-
22nd November 2016, 11:14 AM
#11
Junior Member
Senior Hubber

வெற்றி! வெற்றி! வெற்றி!
புரட்சித் தலைவருக்கு வெற்றி!
புரட்சித் தலைவிக்கு வெற்றி!
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 19-ம் தேதி நடந்த தேர்தலில் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி 3 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இன்னும் 3 மணி நேரத்துக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி! உறுதி!
43 வருசத்துக்கு முன் ஒரு தனி மனிதர் தனது சொந்த செல்வாக்கையும் மக்களையும் மட்டுமே நம்பி ஆரம்பித்த கட்சி இன்றும், அந்த மனிதர் உடல் அளவில் மறைந்து 29 ஆண்டுகள் ஆகியும் அவரது கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி என்றால் மக்கள் தலைவர், மனிதர் குல மாணிக்கம் புரட்சித் தலைவரின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடம் நிலைத்து நிற்கிறது என்பதை மன மாச்சரியங்களை, வெறுப்பை, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு இதைப் படிக்கும் எல்லாரும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் பிரமிப்பை ஏற்படுத்தும்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையின் திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை என்றும் புரட்சித் தலைவரின் கோட்டை என்பதற்கு மறுபடியும் ஒரு உதாரணம்.
1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு படுத்தபடியே இங்கு வெற்றி பெற்றார். கட்சியும் வெற்றி பெற்றது. அவர் வழியில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சி்கிச்சை பெற்று வரும் புரட்சித் தலைவி அம்மாவும் பிரசாரத்துக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே புரட்சித் தலைவர் ஆசியோடு 3 தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கூடிய சீக்கிரம் அம்மா அவர்கள் பூரண குணம்பெற்று திரும்பிவந்து பணியாற்ற வேண்டும். புரட்சித் தலைவர் அருள் புரிய வேண்டும்.
மனிதப் புனிதர் மங்காப்புகழ் மன்னவர் மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் அவர்கள் வாழ்க!
தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீராங்கனை கட்சியின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீடுழி வாழ்க!
-
22nd November 2016 11:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks