-
26th March 2016, 12:32 PM
#11
Junior Member
Veteran Hubber
திரையுலகை இன்றும் ஆளும் தீர்க்கதரிசி
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் இன்றைக்கும் பொருந்தும் படியான காட்சி அமைப்புகள், பாடல்கள், இசை என அனைத்தும் ஒரு சேர அமைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இன்றைய தலைமுறை நடிகர்களும் அவருடைய பாணியையே பின்பற்றி நடிப்பதை பல படங்களில் காண முடிகிறது. அவரைப்பற்றிய வசனங்கள் காட்சிகள் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறைய படங்களில் காணலாம். உதாரணமாக, ரஜினிமுருகன் படத்தில் ஹீரோயின் சிவகார்த்திகேயனைப் பார்த்து இவர் எம்ஜிஆர்... வாரி வழங்கறார் என்பார். அதே போல், ராஜ்கிரண் இறப்பு போன்ற காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஓடி கொண்டிருக்கும்...நடிகர் சூரி அங்கிருந்தவர்களிடம் ..அங்கே எம்ஜிஆர் படம் போட்டிருக்கு எல்லாம் போங்க என்பார். பஞ்சாயத்து காட்சியில் வில்லன் சமுத்திரகனி எங்க தாத்தாவும் நீங்களும் ஓடி ஓடி எம்ஜிஆர் படம் பார்த்ததை மறந்துட்டிங்களா. என்பார். அதற்கு ராஜ்கிரண் நான் ஓடி ஓடி எம்ஜிஆர் பார்த்தது உண்மைதான் என்பார்.
அதே போன்று 'புகழ்' திரைப்படத்திலும் நடிகர் ஜெய் 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று பாடுவார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் ஏன் என்ற கேள்வி பாடலை விரும்பி பார்ப்பார். அநீதியைக் கண்டால் கொதித்தெழும் பாத்திரமாக ஜெய் தோன்றுவதால், எம்ஜிஆர் ரசிகராகவும், கொள்கைப்பாடல்களை விரும்பி பார்ப்பது போன்றும் காட்சி அமைத்திருக்கிறார்கள். இதைப் போன்று இன்றைய திரையுலகில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் இடம்பெறுகின்றன..காரணம் என்னவென்றால்....
அன்றும் இன்றும் என்றும் விரும்பும் காட்சிகளை தலைவர் தனது தீர்க்க தரிசனத்தால் அமைத்ததாலும், என்றும் அவர் மக்களால் விரும்பப்படுவதாலும்தான் இன்றளவிற்கும் அவரது படங்கள் விரும்பப்படுகின்றன; அவரது பாடல்கள் மற்றும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுகின்றன..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 26th March 2016 at 12:37 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th March 2016 12:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks