Page 327 of 400 FirstFirst ... 227277317325326327328329337377 ... LastLast
Results 3,261 to 3,270 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3261
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like



    MGR Wax Statue Content - Lakshman Sruthi
    "சென்னையில் திருவையாறு" இசை விழாவில் "எம்.ஜி.ஆர் மெழுகுச்சிலை"
    --------------------------------------
    லஷ்மன்ஸ்ருதி இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 முதல் 25 வரை
    "சென்னையில் திருவையாறு" என்னும் இசை மற்றும் நாட்டிய விழா தொடர்ந்து 11 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக.நடைபெற்று வரும் இவ்விழா 12 வது வருடமாக அரங்கேறுகிறது.

    "மக்கள் திலகம் பாரதரத்னா திரு.எம்.ஜி.ஆர்" அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் "இசையரசி பாரதரத்னா திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி"அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச்சிலைகள் "லண்டன் வேக்ஸ் மியுசிய"த்தில் உள்ளது போல் "சென்னையில் திருவையாறு" விழா நடைபெறும் காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.



    இத்திருவுருவச்சிலைகளுடன் பொதுமக்களும், மக்கள்திலகத்தின் ரசிகர்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் திலகத்தின் சிலை அமைப்புக்கான உதவியை சென்னை, பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழக"த்தின் நிறுவனரும் வேந்தருமான " நண்பன் ஐசரி கணேஷ்" வழங்கியுள்ளார்.

    எம்.எஸ் ஸின் சிலை அமைப்புக்கான உதவியை "சுஸ்வரலஷ்மி ஃபவுண்டேஷன்" வழங்கியுள்ளது.
    உலகெங்குமிருந்து வருகை தரும் இசையுலக ரசிகர்களுக்கும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கும் இச்செய்தி சந்தோஷத்தையும், புத்துணர்வையும் நிச்சயம் அளிக்கும்.

    எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.

    தன் படங்களின் பாடல்கள் நன்றாக வரமேண்டுமென பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என்று எல்லோரோடும் ஆலோசனைகள் செய்து, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு, சக நடிக நடிகையரின் முழு ஈடுபாட்டையும் வரவழைத்து, தொழில்நுட்பக்கலைஞர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, தன் சிந்தனைகளையும் கலந்து தீர்க்கதரிசனத்தோடு உழைத்தவர் எம்.ஜி.ஆர்.

    பாடல்களுக்காகவும் அதன் தரமான இசைக்காகவும் உலகில் வேறு ஒரு திரைப்பட நடிகர் இவ்வுலகில் பணியாற்றியிருப்பார்களா என்று ஆராய்ந்து பார்த்தால் விரல்விட்டு சிலரே இருக்கக் கூடும்.
    அதனால்தான் அவர் நடித்த பாடல்கள் இன்றும் உயிர்ப்போடும், இளமையோடும், துள்ளலோடும், கருத்துக்களோடும் காற்றலைகளில் கலந்து ஒலித்து நம்மை மகிழ்வித்து வருகின்றன.

    அவர் நடித்த படங்களில் 1500 பாடல்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கின்றன. அதில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இன்றும் பிரபலமாகவும், மக்களின் உதடுகளால் முனுமுனுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, இணையம் நம் இதயம் என்றில்லாமல், எல்லா தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்குள்ளும் புகுந்து வந்து கொண்டிருக்கின்றன எம்.ஜி.ஆர்.பாடல்கள்.

    இத்தனை இசை சாதனையும், இசையுலகிற்கான சேவையும் செய்த மக்கள் திலகத்திற்கு "சென்னையில் திருவையாறு" இசை விழாவில் சிலை அமைப்பது எங்கள் பாக்கியம் என்று லஷ்மன்ஸ்ருதி இசைக்குழு இயக்குநர்கள் ராம், லஷ்மண் இருவரும் தெரிவித்தனர்.

    டிசம்பர் 18 முதல் 25 வரை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இச்செய்தியினை அனைவருக்கும் பரிமாறி எண்ணற்ற ரசிகர்களை சென்றடையச் செய்யுமாறு "சென்னையில் திருவையாறு" விழாக்குழுவினர் வேண்டுகோள் வைத்தனர்.


    நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3262
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    1982ம் ஆண்டு புரட்சித் தலைவர் முதல்வராக இருந்த நேரம். சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகர் ஏவி. ரமணன் பாடிக் கொண்டிருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புரட்சித் தலைவர் சென்றார். ரமணனும் மக்கள் திலகத்தின் ரசிகர்தான். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்து கச்சேரியை தலைவர் ரசித்துக் கேட்டார்.

    அன்று இம்பீரியல் ஓட்டலில் நடிகர் தங்கவேலுவின் மகனுக்கும் திருமண வரவேற்பு.. அதற்காக புரட்சித் தலைவர் கச்சேரி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டார். இருந்தாலும் ரமணன் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவரை அழைத்து கையில் ஒரு காகிதத்தை திணித்தார்.




    அதில் புரட்சித் தலைவர் இவ்வாறு எழுதியிருந்தார்:

    அன்புத் தம்பிக்கு ஆசிகள் பல.
    திரு தங்கவேலு அவர்களின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்து இன்று மாலை 8 மணி வரை இம்பீரியல் ஓட்டலில் வரவேற்பு நடைபெறுகிறது. எனது நிலையை புரிந்து கொள்வீர்கள் . புறப்பட வேண்டிய நிர்பந்தம். தவறாகக் கருதமாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. அன்புடன் எம்.ஜி.ராமச்சந்திரன் .29.10.1982

    என்று எழுதப்பட்டுள்ளது,

    ரமணன் சிலிர்த்துப் போய்விட்டார். இந்த தகவலும் புரட்சித் தலைவரின் கடிதமும் 6-8-2000 ஆண்டு இதயம் பேசுகிறது இதழில் வெளியானது.

    புரட்சித் தலைவர் தங்களது நிகழ்ச்சி்க்கு வந்தாலே பாடகர்கள் பெரிய புண்ணியமாக கருதுவார்கள். அவர் வந்து கச்சேரியை ரசித்துக் கேட்டதோடு பாதியில் கிளம்புவதற்காக ரமணனுக்கு அவர் வருத்தப்படக் கூடாதே என்பதற்காக கடிதம் கொடுக்கிறார் என்றால் பொன்மனச் செம்மலின் பொன்மனம் வியப்பை தருகிறது.

    ரமணனால் புரட்சித் தலைவருக்கு எந்தக் காரியமும் ஆக வேண்டியதில்லை. அதிலும் தமிழகத்தின் புகழ்பெற்ற நம்பர் ஒன் நடிகர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவர் அப்போது தமிழகத்தின் முதல்வராக கோலோச்சி வருகிறார். உயர்ந்த நிலையில் இருக்கும் அவர், ரமணனுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. இருந்தாலும் ரமணனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடிதம் கொடுக்கிறார் என்றால், அந்தப் பொன்மனம் யாருக்கு வரும்?

    நாட்டில் இப்போது தலைவர்களுக்கா பஞ்சம்.? லெட்டர் பேட் வைத்திருக்கும் எல்லாரும் தலைவர்கள்தான். ஆனால், புரட்சித் தலைவர் தமிழகத்தையும் மக்கள் மனதையும் ஆட்சி செய்த உண்மையான தலைவர் மட்டுமல்ல, தொண்டருக்கும் தொண்டர்.


  4. #3263
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MAHALINGAM MOOPANAAR View Post
    .



    நன்றி அய்யா. அரிய தகவல். புரட்சித் தலைவரின் கையெழுத்தைப் பார்த்தாலே கண் கலங்குகின்றது. தனது தகுதிக்கு சமமாக இல்லாட்டியும் வேற்றுமை இல்லாமல் எல்லாரையும் மதிக்கின்ற எப்பேர்பட்ட மனிதநேயர் நம் தலைவர் என்று நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்போது அவர் நம்மிடம் இல்லையே என்று நினைக்கும்போது அழுகையும் ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத கோபமும் வருகிறது.

  5. #3264
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    புரட்சித் தலைவர் நம்முடன் இல்லையே என்ற ஏக்கமும் அழுகையும் கோபமும் அவரது புன்னகை முகத்தைப் பார்த்தால் போய்விடும். இப்படித்தான் 29 வருசத்தை ஓட்டிவிட்டோம். களங்கமி்ல்லாத இந்த புன்னகைக்கு ஈரேழு உலகமும் ஈடாகுமா.

  6. #3265
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    ''சிரித்து வாழ வேண்டும் ' 30.11.1974

    மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழ வேண்டும் '' இன்று 42 ஆண்டுகள் நிறைவு தினம் .
    ராஜாதேசிங்கு படத்திற்கு பிறகு மக்கள் திலகம் முஸ்லீம் வேடத்தில் நடித்த படம் .இப் படத்தில் மக்கள் திலகம் தொழுகை செய்யும் காட்சிகள் , உணவு உண்ணும் முறை , பேசும் உரையாடல்கள் அனைத்திலும் முஸ்லீமாகவே மாறியிருந்தார் . அத்தனை நேர்த்தியான இயல்பான நடிப்பு .அடகு கடையில் செட்டியாரிடம் மக்கள் திலகம் பேசும் காட்சியில் செட்டியார் எம்ஜிஆரை பார்த்து கூறும் வசனம் '' நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலே அது பல லட்சங்களுக்கு
    சமம் ''- என்ன ஒரு அருமையான வரிகள் .

    1973ல் இப்பட ஆரம்ப விழாவிற்கு தென்னிந்திய பட உலக பிரபலங்கள் எல்.வி .பிரசாத் , ஸ்ரீதர் , நீலகண்டன் , கி.வ .ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ,ஆரம்ப தினத்தில் ''கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் '' பாடல் காட்சி படமாக்கப்பட்டது .

    சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புகள்

    மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரட்டை வேடங்கள்
    மெல்லிசை மன்னரின் அருமையான பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல்கள் .
    மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் . குறிப்பாக ஜஸ்டின் சண்டை .
    இன்ஸ்பெக்டர் ராமு வேடத்தில் தோன்றும் காட்சிகளில் சீரியாஸான நடிப்பு
    நம்பியாருடன் சந்திக்கும் காட்சிகளில் அருமையான வசனங்கள்
    மனோகரை புரட்டி எடுக்கும் காட்சி .
    தேங்காய் ஸ்ரீனிவாஸிடம் பேசும் நகைச்சுவை காட்சிகள் .
    ரெஹ்மானின் அட்டகாசமான அறிமுக பாடல் காட்சி .
    ராமு - ரஹமான் இருவரின் சண்டை காட்சிகள்
    பிரமாண்ட அரங்கங்கள்
    மக்கள் திலகம் - லதா -பல வண்ண உடைகளில் தோன்றும் இனிமையான கனவு பட காட்சிகள்
    சூரியன் தூங்கியது - இங்கு சந்திரன் தோன்றியது - பிரமாதமான பாடல் வரிகள் .
    பொன்மனச்செம்மலை புண் பட செய்தது யாரோ - அருமையான பாடல் .
    கிளைமாக்ஸ் காட்சி- உலகமெனும் நாடக மேடையில் பாடலை தொடர்ந்து மக்கள் திலகம் - நம்பியார் - மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள் .
    இறுதியில் நீச்சல் குளத்தில் மக்கள் திலகம் பிரமாதமாக டைவ் அடித்து நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியில் அவருடைய ஸ்டைல் , வேகம் , துடிப்பு ..வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .
    மொத்தத்தில் மக்கள் திலகத்தின்

  7. #3266
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

    1. பிரஹலாதா 12.12.1939

    2. ரத்னகுமார் 15.12.1949

    3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.

    4.தாயின் மடியில் 18.12.1964.

    5. ஆசைமுகம் 10.12.1965

    6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.

    7. ஒரு தாய் மக்கள் 9.12.1971.

  8. #3267
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ‘சிரித்து வாழ வேண்டும்’

    ‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

    படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

    * இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

    *தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

    *ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

    *தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

    *அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

    * இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

    *சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

    * நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

    *பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

    *‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

    *படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

    சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்.

    அதே படத்திலேயே, ‘அரசியலில் நான் சந்திக்காத சூழ்ச்சியா?’ என்றும் தலைவர் கேட்பார். வாழ்க்கையில் அவர் சந்திக்காத கஷ்டங்களா? அரசியலில் அவர் சந்திக்காத சூழ்ச்சிகளா? இரண்டையும் தனது முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் எதிர்த்து போராடி முறியடித்து அவர் பார்க்காத வெற்றிகளா?

    தலைவரின் படங்கள் மட்டுமல்ல, படத்தின் தலைப்புகளும் பாடங்களே. விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு கிடைக்கும் விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது ஏற்றம் வரும், இறக்கம் வரும், பெருமை வரும், சிறுமை வரும். இந்த எதார்த்தத்துக்கு பெயர்தான் வாழ்க்கை. இன்பம் வரும்போது துள்ளாமலும், துன்பம் வரும்போது துவளாமலும் இருக்க, எந்த நிலை வந்தாலும் எப்போதும் சம நிலையில் இருந்து அனைவரும் ‘சிரித்து வாழ வேண்டும்’.
    courtesy
    அன்புடன் : கலைவேந்தன்

  9. #3268
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
    சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

    சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .


    நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
    லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .


    மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .


    உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

    1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
    .

  10. #3269
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

    பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

    உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

    கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
    வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

    ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

    கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

    ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

    கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

    ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

    சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

    கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
    (லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

    உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

    பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

    ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

  11. #3270
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1974

    நேற்று இன்று நாளை - 125 நாட்கள்
    உரிமைக்குரல் - 200 நாட்கள்
    சிரித்து வாழ வேண்டும் .-100 நாட்கள்

    மக்கள் திலகத்தின் மாறுபட்ட வேடங்களில் , சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வந்த முக்கனி படங்கள் .

    1974- அரசியல் வெற்றிகள்

    புதுவையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை கைப்பற்றியது .
    திண்டுக்கல் -மாயதேவர் வெற்றிக்கு பின் புதுவை நாடாளுமன்ற வேட்பாளர் பால பழனூர் வெற்றி .
    கோவை மேற்கு -இடை தேர்தல் மூலம் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாயகம் .

    மக்கள் திலகம் மொரீஷியஸ் - அமெரிக்கா நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்கு சுற்று பயணம் .

    1974ல் மக்கள் திலகம் பல புது படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •