-
23rd July 2016, 09:39 AM
#1941
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan remembered in Puducherry
Puducherry, July 21: Chief Minister V Narayanasamy today paid homage at the statue of the veteran stage and film actor Sivaji Ganesan on his 15th death anniversary. Ministers, legislators and Deputy Speaker V P Sivakolundhu were among those who paid floral tributes at the statue of the iconic figure of Tamil cinema. Delegates of different outfits and functionaries of various associations also paid homage at the statue.
Read more at: http://www.oneindia.com/puducherry/s...y-2160044.html
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd July 2016 09:39 AM
# ADS
Circuit advertisement
-
23rd July 2016, 10:15 AM
#1942
Senior Member
Devoted Hubber
தன் அளப்பறிய கலைத்திறமையால்
சிவனை, கண்ணனை, கந்தனை,
கர்ணனை, திருமாலை, அப்பர் பெருமானை,
கப்பலோட்டிய தமிழனை, கட்டப்பொம்மனை
நம் கண்முன்னே நிறுத்தியவர்.
... மன்னனுக்கு ஒருநடை,
அண்ணனுக்கு ஒருநடை,
ஏர் உழவனுக்கு ஒருநடை,
பெருங்கிழவனுக்கும் ஒருநடை,
மீனவனுக்கு ஒருநடை,
அன்பு மாணவனுக்கு ஒருநடை,
கள்வனுக்கு ஒருநடை,
கடுங்காவலனுக்கும் ஒருநடை,
கவிஞருக்கு ஒருநடை,
நற்காதலனுக்கு ஒருநடை - என்று
தன் தனித்திறன்மிக்க நடிப்பாற்றலால் நாட்டுமக்கள்
உள்ளத்திலும், இல்லத்திலும் நீண்டப் புகழோடு நிலைத்து வாழ்பவர்.
சிம்மக்குரலால், தன் சின்ன நாவசைவால்
நம்தமிழர் நாட்டிற்கு நல்லதமிழ் உச்சரிப்பைக்
கற்றுக்கொடுத்த கலையுலகப் பேராசான்.
உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்
நமது ஐயா நடிகர் திலகம் அவர்களுடைய
15 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
அந்த ஒப்பற்ற கலை உலக மேதைக்கு
நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
https://www.facebook.com/senthamizha...5890489642628/
(சீமான் அவர்களின் முகநூலில்இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd July 2016, 10:31 AM
#1943
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th July 2016, 12:11 PM
#1944
Junior Member
Newbie Hubber
அன்புள்ள ரஜினி ரசிகர்களுக்கு,
நான் கபாலி படத்தை மிகவும் ரசித்தேன். தலைவரின் மாற்றம் பிடித்தே இருந்தது. இந்த வயதிலும்,நிறைய உடல் உபாதைகளை சுமந்தும், இப்படி ஒரு energy level ,commitment and youthful exuberance யாரிடமும் காண முடியாது.வாழ்த்துக்கள்,மகிழ்ச்சி.
நான் சொல்வது என்னவென்றால், நடிகர்திலகத்திடம் இருந்து emoting skills ,style ,screen presence இவற்றை ரஜினியும் ,variety ,get up change ,unpredictabilty in movies என்பதை கமலும் எடுத்துள்ளனர்.
நடிகர்திலகம் நடித்து 1973 ஜூலை யில் வந்த படம் எங்கள் தங்க ராஜா.(ரஜினி படவுலகுக்குள் நுழையும் முன் இரு ஆண்டுகள் முன்பே)இதில் நடிகர்திலகம் பைரவன் என்று ஒரு பாத்திரம் பண்ணியிருப்பார். அதன் பின் அதனை அவர் repeat செய்யவில்லை. இதில் ரஜினியின் மூலத்தை தரிசிக்கலாம். இதை நான் நிறைய ரஜினி ரசிகர்களிடம் போட்டு காட்டிய போது ,ஆச்சர்யத்தில் மிதந்தனர். தங்கள் தலைவர் ஏன் நடிகர்திலகத்தின் மீது அத்தனை மரியாதை வைத்துள்ளார் என புரிந்து கொண்டனர். இதோ உங்கள் பார்வைக்கு அந்த படத்தின் ஒரு பாடல் காட்சி.
-
25th July 2016, 02:52 PM
#1945
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 04:10 AM
#1946
Senior Member
Devoted Hubber
'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு.
நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இதில், சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடத்துள்ளனர்.
வழக்கமாக வார விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த 22-ம் தேதி நடிகர் ரஜினி நடித்து வெளியான ‘கபாலி’ படம், திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, கோடிக்கணக்கில் வசூலித்து வரும் நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள கெயிட்டி திரையரங்கில் நேற்று முன்தினம் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் வெளியானது.
படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் கூட்டம் வந்த நிலையில், நேற்று மாலை நேரக் காட்சியில் திரையரங்கு நிறைந்தது. இங்குள்ள 324 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இது, சிவாஜிகணேசனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை கூறும்போது, “நடிப்பால் மக்களைக் கவர்ந்த சிவாஜியின் நினைவுகள் மக்களைவிட்டு மறையவில்லை என்பதை, இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்றார்.
திரையரங்கு மேலாளர் இக்பால் கூறும்போது, “இந்தப் படத்தை திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அதிக கூட்டம் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் ‘ஹவுஸ்புல் போர்டு’ மாட்டியுள்ளோம். டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலர் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.
the hindu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 04:15 AM
#1947
Senior Member
Devoted Hubber
Last edited by sivaa; 28th July 2016 at 01:48 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 09:46 AM
#1948
Junior Member
Newbie Hubber
இதுதான் வஞ்ச புகழ்ச்சி. இதை செய்பவர் ஒரு பத்திரிகை தர்மம் தெரியாதவராகவே இருக்க முடியும். ஒரு பக்கம் அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனைகள் செய்வது, நடிகர்திலகத்திற்கு ,தன சார்பு நிலை காட்டாமல் ஏனோதானோ என்று எழுதுவது.
இதன் உள்ளரசியலை புரிந்து கொள்ளாமல் நம் ரசிக கண்மணிகள் இதை திரும்ப திரும்ப திரியில் போடுவது நமது அறியாமையை காட்டுகிறது.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்ற விஷம பிரயோகம். இது எல்லோருக்குமே பொருந்தும்? அப்படியானால் தமிழ் ஹிந்து எல்லோரையும் விமரிசன கண்ணோட்டத்தில்தானே அணுக வேண்டும்? அஷ்டோத்தர நாமாவளி பாடும் போது எல்லோருமே அரசியல்-சினிமா இவற்றில் விமரிசனத்திற்கு உள்ளாக்க பட வேண்டியவர்களே என்ற பகுத்தறிவு எங்கே போனதாம்?
1)பலர் உண்டாம் ,அதில் சிவாஜியும் ஒருவராம் .
2)இன்றைய தலை முறையினர் அவரை ரசிக்க முடியாது என்ற பல்லவி. இதை விட ஆண்ட புளுகு இருக்க முடியாது. நமது கர்ணன் படத்தை பார்த்து களித்த 50% இளைஞர்களே.
3)overacting என்ற வறட்டு பல்லவி. Different school of Acting என்பதை சொல்லியும் இதை விட அபத்த களஞ்சிய ஒன்று இருக்கவே முடியாது.
4)சுஜாதா ,தான் சிவாஜி ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் தனது சிறுகதைகளில் ,தான் ஆனந்த விகடனில் எழுதிய இரங்கல் செய்தியில்.அவர் போகிற போக்கில் ராஜ ராஜ சோழனை பற்றி சொன்னது மட்டும் எடுத்தாள பட்டுள்ளது.
5)இது முழுவதுமே நடுநிலை என்ற நிர்பந்தத்திற்காக சிவாஜி வெறுப்பாளர் ஒருவரால் எழுத பட்ட ஒப்புக்கு சப்பாணி பதிவு.
6)எனது சந்தேகம் தமிழ் ஹிந்து சினிமா பகுதி பொறுப்பாளர் மீது. ஆசிரியர் அசோகன் மிக நாணயமானவர். நமது ரசிகர்கள் இன்றே அவர் பார்வைக்கு ஈ மெயில் அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கும் படி கோருகிறேன்.தமிழ் ஹிண்டுவின் செய்திகள் விஷமத்தனமாக மாறுவதை பலமுறை சுட்டி காட்டியுள்ளேன்.
Last edited by Gopal.s; 26th July 2016 at 10:14 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2016, 07:44 PM
#1949
Junior Member
Senior Hubber
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 23.07.2016 முதல் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நடிகர்திலகத்தின் 175வது வெற்றிக்காவியமான அவன்தான் மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தினை நமது மக்கள்தலைவரின் புகழுக்கு எங்கிருந்து களங்கம் வந்தாலும் ஆதாரத்துடன் தட்டிக்கேட்கும் அருமை சகோதரர் சுப்பு அவர்கள் வெளியீடு செய்தார். தலைவரின் எந்த படம் போட்டாலும் ஞாயிறு மாலைக் காட்சி கெயிட்டி திரையரங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்பது திருச்சியில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும்.
இந்த முறை மேலும் ஒரு சிறப்பாக சமீபத்தில் திரு்ச்சியில் உதயமான அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அகிலஇந்திய தலைவர் திருச்சி சீனிவாசன் அவர்களின் தலைமையில் கெயிட்டி தியேட்டரில் குவிந்தனர். தலைவரின் கட்அவுட்டிற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாலை அணிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் திருச்சி கெயிட்டி திரையரங்கில் திரண்டனர்.
திருச்சி மாரீஸ் குரூப் ரசிகர்கள் சார்பில் தலைவரின் கட்அவுட்டிற்கு பொியமாலை போடப்பட்டது. அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்து அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு திருச்சி ரசிகர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது, அந்த வழியாக சென்றவர்கள் இந்த தியேட்டரில் புதிய படம் வெளியாகியுள்ளதா என்ற சந்தேகத்ததுடனே சென்றனர்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
26th July 2016, 07:44 PM
#1950
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks