-
13th November 2016, 08:46 AM
#2521
Senior Member
Diamond Hubber
சாரதா மேடம் அவர்களே!
மகிழ்வுடன் அனைவருடனும் சேர்ந்து தங்களை வரவேற்கிறேன். வருக! வருக!

சிந்தையைக் கவர்ந்த தங்களின் 'சிவந்த மண்' பதிவை என்றுமே மீள்பதிவாக நான் நினைப்பதில்லை. அது எப்போதுமே தலைவர் போல பிரெஷ். அண்ணன் ஒரு கோவில் பதிவும் அது போலவே! புது பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மீள்வருகைக்கு நன்றி!
(மேற்காணும் தலைவரின் அற்புத போஸை, நடிப்பை தாங்கள் வர்ணித்தவிதம்தான் உங்கள் 'சிவந்த மண்' கட்டுரைக்கு மணிமகுடம்)
Last edited by vasudevan31355; 13th November 2016 at 09:00 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th November 2016 08:46 AM
# ADS
Circuit advertisement
-
13th November 2016, 08:54 AM
#2522
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th November 2016, 08:58 AM
#2523
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th November 2016, 08:59 AM
#2524
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th November 2016, 09:09 AM
#2525
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th November 2016, 09:11 AM
#2526
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 13th November 2016 at 09:24 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th November 2016, 11:17 AM
#2527
Senior Member
Diamond Hubber
'அன்பைத் தேடி' (நினைவலைகள்)
புதிய பதிவு
(குறு ஆய்வு)

கனவுக் கதாநாயகன் கனவால் அல்லல்படும் வித்தியாசக் கதைக்களம்தான். எதிர்பார்த்த வெற்றி முடியாவிட்டாலும் இன்று பார்க்க நன்றாகவே உள்ளது. நடிகர் திலகம் கனவில் லயித்து நிஜத்தில் நிம்மதி இழப்பது ஜோர்தான். தன் அக்காளும், அத்தானும் ஈன்றெடுத்த 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' 'பேபி' இந்திரா தன்னால் தொலைந்து பின் இறந்துவிட்டதாக எண்ணி, தன்னுடைய காதல் மனைவி ஜெயா மூலம் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை பரிகாரமாக அக்காள் குடும்பத்திற்குத் தர முடிவு செய்து, அக்காளும், அத்தானும் அனுபவிக்கும் அதே வேதனையை தானும் அனுபவித்தே தீர வேண்டும் என்ற நாயகனின் 'தனக்குத்தானே தண்டனை' முடிவும் வித்தியாசமே. எல்லாமே இருந்தும் ஏதோ சில இல்லாதது போல முழு திருப்தி அடைய இயலாமல் போய் விட்டது. ஆனால் தலைவர் இருக்கையில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் வந்து விடுமா என்ன!
'6 விக்கெட் எடுத்தால் இந்தியா வின்' என்று ஜி.கே சொல்லிச் சென்றுவிட, தன்னை கிரிக்கெட் பௌலராக நினைத்து கனவு கண்டு, அத்தான் பேக்டரியின் பீங்கான் கப்களை பந்தாக சுவற்றில் வீசி தூளாக்கி தூள் கிளப்புவது தூள்.
பழக்காரி நாயகியுடன் அப்பாவியாய் வம்பில் மாட்டித் தவிக்கும் கட்டங்களும் பழங்கள் போலவே இனிமைதான்.
மறந்தும் மனசில் கள்ளமில்லாத மாமாவைப் பற்றி இந்திரா பாடும் 'மாமாவின் மனசு வெள்ளை மனசு' கலக்கல்.
தான் அப்பாவியாய் இருக்கையில் தன்னைக் கலாய்த்த சுபாவை தலையில் பெட்டி தூக்க வைத்து பழி வாங்கும் காட்சிகள் சுவையோ சுவை.
முக்தாவின் பிடித்த கவர்ச்சி வில்லனை, 'ராஜா' ஜம்புவை மற்றும் செந்தாமரையை புரட்டி எடுத்து நடிகர் திலகம் பழி தீர்க்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தோ விருந்து.
குழந்தையைத் தர முதலில் ஒப்புக்கொண்டு, பின் பாசத்தில் வாக்கு மாறும் நாயகியிடம் 'நான் அனுபவிக்கிற சுகத்திலயெல்லாம் உனக்குப் பங்குண்டு... ஆனா எனக்கு கிடைச்சிருக்கிற தண்டனையில உனக்கு பங்கில்லை?' என்று எக்குவது (ப்ளூ கலர் ஷர்ட்டும், டாலருமாக இன்னா அழகாக இருப்பார்!) அருமை.

மனைவி கொடுத்த லாக்கெட்டை கையில் வைத்து தேய்த்தபடியே 'தாயா? குழந்தையா'? என்று 'சிசேரியன்' கண்டிஷனில் ஜெயாவை நினைத்து புலம்பும் கட்டமும் ஜோர். ('உலகத்துல எல்லாருக்கும் மனைவி இருக்காங்க...ஆனா எனக்கு கிடைச்ச மனைவி மாதிரி" என்று அழுகையில் பெருமைப்பட்டு, 'ஆஹா!' என்ற ஒற்றை வார்த்தை தந்து, அடக்கி வாசித்து ஆர்ப்பாட்டம் செய்வார். படத்துலே கொடி நாட்டும் காட்சி இதுதான்.)
கிளைமாக்ஸ் விறுவிறுவிற்காக குழந்தை கடத்தல், வில்லன்கள் மனோகர், ஸ்ரீகாந்த், பைட் என்று மசாலா கலவைகளும் சுவை குன்றாதவை.

கனவுக் காட்சியான 'புத்தர் பெருமான்' 'சாவிலா வீட்டில் சாம்பல் வாங்கி வா' என்று ஜெயாவைப் பணிக்கும் அமைதிக் காட்சியும், திலகத்தின் தூய தமிழ் உச்சரிப்பும் ஓஹோ!. (வல்லவன் நீயே... வையகம் அறியும்" நடிகர் திலகத்திடம் ஜெயா சொல்லும் வசனம் இது)
'பேபி இந்திரா' பெயரை வைத்துக் கொண்டு 'சோ' பேசும் நையாண்டி வசனங்கள் வயிற்றைப் பதம் பார்க்கும். ('அம்மா இந்திரா! உன் உதவி இல்லைன்னா ராமு இந்த வீட்டிலேயே இருக்க முடியாதில்லே! (சிரிக்காம இருக்க முடியுமா?) பேஷ்! பாப்பா இந்திரா! அம்மா இந்தி..ரா! நீ மனசு வச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம்)
'மெல்லிசை மன்னரி'ன் பாடல்கள் இன்னொரு பலம்.
'மிஸ் மெட்ராஸ்' கிராஸ் அணிந்து, சிகப்பு உடை கலக்கலோடு கோல்ட் கிரவுன் சூடி, பொம்மைக் கூந்தல் அலங்காரத்தில் ஜெயா மேடம் 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி' வைத்து செம அழகு. ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் படத்தில் அழகாகத் தெரிவார். உடன் 'வெண்ணுடை வேந்தர்' வெண் கோட் சூட்டில் ஜெயாவைவிட அழகாய் ஆண், பெண் அனைவரையும் பொறாமைப்பட வைப்பார். இதிலும் முதலிடமே! எதிலும்.
படுகேஷுவலாக லுங்கி, ஜிப்பா, பனியன் சகிதம் மைசூர் பிருந்தாவனத்தில் ஜெயாவுடன் 'அன்பர்' போடும் 'புத்தி கெட்ட பொண்ணு ஒன்னு சுத்துதடி என்னையே' பாடல் செம குத்தாட்டம். வெளிப்புறப் படப்பிடிப்பு கண்ணுக்கு ரம்மியம். புஷபலதா குரலில் 'அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்' டாப் ராகம்.
'சிப்பியிலே முத்து...அதில் சிப்பிக்கென்ன சொந்தம்?' என்று கதையோடு ஒட்டிய வாணி ஜெயராமின் பாடலும், அதற்கேற்ற மேடத்தின் நடிப்பும், திலகத்தின் சோக முத்திரைகளும, மெல்லிசை மன்னரின் மென்மையான, இதயத்தை சோகமாக்கும் இனிமையான டியூனும்....பாராட்ட வார்த்தைகள் இல்லை. (இப்பாடலின் இரண்டாவது சரணத்தின் இறுதியில் வரும், தலைவர் புகழ் பாடும் 'ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணை இல்லை' என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை)
'மேஜர்' கன ஜோர். ஜாடிக்கேத்த மூடி விஜயகுமாரி. 'பேபி' இந்திரா என்றும் 'பளிச்'. ஆச்சி, ஸ்ரீகாந்த், மனோகர், செந்தாமரை இவர்கள் வழக்கமாய். 'ராக்கம்மா' சுபா ராங்கி நாகரீக உடையில் சற்றே வில்லித்தனம். சகுந்தலா இல்லாமலா?
கலைஞானம் கதை. தூயவன் வசனம். என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, முக்தாவின் இயக்கம் என்று அனைத்தும் தரம். (முக்தாவின் ஏகப்பட்ட வினோத வில்லங்க வியாதி கதாபாத்திரங்கள் இதிலும் தொடரும். இப்படி கேரக்டர்கள் உண்டு பண்ணுவது முக்தாவின் வியாதி)
பவுர்ணமி நிலவாக இல்லாவிட்டாலும் அமாவாசை அல்ல. முழு நிலவாக பிரகாசிக்கா விட்டாலும் முக்கால்வாசி நிலவாய் ஒளிர்ந்து இப்போது இன்னும் ரசிக்க வைக்கிறது.
என்றும் உங்கள் அன்பைத் தேடும்
வாசுதேவன்
Last edited by vasudevan31355; 13th November 2016 at 03:29 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th November 2016, 03:12 PM
#2528
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th November 2016, 03:30 PM
#2529
Senior Member
Veteran Hubber
ஒப்பில்லாத ஒன்பதாயிரம் பதிவுகளோடு திரியின் பெரும் பணக்காரராக திகழும் (அத்தனையும் வெள்ளை, கருப்புக்கே இடமில்லை) அன்பினிற்கினிய சகோதரர் நெய்வேலியார், ஸாரி ஞானஒளியார் (நன்றி ஆதிராம் சார்) வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தங்களின் தொய்வில்லா தொண்டுக்கு நன்றிகள்.
-
13th November 2016, 05:04 PM
#2530
Junior Member
Senior Hubber
மதிப்பிற்குரிய சாரதா மேடம்...
வணங்குகிறேன்.. தங்கள் எழுத்துகளையும்,
தங்களின் வருகையையும்.
என் போன்ற இளையவர்கள் மிகப் பிரயத்தனப்பட்டு, எழுத்துக் கூட்டி இன்று எழுதுவதை தாங்கள் அன்றே அநாயசமாக
எழுதியவர் என்பதை தங்களின் "சிவந்த மண்"
மீள் பதிவு கர்வமாக அறிவிக்கிறது.
தங்களின் உன்னத எழுத்துகள் தொடர்ந்து வந்து
எங்கள் காலத்தையும் பெருமை செய்யும் என்று
நம்புகிறேன்.
Sent from my P01Y using Tapatalk
Bookmarks