-
10th June 2017, 03:27 PM
#11
Junior Member
Devoted Hubber
அது 1995, 96 காலகட்டம். மும்பை ஐ.ஐ.டியில் பணியாற்றிய நேரம். வாரம்தோறும் போவையில் இருந்து மாட்டுங்கா சென்று ராமர் கோயிலில் சம்ப்ரதாயத்துக்காக சாமி கும்பிட்டுவிட்டு, சவுத் இந்தியன் கன்சாரனில் சாப்பாடு முடித்து, அப்படியே தமிழ் கடைகளில் வார பத்திரிக்கைகள் மற்றும் ராஜா சாரின் ஆடியோ கேசட் ஏதாவது வாங்கி வருவது வழக்கம். அப்போது வாங்கி கேட்டு மகிழ்ந்தவை தான் அவதாரம், காலாபானி, கார்த்திக்ராஜாவின் மாணிக்கம், பாலுமஹேந்திராவின் ஆர் ஏக் பிரேம் கஹானி, ராசய்யா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எல்லாம். என் பழைய நினைவுகளை இந்த ஒரு பாடல் மூலம் நினைவு படுத்தி விட்டீர்கள்.
அவதாரத்தில், அரிதாரத்தை பூசி கொள்ள ஆசை மாற்று தென்றல் வந்து தீண்டும் பொது பாடலும் அளவுக்கு அதிகமாய் பேசப்பட்டுவிட்டதால், சந்திரரும் சூரியரும் பாடல் அதிகம் கவனிக்கப்படாமல் போயி விட்டது. சிம்பனியை அள்ளி தூவி, ஒரு அப்பாவி நாயகனுக்காக பாடப்பட்ட பாடல். ராஜா சார் குரலை எடுத்து விட்டு, ஒரு காரோக்கியாக, இந்த பாடலின் பின்புல இசையை ஒரு ஆல்பமாகவே போடலாம்.
மறுபடியும்.. கண்ணை மூடி கொண்டு அனுபவிக்க வேண்டிய பாடல் வரிசையில் இதுவும் ஒன்று. நன்றி நன்றி..
-
10th June 2017 03:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks