-
4th January 2017, 03:30 AM
#411
Moderator
Diamond Hubber
அதிரடி வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன்! - நடிகர் ரவிசங்கர்
சுமார் 150 சீரியல்களுக்கு மேல் நடித்திருப்பவர் நடிகர் ரவி சங்கர். சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமா, சின்னத்திரைகளில் அதிரடி வில்லன் வேடங்களில் நடித்து அடுத்த லெவலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சீரியல் என்ட்ரி பற்றி?
எனது சொந்த ஊர் மேட்டூர். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால் முதலில் சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதன்முதலில் கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய உறவுகள் தொடரில் நடித்தேன். முதல் தொடரிலேயே கலைஞரின் வசனம் பேசி நடித்தது பெருமையாக இருந்தது. அந்த தொடரில் எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா, சாருஹாசன் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் நடித்தேன். அப்போதைக்கு அவர்களுடன் நடிப்பது பயமாக இருந்தபோதும் அதுவே எனக்கு பெரிய அனுபவமாகவும் அமைந்தது. நிறைய தைரியத்தையும் கொடுத்தது. தொடர்ந்து, மந்திரவாசல், கே.பாலசந்தரின் ஜன்னல், நிலவை பிடிப்போம் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் பல சீரியல்கள் என பல தொடர்களில் நடித்தேன். குறிப்பாக, முதல் தொடரிலேயே கலைஞர் கதை வசனத்தில் நடித்த நான் இப்போது மீண்டும் அவரது கதை வசனத்தில் ராமானுஜர் தொடரில் நடித்து வருகிறேன். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேண்டும்
.சினிமாவில் நடித்த படங்கள்?
மேலும், சினிமாவில் ஏற்கனவே அஜித் நடித்த வான்மதி, விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன், விக்ரமின் உல்லாசம் படங்களில் அவர்களுக்கு நண்பனாக நடித்தேன். சமீபத்தில்கூட சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் மற்றும் பசங்க-2, இறைவி, சதுரம்-2 என பல படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது மீசையை முறுக்கு, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் கேரக்டர் ரால்களில் நடித்து வருகிறேன்.
டார்க்கெட்?
சினிமாவில் நடிக்கத்தான் எல்லோருமே வருகிறார்கள். சீரியலுக்காக யாரும் வருவதில்லை. அப்படித்தான் நானும். சினிமாவில் கிடைக்காதபட்சத்தில் சீரியலில் நடிக்கிறேன். ஆனால் சீரியலில் நடித்து விட்டு சினிமாவுக்கு போவது பெஸ்ட். நல்ல நடிப்பு அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை நான் நிறையவே பெற்று விட்டேன். அதனால் எதிர்காலத்தில் சினிமாவில் அதிகமாக நடிக்கவே ஆசைப்படுகிறேன். மீண்டும் சீரியலுக்கு வந்திருக்கிறேன் என்றால் கலைஞரின் சீரியல் என்பதினால்தான். அவர் கதை வசனத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் யாருமே அதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படித்தான் நானும். அதனால்தான் ராமானுஜர் பண்ணி வருகிறேன்.
சினிமாவில் சீரியல் நடிகர்களுக்கு வரவேற்பு எப்படி?
கண்டிப்பாக நல்ல வரவேற்பு உள்ளது. சீரியல் நடிகர்கள் நன்றாக நடிப்பார்கள். காட்சிகளை சீக்கிரமே முடித்து விடுவார்கள் என்கிற எண்ணம் உள்ளது. ஆக சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் ரெஸ்பான்ஸ் இருக்கிறது. மேலும், சினிமாவில் நான் நினைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கவில்லை. ஹீரோ ஆசையில் தான் சினிமாவிற்குள் வந்தேன். இப்போது நரேன் மாதிரி ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்தாலும் போதும் என்று நினைக்கிறேன்.
பெண்ணாதிக்கமே சீரியல்களில் அதிகமாக உள்ளதே?
லேடிஸ்தான் பார்வையாளர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் வீட்டில் என்னென்ன செய்வார்களோ அதை மையமாக வைத்து கதைகள் உருவாகிறது. ரிட்டையர் ஆனவர்களுக்கு பொழுதுபோக்கே சீரியல்கள்தான். ஒருநாள் கரண்ட் இல்லையென்றால் மற்றவர்களுக்கு போன் போட்டு கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல்களில் அடிமையாக உள்ளனர். அதேசமயம், சில சீரியல்கள் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலும் வெளியாகியுள்ளன
.சீரியல்களில் லிமிட் தாண்டுவது பற்றி?
தமிழ் சீரியல்களில் யாரும் லிமிட் தாண்டி கதை பண்ணவில்லை. ஆனால், லிமிட் தாண்டுவது வடஇந்திய சீரியல்களில்தான் அதிகமாக உள்ளது. படத்துக்கு இணையாக லிமிட் தாண்டுகிறார்கள். அவர்கள் படம் மாதிரிதான் பண்ணுகிறார்கள். நம்முடைய நேயர்களும் வடஇந்திய ரிச்னஸை ரசிக்கிறார்கள். இப்போது குஷ்பு இந்தி சீரியலுக்கு இணையாக நந்தினி சீரியலை தயாரித்து வருகிறார். 4 மொழிகளில் பண்ணுகிறார்கள்.
வில்லனாக நடிப்பீர்களா?
150 சீரியல்களுக்கு மேல் நடித்து விட்டேன். பெரும்பாலும் பாசிட்டீவ் வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். மேலும், நெகடீவ் ரோல்களில் லிமிட் தாண்டி நடிக்கலாம். ஹீரோ என்றால் பவ்யமாக நடிக்க வேண்டும் ப்ரீனெஸ் கிடைக்காது. அதனால் தான் நெகடிவ் பண்ணினால் யார் என்றாலும் பிரபலமாகி விடுவார்கள். நான்கூட ஒய்.ஜி.மகேந்திரன் சார் சீரியலில் நெகட்டீவாக நடித்துள்ளேன். இப்போது நானும் அதிரடி வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன். அப்பாவி மாதிரி இருப்பவர்கள் அப்படி நடிக்கும்போது, இவரா அப்படி நடித்தார் என்பார்கள். நம்மை ஆடியன்ஸ் திட்ட வேண்டும். அதுதான் அந்த ரோலுக்கு கிடைத்த வெற்றி. இப்போது குணசித்ர நடிகர் முத்திரையில் இருக்கிறேன். விரை வில் வில்லன் நடிகர் என்கிற இமேஜிற்குள்ளும் வருவேன்.
ரகுவரன், பிரகாஷ்ராஜ் இருவரும் பிடித்தவர்கள். சினிமா-சீரியல்களில் வில்லனாக நடிக்க டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறேன். குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிர முயற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் ரவி சங்கர்.
நன்றி: தினமலர்
-
4th January 2017 03:30 AM
# ADS
Circuit advertisement
-
4th January 2017, 03:39 AM
#412
Moderator
Diamond Hubber
மைனா நந்தினி இப்போது ருக்கு
சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் பின்னி எடுத்தவர் நந்தினி. மதுரை வட்டாரமொழி பேசி கலக்கி எல்லோரையும் கவர்ந்தார். இவரது நிஜயப்பெயரே மறந்து எல்லோரும் மைனா என்ற அழைக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அந்த கேரக்டர் ரீச் ஆனது.
தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடரில் ருக்கு என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதிலும் அதே மாதிரியான சுட்டித்தனமான கேரக்டர். கோவை பகுதி கொங்கு தமிழ் பேசி நடிக்கிறார். இவரது மதுரை வட்டார மொழிக்கு ரசிகர்கள் பெருகியதை போன்ற கொங்கு தமிழுக்கும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.
"மைனா கேரக்டருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உயரத்தில் வைத்தது. அதே ஆதரவை ருக்கு கேரக்டருக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சென்னை பாஷை பேசி நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது. அனேகமாக அது அடுத்த தொடரில் நடக்கும் என்று நினைக்கிறேன். சின்னத்திரை மூலம் ரசிகர்கள் என்னை அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு துறுதுறு பெண்ணாக பார்ப்பது மகிழ்ச்சியாக" இருக்கிறது என்கிறார் நந்தினி.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:40 AM
#413
Moderator
Diamond Hubber
சம்பள பிரச்சினையால் தென்பாண்டி சிங்கம் சீரியலை தவிர்த்தேன்! -நடிகை ஜீவிதா
மனதில் உறுதி வேண்டும், ஆபீஸ், தேவதை, வைராக்கியம், பைரவி, சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், பாசமலர்கள் உள்பட பல மெகா சீரியல்களில் நடித்த வர் ஜீவிதா. தவிர சினிமாவில், என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்த ஜீவிதா, அதன்பிறகு விஜயசேதுபதி நடித்த றெக்க படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். தற்போது ஆண்தேவதை, வண்டி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி ஜீவிதா கூறும்போது, சின்னத்திரையில்தான் நான் பிரபலம். குறிப்பாக சுகாசினி, ரேவதி போன்ற நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் நான் பேசப்படுகிறேன். அந்த அளவுக்கு எனக்கு கதாபாத்திரங்களும் கிடைத்தது. அதற்காக அந்த வாய்ப்புகளை கொடுத்த இயக்குனர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் தற்போது நான் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தென்பாண்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், சம்பள பிரச்சினையால் அந்த தொடரில் நடிக்கவில்லை.
மேலும், தற்போது சமுத்திரகனி நாயகனாக நடித்து வரும் ஆண்தேவதை படத்தில் இளவரசுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து விதார்த் நடித்து வரும் வண்டி படத்திலும் நடிக்கிறேன். சினிமாவில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும், எனக்கு பிடித்தமான படங்களை மட்டுமே ஓகே செய்கிறேன். குறிப்பாக, கிளாமர் இல்லாத வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
அதோடு, சின்னத்திரையைப்பொறுத்தவரை, எல்லாவிதமான கேரக்டர்களிலும நடித்து விட்டேன். நாயகி, வில்லி, ரவுடி, போலீஸ் என ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொருவிதமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தி என்னால் எந்தமாதிரியான கேரக்டர்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டேன். அதனால் இப்போது சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். சீரியல்களில் நடித்தது போன்று சினிமாவிலும் வில்லி, ரவுடி, போலீஸ் வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ஜீவிதா எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் அதுவாகவே மாறி விடுவார் என்கிற பெயரை எடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறும் ஜீவிதா, ஏதேனும் ஒரு மெகா சீரியலில் நடித்துக்கொண்டே சினிமாவில் அதிகமான படங்களில் தொடர்ந்து நடிக்கப்போகிறாராம்.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:42 AM
#414
Moderator
Diamond Hubber
சிங்கப்பூர் சேனல் தொகுப்பாளினி ஆகிறார் தியா
பல முன்னணி சேனல்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தியா மேனன். தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ஆடிய காலும், பேசிய வாயும் சும்மா இருக்குமா விரைவில் அங்குள்ள சேனல்களில் தொகுப்பாளினியாகிறார்.
"திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் மக்கள் என்னை மறக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் நேற்றுதான் உங்களை டி.வியில் பார்த்தேன் என்கிறார்கள். அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.........
என் கணவர் சிங்கப்பூரில் பிசினஸ்மேன், அதோட இண்டோர் கிரிக்கெட் அணி கேப்டன். அவருக்கு துணையாக இருக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் சிங்கப்பூர் சென்று விட்டேன். இங்கு தொகுப்பாளினியாக தொடர ஆசை இருந்தாலும் என் கணவருக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறேன். அங்குள்ள சில சேனல்கள் என்னை அழைத்திருக்கிறது. கணவரும் அனுமதித்திருக்கிறார். விரைவில் சிங்கப்பூர் சேனல்களில் முகம் காட்டுவேன். சிறப்பு நிகழ்ச்சிக்காக இங்கு அழைத்தால் வருவேன். என்கிறார் தியா.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:44 AM
#415
Moderator
Diamond Hubber
நல்ல மாமியாராக மீண்டும் தமிழுக்கு வந்தார் நளினி
பெரிய திரையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே துணிச்சலுடன் சின்னத்திரைக்கு வந்த நடிகை நளினி. தன் ஹீரோயின் இமேஜ் பற்றி கவலைப்படாமல் குண்டான உடம்பையே தனது புது இமேஜாக மாற்றி காமெடி நடிகையாகவும், வில்லியாகவும் நடித்தார்
கிருஷ்ணதாசி தொடர்தான் அவரது முதல் தொடர். அதன் பிறகு கோலங்கள் தொடரில் நடித்தார். சின்ன பாப்பா பெரிய பாப்பாதான் அவரை காமெடி நடிகையாக எல்லா வீடுகளுக்கும் கொண்டு சென்றது. அதன் பிறகு திரைப்படங்களிலும் காமெடியாக நடிக்க ஆரம்பித்தார்.
2000மாவது ஆண்டில் சின்னத்திரையில் அறிமுகமான நளினியின் அனுபவம் 16 ஆண்டுகள். ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கும் தமிழ் சேனல்களுக்கும் சரியாக இல்லை. இதனால் தெலுங்கு சீரியல் பக்கம் ஒதுங்கினார். அடிப்படையில் அவர் ஆந்திரா என்பதால் அம்மா நா கொடலா என்ற தெலுங்கு தொடரில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் பக்கம் பல அழைப்புகள் இருந்தும் வரவில்லை.
இடையில் தான் முன்பு நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்தவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் தொடரின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். காமெடி, வில்லத்தனத்தில் ஜொலித்த நளினிக்கு இதில் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கேரக்டர். அன்பான அம்மாவாகவும், மாமியாராகவும் நடிக்கிறார்.
"தமிழ் சேனல்களில் நடிக்க கூடாது என்ற எண்ணமில்லை. யார் மீதும் எந்த கோபமும் இல்லை. ஒரு மாறுதலுக்காக தெலுங்கில் நடித்தேன். அங்குள்ள ரசிகர்களுக்கு எனது கேரக்டர் பிடித்துவிடவே தொடரில் என் பங்கை அதிகரித்தார்கள். அதனால் தொடர்ந்து அங்கேயே நடிக்க வேண்டியதாயிற்று. டார்லிங் டார்லிங் தொடரில் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒரு கேரக்டர் அதனால் உடனே ஒப்புக்கொண்டேன் என்கிறார் நளினி
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:46 AM
#416
Moderator
Diamond Hubber
பிரஞ்சு, ஜெர்மன் மொழியில் பட்டம் பெறுகிறார் ஜெனிபர்
ஜெனிபரை சீரியல் நடிகை என்பதை விட கில்லி படத்தில் விஜய்யின் தங்கை புவி என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் கேளடி கண்மணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பத்திரிக்கையாளர் த.செ,ஞானவேல் இயக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர கோணலா இருந்தாலும் என்னோடது என்ற காமெடி படத்திலும் நடிக்கிறார்
சின்னத்திரை, பெரிய திரை இரண்டுக்கும் இடையில் ஜெனிபர் இப்போது ஓசைப்படாமல் இன்னொன்றையும் செய்து வருகிறா£. அது பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியை முறையாக கற்று வருகிறார். நாலு லெவல் கொண்ட பாடத்தில் தலா இரண்டை முடித்து விட்டார். இன்னும் இரண்டையும் முடித்து விட்டால் இரண்டிலும் பட்டம் பெற்று விடுவார்.
ஜெர்மன், பிரஞ்சு சினிமாவில் நடிக்க போறீங்களா என்றால்... "ஹலோ ஒரு ரகசியம் சொல்றேன். சென்னையில ஏகப்பட்ட பேர் கல்லூரியில் பிரஞ்சு, ஜெர்மன் மொழி எடுத்துப் படிக்கிறாங்க. அவர்களுக்கு டியூசன் எடுக்க டீச்சர்கள் தட்டுப்பாடு இருக்கு. நல்ல வேலைவாய்ப்புள்ள படிப்பு இது. அது மட்டும் காரணமல்ல புதிய புதிய மொழிகளை கற்க வேண்டும் என்கிற எனது பேராசையே இதை படிக்க காரணம்" என்கிறார் ஜெனிபர்.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:13 PM
#417
Moderator
Diamond Hubber
இந்தி சீரியல்கள் பீட்சா, பர்ஹர் மாதிரி! -நடிகர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ்
சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்த வர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ். தற்போது வாணி ராணி, கல்யாண பரிசு சீரியல்களில் நடித்து வருகிறார்.தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
வாணி ராணி சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வருகிறேன். இந்த வேடம் ராதிகா மேடத்துடன் மோதும் அதிரடியான கதாபாத்திரம். அதனால் நேயர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சாகி விட்டது. முதலில் வில்லத்தனமான இருந்த அந்த கேரக்டர் சமீபகாலமாக பாசிட்டீவாகி விட்டது. அதனால் முன்பு என்னை திட்டிய நேயர்கள்கூட இப்போது உங்களை மாதிரி ஒரு பெரியப்பா எங்களுக்கு இல்லையே என்கிற ஏக்கத்தை இந்த கேரக்டர் ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு செண்டிமென்டான கேரக்டராக மாறியிருக்கிறது. அதேபோல் கல்யாண பரிசு சீரியலில் பாசிட்டீவான முக்கியத்துவம் வாய்ந்த ரோலில்தான் நடித்து வருகிறேன்.
குறிப்பாக, ராதிகா மேடத்துடன் நடிக்கும்போது மனதளவில் ஒருவித பயம் இருந்து கொண்டேயிருக்கும். அது மரியாதை கலந்த பயம்தான். அவர் ஒரு சீனியர் நடிகை என்பதால் அவருடன் நடிக்கும்போது தவறு செய்து விடாமல் சரியாக நடித்து விட வேண்டும் என்பதினால் ஏற்படும் பயம்தான் அது. அதன்காரணமாக, மற்ற காட்சிகளில் நடிக்கும்போது கேமரா முன்பு சென்ற பிறகுதான் டயலாக் பேப்பரை பார்ப்பேன். ஆனால் ராதிகா மேடத்துடன் நடிக்கும் காட்சிகள் என்றால் முன்பே உதவி இயக்குனர்களை அழைத்து டயலாக் பேப்பரை வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு என்னை தயார்படுத்திக்கொள்வேன். அதோடு, மேடம் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே வாத்தியார் வகுப்பறைக்குள் வந்ததும் மாணவர்கள் கப்சிப்பென்றாகி விடுவது போல் நாங்கள் அமைதியாகி விடுவோம். அவர் நடித்து விட்டு சென்றதும் பயம் நீங்கி ஜாலியாகி விடுவோம்.
முன்பெல்லாம் சீரியல்களில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு பெண், ஆணையோ அல்லது பெண்ணையோ கத்தியால் குத்தி பழிவாங்குவது போல் எல்லாம் காட்சிகள் வைத்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. அது யதார்த்தமாக இருக்காது என்பதால், அந்த மாதிரியான காட்சிகளுக்கு ஆண்களையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தற்போது சீரியல்களில் நடிகர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
மேலும், சமீபகாலமாக இந்தி சீரியல்கள் தமிழ்நாட்டுக்குள் வருவது அதிகரித்துள்ளது. என்னைக்கேட்டால் இந்தி சீரியல்கள் நிலைக்க முடியாது. அது நம் முடைய கலாச்சாரத்தை மீறிய கதைகளில் தயாராகின்றன. அந்தவகையில், நம் முடைய தமிழ் சீரியல்கள் நமது அம்மா சமைக்கும் அறுசுவை உணவுகள் என் றால், இந்தி சீரியல்கள் பீட்சா பர்ஹர் மாதிரியானவை. அவை புதிதாக இருப்பதால் ஒருநாள் அல்லது சில நாட்கள் வேண்டுமானால் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் வெறுத்து விடும். காரணம், இந்தி தொடர்களில் உடம்புக்கு சரியில்லாத கேரக்டர்கூட மேக்கப் போட்டுக்கொண்டு யதார்த்தத்தை மீறிதான் படமாக்கப்படும். ஆனால் நம்முடைய சீரியல்கள் அனைத்துமே யதார்த்தமானவை என்று கூறும் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ், தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி தயாரிக்கும் சீரியல்களில் நடிப்பதற்கும் பேசி வருவதாக சொல்கிறார்.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:15 PM
#418
Moderator
Diamond Hubber
குடும்பத்தலைவியாக நடிக்க வேண்டும்! சீரியல் நடிகை அபி
கல்யாணம் முதல் காதல் வரை, அழகி உள்பட பல சீரியல்களில் நடித்தவர் அபி. எதிர்காலத்தில் அழுத்தமான குடும்பத்தலைவி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் அவர். அதோடு, நான் நடிக்கும் சீரியல்கள் மட்டுமின்றி மற்ற சீரியல்களையும் பார்த்து ரசிப்பேன். அந்த வகையில், பிரியமானவளே உள்ளிட்ட சில சீரியல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் நடிக்கும் நடிகைகளின் நடிப்பையும் ரசிப்பேன். அப்படி பார்க்கும்போது எனது சீரியல்களில் எந்தமாதிரியான பர்பாமென்ஸ் கொடுத்தால் நேயர்கள் ரசிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், இதுவரை சாப்ட்டான, வெகுளியான கேரக்டர்களில் நடித்தபோதும், அடுத்தபடியாக அழுத்தமான குடும்பப்பிரச்சினைகளை எதிர்த்து போராடும் பெண் வேடத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். வீட்டில் இருந்தபடியே சீரியல் பார்க்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும்படியான வேடங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று கூறும் அபிக்கு சீரியலைத் தொடர்ந்து சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். அதனால் சீரியல்களில் நடித்துக்கொண்டே சில படங்களிலும் தற்போது கமிட்டாகி நடித்து வருவதாக சொல்கிறார்.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:16 PM
#419
Moderator
Diamond Hubber
சினிமாவில் ஆர்வம் காட்டும் ஆனந்தி
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகை ஆனவர் ஆனந்தி. அதன் பறகு மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடினார். வாலு, மீகாமன் படங்களில் நடித்தார். இவரின் நடன திறமையை பார்த்து பாலா தாரை தப்பட்டையில் அறிமுகப்படுத்தினார். வரலட்சுமியோடு செம ஆட்டம் போட்டார் ஆனந்தி. சமீபத்தில் வெளி வந்த பறந்து செல்லவா படத்தில் காமெடியன் சதீஷ் ஜோடியாக நடித்தார். படத்தில் மது அருந்தும் காட்சியிலும், கிளாமர் காட்சியிலும் துணிச்சலுடன் நடித்தார். தற்போது சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
"ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றில்லை. நடிப்பதற்கு பேஸ் இருக்கிற கேரக்டராக இருக்கணும். வில்லியாக நடிக்க முடியும், ஆனால் காமெடி வராதுன்னு நினைக்கிறேன். சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் தொடர்ந்து நடிப்பேன்" என்கிறார் ஆனந்தி.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:20 PM
#420
Moderator
Diamond Hubber
வில்லி ஆனார் கவிதா
பல வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கர்ணனின் மனைவியாக சிறிய கேரக்டரில் நடித்த கவிதா, அதன் பிறகு தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்து விட்டு தமிழுக்கு திரும்பியிருக்கிறார். நீலி தொடரின் வில்லி அவர்தான்.
மனைவியை இழந்த கணவன் தன் மகள் அபியோடு வசிக்கிறார். மகளுக்கு பிடித்தமான பொம்மை ஒன்றில் இறந்த அம்மாவின் ஆவி இருக்கிறது. அது குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறது. கணவன் மறுமணம் செய்து கொள்ள.. மனைவியா வந்தவள் குழந்தை அபியை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள். அவளிடமிருந்து குழந்தையை பொம்மைக்குள் இருக்கும் அம்மா ஆவி எப்படி காப்பாற்றுகிறது என்கிற கதை. இதில் கொடுமைக்கார சித்தி ரேகாவாக கவிதா நடிக்கிறார்
."நான் முதன் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். அதுவும் குழந்தையை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார சித்தியாக. நிச்சயம் எனது கேரக்டரை பெண்களுக்கு பிடிக்காது, திட்டி தீர்க்கப்போகிறார்கள். அதுதான் என் நடிப்பின் வெற்றி. தமிழ் சீரியலில்தான் அறிமுகமானேன். மீண்டும் தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது" என்கிறார் கவிதா.
நன்றி: தினமலர்
Bookmarks