-
18th April 2016, 02:56 PM
#2421
Senior Member
Senior Hubber
http://songlyrics.lakshmansruthi.com...age&Language=0
இதுல இளம் தேவை கொண்ட கன்னி வாழ இனியது கூறுன்னு போட்டிருக்காங்க
தமிழிசைல இளம்தேமல்..
-
18th April 2016 02:56 PM
# ADS
Circuit advertisement
-
18th April 2016, 05:50 PM
#2422
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th April 2016, 05:52 PM
#2423
Senior Member
Diamond Hubber
சிக்கா...
காதலில் வாடும் பெண்ணின் உடலில் தேமல் படரும் என்பதை வள்ளுவர் கூட பசப்புறு பருவரல் என்ற அதிகாரத்தில் சொல்லி இருக்காரு.. ப்ளீஸ் நோட் த பாயிண்ட்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th April 2016, 08:56 PM
#2424
Senior Member
Senior Hubber
தினம் ஒரு பாவின் பதிலில் இருந்து எடுத்தது..//தெனாலிராமன் படத்தில் இடம்பெற்ற தந்தகாரப் பாடலும் காளமேகம் கொடுத்ததுதான். அந்தப் பாடல்,
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
தெனாலிராமன் படத்தில் வரும் இந்தப் பாடலின் ஒலி/ஒளி வடிவம் கிடைக்கவில்லை. மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் மிக அழகாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலுக்குப் பொருள்?
தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது
தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்
தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது
தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே
அப்போ எதுதான் நல்லது?
தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!
இதுதான் இந்த அழகான பாடலின் விளக்கம்.//
இந்தப் பாட் தெனாலி ராமன் ல தேடிப் பார்த்தேன் கிடைக்கலை..
ஆக இளம் தேமல் என்றால் பசலையா.. அது ஒரு நோயோன்னோ..தேமல் என்பது தோல் நிறத்தில் நடுவே பேட்ச் போல வருவது அன்றோ..ம்ம் என்னமோ போங்க
-
18th April 2016, 11:15 PM
#2425
Senior Member
Diamond Hubber
சின்னவரே!
சில திருத்தங்கள்.
'தெனாலிராமன்' படத்தில் 'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது' பாடலை நடிகர் திலகத்துக்காகப் பாடியவர் வி.என்.சுந்தரம் என்று நினைவு. அது டி.எம்.எஸ்.அல்ல.
தாதிதூ தோதீது ---- அடியார்களுடைய தூது தீமையைப் பயப்பது
தத்தை தீதோதாது--- கிளி போய் தூது சொல்லாது
தூதிதோ தொத்தித்த தூததே---தோழியின் தூதானது நாட்கடத்தி வைக்கப்பட்டதாகும்
துதித்ததே தொத்தீது----தெய்வத்தை வழிபட்டுத் தொடர்வது பயன்தராது. வீணாகும்.
தாதொத்த துத்தி தத்தாதே--- முந்தாதி போன்ற தேமல் என் உடல் மேல் பாய்ந்து அதிகப் படாமல்
தித்ததோ தித்திதி-- இனிமையான தலைவன் நாமத்தைச் சொல்லி என்னைக் காப்பாற்றுக.
இதுதான் பொருள். உம் விளக்கமும் இதையொத்துதான் உளது.
இப்படி பொருள் தந்து அருமையாக அறிவிலிக்கும் புரியும்படி விளக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு எவருண்டு?
ஆதியும் அந்தமும் எங்களுக்கு அவர்தானே!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th April 2016, 04:10 AM
#2426
Senior Member
Diamond Hubber
சிக்கா... தாதொத்த என்பதற்கு பூக்களில் உள்ள மகரந்தப் பொடி(தாது) படர்ந்தது போன்ற தோற்றம் கொடுக்கும் தேமல் என்று அர்த்தம் என ஒரு தமிழாசிரியர் சொல்றார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2016, 10:01 AM
#2427
Junior Member
Veteran Hubber
From the calm waters surrounding Jai's Archipelago!
Monotony breaker!
From The Cow Boy genre D'Jango starring Franco Nero! 1966
Besides Sean Connery's James Bond OO7 , 'Makkal Kalaignar' Jai Sankar was the perfect fit for tamilized cow boy movies replacing Clint Eastwood, Terence Hill and Franco Nero's depictions to suit tamil moods!
The Clint Eastwood western sphagatti 'For a Few Dollars More' theme music by the greatest composer Ennio Morricone!!
Last edited by sivajisenthil; 19th April 2016 at 10:28 AM.
-
19th April 2016, 10:19 AM
#2428
தேமல் என்பதும் பசலை நோய் என்பதும் ஒன்றல்ல. இரண்டுமே தோலின் மீது படர்வதால் ஒன்றென கொள்ளக்கூடாது. தேமல் என்பது நிரந்தரமாக தோலின் மீது படிந்து விடுவது. பசலை என்பது சாம்பல் போன்ற ஒரு படர்க்கை. துணியால் துடைத்தால் நீங்கி விடுவது.
தலைவனைப் பிரிந்த தலைவி தன்மீது படர்ந்த பசலையை ஒருபுறம் துடைத்துக் கொண்டு இருக்கும்போதே மறுபக்கம் பசலை படர்ந்து கொண்டிருந்தது என்பதாக ஒரு இலக்கிய குறிப்பு உண்டு.
-
19th April 2016, 10:21 AM
#2429
Senior Member
Senior Hubber
நன்றி.. நேற்று ஒரு ரைட் அப் எழுதினேன்..கொஞ்சம் குறள் குறுந்தொகை என.. மக்கள்ஸ் ஜொள் பார்ட்டி எனச் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில் நீக்கிவிட்டேன்..பட் ஈவ்னிங்க் படித்து ஓகே என்ப்பட்டால் -எனக்கு - மறுபடி இடுகிறேன்..
-
19th April 2016, 10:22 AM
#2430
Senior Member
Senior Hubber

Originally Posted by
adiram
தேமல் என்பதும் பசலை நோய் என்பதும் ஒன்றல்ல. இரண்டுமே தோலின் மீது படர்வதால் ஒன்றென கொள்ளக்கூடாது. தேமல் என்பது நிரந்தரமாக தோலின் மீது படிந்து விடுவது. பசலை என்பது சாம்பல் போன்ற ஒரு படர்க்கை. துணியால் துடைத்தால் நீங்கி விடுவது.
தலைவனைப் பிரிந்த தலைவி தன்மீது படர்ந்த பசலையை ஒருபுறம் துடைத்துக் கொண்டு இருக்கும்போதே மறுபக்கம் பசலை படர்ந்து கொண்டிருந்தது என்பதாக ஒரு இலக்கிய குறிப்பு உண்டு.
நன்றி ஆதிராம்.. இது பற்றி த் தான் நேற்று எழுதிய போஸ்ட்..இப்போது என்னிடமில்லை ஹோம் பிசியில் உளது.. ஈவ்னிங் வர்றேன்.. பட் பசலை என்பது நோய் என்கிறார்கள் சில இடத்தில் .. படர்ந்த பசலை என ச் சொல்கிறீர்கள்.. மீன்ஸ் அது தோலின் நிறமாற்றம் என்றே நினைக்கிறேன்..இல்லியோ..
Bookmarks