-
5th March 2017, 01:04 AM
#11
Junior Member
Devoted Hubber
மாமே மச்சான்...
முரட்டுக்காளையில் இடம்பெற்ற மற்ற பாடல்கள் அதிகம் பேசப்பட்டுவிட்டதால் அதிகம் கவனிக்கப்படாத மாமே மச்சானுக்கு தான் எப்போதுமே என் ஒட்டு. என்ன தான் பெரிய பேனர் படம் என்றாலும்,1980 களின் இறுதியில் வெளிவந்த இந்த பாட்டுக்கான சூழ்நிலையை ராஜா சாரிடம் முத்துராமன் எவ்வளவு தான் சொல்லி இருக்கமுடியும்? காட்டுக்குள் பதுங்கி இருக்கும் நாயகனை தேடி வில்லனின் தங்கை போகும் போது அவள் பாடுவது போல் ஒரு பாடல் வேண்டும் என்பதை தவிர, சிறப்பாக எதையும் சொல்லி இருக்க மாட்டார் என்று பாடலை அவர் படமாக்கிய விதத்தை பார்க்கும் போதே தெரிகிறது.
பாடலின் பின்புலத்தில் வரும் "டட் டட் டட்" தாளத்தில் இருக்கும் கம்பீரத்தை எதனோடு ஒப்பிடுவது? இதற்க்கு முன்னரும் பின்னரும் யார் இப்படி இந்த வாத்தியங்களை கையாண்டிருக்கிறார்கள்? பாடலில் வயலின் தரும் பயங்கர உணர்வும், புல்லாங்குழலின் சோகத்தையும், சைலஜாவின் அப்பாவி குரலும் .. அப்பப்பா.. இப்படி இதை அமைக்க வேண்டும் என்று இந்த மனிதருக்கு எப்படி தோன்றியது?
ராஜா சாரை நினைக்காத நாளில்லை என்று நான் சொல்வதை விட, இவரை நினைத்து நான் மலைக்காத நாளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th March 2017 01:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks