தேமல் என்பதும் பசலை நோய் என்பதும் ஒன்றல்ல. இரண்டுமே தோலின் மீது படர்வதால் ஒன்றென கொள்ளக்கூடாது. தேமல் என்பது நிரந்தரமாக தோலின் மீது படிந்து விடுவது. பசலை என்பது சாம்பல் போன்ற ஒரு படர்க்கை. துணியால் துடைத்தால் நீங்கி விடுவது.
தலைவனைப் பிரிந்த தலைவி தன்மீது படர்ந்த பசலையை ஒருபுறம் துடைத்துக் கொண்டு இருக்கும்போதே மறுபக்கம் பசலை படர்ந்து கொண்டிருந்தது என்பதாக ஒரு இலக்கிய குறிப்பு உண்டு.
Bookmarks