-
7th November 2016, 11:30 PM
#391
Moderator
Diamond Hubber
கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - பானுமதி
மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடைபெற்ற போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கைரேகையை பார்த்து 'இது ஒரு அபூர்வமான ஜாதகம்' என்று ஸ்டெடி செய்து அவரிடத்திலேயே கூறினேன்.
ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டாக, டைரக்டராக, தயாரிப்பாளாராக இருந்து பெரிய அரசியல் தலைவராக, மக்கள் மனதில் சிறந்த இடத்தைப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சாராக அவர் வந்திருப்பது - எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவது சாதாரணமானதல்லவே? இதற்காக கலைஞர்கள் சமுதாயமே பெருமைப்பட வேண்டும்.
என்றோ நான் அவர் கை ரேகையை பார்த்து கூறியதை அதன் பின்பும் பல ஆண்டுகளுக்குப் பின்பும், மறவாமல் நினைவில் வைத்திருந்து அதைப்பற்றிச் சொல்லுவார்.
இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த பின்பும், எந்த வகையிலும் அவர் மாறாமல் இருப்பதைக் காண்கிறேன்.
இருபது வருடங்களுக்கு முன்பிருந்து அவரை நான் பார்த்து வருகிறேன். நடிக்கும் போது தன் வரையில் நன்றாகச் செய்துவிட்டுப் போய் விடுவோம் என்று நினைக்கவே மாட்டார். தனது வேடத்தை மட்டுமல்ல அருகில் நடிப்பவர் கேரக்டரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புவார். பெரிய ஆர்ட்டிஸ்ட் சின்ன ஆர்ட்டிஸ்ட் என்று வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் சொல்லித் தருவார்.அகம்பாவம் என்பதே இல்லாமல் எப்போதும் அடக்கமாக இருப்பார். அதனால்தான் எல்லோரிடமும் அவரால் அன்புடனும் பண்புடனும் பழக முடிந்தது.
ரொம்ப மரியாதையாக கவுரமாக நடந்து கொள்ளக் கூடியவர். இன்னொருவர் கஷ்டம் காண சகிக்க மாட்டார். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தெரியாமல் அனைவருடனும் பற்றோடு இருப்பவர்.
இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் கூட, 'அம்மா, சவுக்கியமா?' என்று பரிவோடு கேட்பார். அப்போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். பல வெற்றிகளை சந்தித்து..பெரும் புகழ் பெற்று.பெரிய பதவிக்கு வந்த பிறகும் அப்படியே இருப்பது அவருக்குள்ள தனிச்சிறப்பு. இதுபோல எல்லோரும் இருக்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் கவனமாக ஜாக்கிரதையாக இருப்பதால் பயமின்றி இருக்கிறார்
-
7th November 2016 11:30 PM
# ADS
Circuit advertisement
-
7th November 2016, 11:33 PM
#392
Moderator
Diamond Hubber
நாடக உலகில் சிரிப்பு நடிகராகத் தோன்றி, சினிமா உலகில் அப்பாவாகி, அப்புறம் தயாரிப்பாளராக மாறி இன்று கதாசிரியராகவும் இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் வி.கே.ராமசாமி.
இவருடைய வளர்ச்சியின் பரிமாணம் என்ன? அனுபவங்கள் எப்படிப்பட்டவை? அவருக்கே உரிய பணியில் அவரை பேச வைத்த பொழுது:எனக்கு 57 வயசு ஆகுதுங்க.ஏழு வயசிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்த்துட்டேன்.நாடகத்திலே 15 வருஷம்.சினிமாவிலே 35 வருஷம். ஆக 50 வருஷமா நடிச்சிகிட்டே இருக்கேன்.
நாடக கம்பெனியில் நான் சிரிப்பு நடிகனாத்தான் இருந்தேன். நாகேஷ் மாதிரி ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லாம் பண்ணுவேன். "தியாக உள்ளம்" நாடகத்திலே பேங்கர் சண்முகம் பிள்ளைங்கிற 60 வயசுக்காரர் வேடம் பண்ணினேன்.
அப்போ எனக்கு வயசு 15.ஏ .வி.எம் செட்டியாரு அந்த நாடகத்த பாத்தாரு.அதையே 'நாம் இருவர்' படமா எடுக்கச்சே எனக்கே அந்த வேஷத்தை கொடுத்துட்டாரு. அதுதான் என் முதல் படம். அதுக்கப்பறம் எக்கச்சக்கமான படங்களிலே அப்பாவாகவே நடிச்சுட்டேன்.
பாகவதர், சின்னப்பா, மஹாலிங்கம், எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன் இப்போ புதுசு புதுசா வறவங்க அத்தனை தலைமுறையிலயும் நடிச்சு, நடிச்சுட்டு இருக்குற ஒரே ஆசாமி நான் ஒருத்தன்தான்.
நான் வாழ்க்கையில செட்டில் ஆனது 1969 ல தான்.அதாவது என்னோட என் சம்சாரம் ரமணி இணைஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு உண்மையான வாழ்க்கை ஆரம்பமாச்சு.
அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான். அது என் சொந்தக் கதை. வாழ்க்கை வரலாறு மாதிரி 36 பக்கம் எழுதி வச்சிருந்தேன். விவகாரம் வந்து கோர்ட்டுக்கு போக வேண்டியதாயிடுச்சு. என் வாழ்க்கை வரலாறும் கோர்ட்டுக்கு போயிருக்கு.
எனக்கு டைரக்சன்ல என்ன அனுபவம்னு நீங்க கேக்கலாம். ஒரு அனுபவமும் இல்லை.இந்த 35 வருசமா பார்த்தது, பேசினது,நடிச்சது, படம் எடுத்து, கேள்விப்படறது எல்லாமே அனுபவம்தான்.
குடிப்பழக்கம் எல்லாம் முன்னே இருந்தது. இப்போ நிறுத்திட்டேன். அதுக்கும் ரமணிதான் காரணம். ரேஸுக்கு கூட போறத நிறுத்திட்டேன்.
சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் ரொம்ப நாள் சிநேகிதம்.அவரு கூட என்னை நீ பொழைக்க தெரியாதவன்டா என்பார். அவர் சொன்னதும் வாஸ்தவம்தான். இத்தனை வருஷம் இத்தனை படங்களில் நடிச்சும் கடன்காரனாயிருக்கேன்னா பாருங்களேன்.
சந்திப்பு: திரைஞானி (சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.82 இதழ்)
Last edited by aanaa; 7th November 2016 at 11:38 PM.
"அன்பே சிவம்.”
-
7th November 2016, 11:35 PM
#393
Moderator
Diamond Hubber
புதிய இளம் டைரக்டர் ஒருவர் , சாதாரணமான நட்சத்திரங்களை வைத்தே ஒரு படத்தை எடுத்து வெற்றிகரமாக ஓட வைத்திருப்பதே ஒரு சாதனைதான்.
'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன்தான் இந்த பெருமைக்குரியவர்.
"டைரக்சன்கிறத நான் ஒரு தொழிலா கத்துக்கிட்டதில்ல. எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்டாகப் பணியாற்றியதில்லை. கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் போன்ற படங்களுக்கு பாக்யராஜுடன் சேர்ந்து ஸ்க்ரிப்ட் ஒர்க் பண்ணி இருக்கேன். ஸ்க்ரிப்ட்ல நாம் என்ன பண்ணிணோம்க்கிறது நமக்குத் தெரியும். படம் வெளிவந்தவுடன் நாம் பார்க்கிறோம். நாம எழுதின ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் எப்படி எழுதியிருக்காருன்னு தெரியுது. இப்படித்தான் நான் டைரக்சன் கலைய கத்துக்கிட்டேன். பிறவியிலேயே கலை உணர்ச்சின்னு ஒண்ணு இருந்தா இதுவெல்லாம் சுலபம்தான்.
படபடவென்று பேச ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.
"நான் ஒரு கதாசிரியன். கதையை எழுதும்போதே ஒவ்வொரு காட்சியாக நம் மனசுக்குள்ளேயே ஒரு திரைப்படம் ஓடி முடிஞ்சிடும்.
என்னதான் நல்ல கதையா இருந்தாலும் ஒரு மோசமான டைரக்டரால் அது படமாக்கப்பட்டால் அது குட்டிச்சுவராத்தான் போகும்.
ஒரு படம் தோல்வி அடைஞ்சா தோல்விக்கு காரணத்தை யார் தலையிலும் போடலாம். கதை சரியில்லை என்றோ, டைரக்சன் சரியில்லை என்றோ அல்லது நடிகர்கள் சரியில்லை என்றோ குற்றம் சாட்டலாம்.
ஆனால் ஒரு வெற்றிப்படத்திற்கு இதுதான் காரணம் என்று வரையறுத்து பிரிக்க முடியாது. டைரக்சன், நடிப்பு, பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கணும்.
பயணங்கள் முடிவதில்லைக்கு கிடைத்த வெற்றியும் இப்படித்தான். என் டைரக்சனுக்கு மட்டும் அந்தப் பெருமை சேராது. எல்லா அம்சங்களும் சிறப்பா இருந்ததும் ஒரு காரணம்.
ஒவ்வொரு படத்திலிருந்து நிறைய கத்துக்கொண்டு அடுத்த படத்துக்கு போகிறேன். இதனால் ஒவ்வொரு படத்திலும் வெற்றி பெறுவேன்னு நம்பிக்கை இருக்கு.
படம் இப்படி ஒரு வெற்றியை அடையும் என்று எதிர் பார்த்தீர்களா?
எதிர்பாராத வெற்றிதான். ஆனாலும் படம் எடுக்கும்போது, 'நிச்சயமாக தோல்வியை மட்டும் சந்திக்காது' என்கிற நம்பிக்கை இருந்தது. குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
- ஆர்.சி.சம்பத்
(சினிமா எக்ஸ்பிரஸ் - 01.07.82)
-
18th November 2016, 12:57 AM
#394
Moderator
Diamond Hubber
“ஸ்கூலிங் எல்லாமே அண்ணா ஆதர்ஷ் கேர்ள்ஸ் ஸ்கூல். எஸ்.ஆர்.எம் காலேஜ்ல விஸ்காம் முடிச்சேன்.”
.ஃப்ரெண்ட்ஸ்..
“என்னோட கலகல குணத்துக்காகவே ஃப்ரெண்ட்ஸ் எக்கசக்கம். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துறுதுறுனு ஓடிட்டும், லொடலொடனு பேசிட்டும் இருப்பேன். விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு எனக்கு அவ்ளோ…ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.”
சீரியல் என்ட்ரி…
“காலேஜ்ல ஒரு கல்ச்சுரல் புரோக்ராம்ல பார்த்துட்டுத்தான் கூப்பிட்டாங்க. அப்பாவோட பர்மிஷனோட அழகி சீரியல் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். அப்புறம், நிறைய மாடலிங்…சினிமா சான்ஸ் கூட வந்தது. அதுக்கப்புறம் ‘பிரியமானவள்’ல அன்பான, அடக்கமான மருமகள் இப்போ.”
நிஜத்தில் நிரஞ்சனி…
“சீரியல் கவிதாக்கும், நிஜ நிரஞ்சனிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னோட வீட்ல சீரியலைப் பார்த்துட்டு ‘நீயாம்மா இது?’ அப்படினு கலாய்ச்சு எடுத்துட்டாங்க. ஆனா, மருமகளா போகிற வீட்டில், அட்லீஸ்ட் கவிதா அளவுக்கு முடியாட்டியும், பாந்தமான மருமகளா இருக்க ட்ரை பண்ணுவேன்.”
சமையல்…
”ஹா..ஹா..ஹா…நல்ல கேள்விங்க. இப்போதான் சமையல் கத்துட்டு இருக்கேன். ஓரளவு தேறிட்டேனு நினைக்கறேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சமைச்சு எடுத்துட்டு போய் எல்லாரையும் சாப்பிட வச்சு, டிரையல் பார்த்து கொடுமை பண்ணிட்டிருக்கேன்.
நிரஞ்சனி – சிவரஞ்சனி; ஆஃப் ஸ்கீரின் ஃப்ரெண்ட்ஷிப்…
”பாவங்க அவ. ஆன் ஸ்கீரினில் மட்டும்தான் அவ என்னை கொடுமை படுத்துவா. வெளில அவளைத்தான் நான் கொடுமைப்படுத்தறேன். ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவ ஒரு நாள் ஃபோன் பண்ணாட்டி கூட, ‘ஏன் ஃபோன் கால் இல்லை?’ன்னு அவ வீட்டுக்கே போய் சண்டை போடுவேன். நிஜத்தில் கவிதா டெரர்…அவந்திகா அப்பாவி” சொல்லிவிட்டு கலகலவென கண்களை உருட்டி சிரிக்கிறார் நிரஞ்சனி.
-
30th November 2016, 08:12 PM
#395
Moderator
Diamond Hubber
சீரியல் நடிப்பை கைவிட்டார் ஷபானா
தேவதை, தாமரை தொடர்களில் நடித்தவர் ஷபானா. மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். இனி தொடர்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தொகுப்பாளினியாகவே தொடர இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் நடிப்பதற்கு நேரம் இல்லை. அதனால்தான் சீரியல்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பில் பல புதுமைகளை செய்யும் திட்டம் வைத்திருக்கிறேன். அதோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். அதிலும் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். இப்போது எனது உடைகளை நானே வடிவமைக்கிறேன். இனி மற்றவர்களுக்கும் செய்ய இருக்கிறேன். என்கிறார் ஷபானா.
நன்றி: தினமலர்
-
30th November 2016, 08:17 PM
#396
Moderator
Diamond Hubber
கே.பாலசந்தர் தொடரில் நடித்தது பெருமை!-சீரியல் நடிகர் சுதாகர் -
குஷ்பு லீடு ரோலில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலில்தான் முதன்முதலாக நான் நடித்தேன். பின்னர், கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடரில் ஒரு நிருபர் வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு பொம்மலாட்டம் தொடரில் நடித்தேன். நான் நடித்த வேடங்கள் சிறியது என்றாலும், பேசப்பட்ட வேடங்கள் என்கிறார் நடிகர் சுதாகர்.
அவர் மேலும் கூறும்போது, பல சீரியல்களில் நடித்தபோதும், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்து மறக்க முடியாது. அவரது அமுதா ஒரு ஆச்சர்யக்குறி தொடரில் நிருபராக நடித்த நான், ஒரு டைரக்டருக்கும், ஹீரோயினிக்கும் இருக்கும் காதலை பத்திரிகையில் எழுதி விடுவேன். அதனால் அந்த டைரக்டருக்கும், எனக்குமிடையே பிரச்சினை வரும். அதோடு, நேத்து வர சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சவன் இன்னைக்கு டைரக்டராகிட்டே என வசனம் பேசுவேன். அதனால் அந்த நேரத்தில் பல டைரக்டர்கள் என்னை தவிர்த்தனர். ஆனபோதும் நான் கவலைப்படவில்லை. கே.பாலசந்தர் சீரியலில் நடித்ததை பெருமையாக எடுத்துக்கொண்டேன். அதோடு சீரியல்களில் இன்னும் அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
மேலும், தற்போது காதல் வழக்கு, மதுரை நரிக்குறவர் போன்ற படங்களிலும் நடிக்கிறேன். பெரிய திரையில் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டபோதும் சீரியலை நான் தவிர்க்கவில்லை. சினிமா-சின்னத்திரை இரண்டிலும் வெயிட்டான வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் சுதாகர்.
நன்றி: தினமலர்
-
30th November 2016, 08:20 PM
#397
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வந்தார் ஆதவ் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். கண்ணதாசன் மகள் அமிர்தா கவுரியின் மகன். இவர் பொன்மாலை பொழுது என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை அவர் குடும்பத்தின் சார்பில் தாய் அமிர்த கவுரியும், சகோதரி டாக்டர் கே.சத்யலட்சுமியும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.சி.துரை என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். காயத்ரி ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஆதவ் கண்ணதாசன் யாமிருக்க பயமே படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வருகிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி நம்பர் ஒண் சீசன் 9 டீமில் இணைந்திருக்கிறார். முறைப்படி டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்றிருக்கும் ஆதவ் நிகழ்ச்சியில் நடிகைகள் மற்றும் போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டி.ராஜேந்தரும், சதாவும் நடுவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "எனது அபிமான நடிகர் டி.ராஜேந்தர் சாருடன் இணைந்து பணியாற்றுவது சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் நடனம் ஆடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் ஆதவ் கண்ணதாசன்.
நன்றி: தினமலர்
-
30th November 2016, 08:23 PM
#398
Moderator
Diamond Hubber
சென்னைக்கு குடிவருகிறார் கீதாஞ்சலி
நாதஸ்வரம் தொடரில் அறிமுகமானவர் கீதாஞ்சலி. அந்த தொடருக்கு இயக்குனர் திருமுருகன் நடத்திய ஆடிசனில் தேர்வு பெற்றார். நாதஸ்வரம் காரைக்குடியில் நடக்கும் கதை என்பதால் அக்மார்க்க காரைக்குடி பெண்ணான கீதாஞ்சலி தேர்வானார்.
அதில் சிறப்பான நடிப்பின் மூலம் பாராட்டுகளை அள்ளினார். நாதஸ்வரம் படப்பிடிப்பு முழுவதும் காரைக்குடியில் நடந்ததால் அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அவர் தற்போது நடித்து வரும் வாணி ராணி தொடர் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடந்து வருகிறது. தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து நடித்து வருகிறார்.
மேலும் சில தொடர் வாய்ப்புகள், சினிமா வாய்ப்புகளும் வருவதால் தனது வீட்டையும், குடும்பத்தினரையும் சென்னைக்கு குடிமாற்றுகிறார் கீதாஞ்சலி. இதற்காக அவர் தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருக்கிறார். அதோடு தன் தங்கையையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
30th November 2016, 08:25 PM
#399
Moderator
Diamond Hubber
தொடர்ந்து என்னை கிண்டல் செய்வதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்
சமீபத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்திருந்தார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனாக ஊர்வசி நடித்திருந்தார். நிகழ்ச்சியை கிண்டல் செய்திருப்பதோடு அதில் இருக்கும் வணிக சமாச்சாரங்களையும் போட்டு உடைத்திருந்தார்கள்.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: தொடர்ந்து என்னையும், எனது நிகழ்ச்சியையும் பற்றி கிண்டல் செய்து வருகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. சொல்வதெல்லாம் உண்மை ஆயிரம் எபிசோட்களை தாண்டியிருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்கள் என்ன முட்டாள்களா? நிகழ்ச்சியை நடத்தும் நான் முட்டாளா?. சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்த ஒரு சம்பவத்தைதான் அம்மணி படமாக எடுத்தேன். தரமான படம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். சினிமாவில் என்னை கிண்டல் செய்கிறவர்கள். என்னைபோல தரமான படத்தை தர முயற்சிக்கலாம். இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
30th November 2016, 08:26 PM
#400
Moderator
Diamond Hubber
நடிகர்கள், சக நடிகைகளை அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? ரேகா வேதனை
சின்னத்திரை தொகுப்பாளினி ரேகா பத்மநாபன். தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தொடரி படத்தில் தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரேகா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
சின்னத்திரை நடிகைகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. சக நடிகர்கள், நடிக்கும்போது மட்டும்தான் நடிகைகளை அம்மா, அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? வேஷத்தை கலைத்து விட்டால் வேறு மாதிரி பார்க்கிறார்களோ என்று வருத்தமாக இருக்கிறது.
காதல் தோல்வி, வேலைவாய்ப்பில்லை, ஏமாற்றம் எதற்காகவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால். தனியாக சென்று படுத்துக் கொண்டு நீங்கள் இறந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுவதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடலை அறுத்து போஸ்மார்ட்டம் செய்வதை பாருங்கள். பின்னர் அதனை எரிப்பதை பாருங்கள். அந்த வேதனையை அனுபவியுங்கள். தற்கொலை எண்ணம் மறைந்து விடும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
நன்றி: தினமலர்
Bookmarks