-
24th May 2016, 04:18 PM
#1
Senior Member
Diamond Hubber
மதுண்ணா! சின்னா!
இதிலும் ராஜஸ்ரீதான். ஆங்கில வரிகள் ஆரம்பம்தான். உடன் நாகேஷ், ஏ.எல்.ஆர். ஈஸ்வரி குரல் கேட்டால் கல்லும் கனியாதோ! சும்மா பொறி பறக்கிறது. இசை இன்ப வெள்ள உற்சாகம்..
எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப........................................ ..... .....................................ப் பிடித்த பாட்டு.
பாடல் துவங்குமுன் ஒரு சொக்க வைக்கும் 'ஹா...ய்' சொல்வாரே ராட்சஸி! ஆரம்பத்திலேயே டாப்.
Haai
Girls on the beach
b-e-a-c-h
Birds on the tree
t-r-e-e
பெண்ணும் பறவையும் free free
டண்டண்டண் டண்டடண் டண்டண் டண்டண் டண்
(சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்)
டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(முத்தத்தைப் பார்த்தபின் மூடி வையுங்கள்)
டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்)
எல்லாம் நமக்காக
வெள்ளி அலை கரையினில் துள்ளி வந்து விழுவதும் உள்ளிருந்த பொருள்களை அள்ளி வந்து தருவதும் தென்னை மரம் அசைவதும் தென்றலுக்கு இசைவதும் எல்லாம் நமக்காக
சரண வரிகளை மேற்கண்ட டியூனோடு பொருத்திப் பாருங்கள்.
அற்புதமாய் இருக்கும்.
இடையிசையில் ஒலிக்கும் வாத்தியக் கருவிகளின் இனிமையை எடுத்துரைக்க வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு பிரம்மாண்டம்!
'பக்கத்துக் காத்துக்கு பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் பொங்குது
வெட்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
எல்லாம் எதற்காக
பச்சைக்கிளி பறப்பதும் இச்சைக்கிளி அழைப்பதும் முத்தமிட்டு மகிழ்வதும் முன்னும் பின்னும் அசைவதும் கட்டிக் கொள்ளும் உறவினை திட்டமிட்டு உரைப்பதும் எல்லாம் நமக்காக' ('முன்னும் பின்னும்' அடி தூள்)
அடேங்கப்பா!...மூச்சு விடாமல் மூர்க்கத்தனமாய் இப்படி பாட அரக்கியால் மட்டுமே இயலும்.
மதுண்ணா!
ஒரு சின்ன சுவாரஸ்யம் இந்தப் பாட்டில். நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இரண்டாவது சரணத்தின் இரண்டாவது வரியான
'பட்டத்து ராணியின் இதயம் பொங்குது' என்ற வரி முதல் முறை வரும் போது ஈஸ்வரி 'பொங்குது' என்று பாடியிருப்பார்.
அதே வரி இரண்டாம் தரம் மீண்டும் வரும் போது 'பட்டத்து ராணியின் இதயம் தூங்குது' என்று ஈஸ்வரி மாற்றிப் பாடியிருப்பார். காது கிழிந்துதான் சொல்கிறேன். ராட்சஸி மாற்றிப் பாடி விட்டாரா?... இல்லை... பாடலே அப்படித்தானா?
ஏன் இந்த மாற்றம்? 'பொங்குது' 'தூங்குது' என்று மாறியதை தெரிந்து கொள்ள உள்ளத்தில் ஆசை பொங்குது.
சின்னா!
உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே? என்னாது?
Last edited by vasudevan31355; 24th May 2016 at 04:23 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th May 2016 04:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks