-
20th April 2016, 08:38 AM
#2451
Senior Member
Diamond Hubber
Hi all ...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... ரோஜாவின் ராஜா படத்தில் வரும் "ஜனகனின் மகளை" பாடலை எழுதியவர் வாலியா, கண்ணதாசனா, புரட்சிதாசனா ?
சொல்லுங்க் ப்ளீஸ்..
-
20th April 2016 08:38 AM
# ADS
Circuit advertisement
-
20th April 2016, 09:36 AM
#2452
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
20th April 2016, 10:12 AM
#2453
Senior Member
Diamond Hubber
நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கிவிட்டாள்.
அவரைத் தவிர வேறு எவரால் இப்படி எழுத முடியும்? கண்ணனின் தாசனுக்கு நாமெல்லாம் தாசர்கள்தானே! மதுண்ணாவின் சந்தேகத்தை தனி ஒருவராக ஆதாரத்தின் மூலம் தீர்த்து வைத்த ரசிக வேந்தருக்கு நன்றியோ நன்றி! அதே போல தெனாலி ராமனைக் கண்டு ஓடோடி வந்து பெருமைப்படுத்தியதற்கும் நன்றி. சந்தேகத்தைக் கிளப்பியவருக்கும் அதே அதே.
Last edited by vasudevan31355; 20th April 2016 at 10:18 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th April 2016, 10:16 AM
#2454
Senior Member
Senior Hubber
ஒரு மூன்று மணி நேர ஓய்வு கிடைத்தால் இந்த அற்புத படத்தை அணுஅணுவாக கண்டு ரசித்து மகிழுங்கள். ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல இறுதியில் உணரலாம். // ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் வாசு.. பல வருடங்களுக்கு முன்..பட் சுத்தமாய் மறந்துவிட்டது.. எனிவே மறுபடி பார்க்கப் பார்க்கிறேன்.. அழகாய் எழுதியிருப்பதற்கு தாங்க்ஸ்..பின்னூட்டம் அளித்த ராகவேந்தர் சாருக்கும் ஒரு ஓ..
ரோ.ரா வும் இதுவரை முழுமையாகப் பார்த்த்தில்லை..ம்ம்
-
20th April 2016, 10:21 AM
#2455
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
ரோ.ரா வும் இதுவரை முழுமையாகப் பார்த்த்தில்லை..ம்ம்
முழுமையாய் செய்த ஏதாவது ஒன்றிரண்டை பட்டியலிடவும்.
-
20th April 2016, 10:22 AM
#2456
Senior Member
Diamond Hubber
சின்னா!
உங்கள் பதிவுகளை இனிமேல்தான் படிக்கப் போகிறேன். கொடைக்கானல் போவதற்குள் படித்து விடுகிறேன்.
-
20th April 2016, 10:23 AM
#2457
Senior Member
Senior Hubber
ஹி ஹி.. இப்படி டபக்குன்னுகேட்டா எப்படி.. இருந்தாலும் லிஸ்ட் கம்மியாத்தான் இருக்கும்..
-
20th April 2016, 10:24 AM
#2458
Senior Member
Senior Hubber
இது என்ன.. திடீர் பயணம் ..என்சாய்.. ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே எடுத்த இடம் சாந்தி valley தானே..அங்கும் சென்று பாருங்கள்..பட் கொஞ்சம் மேலே ஏறினால் பூம்பாறை என ஒரு ஊர் அதைத் தாண்டி மன்னவனூர்.. பார்த்ததில்லை எனில் டோண்ட் மிஸ்..
-
20th April 2016, 10:51 AM
#2459
Senior Member
Diamond Hubber
அண்ணா! சின்னா! (ஹய்... ரைமிங்... டைமிங்)
உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்
இல்லாயின் இல்லென்று வான் செல்லுவோம்.
காதலியின் மனதில் புதைந்து கிடக்கும் காதலின் ஆழத்தையும், உறுதியையும், நம்பிக்கையையும் அற்புதமாக வார்த்தைகளில் வடித்தெடுத்துத் தந்த கவிஞன். எப்போது கேட்டாலும் இவ்விரு வரிகளையும் இசையோடு கேட்கும்போது கண்கள் ஆச்சர்யத்தால் விரிவடையும்.
நமக்கு லக் இருந்தால், கடவுள் அருள் இருந்தால், உனக்கு நான்... எனக்கு நீ என்பது உண்மையானால் நாம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை நம் காதலுக்கு பெற்றோர்களாலோ அல்லது மற்றோர்களாலோ தடையோ அல்லது வேறு ஏதும் தடங்கல்களோ இருந்தால் அதுபற்றியும் கவலை கொள்ளவேண்டாம். விதி விட்ட வழி என்று மனமொத்து, மரணமெய்தி, மண்ணைத் துறந்து விண்ணை அடைவோம்.
இந்த அர்த்தத்தில்தானே காதலி அப்படி கானமிசைக்கிறாள்?
'உண்டாயின் உண்டென்று மனம் கொள்ளுவோம்' என்பது பாடல் புத்தகத்தில் உள்ள வரி.
அது சரி! 'மணம்' சரியா, 'மனம்' சரியா அல்லது இரண்டுமே பொருந்துமா?
சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு இரண்டு விஜயகுமாரி சோகப் பாடல்கள் பரிசாக வழங்கப்படும்.
அப்பாடா! இதைப் படித்து மதுண்ணா கண்டிப்பாக பதில் தெரிந்தும் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுவார்.
இன்னொருத்தர் கண்டிப்பாக வலையில் சிக்குவார் என்று நம்புவோமாக.
Last edited by vasudevan31355; 20th April 2016 at 11:17 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th April 2016, 11:06 AM
#2460
Senior Member
Diamond Hubber
தேங்க்ஸ் சின்னா!
பார்க்கிறேன். ஒன்றுமில்லை. பெரிய பையன் காலேஜ் லீவில் (4 நாட்கள் மட்டுமே) பொங்கலுக்குப் பிறகு வீட்டுக்கு வந்திருக்கிறான். எங்காவது வெளியே நெய்வேலியை விட்டு 'போய் வரலாமே' என்றான். முதலில் ஏற்காடு ப்ளான் பண்ணி, அப்புறம் பிச்சாவரங்காடு மாற்றி, பின் வெயிலில் இரண்டுமே அவ்வளவாக சரிப்பட்டு வராது என்று மீண்டும் குழம்பி, இறுதியில் கொடைக்கானல் முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு 11 மணிக்கு பயணம். தங்கை ஆத்துக்காரர் 'கொடை'யில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் ஆபிஸராக முன்பு பணிபுரிந்ததால் அங்கு தங்க ஏற்பாடு செய்து விட்டார். பிள்ளைகளும் சிறுவயதில் பார்த்ததுதான். அதான் கொஞ்சம் ஜாலியாக....
கொடைக்கானல் சென்றதும் முதலில் செல்ல இருப்பது வழக்கம்போல 'ஞானஒளி' தேவாலயம்தான். அப்புறம்தான் மற்றதெல்லாம். ஆமாம்! 'குணா' பாறை பார்க்க முடியுமா?
கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்
அடுத்த வரி தங்களுக்கு
ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஹையா! சொந்தக் கதையோடு நைஸா பாட்டையும் இணைச்சாச்சு. அதுவும் 'குலம்' போற்றும் 'குண'வானின் பாட்டு.
'உலகில் இரண்டு கிளிகள்'.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks