மாற்று திரியை சேர்ந்தவர் என் பதிவை நன்றாக படிச்சு பிறகு நன்றாக புரிஞ்சு கொண்டு அப்புறம் பதில் சொல்ல வேண்டும்.
நான் மனோகரா படத்தின் விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ கொடுத்த வசூல் விளம்பரம் பொய் என்று சொல்லவில்லை. அது உண்மைதான். ஆனால், தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் நாஞ்சில் இன்பா என்பவன் அவர்கள் நடிகரைப் பற்றி எழுதிய கட்டுரை வந்தது. அதில் மனோகரா படத்தின் வசூல்
84 லட்சத்தி 276 ரூபாய் வசூல் என்று பொய்யாக அடித்துவிடப்பட்டிருந்தது. அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையை எடுத்து அவர்கள் திரியிலும் பதிவு போட்டார்கள். அதில்
84 லட்சத்தி 276 என்றுதான் உள்ளது.
எனக்கு பதில் சொன்னவர் எண்ணால் எழுதிக் காண்பிச்சு இருக்கிறார். அவர் சொல்லியபடி பார்த்தால் 84 ஆயிரத்தி 2 ரூபாய் மற்றும் 76 பைசா என்பது அவர் எண்ணால் எழுதியபடியே
84,002.76
இப்படித்தான் இருக்கும்.
ஆனால், தமிழக அரசியல் பத்திரிகையில் எண்ணால் வந்திருப்பது,
84,00,276 என்று உள்ளது. இது 84 ஆயிரமா? 84 லட்சமா?
இதுதான் அந்தப் பதிவு. தொகையை நன்றாக தேடி படிச்சுப் பாருங்கள்.
மாற்றுத் திரியில் வந்த இந்த கட்டுரையில் உள்ளபடி எண்ணால் உள்ள தொகையை பார்த்தால்
84 லட்சத்தி 276 என்றுதான் அர்த்தம்.
சந்தடி சாக்கில் நைசா நூல் விட்டு பாக்க வேண்டியது. 84 ஆயிரத்தை 84 லட்சமாக கூட்டிக் காண்பிக்க வேண்டியது. யாரும் கண்டுக்காம விட்டால் பின்னால் சாதன ஆயிடும்.
இல்லை, ஒரு வேளை இப்பிடியும் இருக்கலாம்.
எனக்கு மாற்றுத் திரியில் பதில் சொன்னவர் இப்படி சொல்லிருக்கிறார். அவரது வார்த்தைகள்
//விடயத்துக்கு வருவோம்
84 ஆயிரத்தை 84 லட்சம் என்று எந்தப் பள்ளிக்கூடத்தில்
சொல்லிக்கொடுத்தர்களோ? அல்லது பள்ளிக்கூடத்துக்கே....//
சூப்பர். அதானே. நாம்ப கேட்க வேண்டிய கேள்வியை நமக்காக அவரே கேட்டிருக்கிறார். நாஞ்சில் இன்பா என்பவனின் படிப்பு தகுதியை கண்டுபிடித்தவருக்கு நன்றி. நன்றி. நன்றி.
இப்படியாப்பட்ட ஒரு படிக்காத , 84 லட்சத்துக்கும் 84 ஆயிரத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆளு, அல்லது வேண்டுமென்றே தங்கள் நடிகருக்கு புகழ் சேர்க்க வசூலை ஆயிரத்தை லட்சமாக கூட்டிச் சொல்லும் ஆளு, (எழுத்துப் பிழைன்னும் சொல்ல முடியாது. பைசா கணக்கு காட்டாமல் கமா எல்லாம் இடம் பார்த்து பக்காவாக ரூபாய் கணக்கில் போட்டு உள்ளது)
இந்த மாதிரி ஆளு,அதுவும் முக்கியமாக அவர்களது நடிகரின் ரசிகரான நாஞ்சில் இன்பா, எழுதும் கட்டுரையில் வரும் செய்திகள், அதிலேயும் மக்கள் திலகத்தை பற்றி வரும் செய்திகள் எப்படி இருக்கும் என்று புரிஞ்சு கொள்ளலாம். வெறும் பொய்க்கூட்டம்.
உபரி செய்தி: திராவிட இயக்கத்தில் அவர்களின் நடிகர் வளர்ச்சியை அண்ணா மனதார ரசிச்சாராம். கட்டுரையில் உள்ளது. அவர்களின் நடிகர் திமுகவில் என்றுமே உறுப்பினர் கிடையாது. அந்தளவு கட்சியில் ஈடுபாடு. அவ்ர் திமுக பக்கமிருந்து விலகியபோது அண்ணா கண்டுக்க கூட இல்லை. போகட்டும் என்று விட்டுவிட்டார். அதற்கு அப்புறமும் சில வருசம் கழித்து எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லி கழட்டி விட்டார். திரும்பி வா என்று கூப்பிடவில்லை. இப்ப 2 பேரும் இல்லை. இதை உறுதிப்படுத்த எனக்கு பதில் சொன்னவர் அவர்களை தேடி போக வேண்டாம். மக்கள் திலகம் சாவித்ரி பற்றிய செய்தியை 2பேரும் இல்லாததால் அவரால் உறுதி செய்ய முடியாதாம். அதனால், அவர் சவுரியத்துக்காக நான் சொன்ன இந்த செய்தியை அவர் உறுதிப்படுத்திக்க ஒரு வழி சொல்றேன். பழைய சரித்திங்களை அவர் படிச்சால் போதும். படிக்க முடிஞ்சால்.
Bookmarks