-
6th August 2017, 06:48 PM
#11
Senior Member
Devoted Hubber
Sundar Rajan
மாண்புமிகு நீதிமான்களுக்கு,
சென்னையில் சிவாஜி அவர்களின்
சிலையை அகற்ற வாதாடிய வழக்கறிஞர் காந்தி நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில்
கலந்து கொண்டு பேசிய வார்த்த...ைகள்,
சிவாஜி அவர்களின் சிலை விசயத்தில் அரசியலும், பணமும் விளையாடி இருக்கிறது என்பது தெளிவாகிறது.
நெறியாளர் அவர்கள் தமிழகத்தில் 13000 சிலைகள் நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது, ஏன் சென்னையில் மவுண்ட்ரோட்டில் மட்டும பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் உள்ளன. அதையும் அகற்ற ஏன் முறையிடவில்லை என கேட்கிறார்.
அதற்கு காந்தி கூறிய பதில், எனக்கு தேவை பணம், யாரவது பணம் கொடுத்த வழக்கு நடத்தச் சொன்னால் நடத்துவேன், ஏன் உங்கள் டிவி நிறுவனத்தின் கட்டடத்தை இடிக்கச்சொல்லி பணம் கொடுத்தால், நான் வாதாடுவேன். என்று பச்சையாக சொல்கிறார்.
இவருக்கு நீதி, நேர்மை, நியாயம், போன்றவற்றில் அக்கறையில்லை.
ஆக, சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடையூறு என்று வாதாடியது பணத்திற்காகத்தான் என்பது தெளிவாகிறது.
பணத்திற்காக ஒரு தமிழனனின், தமிழின் அடையாளத்தை அகற்றிய காந்தியே நீ ஒரு தமிழன் தானா.
வெளிப்படையாக பணத்திற்காக நான் எதற்காகவும் வாதாடுவேன் என்ற காந்தியின் வாத்தைக் கேட்டு தீர்ப்பு வழங்கிய நீதி மன்றமே,
இப்போது சொல் நீ வழங்கிய தீர்ப்பு நியாமானதா என்று...
நல்லவர்களே. நாறிப் போய் மரணத்தைத் தழுவுகிறார்கள். ஆனால், பணத்திற்காக எந்தப் பொய்யையும் சொல்ல தயாராக இருக்கும் காந்தியே உனக்கு....
இந்த நாடே சொல்லட்டும்.
எங்கள் தலைவருக்கு துரோகம் செய்தவர்களின் வாழ்க்கையை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
உன்னையும் பார்க்கத்தான் போகிறோம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th August 2017 06:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks