-
4th December 2016, 07:57 AM
#11
Junior Member
Senior Hubber
நன்றி.. ஆதிராம் சார்.. "வெள்ளிக் கிண்ணம்"
பதிவுக்கான பாராட்டுக்காக.
அந்த எனது நாற்காலிக் கற்பனையைத் தாங்கள்
பாராட்டியது பார்த்து மனம் மகிழ்ந்து குதித்தாலும்,
தங்களின் பாராட்டுப் பதிவின் கடைசி இரண்டு
அடிகளில் அந்த நாற்காலி குறித்து நீங்கள் எழுதியிருந்தீர்களே.. அந்த மாதிரியான துணிச்சலான எழுத்துகள் எனக்கு எப்போ கை வருமோ என்று ஒரு ஓரத்தில் கவலைப்படவும் செய்கிறது.
*****
கோபால் சார்...
நீங்கள் எழுதினால் "எத்தனை அழகு", இன்னும்
எத்தனை அழகு? ரசித்தேன்.
"மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்" என்று எழுதி விட்டு தூங்குவோம் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் கேள்விக் குறிகள் அடைத்த உங்களின் குறும்பு... ரசித்தேன்.
அசங்கல், கசங்கலில்லாத புத்தம் புது பிரிண்டில் மீண்டும் படம் பார்த்தது போல அந்த "தவப்
புதல்வன்" பதிவு.. மிக ரசித்தேன்.
எத்தனை அருந்தினாலும் திகட்டுவதேயில்லை
உங்களின் எழுத்துத் தேன்.
தங்களைப் போன்ற திரியின் முன்னோடிகளின் சிறந்த எழுத்துகள் உதாசீனப்படுத்தப்
படுவதாய் தாங்கள் வருந்தும் பதிவுகளை இடையிடையே பார்க்க முடிகிறது.
நல்ல எழுத்துகளை வாசித்து, உடனுக்குடன் விமர்சிப்பது, ஆலயம் சென்று இறை வணங்குதல்
போல. சொல்ல வார்த்தையின்றி மௌனித்திருப்பது, கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போல.
வணங்கும் முறைகள்தான் வேறுபடுகின்றன.
நல்ல எழுத்துகள் வணங்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
வெள்ளிக் கிண்ணத்தைத் தங்கக் கிண்ணமாக
மாற்றித் தந்த தங்கள் தமிழ்க் கரங்களுக்கு என்
நன்றி முத்தங்கள்.
******
வாசு சார்...
கடந்த பிப்ரவரியில் சென்னையில் நிகழ்ந்த வாட்ஸ் ஆப் குழும நண்பர்கள் சந்திப்பின் போது,
(கோபால் சார் கோடு போட, நீங்கள் தங்க நாற்கரசாலை போட்ட) இரும்புத் திரை காதல் காட்சியை ராகவேந்திரா சார் புண்ணியத்தில் பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் எழுத்து வழி ஓட்டிக்
காட்ட, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும்
பார்த்து மகிழ்ந்தேன்.
அப்புறம்.. தவப்புதல்வன் சண்டைக் காட்சி வர்ணனையை வியந்தேன். விரித்து வைத்த
நடிகர் திலகத்தின் கால்களுக்கூடே தங்களின் பெயர் கொண்டவர் படும் அவஸ்தைகளுக்கு
நீண்ட காலம் சிரிக்கலாம்.
அறுபதுகளில் நம்மவரோடு தந்தை நடிகவேள் நடித்துத் தந்த நிறைவுக்குக் கொஞ்சமும் குறைவின்றி எழுபதுகளில் வாசுவும் தந்திருக்கிறார். உதாரணம் - பாரத விலாஸ், தவப்புதல்வன்.
*****
முரளி சார்..
"செல்வம்" வரக் காத்திருக்கும் ஏழையாக நானும்.
******
ராகவேந்திரா சார்..
அய்யனின் அழகுத் திருவுருவங்களுடன் தாங்கள்
சொல்லும் "குட்மார்னிங்" களுக்காகவே எனது
காலைகள் விடிகின்றன.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th December 2016 07:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks