-
18th May 2016, 06:22 PM
#341
Moderator
Diamond Hubber
முதல் படத்திலேயே கிளிசரின் போடாமல் அழுதேன்! -நடிகர் ராஜ்கமல்
சின்னத்திரை தொகுப்பாளராக பிரபலமாகி சினிமாவுக்கு வந்திருப்பவர் ராஜ்கமல். தற்போது சண்டிக்குதிரை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அன்புமதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோடியாக கேரளத்து வரவு மானசா நடித்துள்ளார். கஞ்சா கருப்பு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். புதுக்கோட்டை மண்வாசனை கதையில் தயாராகியிருக்கும இந்த படம் தேர்தலுக்குப்பிறகு திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து ராஜ்கமல் கூறுகையில், இந்த சண்டிக்குதிரை படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். காதல், பாசம், ஆக்சன், காமெடி என நடிப்பின் நவரசங்களையும் வெளிப்படுத்தும் வகையில் எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. கிராமத்தில் சண்டித்தனம் செய்து கொண்டு திரியும் கதாபாத்திரம் என்றாலும், முழுக்க முழுக்க அப்படியல்ல. ரொமான்ஸ், செண்டிமென்ட், காமெடி காட்சிகளும் மனதை தொடும் வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், முதல் படத்திலேயே எனக்கு எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல கதைக்களம் கிடைத்திருக்கிறது.
மேலும், இந்த படத்தில் , இறந்தவரை கையில் ஏந்திக்கொண்டு அழும் காட்சியில், நான் கிளிசரினே போடாமல் அழுதேன். அந்த காட்சியும், வசனங்களும் என்னை தானாகவே அழ வைத்து விட்டன. அதனால் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் கண்கலங்க வைக்கும். அந்த வகையில், சேது, பருத்திவீரன் படங்கள் வரிசையில் இந்த சண்டிக்குதிரை படமும் ரசிகர்களின் மனதில் இடம்பெறும் என்கிறார் ராஜ்கமல்.
நன்றி: தினமலர்
-
18th May 2016 06:22 PM
# ADS
Circuit advertisement
-
18th May 2016, 06:27 PM
#342
Moderator
Diamond Hubber
நான் ரொம்ப பாசமான பெண்! -பாசமலர் ஜீவிதா
தேவதை, ஆபீஸ், வைராக்கியம், கைராசி குடும்பம் என பல தொடர்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது பாசமலர் தொடரில் உமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர், அடுத்தபடியாக ஒரு படத்தில் நாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்
இதுகுறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களைப்பொறுத்தவரை அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நான் நடிக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படியே நடித்து வருவதால் வெயிட்டான வேடங்களாக இருந்தால் மட்டுமே டைரக்டர்கள் என்னை புக் பண்ணுகிறார்கள்.
மேலும் தற்போது நடித்து வரும் பாசமலர் சீரியலின் உமா கேரக்டர் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களை கவர்ந்துள்ளது. அந்த அளவுக்கு ஒரு செண்டிமென்டாக ரோலில் நடிக்கிறேன். மேலும், நான் என்னை சார்ந்தவர்களிடம் ரொம்ப பாசமாக இருப்பேன். அதைத்தான் சீரியல்களில் வெளிப்படுத்துகிறேன். அப்படி எனது இயல்புத்தன்மையை சீரியல்களில் வெளிப்படுத்துவதால் நேயர்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
மேலும், சீரியல்களைத் தொடர்ந்து சினிமாவில் என்று தணியும் என்ற படத்தில் நடித்தேன். அதையடுத்து இன்னொரு படத்திலும் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறேன். சீரியல்களைப்போன்று சினிமாவிலும் என் திறமைக்கு வேலை கொடுக் கும் கேரக்டர்களைத்தான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, என்னைப்பொறுத்த வரை சினிமா- சீரியல் இரண்டையுமே ஒரேமாதிரிதான் பார்க்கிறேன். திரை மட்டுமே வித்தியாசம். மற்றபடி நான் ஒரேமாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் ஜீவிதா.
நன்றி: தினமலர்
-
18th May 2016, 06:29 PM
#343
Moderator
Diamond Hubber
நடனப்பள்ளி நடத்தும் காயத்ரி
சின்னத்திரையில் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறவர் காயத்ரி புவனேஷ். மற்றவர்கள் அறியாத இன்னொரு முகம் அவர் நல்ல நடன கலைஞர் என்பது. அதோடு லெட் டான்ஸ் என்ற நடன பள்ளியையும் நடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது
நடிப்பு என்பது பெண்களுக்கு சில காலம்தான். அது நிரந்தரமானதல்ல. நிரந்தர வருமானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துதான் இந்த நடன பள்ளியை உருவாக்கினேன். யோகா மற்றும் பிட்னஸ் செண்டரும் நடத்துகிறேன்.ஆரம்பத்தில் லைவ் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அதன்பிறகு கனாகாணும் காலங்கள் சீசன் 4ல் நடித்தேன். இப்போது டாக் ஷோக்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறேன். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறேன். என்கிறார் காயத்ரி
நன்றி: தினமலர்
-
18th May 2016, 06:30 PM
#344
Moderator
Diamond Hubber
டி.வி.,க்காக படம் இயக்குகிறார் சுரேஷ்கிருஷ்ணா
பாட்சா, அண்ணாமலை படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா, கடைசியாக பரத் நடிப்பில் ஆறுமுகம் படத்தை இயக்கினார். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கினார். அதன் பிறகு சில மினி தொடர்களை இயக்கினார்.
தற்போது டி.வி.சேனல்களுக்கென்றே தனி திரைப்படங்களை இயக்குகிறார். ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் என்பது படத்தின் தலைப்பு, ஜீ தமிழ் சேனலுக்காக இயக்கிய இந்தப் படத்தில் தேவயானி, டெல்லி கணேஷ், அர்ஜூன், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடிய திரைப்படத்தை 9 நாளில் எடுத்து முடித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது: திறமையான பல திரைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், புதிய இளைஞர்கள் திறமையோடும், புதிய சிந்தனையோடும் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இத்தகைய திரைப்படங்கள் உதவும். சரியாக திட்டமிட்டால் 30 லட்சம் ரூபாய் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும். என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
நன்றி: தினமலர்
-
20th May 2016, 01:12 PM
#345
Senior Member
Seasoned Hubber
chinnathiraikku varugurar Aravind swamy.
http://cinema.dinamalar.com/tamil-tv...television.htm
Nandri.Dinamalar.
-
20th May 2016, 01:13 PM
#346
Senior Member
Seasoned Hubber
Diyavukku Thirumanam. Criket cptanai manakiraar.
http://cinema.dinamalar.com/tamil-tv...et-Captain.htm
Nandri.Dinamalar.
-
20th May 2016, 01:18 PM
#347
Senior Member
Seasoned Hubber
Ji thamizh channelil puthiya nigalchi Mr and Mrs kilaadigsl.
http://cinema.dinamalar.com/tamil-tv...-Zee-Tamil.htm
Nandri.Dinamalar.
-
20th May 2016, 01:21 PM
#348
Senior Member
Seasoned Hubber
Dhiyavukku Thiurumanam Cricket captanai manakiraar.
http://cinema.dinamalar.com/tamil-tv...et-Captain.htm
Nandri.Dinamalar.
-
30th May 2016, 06:51 PM
#349
Moderator
Diamond Hubber
கலெக்டராக விரும்பும் பிரியங்கா
இமயம் மற்றும் கேப்டன் டி.வியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இப்போது பிசியான சீரியல் நடிகை. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, பைரவி தொடர்களில் நடித்தார். இப்போது பிரியமானவளே, வம்சம் தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஆகிவிட்டாலும் அவ்வப்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுக்கிறார். நடிப்பு, தொகுப்பு இரண்டிலும் சாதனை படைக்க விரும்பினாலும் அவருக்கு இன்னொரு விருப்பம் இருக்கிறதாம். அது ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்பது. இதற்காக இப்போது தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார். “என்னதான் நடிகை, தொகுப்பாளினி என்றாலும் இதன் மூலம் மக்களை எண்டர்டெயின்மெண்ட்தான் பண்ண முடியும். மக்களுக்கு சேவை செய்யணும்னா கலெக்டர் ஆகணும். அதற்காக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்” என்கிறார் பிரியங்கா. இதையேதான் நடிகை ஆர்த்தி பத்து வருடமாக சொல்லி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்
-
7th June 2016, 07:28 PM
#350
Moderator
Diamond Hubber
செல்லமே, என் இனிய தோழியே, கண்மணியே, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷில்பா. சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இவர், தேடிவரும் எல்லா தொடர்களையுமே ஏற்றுக்கொள்வதில்லையாம். கதாபாத்திரங்கள் தனக்கு பிடித்தால் மட்டுமே ஏற்று நடித்து வருகிறாராம்.
இதுபற்றி ஷில்பா கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை பாசிட்டிவ், நெகடீவ் என எல்லாவிதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். அதோடு எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதைகளில் முக்கிய வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் ரொம்ப பரிட்சயம். அதோடு நான் ஆரம்பத்தில் இருந்தே வெயிட்டான வேடங்களாக நடிப்பதால் என்னிடமிருந்து வித்தியாசமான நடிப்பை எதிர்பார்ப்பார்கள்.
அதனால்தான், நான் உப்புசப்பில்லாத கேரக்டர்களில் எக்காரணம் கொண்டு நடிப்பதில்லை. சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன். அதோடு, நேயர்களுக்கு பிடிக்கிறது என்பதை விட நான் ஏற்று நடிக்கும் வேடங்கள் முதலில் என்னை கவர வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நான் எந்த சீரியல்களிலும் நடிப்பதில்லை என்று கூறும் ஷில்பாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லையாம். இப்போதைக்கு சீரியல்களில் நடிப்பதற்கு அவருக்கு நேரம் போதுமானதாக உள்ளதாம்.
நன்றி: தினமலர்
Bookmarks