப்படி ஒரு யோசனை வந்து இப்படி ஒரு ஷாட்டை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.கதை ஆசிரியரின் கற்பனைக்கு பாராட்டுக்கள்.
சோன்பப்டி பாடல் +சண்டை காட்சிகள்:
சோன் பப்டி பாடலும் சரி அதைத் தொடர்ந்து வரும் சண்டைக்காசியும் சரி.இரு வேட ட்ரிக்ஸ் ஷாட்டுகளுக்கு நிறையவே பட யுனிட்டார் மெனக்கெட்டிருக்க வேண்டும்.பிரமிக்க வைக்கும் ஷாட்டுகள் நிறைய உண்டு.பாடலில் ஒரு சிவாஜி கண்ணாடியில் தெரிய மற்றொரு சிவாஜி ஆடுவது போல் எடுக்கப்பட்ட ஷாட் அருமை.சண்டைக்காட்சிகளிலும் ட்ரிக் ஷாட்டுகள் வியக்க வைக்கும்.
ராமையாத்தேவரின் கடைசி காட்சி:
ஆர் எஸ் மனோகரிடம் பேசும் வசனங்கள் கூர்கத்தியைப் போன்று வெகு ஷார்ப்.
காசை வைத்து என் கண்ணியத்தை விலை பேசுறியா.
என் பொண்ணு சும்மா போனாலும் போவா.இந்தப் பொன்னோட போக மாட்டா.
சப் இன்ஷ்பெக்டர் உடையில் அவர் நிற்பது, பேசுவது, அங்க அசைவுகளின் தோரணை, போலீஸ் கம்பீரம் மிடுக்காக இருக்கும்.
சண்டைக்காட்சியில் அனல் பறக்கும். கம்புச்சண்டையில்
வேகம் அபாரமாக இருக்கும்.
குண்டுகள் உடம்பில் பாய்ந்த பின்,
"எவன்டா கோழைப்பய பின்னாலிருந்து சுட்டான்.நான் தேவன்டா"
என்று சொல்லிக் கொண்டே துடி துடிதுடிக்கும்போது குண்டுகள் பாய்ந்த வேதனையை தத்ரூபமாக வெளிப்படுத்தி யிருப்பார்.நம்மை கட்டுப்படுத்த முடியாது பெரும் உணர்ச்சிகளுக்குஅந்தக்காட்சி அழைத்துச் சென்று விடும்.ராமையாவின் பாத்திர படைப்பு ..கதை ஆசிரியரோ டைரக்டரோ கூட இப்படி வெளிப்படும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
20th February 2016, 10:17 PM
#3316
Junior Member
Senior Hubber
திரையுலக மன்மதன் சிவாஜியின் ராஜா திருச்சி கெய்ட்டியில் இன்று முதல் மக்களின் பேராதரவுடன் இனிதே
வெற்றிநடை போடுகிறது. வழக்கமான இத்திரை அரங்கில் வெளியாகும் படங்களுக்கு ஒட்டப்படும் போஸ்டரை விட பலமடங்கு அதிகவகவே ஊரெங்கும் ராஜாவின் போஸ்டர்கள் நம் பெருமைமிகு விநியோகஸ்தரால் ஒட்டப்பட்டுள்ளது.நாளை ஞாயிறு மாலை காட்சி அரங்கம் சிவாஜி ரசிகர்களின் ஆர்பாட்டத்தில் அலறப்போவது உறுதி
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
21st February 2016, 02:58 AM
#3317
Junior Member
Veteran Hubber
Gap filler / Monotony breakers!
Last edited by sivajisenthil; 21st February 2016 at 03:04 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st February 2016, 03:02 AM
#3318
Junior Member
Veteran Hubber
Gap filler / Monotony breakers!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st February 2016, 03:03 AM
#3319
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st February 2016, 03:03 AM
#3320
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks