Selvaraj Fernandez

நான் குவைத்தில் அரசாங்க வேலை பார்க்கும்போது என்னுடன் வேலை செய்த பிரான்ஸ் நண்பர் ஒருவர் வியாழக்கிழமை தோறும் என் வீட்டில் வருவது வழக்கம் . அவர் வரும்போதெல்லாம் அன்றய வீ ஸி ஆ றில் (V C R)படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் .ஒரு முறை நண்பர் வந்தபோது கெளரவம் கேசட்டை போட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு நான் முகம் சுத்தம் செய்யது விட்டு ஹாலில் வந்ததும் நண்பர் அவர்கள் இந்த நடிகர் யாரென்று தெரியவில்லை .ஹாலிவுட்டில் இந்த நடிகரின் பெயர் என்ன என்று நண்பர் என்னி...டம் கேட்டபோது நான் கூறினேன் இவர் பெயர் சிவாஜிகணேசன் .நாங்கள் நடிகர்திலகம் என்று அழைக்கின்றோம் .இந்தியாவில் தமிழ் நாட்டை சேர்த்தவர் என்று கூறிய பொது அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. நண்பர் என்னோடு வாதம் செய்தார் இல்லை என்று . நான் மேலும் பல VCR படச்சுளை போட்டுக்காண்பித்தபோது அவரால் நம்புவதற்கு கடினமாக இருந்தது .. பிறகு நமது திலகத்தின் நடிப்பில் தன்னை மறந்த நண்பர் இவர் எங்கள் நாட்டில் பிறந்திருக்க வேண்டும் . நான் என் வாழக்கையில் இதுவரை கழித்த நாட்களை வீணடித்து விட்டேன் நடிகர் என்றால் இவர்தான் என்று கூறியதோடு நில்லாமல் வாரம் வரும்போதெல்லாம் நம் திலகத்தின் படச்சுருளை கேட்டு வாங்கிச்செல்வார் .அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இவ்வாறு அந்நியர்கள் , மொழி தெரியாதவர்கள் போற்றிய நம் மகா நடிகனை நம் நாடு போற்றி வாழ்த்தவில்லை, கவுரவிக்கவில்லை .ஆனாலும் உலகத்திற்கு தெரியும் இவன்தான் பிறவி நடிகன் என்று.. இந்த சம்பவம் நடந்தது 1984ம் வருடம்.வாழ்க பிறவி நடிகனாம் நம் நடிகர்திலகத்தின் புகழ்..