-
9th May 2016, 08:47 PM
#2701
Senior Member
Diamond Hubber
நன்றி மதுண்ணா!
ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாடல் இதோ இணையத்தில் முதன்முதலாக உங்கள் மூலமாக. நெடுநாள் ஆசை நிறைவேறியது. நன்றிகள் ஆயிரம். பல பேர் மறந்தே போய்விட்ட பாடல். இப்படி ஒரு பாடல் 'மூன்றெழுத்து' படத்தில் உள்ளதா என்பதே பலருக்கும் தெரியாது. ரசனை ஒத்த நண்பரது நட்பே நன்மகிழ்ச்சியைத் தரும் என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
madhu thanked for this post
-
9th May 2016 08:47 PM
# ADS
Circuit advertisement
-
9th May 2016, 09:15 PM
#2702
Senior Member
Senior Hubber
அது என்ன உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்னு போட்டுசெம்ம பாட்னு கமெண்ட் வேற..இன்னிக்கு 44 டிகிரி தான் மீன்ஸ் 111 டிகிரி..இருந்தாலும் 108னே வெப்ல போட்ருக்காங்க ம்ம் சரின்னு குட்டியா வெளிய அந்த தகிக்கிற் ஹ்யுமிடிட்டில கொஞ்சம் நிழலா ஒதுங்கி தம் போட்டாலும் நினைவுக்கு வரலை.. அதுவும் திருமாங்கல்யம் முத்ராமன் ஜெயலலிதான்னா எங்கிட்டிருந்து லஷ்மி வந்தாங்கன்னு யோசிக்கறச்சே ஒரு மாதிரி குன்சா லஷ்மி இருக்கறது நினைவுக்கு வர அகெய்ன் தோல்விதான்.. வீட் வந்து கேட்டதற்கு அப்புறம் தான் அது ஆனந்தம் தம் ஆனந்தம்னு தெரிஞ்சது..
இப்பவும் 40 ட்கிரி செல்சியஷ்.. இரவு 7.42க்கும்ம் சரி பாட் கேக்கலாம் மதுண்ணாவ்..
ஹப்புறம் எல்.ஆர்.ஈஸ்வ்ரி லஷ்மி சாங்க்ஸ் நு லிஸ்ட் போட்டா ( ராகவேந்தர் சார் பட்டிக்காடா பட்டணமா பாட்கு தாங்க்ஸ்..மதுண்ணா லிஸ்ட்கும் தாங்க்ஸ்..வாசு பொருத்தம் பார்த்ததுக்கு தாங்க்ஸ் ) ஓ ல்ஷ்மி ஓ ஷீலா பாட் தான் வருது..வெயிலோன்னோ எல்.ஆர்.ஈ பாட் பொருத்தமா போட்டுட்டேன்..வாடைக்காற்றம்மா( நற நற)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th May 2016, 09:24 PM
#2703
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
பாடலை சிலமுறை பார்த்து, கேட்டு ரசித்தேன். சில விஷயங்கள் புலப்பட்டன.
ஷீலாவுக்கு ஈஸ்வரி குரல். உடன் ஆடும் ராஜி பாப்பாவிற்கு சரளா குரல். தங்கைகளாக வரும் பெண்களுக்கு சரளாவும், வேறு ஒருவரும் குரல் தந்திருப்பார்கள் போல. முதல் சரணம் முடிந்தும் பிரபாகருக்கும், ராஜிக்கும் அதே கோஷ்டிக் குரல்கள்.
இரண்டாவது சரணத்தில்,
'தன்னைத்தானே காணும் உலகில் என்னைக் காண்பார் யாரம்மா'
என்று ஷீலா நொந்து பாடும் போது அவருக்கு குரல் ராட்சஸிதான்.
அடுத்தவரியாக ஒலிக்கும் பிரச்னை பண்ணிய வரியான,
'தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா?'
வரிகளை சரளா பாடியிருப்பார். நேற்று நான் எழுதும்போது குரல் மாறுவதால் அந்த வரி வேறு யாருக்கோ இருக்கும் என்று நினைத்து எழுதினேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை...இதுவரை ஈஸ்வரி குரலில் பாடிவந்த ஷீலா 'டமாலெ'ன சரளா குரலில் அடுத்த வரியான மேற்சொன்ன வரிகளுக்கு வாயசைப்பார். ஆக குரல்கள் மாற தொடர்ந்து பாடுவது ஷீலா மட்டுமே. அநேகமாக ராஜிக்குதான் அந்த வரி போய் இருக்க வேண்டும். எப்படியோ ஷீலாவுக்குப் போய் விட்டது. இதுதான் கோட்டை விடுதல் என்பதோ!
அடுத்த வரியான 'கருணை நெஞ்சைத் தேடித் தேடி கண்ணீர் சிந்தும் பெண்ணம்மா' வரிகளை மீண்டும் ஷீலாவுக்காக வழக்கம் போல ஈஸ்வரி பாடுவார்.
எப்படி இருந்தாலும் தரமான பாடல் என்பதில் அனைத்தையும் மறந்து விடலாம். பாடல் இன்னும் கொஞ்சம் நீளமாய் இருந்திருக்கலாம். இது ராட்சஸி ரசிகனின் ஆசை.
Last edited by vasudevan31355; 9th May 2016 at 09:35 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
9th May 2016, 09:34 PM
#2704
Senior Member
Diamond Hubber
சின்னா!
உங்க விஜயகுமாரியை விட புஷ்பலதா நூறு பங்கு மேல். ஏ.வி. எம்.ராஜனைக் கேட்டா சொல்வார். ஆமாம்! ராஜன் விஜயகுமாரியோடு ஜோடி சேர்ந்து ஏதாவது நடிச்சிருக்கிறாரா? அதே போல எஸ்.எஸ்.ராஜேந்திரன் புஷ்பலதாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறாரா? அப்படி இருந்தா பாட்டு போடுங்க. நான் நைட் ஷிப்ட் போயிட்டு நாளைக்கு வந்து பார்க்கிறேன்.
'உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்' என்னுடய மிகப் பிடித்தங்களில் ஒன்று. ஆனந்தம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th May 2016, 09:39 PM
#2705
Senior Member
Senior Hubber
வாஸ்ஸூ.. இப்படி ரெண்டு காம்பினேஷன்கொடுத்து தேடுன்னா நான் எந்து செய்யு.. சமர்த்தா ஆஃபீஸ் போய்ட்டு வாங்க..நாளைக்குள்ற முடியுதான்னு பார்க்கறேன்..
-
9th May 2016, 09:42 PM
#2706
Senior Member
Senior Hubber
எஸ்.எஸ்.ஆர் புஷ்பலதாவோட சேர்ந்து நடித்திருக்கிறார் ஆனா ஜோடியா இல்லை..வானம்பாடில்ல..இல்லியோ..
ஆயிரம் வால்ட்டு மின்சாரம் அமைந்துகிடக்குது உடம்புக்குள்ள
கையைத் தொட்டா ஷாக்கடிக்கும் கவனிச்சுக்கோகொஞ்சம்கவனிச்சுக்கோ..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th May 2016, 09:59 PM
#2707
Senior Member
Senior Hubber
வாசு சார்..இந்தப் பாட்டு தான்பாடணும் போல இருக்கு...அவருக்கென்ன ஆஃபீஸ் போய்ட்டார்..அகப்பட்டவன் நானல்லவோன்னு..விக் விக் வி..
இந்த பதிலுக்கு பதிலில் வி.கு வுக்கும் ஏ.வி.எம் ராஜனுக்கும் கல்யாணமே ஆகறா மாதிரி சீன்..(என்னா காம்பினேஷன்)
ஏழெட்டுப் பெண்கள் எந்தன்பக்கம் பாட்டை நீங்கள் போட்டு வியாசம் எழுதியதாய் நினைவு..சரிதானே..
அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்..விக் விக் விக்..உங்களுக்காக..
ட்ரெய்னும் குதிரையும்..ஓய் நான் பாட்டில வர்ற சீன் சொன்னேன்..
ஆனா பாட் நன்னாதான் இருக்கு கேட்டால்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th May 2016, 03:58 AM
#2708
Senior Member
Diamond Hubber
ஹாஹா... கலர் படம் எதுக்கு சிக்கா ? கருப்பு வெள்ளை போதாதா ? எல்லாம் தெய்வ சங்கல்பம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
10th May 2016, 04:03 AM
#2709
Senior Member
Diamond Hubber
வாசுஜி... அந்த துன்ப வரியை நீங்க நல்லா கவனிக்கணும் என்றுதான் ஷீலாவுக்கு சரளாவை பின்னணி கொடுக்கச் சொல்லி அந்தக் காலத்திலேயே ஒரு பட்டர்ஃப்ளை எஃபெக்ட் இருந்திருக்கு !! ( இந்த மாதிரி குளறுபடிகள் இருக்கும் பாடல்களைக் கண்டு பிடித்து பதியும் பணியை சிக்கா தலையில் சுமத்தினால் என்ன ? )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th May 2016, 08:44 AM
#2710
Junior Member
Platinum Hubber
1973
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks