Page 322 of 400 FirstFirst ... 222272312320321322323324332372 ... LastLast
Results 3,211 to 3,220 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3211
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகமும் மதுரை நகரமும்
    ************************************************** **********

    மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்

    1956ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''மதுரை வீரன் '' திரைப்படம் மதுரை மாநகரில் வெள்ளி விழா ஓடி மாபெரும் சரித்திர சாதனை புரிந்தது .

    1958ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நாடோடி மன்னன் '' வெற்றி விழா கண்டு மாபெரும் ஊர்வலத்துடன் பிரமாண்ட காட்சிகளை மதுரை மாநகர் கண்டது .

    மதுரை மாநகரில் ......................

    1965ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''எங்க வீட்டு பிள்ளை '' - வெள்ளிவிழா

    1969ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''அடிமைப்பெண் '' வெள்ளிவிழா

    1970ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''' மாட்டுக்கார வேலன் '' வெள்ளிவிழா

    1973ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''உலகம் சுற்றும் வாலிபன் '' 200 நாட்கள்

    1974ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''உரிமைக்குரல் '' 200 நாட்கள்

    1978ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கடைசி திரைப்படம் ''மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ''.
    மக்கள் திலகத்தின் அரசியல் -மதுரை
    *******************************************

    1957
    1962
    1967
    1971
    1977
    1980
    1984

    தமிழகத்தில் நடைபெற்ற 7 பொது தேர்தல்களில் [ பாராளுமன்றம் மற்றும் சட்ட சபை ] மக்கள் திலகம் அவர்கள் தான் சேர்ந்திருந்த திமுகவிற்கும் 1957-1971 ] பிறகு [1973- 1984] கால கட்டங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் அவருடைய பெயரும் , கட்சியின் சின்னமும் , திரைப்படங்களும் , பாடல்களும் இடம் பெற்று வரலாற்று வெற்றிகள் குவித்தது ஏராளம் .

    குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 1962ல் தேனி சட்ட சபைக்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்தார் .1967ல் மதுரை மாவட்டத்தில் திமுக பல தொகுதிகளை கைப்பற்றியது .1971ல் பெரும்பாலான தொகுதிகளை மதுரை மாவட்டம் கைப்பற்றியது .

    1973ல் மதுரை மாவட்டம் -திண்டுக்கல் -நாடாளுமன்ற இடை தேர்தலில் புதியதாக உதயமான புரட்சித்தலைவரின் அதிமுக முதல் வெற்றி .வரலாற்று வெற்றி .
    1977-1980-1984 மதுரை எம்ஜிஆர் கோட்டையானது என்பது சரித்திர வரலாறு .

    1989 மதுரை -கிழக்கு சட்ட சபை தொகுதி ஒன்று பட்ட அதிமுகவிற்கு கிடைத்த முதல் வெற்றி .

    1991-2001-2006-2011-2016 சட்ட சபை தேர்தல்களில் மதுரை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பதை உறுதி செய்தது .

    மக்கள் திலகத்தின் பழைய திரைப்படங்கள் சுமார் 80 படங்களுக்கு மேல் மதுரை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற மதுரை மாவட்டத்தில் கடந்த 1977 முதல் 2016 இன்று வரை ஓய்வில்லாமல் படங்கள் வெற்றி பவனி வருவதும் திரை உலக சாதனை .

    22.11.2016

    இன்று ஒட்டு எண்ணப்பட்ட மதுரை - திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தொகுதியை தக்க வைத்து கொண்டுள்ளது .42,670 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி
    இரட்டை இலை சின்னம் புரட்சித்தலைவரின் திருமுகம் மீண்டும் வெற்றி கனியை பறித்துள்ளது .

    மக்கள் திலகத்தின் பெயரும் , அவருடைய புகழும் , மாநிலம் முழுவதும் 60 ஆண்டுகளாக வலம் வருவது உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை .
    மேலும் மதுரை கோட்டை - இன்றைய அரசியல் வெற்றி எம்ஜிஆர் புகழிற்கு கிடைத்த வைர கிரீடம் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3212
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகமும் மதுரை நகரமும்
    ************************************************** **********





    மக்கள் திலகத்தின் பெயரும் , அவருடைய புகழும் , மாநிலம் முழுவதும் 60 ஆண்டுகளாக வலம் வருவது உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை .
    மேலும் மதுரை கோட்டை - இன்றைய அரசியல் வெற்றி எம்ஜிஆர் புகழிற்கு கிடைத்த வைர கிரீடம் .
    எஸ்வி அய்யா அவர்களுக்கு,

    எங்கள் மண் மணக்கும் மதுரையில் புரட்சித் தலைவரின் வெற்றிகளை சாதனைகளை புள்ளி விவரத்தோடு துல்லியமாக பட்டியல் போட்ட உங்களுக்கு நன்றி. இவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. எங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு அறிவித்த உங்களுக்கு மிகவும் நன்றி.

    அடுத்த பதிவில் மதுரையில் புரட்சித் தலைவர் அண்ணா சிலைக்கு துணிச்சலாக மாலை போட்ட சம்பவத்தையும் மதுரைக்கும் புரட்சித் தலைவருக்கும் உள்ள தொடர்புகள் நெருக்கம் வெற்றிகள் பற்றியும் தி இந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை பதிவிடுகிறேன். நன்றி.

  4. #3213
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    எம்ஜிஆர் 100 | 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!

    M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

    1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

    இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர்.

    தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

    அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

    சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது.

    மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கியது.

    சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

    1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

    அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது.

    அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

    1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு.

    மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார்.

    1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது.

    1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம்
    ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

    ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

    அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

    நிதானத்துக்கு வந்த ஜப்பானியர், தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இரு கைகளையும் கோர்த்து இடுப்பு வரை முன்னோக்கி வளைந்து ‘‘மன்னியுங்கள்’’ என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு பின்னோக்கி நகர்ந்து போய்விட்டார்.

    படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்.!

    நன்றி - தி இந்து

  5. #3214
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    என் நினைவு தவறில்லை எனில்... மிகக் சரியாக 3 வருடங்கள் இருக்கும்... எந்த வித சிறப்பு நாளும் இல்லாத ஒரு மிக சாதாரண நாளில்...
    மனநிலையில் சற்று குழப்பத்துடன் அமைதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போய் அமர்ந்து இருக்க...

    வயதானவர்கள்... நடக்க இயலாதவர்கள்... கர்ப்பிணி பெண்கள்... இவர்களுக்காக கோவிலுக்குள் இயக்கப்படும் பேட்டரி கார் சப்தம் கேட்டு என் அமைதி குழைந்து திரும்பி பார்த்தால்...

    அய்யா. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்...

    தடாலடியாக எழுந்து கை கூப்பி வணக்கம் சொல்ல... காரை நிறுத்த சொல்லி என்னை அருகில் அழைத்து தன் இரு கைகளையும் என் தலைக்கு மேல் வைத்து "நல்லா இரு கண்ணா..." என்றார்...

    "அய்யா... நான் பத்திரிக்கைகாரன்... நீங்க சரினு சொன்னா... நான் உங்க ரூமுக்கு..."

    இல்ல... எனக்கு 8 .30க்கு ட்ரைன்... இன்னொரு தரம் பார்ப்போம்...

    "இன்னொரு வாய்ப்பு...?" என நான் வாய் விட்டே தயங்கவும்...

    "சன்னதி வரை நடந்து போவோம்ல... அதுவரை பேசலாமா...?"

    என ஜாக்பாட் வாய்ப்பளித்தார்...

    பேட்டரி காருக்கு முன்... நான் சன்னதி வாசலில்...

    காரில் இருந்து அய்யா இறங்க நான் என் கை கொடுத்து உதவ... கீழே இறங்கியவுடன்... அவர் என்னை பார்த்ததும் ...
    "ஓஓ... நீதானா... அதுக்குள்ளே வந்துட்டியா...?" என சொல்லி விட்டு இடுப்பில் கட்டி இருந்த அங்கவஸ்த்திரத்தை இறுக்கி கொண்டு...

    " போகலாமா...? " என்பதாய் தலையாட்டி...கை அசைத்தார்... மௌனமாய்...

    ஓடி வந்த அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இசை சமுத்திரத்தை கேள்வி கேட்க நான் எப்படி தயாரானேன்...?!

    "அய்யா... ஆலாபனை - சாஷ்திரிய சங்கீதம் என இருந்த உங்களை ஜனரஞ்சக பாடல் பாட வைத்தாரே... எம்.ஜி.ஆர். அய்யா... அவர் ஒரு பெரும் ஆளுமை என்பதால் ஒத்துக்கொண்ட பாடலா அது...? "
    - என நொடிப்பொழுதில் நான் கேட்க...? சந்நிதானத்தின் உள்ளே நுழைய படிக்கட்டுகள் ஏற இருந்த சூழலில்...
    என் கை பிடித்து... படியேற...

    " தம்பி... எடுத்த எடுப்பிலேயே அழகான தொடுப்பு... ஈஸ்வரா... ! " என்றவாறு...

    " அது என்ன படம்னு இப்போ சரியா ஞாபகத்துக்கு வரல... ஆனா அந்த படத்துக்கு நம்ம வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் தான் மியூசிக்... அவர் ரொம்பவே கேட்டுக்கிட்டதால தான் நான் ஓகே சொன்னேன்... பட் ரெகார்டிங் போனப்பறம் தான் தெரியும் அது எம்.ஜி.ஆர் சார் படம்னு... கொஞ்சம் தயக்கம் இருந்தது என்னவோ உண்மைதான்... தமிழ் சினிமாவின் ரொம்ப பெரிய ஜாம்பவான் பட் அவரோட ஜானர் வேற ... நம்மள வச்சு என நானும் யோஜனையோட தான் போய் உக்காந்தேன்... எம்.ஜி.ஆர் சார் ஒரு 15 நிமிஷம் லேட்டா தான் வந்தாரு... அவர் வரவும் நான் எழுந்து வணக்கம் சொல்ல... அவர் வந்து என் கைய புடிச்சு உக்கார வச்சு... சூடா பால் கொண்டுவர சொன்னார்... குடிச்சேன்...

    போகலாமா...? - னார் கொஞ்சம் யோஜனையோட போனேன்... ரெகார்டிங்க்ல அவரும் வந்தார் நான் பாடுவேன்... ஊடால ஊடால அவர் பேசுவதாக போனது அந்த ரெகார்டிங்... எல்லாம் முடிவானது...எனக்கும் ரொம்பவே சந்தோசம்... நல்ல ஒரு மியூசிக் பத்தின பாட்டு... தமிழ்ல இந்த மாதிரி பாட்டு தமிழ் மியூசிக் பத்தி விளக்கமா சொல்ற பாட்டு அன்னைய தேதில இல்லாததால நான் ரொம்பவே சந்தோசமா சொல்லீட்டு கிளம்ப போக...

    எம்.ஜி.ஆர் சார் என் கைய புடிச்சு... " ஒரு வேண்டுகோள்... இந்த படத்தோட நாயகன் பலதரப்பட்ட ஆட்களை சந்திப்பதாக போறது கதை... அதுல ஒரு பொண்ணு நாடோடி பொண்ணு ... அவளுக்கும் எனக்கும் ஒரு டூயட் அது கொஞ்சம் லோக்கலா இருக்கும்... வைத்தி உங்க வாய்ஸ் நல்லா இருக்கும்னு சொல்லுறாரு ஆனா உங்ககிட்டே கேக்க கொஞ்சம் கூசுறாரு... அதான் நானே..." - என இழுத்தார்...

    அவர் நினச்சு இருந்தா எல்லாத்தையும் மியூசிக் டைரக்டர் மேல பாரத்த போட்டுட்டு ஷிவ ஷிவ னு உக்காந்துஇருக்கலாம் ஆனா அவர் அப்படி செய்யல... அவருக்காக இவர் தூது வரணும்னு அவசியமும் இல்ல...
    அவர் அப்ரோச் பண்ணுனது எனக்கு புடிச்சுடுச்சு நான் ஓகே சொல்லீட்டு ஒரு 10 நாள் கழிச்சு பாடுனதுதான் அந்த குருவிகார பாட்டு..." என அதிரடி மழையாய் பொழிந்தார்...




    ‘‘இன்னொரு விஷயமும் இதுல இருக்கு சாமி தரிசனம் பண்ணீட்டு பேசலாமா ? - னார்... அய்யா. டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்...

    நான் சாமி தரிசனம் கூட சரியாக செய்யாமல்...

    "என்னவாக இருக்கும்...?" என காத்திருந்தது போல... நீங்களும்...கொஞ்சம்...


    --------மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கம்

  6. #3215
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு. வினோத் அவர்கள் பதிவிட்ட , மதுரை மாநகரில், மக்கள் திலகத்தின்
    சினிமா மற்றும் சாதனை செய்திகள் அபாரம் .

    நண்பர் திரு. சுந்தரபாண்டியன் பதிவு செய்த , மதுரை மண்ணுக்கும் , மக்கள் திலகம் மற்றும் மக்கள் தலைவருக்கும் உள்ள இணைப்பு, பிணைப்பு ஆகியன குறித்த
    விளக்க செய்திகள் அசத்தல் .

    ஆர்.லோகநாதன்.

  7. #3216
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  8. #3217
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  9. #3218
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் லைப் வார இதழ் -30/11/2016



  10. #3219
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Makkalthilagam, Evergreen Collection Emperor's "Adimaipenn" Digitally Remastered Format ready to Rerelese soon... Informations received...

  11. #3220
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல்

    கோவை

    டிலைட் திரையரங்கில்

    பறக்கும் பாவை

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •