-
31st August 2016, 10:55 PM
#2111
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st August 2016 10:55 PM
# ADS
Circuit advertisement
-
31st August 2016, 10:56 PM
#2112
Junior Member
Diamond Hubber
-
1st September 2016, 08:56 AM
#2113
Junior Member
Newbie Hubber
Ganesh Pooja around - He was primely responsible for triggering Tamil God into rage of Fury ,thus revelaling Thiruvilayadal, showing prowess of our Acting God,setting Benchmark for Lord Shiva.
திருவிளையாடல்- 1965.
சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
அடுத்த episode love teasing பிரச்சினை.
அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
-
6th September 2016, 10:55 AM
#2114
Senior Member
Devoted Hubber
இங்குள்ள பிரச்சினைதான் என்ன?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th September 2016, 06:46 PM
#2115
Junior Member
Devoted Hubber
ஏவி.எம்முக்கு பலூன் விளம்பரம் மூலமாக கிடைத்த அனுபவம் என்ன?
சென்னையில் உயரத்தில் எந்த விளம்பரம் செய்வதாக இருந்தாலும் விமான நிலைய நிர்வாகத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. அப்படி இருப்பது ஏவி.எம். நிறுவனத்திற்கு தெரியாது.
அதே போல ஹைட்ரஜன் சிலிண்டரின் உதவியால் பறக்கும் அந்த பலூனுக்காக சிலிண்டர் வைக்கவும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஏவி.எம். இரண்டையும் செய்யவில்லை.
விமான நிலைய அதிகாரிகளிடமிருந்தும், `இன்ஸ்பெக்டர் ஆப் எக்ஸ்புளோஸிவ்ஸ்’ அலுவலகங்களிலிருந்தும் தனித்தனியாக ஏவி.எம்முக்கு நோட்டிஸ்கள் போயின.
அதை ஒரு வழியாக தீர்த்தார்கள்.
`பாவமன்னிப்பு’ வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது.
பாடல்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்த ஏவி.எம். செட்டியார் ஒரு புதிய உத்தியை கையாண்டார்.
அதன்படி `பாவமன்னிப்பு’ பாடல்கள் போட்டி ஒன்றை நடத்தினார்.
படத்தின் பாடல்களை நேயர்கள் தங்கள் ரசனைப்படி வரிசைப்படுத்தி எழுத வேண்டும், பின்னர் நீதிபதிகள் வரிசைபடுத்தியிருப்பதற்கு எது ஒத்திருக்கிறதோ அதற்குப் பரிசு. பெருமளவில் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
பெரிய நோட்டுப் புத்தகங்கள், லெட்ஜர்களிலெல்லாம் பல்வேறு காம்பினேஷன்களில் பாடல்களை வரிசைப்படுத்தி அவர்கள் எழுதியனுப்பியவை ஏவி.எம்மில் ஓர் அறை முழுவதும் குவிந்தது. யாரும், எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இதனால் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள்.
கவிதாயினி சவுந்தரா கைலாசம் (முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார், மறைந்த நீதிபதி கைலாசத்தின் மனைவி) உள்ளிட்ட பெருமக்கள் நீதிபதிகளாக இருந்தார்கள்.
ஸ்டூடியோ வளாகத்தில் திறந்தவெளியில் ஒரு (கரும்பலகையில் `தீர்மானிக்கப்பட்ட பாடல் வரிசை’ காலம் பல கடந்த – அத்தான் – என்னத்தான், வந்த நாள்முதல் – காலங்களில் அவள் வசந்தம் – பாலிருக்கும் பழமிருக்கும் – ஓவியம் கலைந்ததென்று – எல்லோரும் கொண்டாடுவோம் – சாயவேட்டி) சாக்பீஸில் எழுதிப் போட்டு எங்கள் ஊழியர்களிடம் நேயர்களின் கடிதங்களை பிரித்துத் தந்து சரிபார்க்கச் சொன்னோம். ஏதோ பெரிய தேர்வு ஒன்றில் கலந்து கொள்வது போல எங்கள் ஊழியர்கள் அமர்ந்து ஈடுபட்டார்கள். ஒரு திரைப்படத்தின் பாடல்களையும், ரசிகர்களையும் சம்பந்தபடுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்டது, அதுதான் தமிழில் முதல் தடவை என்று அனைவரும் ஏவி.எம். நிறுவனத்தை பாராட்டினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், வெற்றி பெற்றவர்கள் பரிசு தொகையான பத்தாயிரம் ரூபாயை பகிர்ந்து கொண்ட போது தபாலுக்குச் செய்த செலவு கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர்களுக்கு ஒரு `த்ரில்’ இருந்தது.
`பாவமன்னிப்பு படத்தைப் பார்த்தார் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். அவர் நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகை. அதேபோல் சிவாஜியும் லதாவின் ரசிகர்.
படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் `எனக்கு இந்தப் படத்தில் 16 எம்.எம். பிரிண்ட் ஒன்று வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.
அந்த அளவுக்கு அவர் `பாவமன்னிப்பு’ படத்தை ரசித்தார்.
அவர் அப்படிக் கேட்டபோது ஏவி.எம். பெருமை கொண்டது.
சிவாஜியின் `பா’ வரிசையில் வந்த அடுத்த படம் ‘பச்சை விளக்கு’.
ராம. அரங்கண்ணல் மற்றும் இரு நண்பர்களோடு சேர்ந்து ஏவி.எம். எடுத்த இந்த படம் 3.4.1964 அன்று வெளியானது.
இந்த படத்தில் சிவாஜி ஒரு இன்ஜின் டிரைவர். நாகேஷ் அவரது நண்பர்.
இந்த அடிப்படையை வைத்து ஒரு கதையை உருவாக்கினார்கள்.
படம் பாதியளவு வளர்ந்துவிட்டது. ஆனால், படத்துக்கு பெயர் முடிவாகாமலேயே இருந்தது.
ஏவி.எம். சரவணன் வழக்கமாக ஸ்டூடியோவுக்கு காரில் போகும் போது தி.நகரில் கிருஷ்ண கான சபா அருகே திரும்பினால் சிறிய ரயில்வே கேட் இருக்கும். அதைத் தாண்டித்தான் அவர் போக வேண்டும்.
ஒரு நாள் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
“இன்ஜின் டிரைவரை மையமாக வைத்து எடுக்கப்போகும் படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்பது முடிவாகாமல் இருந்த நிலையில், ரசிகர்களுக்கு ஒரு யூகமாக அந்தப் படத்தை பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன்”.
அப்போது தனக்கு சட்டென்று தோன்றிய யோசனையை செயல்படுத்தினார் சரவணன்.
ரயில்வே கேட் அருகில் மூன்று ` பேனல்’ களை வாடகைக்கு எடுத்து அவற்றில்` சிவாஜி நடிக்கும்’ என்று போட்டு வெறுமனே ஒரு பச்சை விளக்கின் படத்தை – சிக்னலில் பச்சை விழுமே அல்லது கார்டு கையில் வைத்திருப்பாரே அது போன்ற படத்தை வரைந்து அதன் கீழ் `வருகிறது’ என்ற வார்த்தைகளுடன் விளம்பரப்படுத்தினார்கள்.
படத்தின் பெயர் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டபோது பல பெயர்கள் அலசப்பட்டன.
ஆனால் இயக்குநர் பீம்சிங் போன்றவர்கள் `இதில் விவாதிக்க என்ன இருக்கிறது? அதுதான் நீங்கள் `பச்சை விளக்கைப் போட்டு வருகிறது வருகிறது என்று பேச வைத்துவிட்டீர்களே!
படத்தின் பெயர் ‘பச்சை விளக்கு’த்தான் வேறென்ன ?’ என்று முடிவுக்கு வர, `பச்சை விளக்கு’ என்ற பெயர் அப்படித்தான் அந்த படத்திற்கு வந்தது.
இந்த படத்திலும் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி கலக்கியிருந்தார்கள்.
‘பாவமன்னிப்பு’ படத்தை போலவே இந்த படத்திற்கும் ஏவி.எம். நிறுவனம் போட்டி வைத்திருக்கலாம்.
அந்த அளவுக்கு பாடலில் புகுந்து விளையாடியிருந்தார்கள்.
இன்றைக்கு ‘பச்சை விளக்கு’ படம் என்றால் மக்களுக்கு அதன் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.
`ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,’ `கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ ‘குத்து விளக்கு எரிய’ ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தோழி’ இன்றைக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள்.
இந்த படத்தில் நாகேஷின் நடிப்பு மிக அருமை.
அதுவும் அந்த படத்தில் மிகவும் பிரபலமான ` கேள்வி பிறந்தது அன்று’ பாடலை பாடிக்கொண்டே சிவாஜி ரயில்வே டிராக்கில் நடந்து கொண்டே வருவார்.
அவர் கூட நாகேஷ் நடந்து வருவார்.
பாடலை காதால் கேட்ட ரசிகர்கள், சிவாஜியை விட நாகேஷின் அங்க அசைவுகளுக்காக கைதட்டினார்கள்.
இந்த படமும் ஒரு வகையில் அண்ணன்– தங்கை பாசப்பிணைப்பு கதைதான். ஆனால் தன்னை வளர்த்தவரின் அனாதையான மகளை தன் தங்கையாக சிவாஜி ஏற்றுக்கொள்வார்.
பாடலும், கதையும் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சிக்கல் வந்தது!
(தொடரும்)
-
6th September 2016, 06:48 PM
#2116
Junior Member
Devoted Hubber
What happened before it was Page no. 214, now it is page no. 212.
-
6th September 2016, 10:27 PM
#2117
Junior Member
Diamond Hubber
-
7th September 2016, 07:21 AM
#2118
Junior Member
Newbie Hubber
சிவாஜியின் நகைச் சுவை நடிப்புக்கு, எல்லோரும் சபாஷ் மீனா,பலே பாண்டியா,கலாட்டா கல்யாணம் ,ஊட்டி வரை உறவு இவற்றையே உதாரணம் காட்டுவர். அவர் முழு நீள நகைசுவை பட பட்டியல் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)தொடங்கி அன்பே ஆருயிரே (1975) வரை நீளும். நடிகர்திலகம், விரும்பி பண்ணியவை நகைச் சுவை
பாத்திரங்களே.
ஆனால் என்னுடைய பார்வையில் ,அவர் நகைச்சுவையின் முழு வீச்சு சூழ்நிலை காமெடி(situational ) என்ற சூழலில் ,பகுதி நகைச்சுவையாக வந்த படங்களில் அமைந்தவை. வசன காமெடி,ஸ்லாப்ஸ்டிக் என படும் கொனஷ்டைகள் ,அதற்கேற்ப உடல் வாகு,குரல் வாகு கொண்டவர்களுக்கே மிக பொருத்தம். (சந்திரபாபு,நாகேஷ்,சுருளி,வடிவேலு) ஓரளவு ஸ்லாப்ஸ்டிக் செய்வார்.(புன்னகை மன்னன்,பேசும் படம்)சிவாஜியின் தோரணை மிகுந்த ஆண்மைக்கு ,சூழ்நிலை நகைசுவை காட்சிகளே பிரதான தீனி போட்டன.இதிலும் நான் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் உள்ளவையா(நகைச்சுவைக்கு) யானறியேன்.
1)நீல வானம்.
2)இருவர் உள்ளம்.
3)தெய்வ மகன்.
4)செல்வம்.
5)சபாஷ் மீனா.
6)சுமதி என் சுந்தரி.
7)கை கொடுத்த தெய்வம்.
8)நவராத்திரி.
9)ராஜா
10)பாரத விலாஸ்
இதில் எனக்கு பிடித்த காட்சிகளை,நடிகர்திலகத்தின் உன்னத நகைச்சுவை வெளியீட்டை அலச போகிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th September 2016, 07:11 PM
#2119
Junior Member
Devoted Hubber
Kamal Hassan about NT family,
-
7th September 2016, 07:34 PM
#2120
Junior Member
Devoted Hubber
Nadigar Thilagam Award Function 2014
Bookmarks